Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
+2
தமிழ்நேசன்1981
சிவா
6 posters
Page 1 of 1
இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
ஐக்கிய முற்போக்கு ( காங்கிரஸ்) கூட்டணி அரசில், இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதற்கு மாறானது. இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த, முந்தைய தேசிய ஜனநாயக ( பா.ஜ.,) கூட்டணி கடுமையாக உழைத்ததை அனைவரும் மறந்து விட்டனர். இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த பா.ஜ., அரசு எடுத்த பல நடவடிக்கைகளின் பலனை, அடுத்து வந்த காங்கிரஸ் அரசு தனக்குச் சாதகமாக்கி கொண்டது. இதனால் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட்டது போல் தோன்றினாலும், உண்மையில், காங்கிரஸ் அரசின் கடந்தகால செயல்பாடு மற்றும் செய்யத் தவறியவைகளால், அடுத்து வரும் அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்; புதிய அரசு எதையும் செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டைச் சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு தற்போதைய காங்கிரஸ் அரசு பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசின் கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 6 ஆண்டுக்கும் மேலாக நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமே இந்த சீரழிவுக்கு முழு பொறுப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.
அரசின் கடன்கள்
மத்திய அரசின் கடன்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு இடையேயான விகிதம், பா.ஜ., அரசின் காலத்தில் 60 சதவீதத்தை விட சற்றே கூடுதலாக இருந்தது. ஆனால் மாநில அரசுகளின் கடன்களையும் சேர்த்து பார்க்கும்போது இந்த விகிதம் 80 சதவீதத்தையும் தாண்டியது. தற்போது இந்த விகிதம், ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 70 சதவீதமாக உள்ளது. பா.ஜ., அரசின் காலத்தில் 5வது சம்பள கமிஷன் அமல் செய்யப்பட்டதால், அப்போது கடன் அளவு அதிகரித்து காணப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதங்கள்:
பா.ஜ., அரசுக்கும் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதம்தான். ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகித வித்தியாசம் 4.6 சதவீதமாக இருந்தது. அதேபோல், பணவீக்க விகிதமும் காங்கிரஸ் அரசின் காலத்தில் அதிகமாக ( 7.4 சதவீதம்) இருந்தது; ஆனால் பா.ஜ., அரசின் காலத்தில் 4.5 சதவீமாகவே இருந்தது. அதிக அளவிலான பணவீக்கம், உண்மையான கடன் மதிப்பைக் குறைத்து காட்டும்; இதனால் காங்கிரஸ் அரசின் காலத்தில் கடனுக்கும் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கும் இடையேயான விகிதம் குறைவாக காணப்பட்டது.
வட்டி சுமைகள்:
பா.ஜ., அரசின் காலத்தில் செலுத்தப்பட்ட வட்டி மற்றும் பட்ஜெட் வருவாய்க்கு இடையேயான விகிதம் 40 சதவீதத்தைத் தாண்டவில்லை. மேலும் பா.ஜ., அரசு பொறுப்பேற்றபோது வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது, குறைவான வட்டி விகிதமே இருந்தது; அது அவர்களுக்கு சாதகமாக இருந்தது; ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அரசின் பத்திரங்கள் மூலம் வருவாய் அதிகரிப்பது மற்றும் குறைவதன் பின்னணி ரகசியங்கள் குறித்து சாதாரண பொருளாதார மாணவர் கூட கூறமுடியும்; அதற்கு பொருளாதார நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை. அரசு கடன் வாங்குவதும் பணவீக்கமும் இருமுக்கிய அம்சங்கள்; எனவே எந்த அரசு பொருளாதார சுமையை அதிகரித்துள்ளது என்பதை, அது வாங்கிய கடனை வைத்தே மதிப்பிடலாம்.
பா.ஜ., பட்டபாடு; காங்கிரசுக்கு சாதகம்:
பா.ஜ., அரசின் காலத்தில், சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இது உள்நாட்டு வட்டி விகிதங்களில் பெருத்த விளைவை ஏற்படுத்தியது. ஆனால் இதன் பெரும்பாலான பலன்கள் அடுத்து வந்த காங்கிரஸ் அரசுக்கே சாதமாக அமைந்தன. மேலும் கா்ஙகிரஸ் அரசின் துவக்கத்தில் உலக வளர்ச்சி, பணவீக்க மற்றும் வட்டி விகித நிலைமைகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தாத நிலைக்கு மாறின.
எனவே பா.ஜ., அரசின் காலத்தில் பட்ஜெட் வருவாய் விகிதத்தை விட அதிக அளவு வட்டி செலுத்தியது அவர்களின் தவறா? அல்லது காங்கிரஸ் அரசின் கால்ததில் பட்ஜெட் வருவாய் விகிதத்தை விட குறைவான அளவு வட்டி செலுத்தியது அவர்களின் சாதனையா என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
மத்திய அரசின் மார்க்கெட் கடன்:
பணவீக்கம் அதிகரித்து இருந்ததால், காங்கிரஸ் அரசின் காலத்தில் கடன் விகிதம் குறைவாக காணப்பட்டது. காங்கிரஸ் அரசின் காலத்தில் மத்திய அரசு வாங்கிய மார்க்கெட் கடன் அபாயகரமான அளவுக்கு அதிகரித்தது. குறிப்பாக காங்கிரஸ் அரசின் 2வது ஆட்சிக் ( 2009- 14) காலத்தில், அரசின் மொத்த கடனுக்கும் பட்ஜெட் செலவுக்குமான விகிதாச்சாரம் அதிக அளவுக்கு இருந்தது. மார்க்கெட்டில் அதிக அளவுக்கு கடன் வாங்க வாங்க, உற்பத்திக்கான ஒதுக்கீடு குறைய ஆரம்பிக்கும்.
பா.ஜ., அரசின் காலத்தில் மத்திய அரசின் மொத்த மார்க்கெட் கடன் மற்றும் பட்ஜெட் செலவுக்கு இடையேயான விகிதாச்சாரம் மிகக் குறைவான அளவான 18.8 சதவீதத்தைத் தொட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு தனது வீணான செலவுத் திட்டங்களைத் துவக்கும் முன், இது 10 சதவீதமாக குறைந்திருந்தது. ஆனால்அதற்குப் பின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.
காங்கிரஸ் அரசின் அபரிமிதமான மார்க்கெட் கடன் மற்றும் ரிசர்வ் பாங்கின் மறைமுகமான நிதி உதவி எதிரொலியாக மக்களின் வாழ்க்கைச் செலவு 2008- 2011ல் 63 சுதவீம் அதிகரித்தது.
சுருக்கமாக கூறுவதென்றால், காங்கிரஸ் பதவி ஏற்ற காலத்தில்நிலவிய உலக மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, இந்திய பொருளாதாரத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வி்ட்டது.
[thanks]தினமலர்[/thanks]
Re: இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
இப்படிப்பட்ட பொருளாதார மேதை தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்..இன்னும் இரு முறை நிதி அமைச்சர் பதவியை கொடுத்தால்..இந்தியாவை வரைபடத்தில் இருந்தே எடுக்கும் நிலைமையை வல்லமையான நிதிநிர்வாகத்தால் செய்யும் ஆற்றல் படைத்தவர் சிதம்பரம்.. இந்தியாவிற்கு எதிரிகள் அண்டை நாடுகள் இல்லை..இது போன்ற உள்நாட்டு உள்துறை அமைச்சர் பெருமக்கள்தாம்...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
மும்பை, தானேயில் 'பத்தாண்டுகளின் பொருளாதார
சரிவிலிருந்து மீண்டு வருவது எப்படி?' என்ற தலைப்பில்
கருத்தரங்கம் நடந்தது.
இதில் பிரபல பொருளாதார நிபுணர், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி
ஆற்றிய [sujjdmr'snf heus'ldL
-
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில், அமெரிக்க டாலருக்கு
நிகரான ரூபாயின் மதிப்பு 35 முதல் 50 சதவீதம் வரை வீழ்ச்சி
அடைந்துள்ளது. வெளிநாட்டுக் கடன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
வெளிநாட்டுக் கடனில் இரண்டரை மடங்காக இருந்த அன்னிய
செலாவணி கையிருப்பு தற்போது நான்கில் மூன்று பங்காக
குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருப்பது
இந்தியாவில் உற்பத்திக்கான அடித்தளத்தை அழித்துவிட்டது.
ஆனால் ஆரோக்கியமான பொருளாதாரத்தை விட்டுச் செல்வதாக
சிதம்பரம் இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்.
அக்டோபர் 2008ல் சிதம்பரம் நிதியமைச்சர் பதவியிலிருந்து
விலகியபோது, நாட்டில் 60 பில்லியன் டாலர் அளவிற்கும் மேல் நடப்பு
கணக்கு பற்றாக்குறை இருந்தது. மீண்டும் அவர் வந்தபோது 125 பில்லியன்
டாலராக அதிகரித்தது. அதுவே ரூபாயின் மதிப்பை 45 லிருந்து 68 ஆக
குறைத்தது.
தற்போது அன்னிய செலாவணி கையிருப்பு 300 பில்லியன் டாலரை
தொட்டுவிட்டதாகவும், காங்கிரஸின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள்
அதை 325 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும்
சிதம்பரம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் வெளிநாட்டுக் கடன் 4 மடங்காக அதிகரித்திருப்பது
பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை''
-
------------------
நன்றி: மாலை மலர்
Re: இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
இப்படி கொள்ளை அடித்து அதனால் தமிழ்நாட்டிற்கு எதுவும் லாபமா என்றால் அதுவுமில்லை ... பிறகு என்ன மயி***கு இவர்களெல்லாம் மந்திரியா இருக்கிறார்கள்தமிழ்நேசன்1981 wrote:[link="/t109232-topic#1056710"]இப்படிப்பட்ட பொருளாதார மேதை தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்..இன்னும் இரு முறை நிதி அமைச்சர் பதவியை கொடுத்தால்..இந்தியாவை வரைபடத்தில் இருந்தே எடுக்கும் நிலைமையை வல்லமையான நிதிநிர்வாகத்தால் செய்யும் ஆற்றல் படைத்தவர் சிதம்பரம்.. இந்தியாவிற்கு எதிரிகள் அண்டை நாடுகள் இல்லை..இது போன்ற உள்நாட்டு உள்துறை அமைச்சர் பெருமக்கள்தாம்...
Re: இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
வருடத்திற்கு 3 லட்சம் சம்பாதிக்கும் மாதசம்பள காரர்களிடம் கராராக வரியை வசூல் செய்து, பிறகு வருடத்திற்கு இரு முறை தொழில் வரியையும் வாங்கிக்கொண்டு, அது பத்தாதுன்னு, தொலைபேசி பில்லில் மற்றும் அனைத்து சேவைகளிலும் சேவை வரியையும் புடிங்கி கொள்ளையடிக்கிற தொழிலை என்னைக்கு தான் இந்த சிதம்பரம் நிறுத்துவாரோ? 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஆகும் வீட்டு வாடகைக்கு 600 முதல் 1500 வரை வீட்டு வாடகை படி தரும் நிலைமை என்று மாறுமோ?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீரழித்த சிதம்பரம்
மாதாமாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடமிருந்து ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வருமான வரி என்ற பெயரில் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்கின்றனர். அவ்வாறு எமது ஊதியத்தில் முன்கூட்டியே வருமானவரி பிடித்தம் செய்து விட்ட பின்பும் கூட பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியத்தினை வழங்கவில்லை. இது போன்ற மக்களின் விரோதிகள் இருக்கும் வரை இந்தியா வல்லரசு ஆகாது. இந்திய நாட்டின் எதிரிகள் நாட்டுக்கு வெளியே இல்லை. இது போன்ற ஆட்சியாளர்களின் வடிவில் தான் இருக்கின்றனர். இதற்கு இறைவன் தான் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
Similar topics
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி
» 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
» இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி
» 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
» இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|