புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_m10மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கழிவு, அசுத்த கழிவறை, எங்கும் லஞ்சம் : அலங்கோல அரசு மருத்துவமனைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:06 am

ஆசியாவின் மிக பிரமாண்டமான அரசு பொது மருத்துவமனை என்று பெயர் பெற்ற ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவலம், நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக, அதிகரிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி கோடிக்கணக்கான ஏழைகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமாகும் என்று நினைத்து பலரும் அங்கு செல்கின்றனர். ஆனால், தற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் திரும்பி வரும்போது, வேறு ஒரு புதிய நோயுடன் வீட்டிற்கு திரும்பி வரலாம் என்கிற நிலைதான் உள்ளது.

சிகிச்சை இலவசம் என்ற போதிலும் ஆண் குழந்தைக்கு இவ்வளவு பணம், பெண் குழந்தைக்கு இவ்வளவு என்று பிரசவ வார்டில் பணம் பிடுங்கும் செயலும் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. குறிப்பாக பிரசவ வார்டில் ஆரம்பிக்கும் பணம் பிடுங்கும் நிலைமை, ஒருவன் செத்து அவன் உடலை பிணவறையில் இருந்து எடுத்து செல்லும் வரை உள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தை பொறுத்தே உள்ளது. ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலை நோய்களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக புதிய நோய் உருவாக்கும். கட்டணமில்லாத சிகிச்சை என்பதற்கு பதிலாக எங்கு பார்த்தாலும் பணம் பிடுங்கும் நிலைதான் உள்ளது.

சென்னை:

ஆசியாவின் மிகப் பெரிய ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, யி104 கோடி செலவில், தரை தளம் மற்றும் 6 மாடிகளை கொண்ட, 2 மிக பிரமாண்டமானகட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 2 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும், தினமும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அரசு பொதுமருத்துவமனையின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

உலகிலேயே ஆபத்தான மருத்துவ கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். இல்லையேல் அது வேறு ஒரு நோய்க்கு புது வழியை அமைத்துவிடும். ஆனால், இந்த மருத்துவமனையின் பின்பகுதியில், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், குளுகோஸ்பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட கிளவுஸ், நோயாளிகள் பயன்படுத்திய பேன்டேஜ் துணிகள் உட்பட உயிருக்கு ஊறுவிளைவிக்கும் மருத்துவ கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனையின் உள்பகுதி படிக்கட்டுகள் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மூலம், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கூட தமிழக அரசு மெத்தனம் காட்டியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு மற்றும் செக்யூரிட்டி பணிக்காக ஆந்திராவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஒப்பந்த நிறுவனம் செய்யும் அதே பணியை, ஏற்கனவே அங்கு இருக்கும் மூன்று நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். ஒரே பணியை செய்யும் 4 நிறுவனங்களுக்கு, அரசு பணம் வீணாக வழங்கப்பட்டு வருகிறது.

விலை உயர்ந்த மருந்துகள், அவசர கால மருந்துகள் போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் இருந்து மருத்துவமனை நிர்வாகம் பெற்று வருகிறது. டெண்டர் விடும் போது பல நிறுவனங்கள் பங்கேற்கும் என்பதால், அதிக கமிஷன் தரும் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். மருந்துகளை மொத்தமாக வாங்கினால் அதிக விலை ஆகும். டெண்டர் விடவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மருந்துகளை மொத்தமாக வாங்காமல் சிறு சிறு பகுதிகளாக பிரித்து அதனை டெண்டருக்கு பதில், தங்களுக்கு சாதகமான நிறுவனங்களிடம் இருந்து உத்தேச விலை பட்டியல் பெற்று அவர்களுக்கே ஆர்டர் கொடுத்து தங்களுக்கு வேண்டிய கமிஷனையும் பெற்று கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் பிரிவு முதல் தளத்தில் உள்ளது. சர்க்கரை நோய் பரிசோதனைக்கு 90 வயது வரை உள்ளவர்கள் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். ரத்த பரிசோதனை செய்வதற்காக முதல் மாடிக்கு சுமார் 22 படிகள் ஏறி செல்லவேண்டியுள்ளதால் வயதானவர்கள் மிகவும் களைப்படைந்து விடுகின்றனர். சில நேரம் வயது முதிர்ந்தவர்கள் மயக்கமடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே, ரத்த பரிசோதனை நிலையத்தை தரை தளத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் இரவு வரும் நோயாளிகளுக்கு இசிஜி எடுப்பதற்கு போதிய வசதி கிடையாது. மருத்துவமனையின் உள்பகுதியில் குடிநீர் வசதி இல்லை. இதனை தெரிந்து கொண்ட சிலர் மருத்துவமனை எதிரில் குடிநீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எக்ஸ்ரே பிலிம் போதுமான அளவு இருப்பில் இல்லாததால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டுவிடுவதால் பெரும்பாலான நேரங்களில் அது மூடியே இருக்கிறது. அதேபோல, வெளியூரில் இருந்து வரும் நோயாளிகளிடம், Ôஎனக்கு அந்த மருத்துவரை தெரியும், தங்குவதற்கு வார்டு ஏற்பாடு செய்கிறேன்Õ என்று கூறி  நோயாளிகளை ஏமாற்றும் புரோக்கர்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. மருந்து வழங்கும் பிரிவில் சாதாரண நோய்களுக்கு வழங்கும் மருந்துகள் மட்டும் தாராளமாக கிடைக்கிறது. இதய நோய், தோல் நோய் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை மருத்துவ பிரிவுகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் உடல்களை பாதுகாக்க போதிய குளிர்சாதன பெட்டிகள் இல்லை. இதனால் பல்வேறு சம்பவங்களில் அதிக உடல்கள் வரும்போது உடல்களை மூட்டையாக கட்டி ஓரமாக போட்டு விடுகின்றனர்.

மேலும், சவக்கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுகள் பிணவறையில் தேங்கி நிற்பதால் அப்பகுதி துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை பரப்பி வருகிறது.

பெரும்பாலான அரசு மருத்துவமனை வாசல் பகுதிகளில் உள்ள பிளாட்பாரத்தில், உணவு பண்டங்கள், குளிர்பானங்கள், பழரசங்கள் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஈ மொய்க்கும் அந்த உணவை நோயாளிகளும், அவர்களை பார்க்க வருபவர்களும் வாங்கி உண்பதால் புதுப்புது நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டிய சுகாதார துறை அதிகாரிகள், ஏனோ மெத்தனம் காட்டுகின்றனர்.

ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பழைய கட்டிடத்தில் 3வது மாடியில்  எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள லிப்ட் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளதால் நோயாளிகள் அதிக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு படிக்கட்டு வழியாக வரவேண்டியுள்ளதால் வீல் சேரும் பயன்படுத்த முடியாத நிலை. இதனால், நோயாளிகளை உறவினர்கள் தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  

கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனையில் எலி கடித்ததால் குழந்தை இறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனைகளில் எலி பிடிக்கும் பணி நடைபெற்றது. மேலும், பாம்பு, நாய் வேட்டைகளிலும் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இறங்கியது. பின்னர் இத்திட்டம் தொடர்ந்து செயல்படாததால் தற்போது மருத்துவமனைகளில் மீண்டும் எலி மற்றும் நாய் தொல்லைகள் அதிகரித்துள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:07 am

மதுரை:

மதுரை அரசு மருத்துவமனையில், 2 ஆயிரத்து 400 உள்நோயாளிகள், 10 ஆயிரம் வெளிநோயாளிகளுடன் ஊழியர்கள், டாக்டர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் இம்மருத்துவமனை வளாகத்திற்குள் இருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், கருவிகள், சிகிச்சை அனைத்தும் மிக மோசமாக இருக்கிறது.

* நோயாளிகளுக்கான வழிகாட்டு மையம் இல்லை. உரிய இடம் தெரியாமல் அலைகின்றனர். நோயின் தன்மை விளக்கப்படுவதில்லை. வீல்சேர், ஸ்ட்ரெச்சர் கடும் பற்றாக்குறை உள்ளது. ஒரு ஸ்ட்ரெச்சரில் 3பேரை அமரவைத்து தள்ளிச்செல்கின்றனர். Ôமையமான பரிசோதனைÕ பிரிவு இல்லாததால் ரத்தம், சளி, ஸ்கேன், எக்ஸ்ரே என நோயாளிகள் ஒவ்வொரு மூலைக்கும் அலைகின்றனர். சோதனை முடிவுகள் வழங்க பல நாட்கள் இழுத்தடிக்கப்படுவதால் சிகிச்சை துவக்க தாமதமாகி, நோய் பாதிப்பு கடுமையாகிறது. கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகள் நோய் தீவிரமடைந்து இறக்கின்றனர். தகுந்த சிகிச்சையின்றி பல மாதங்கள் படுக்கையில் தங்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.

* பெட் இல்லாமல் வார்டுகளில் தரையில் துண்டு விரித்து நோயாளிகள் பலர் படுத்துள்ளனர். பாய், தலையணையை நோயாளிகளே வாங்கி வர வலியுறுத்தப்படுகிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டிய படுக்கைத்துணி ஒருமாதமாகியும் மாற்றப்படுவதில்லை.

* முக்கிய மருந்துகள் மட்டுமல்லாது, கையுறை வரை வாங்க வெளி மருந்துக்கடைகளுக்கு டாக்டர்கள் சீட்டு எழுதித்தந்து அனுப்புகின்றனர். மருத்துவமனையைச் சுற்றி 12 மருந்துக்கடைகள் நல்ல லாபம் பார்க்கின்றன. வார்டுகளுக்கே நேரடியாக வந்து டாக்டர்கள், நோயாளிகளை சந்தித்து மருந்துகள் Ôஆர்டர்Õ எடுத்துச் செல்லும் புரோக்கர்கள் அதிகரித்துள்ளனர்.

* ஸ்ட்ரெச்சர், வீல்சேர் தள்ளுபவர் துவங்கி, அத்தனை பிரிவினரிடமும் ரூ.50 துவங்கி ரூ.500 வரை நோயாளியின் உறவினர் பணம் அழ வேண்டும். அறுவை சிகிச்சைக்கும் யி3 ஆயிரம் வரை பறிக்கப்படுகிறது. மேலும் ஆறேழு மாதங்களாக அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் அதிகம் உள்ளனர். புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க 8 மணிக்கு வரவேண்டிய பல டாக்டர்கள் 11 மணிக்கு வந்து 12 மணிக்கு கிளம்பி, தங்களது கிளினிக்குக்கு போய் விடுகின்றனர்.

* தேவையான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் இல்லை. குறைந்தது 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை இருக்கிறது. வெறும் 6 லட்சம் லிட்டர் தண்ணீரே ஆழ்குழாய்கள், மாநகராட்சி குழாய்கள் மூலம் கிடைக்கிறது. வெளியில் தண்ணீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. மருத்துவமனைக்குள் காவல்நிலையம் இருந்தும் குழந்தைகள், டூவீலர்கள் திருட்டுகளுடன், வார்டுகளில் பொருட்கள், பணம் திருட்டும், வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:07 am

கோவை:

கோவை, அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளின் வருகைக்கேற்ப படுக்கை வசதி இல்லை. 1050 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 200 படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சைக்குரிய நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகள் பலர் நடைபாதையில் படுத்து சிகிச்சை பெறுகின்றனர். சிலர் மருத்துவமனைக்கு வெளி வாசல் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பிலும் தங்கி வருகின்றனர். அவ்வப்போது வார்டுக்கு வந்து உரிய சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனையில் 4 மருந்தகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் பாதிப்பினால் பலர் அன்றாடம் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவர் இருமல் மருந்து எழுதி கொடுத்தாலும் பெரும்பாலான நாட்கள் அங்குள்ள மருந்தகத்தில் இருமல் மருந்து  உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் ஸ்டாக் இருப்பதில்லை. 23 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்குகின்றனர். நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது வெளி மருந்து கடைகளில் கிடைக்கும் என்று அனுப்பி வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:08 am

திருச்சி:

திருச்சியில், ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடத்தை தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக அவசர, அவசரமாக முதல்வர் திறந்து வைத்தார். எவ்வித மருத்துவ உபகரணம் இன்றி திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனையில் தற்போது அவசர சிகிச்சை மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு பரிசோதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை என்பது பழைய மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தக்  குறையும் தற்போது வரை பூர்த்தி செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.6.25 கோடி செலவில் புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மற்றும் தீவிர சிசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் மற்றும் காப்பாளர் ஓய்வு அறை கட்டப்படவில்லை. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனைவரும் வெளியே வராண்டாவில் தங்கும் நிலை உள்ளது.

மேலும் சேலம் மற்றும் குமரி மாவட்ட மருத்துவமனைகளிலும் இதே பிரச்னைகளை நோயாளி கள் சந்தித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசே மெத்தனம் காட்டி வருகிறது.

[thanks] தினகரன் [/thanks]

AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

PostAMMAIYAPPAN Sun Apr 06, 2014 10:34 am

யார் இதை மாற்றுவது ..... நம் மக்களே .... பார்க்கலாம் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 2:38 pm

AMMAIYAPPAN wrote:[link="/t109180-topic#1056559"]யார் இதை மாற்றுவது ..... நம் மக்களே .... பார்க்கலாம் ...

அடித்துத் திருத்தினால் தான் திருந்துவார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக