ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!

2 posters

Go down

இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Empty இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:49 am

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது.இந்திய பாராளுமன்றம் என்பது 545 மக்களவை எம்.பி.க்கள், 250 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தத்தில் 795 உறுப்பினர்களைக் கொண்ட தாகும்.

மக்களவை என்பது மக்களின் வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்கள், 2 நியமன எம்.பி.க்கள் என மொத்தம் 545 உறுப்பினர்களை கொண்டது.

அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாநில சட்டசபை எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.க்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்கின்றனர்.

அவ்வகையில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதிகளாக 12 பேரும், அருணாசலப்பிரதேசத்தின் சார்பில் ஒருவரும், அசாமை சேர்ந்த 7 பேரும், பீகாரின் சார்பில் 16 பேரும், சத்தீஸ்கரை சேர்ந்த 5 பேரும், கோவாவை சேர்ந்த ஒருவரும், குஜராத்தை முன்னிலைப்படுத்த 11 பேரும், ஹரியானாவின் சார்பில் 5 பேரும், இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேரும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 4 பேரும், ஜார்க்கண்டை சேர்ந்த 6 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 12 பேரும், கேரளாவை சேர்ந்த 9 பேரும், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 11 பேரும், மகாராஷ்டிரத்தை சேர்ந்த 19 பேரும், மணிப்பூர், மிசோரம், மேகாலயா மற்றும் நாகலாந்தை சேர்ந்த தலா ஒருவரும், டெல்லியை சேர்ந்த 3 பேரும், ஒடிசாவை சேர்ந்த 10 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், பஞ்சாப்பை சேர்ந்த 7 பேரும், ராஜஸ்தானை சேர்ந்த 10 பேரும், சிக்கிமை சேர்ந்த ஒருவரும், தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேரும், திரிபுராவை சேர்ந்த ஒருவரும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 31 பேரும், உத்ரகாண்ட்டை சேர்ந்த 3 பேரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 பேரும் என மொத்தம்  238    பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ளனர்.

இது தவிர, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல்துறை பிரமுகர்கள் 12 பேர் என பாராளுமன்ற மேல்சபை என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் 250 பேர் எம்.பி.க்களாக உள்ளனர். ஆக மொத்தத்தில், இந்திய பாராளுமன்றம் என்பது 545 மக்களவை எம்.பி.க்கள், 250 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தத்தில் 795 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

இவர்களில், மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு வீடு உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.

மாதாந்திரச் சம்பளமாக ரூ.16,000, மாதந்தோறும் தொகுதிப்படியாக ரூ.20,000,  அலுவலகப்படியாக ரூ.4,000, தபால் செலவினங்களுக்கு என ரூ.2,000, உதவியாளருக்கு ஊதியமாக ரூ.14,000-மும் வழங்கப்படுகிறது.  பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது, அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தினப்படியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மேலும், டெல்லியில் உள்ள வீட்டுக்கு ஆண்டொன்றுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. இரண்டு தொலைபேசி இணைப்புகள் இலவசம். அவை இரண்டிலும் ஆண்டொன்றுக்கு இலவசமாக ஒரு லட்சம் இலவச அழைப்புகள் மற்றும்  இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலமாக 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் இலவச ரோமிங் ஆகியவையும் அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் ரெயிலில் செல்ல பயணச் சீட்டுகள், இந்தியாவுக்குள் 34 முறை மனைவி அல்லது உதவியாளருடன் இலவச விமானப் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தனது குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், மக்களவை கூட்டம் நடைபெறும் வேளையில் தங்கள் தொகுதியில் இருந்து 8 பேரை அழைத்து வந்து விவாதங்களைப் பார்வையிட வைக்க ரெயில் பயணச் சீட்டுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டொன்றுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது.

பதவியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னரும் 500 ரூபாயை மாதாந்திர சந்தாவாக செலுத்தி, மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய தரமான இலவச மருத்துவ சிகிச்சைகளை பெறலாம்.

ஏதேனும் ஒரு அவையில் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கு, அடிப்படை ஓய்வூதியமாக மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் மேலும் ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கீட்டின்படி அதிகபட்சமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

இவ்வகையில், 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக 9 மாதங்கள் பதவி வகித்திருந்தால் கூட, அது ஓராண்டா கவே கணக்கிடப்படும். இரண்டு முறை எம்.பி.யாக (தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு) பதவி வகித்திருந்தால் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும். இரு அவைகளிலும் எம்.பி.யாக பதவி வகித்தவர்கள் மரணம் அடைந்த பின்னரும், அவரது கணவர் அல்லது மனைவிக்கு இறந்தவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் சரிபாதி வழங்கப்படும்

[thanks] நக்கீரன் [/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Empty Re: இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!

Post by கோ. செந்தில்குமார் Sun Apr 06, 2014 7:57 am

இவ்வளவு சம்பளமும், சலுகைகளும் கொடுப்பதால் தான் ஒரு முறையாவது பாராளுமன்ற உறுப்பினராக ஆகி விட துடிக்கிறார்கள் போலும்...!  எல்லாம் பதவி படுத்தும் பாடு...!!  அருமையான பதிவு நண்பரே...!!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum