Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Last edited by சிவா on Sun Apr 06, 2014 4:32 am; edited 1 time in total
Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்: முயற்சிகள் கைகூடும்
தோற்றத்தில் நலிந்தவர் போல் காணப்பட்டாலும் உள்ளூர உடல் வலிமையும் உள்ள உறுதியும் பெற்ற நீங்கள், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு பொருள் சேர்க்கையும் உடல் ஆரோக்யத்தையும் தரும். கடன் பிரச்னைகள் தொல்லை தராமல் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் ஆறாம் ராசியில் அமர்ந்து காரியத் தடைகளையும் அலைச்சலையும் தரும் குருவால் ஒரு சில பிரச்னைகள் தலைதூக்கலாம். எனவே, எதிலும் நிதானமான போக்கை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடம் செல்ல நேரலாம்.
செய்த வேலைக்கு உரிய கூலி கிடைப்பது இழுபறியாக இருக்கும். குரு வரும் ஜூன் 13ம் தேதி முதல் உச்சம் பெற்று கடக ராசியில் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது பலவகையிலும் உங்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். தற்போது ராசிக்கு 10ல் அமர்ந்து தொழில் சனியாக இருக்கும் உங்கள் ராசியாதிபதியான சனி மற்ற ராசிக்காரர்களை விட உங்களுக்கு அதிக நன்மைகளைச் செய்கிறார்.
வீண் செலவுகள் குறையும். மன சஞ்சலங்களை களைவார். உடல் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சனிபகவான் எல்லா விதமான காரியத் தடைகளையும் நீக்குவார். டிசம்பர் 12ம் தேதி உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து 11ம் இடத்திற்கு முன்னேறிச் செல்லும் லாபச் சனி ராஜயோகத்தை தருவார் என்றே சொல்ல வேண்டும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்ல முறையில் நடக்கும். தற்போது தொழில் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் ஏதேனும் வீண் பிரச்னைகளை தருவார்கள்.
காரணம் கண்டுபிடிக்க முடியாத கவலைகள் ஏற்படலாம். வரும் ஜூன் 21ந் தேதி அன்று வரும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அதன் பிறகு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும் 3ல் இருக்கும் கேதுவும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவார்கள். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடன் பிறப்புகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு காரிய அனுகூலம் தருவதுடன் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கச் செய்யும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள். படிக்கும் போதே சிலருக்கு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.
உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கலைத்துறையினர் துறையிலுள்ள நுணுக் கங்களை அறிந்து வைத்துக் கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிநாடு செல்வதில் இருந்த சிக்கல்கள் விலகும்.
திருவோணம் : இந்த வருடம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள் : இந்த வருடம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சிறப்பு பரிகாரம்: அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சார்த்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கை நெய் விட்டு ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
தோற்றத்தில் நலிந்தவர் போல் காணப்பட்டாலும் உள்ளூர உடல் வலிமையும் உள்ள உறுதியும் பெற்ற நீங்கள், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு பொருள் சேர்க்கையும் உடல் ஆரோக்யத்தையும் தரும். கடன் பிரச்னைகள் தொல்லை தராமல் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் ஆறாம் ராசியில் அமர்ந்து காரியத் தடைகளையும் அலைச்சலையும் தரும் குருவால் ஒரு சில பிரச்னைகள் தலைதூக்கலாம். எனவே, எதிலும் நிதானமான போக்கை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடம் செல்ல நேரலாம்.
செய்த வேலைக்கு உரிய கூலி கிடைப்பது இழுபறியாக இருக்கும். குரு வரும் ஜூன் 13ம் தேதி முதல் உச்சம் பெற்று கடக ராசியில் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது பலவகையிலும் உங்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். தற்போது ராசிக்கு 10ல் அமர்ந்து தொழில் சனியாக இருக்கும் உங்கள் ராசியாதிபதியான சனி மற்ற ராசிக்காரர்களை விட உங்களுக்கு அதிக நன்மைகளைச் செய்கிறார்.
வீண் செலவுகள் குறையும். மன சஞ்சலங்களை களைவார். உடல் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சனிபகவான் எல்லா விதமான காரியத் தடைகளையும் நீக்குவார். டிசம்பர் 12ம் தேதி உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து 11ம் இடத்திற்கு முன்னேறிச் செல்லும் லாபச் சனி ராஜயோகத்தை தருவார் என்றே சொல்ல வேண்டும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்ல முறையில் நடக்கும். தற்போது தொழில் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் ஏதேனும் வீண் பிரச்னைகளை தருவார்கள்.
காரணம் கண்டுபிடிக்க முடியாத கவலைகள் ஏற்படலாம். வரும் ஜூன் 21ந் தேதி அன்று வரும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அதன் பிறகு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும் 3ல் இருக்கும் கேதுவும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவார்கள். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடன் பிறப்புகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு காரிய அனுகூலம் தருவதுடன் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கச் செய்யும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள். படிக்கும் போதே சிலருக்கு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.
உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கலைத்துறையினர் துறையிலுள்ள நுணுக் கங்களை அறிந்து வைத்துக் கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிநாடு செல்வதில் இருந்த சிக்கல்கள் விலகும்.
திருவோணம் : இந்த வருடம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள் : இந்த வருடம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சிறப்பு பரிகாரம்: அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சார்த்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கை நெய் விட்டு ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கும்பம்: நல்ல தகவல்கள் வரும்
ஒரு பார்வையிலேயே மற்றவரை எடை போடும் திறமை உள்ள நீங்கள், எடுத்த காரியத்தில் எந்தத் தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றங்களை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருடத்தின் ஆரம்பத்தில் குரு பார்வையின் பலனால் பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும்.
வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உ த்யோகத்தில் இருப்பவர்கள், எழுத்துத் துறையில் இருப்பவர்கள் திறமை வெளிப்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். குரு பெயர்ச்சிக்குப் பின் ராசிக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் குருவால் இப்போது பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் உண்டாகலாம். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்கு களை அனுப்பும் போதும் சேமித்து வைக்கும்போதும் கவனமாக இருப்பது நன்மை தரும். எதிலும் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. தற்போது உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் சனி, மனதில் அவ்வப்போது ஏதாவது கவலையை ஏற்படுத்தி வருவார். வீண் அலைச்சல், வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமை என்று ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து மனச்சோர்வை உண்டாக்கும்.
வரும் டிசம்பர் 21ல் ஏற்படும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு தொழில் சனியாக உலா வருவதால் மிகவும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் குறையும். பணத்தட்டுப்பாடு நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ராசிக்கு 3ல் கேதும் 9ல் ராகுவும் சஞ்சரிப்பது உங்களுக்கு பல ஆறுதலான விஷயங்களை தரும். எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழிலில் போட்டி இருக்காது. வரும் ஜூன் 21ந் தேதி ராகு, கேது பெயர்ச்சி வருவதால் அதன்பிறகு ராசிக்கு 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வது எதுவும் லாபமாக நடக்கும்.
மனதுக்குப் பிடித்தமான காரியங்கள் நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பல நன்மைகள் நடக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
அரசியல் மற்றும் சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் பரிபூரண நன்மைகள் கிடைக்கும் வருடமாக இருக்கும். பதவிகள் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகமான வருடமாக இருக்கும். அதிகமான வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள் : இந்த வருடம் கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
சதயம் : இந்த வருடம் குடும்பத்தினரிடம் உறவு சிறக்க மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஸ்ரீ கணபதிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இலுப்பை எண்ணெய் விட்டு ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
ஒரு பார்வையிலேயே மற்றவரை எடை போடும் திறமை உள்ள நீங்கள், எடுத்த காரியத்தில் எந்தத் தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றங்களை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருடத்தின் ஆரம்பத்தில் குரு பார்வையின் பலனால் பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும்.
வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உ த்யோகத்தில் இருப்பவர்கள், எழுத்துத் துறையில் இருப்பவர்கள் திறமை வெளிப்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். குரு பெயர்ச்சிக்குப் பின் ராசிக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் குருவால் இப்போது பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் உண்டாகலாம். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்கு களை அனுப்பும் போதும் சேமித்து வைக்கும்போதும் கவனமாக இருப்பது நன்மை தரும். எதிலும் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. தற்போது உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் சனி, மனதில் அவ்வப்போது ஏதாவது கவலையை ஏற்படுத்தி வருவார். வீண் அலைச்சல், வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமை என்று ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து மனச்சோர்வை உண்டாக்கும்.
வரும் டிசம்பர் 21ல் ஏற்படும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு தொழில் சனியாக உலா வருவதால் மிகவும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் குறையும். பணத்தட்டுப்பாடு நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ராசிக்கு 3ல் கேதும் 9ல் ராகுவும் சஞ்சரிப்பது உங்களுக்கு பல ஆறுதலான விஷயங்களை தரும். எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழிலில் போட்டி இருக்காது. வரும் ஜூன் 21ந் தேதி ராகு, கேது பெயர்ச்சி வருவதால் அதன்பிறகு ராசிக்கு 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வது எதுவும் லாபமாக நடக்கும்.
மனதுக்குப் பிடித்தமான காரியங்கள் நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பல நன்மைகள் நடக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
அரசியல் மற்றும் சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் பரிபூரண நன்மைகள் கிடைக்கும் வருடமாக இருக்கும். பதவிகள் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகமான வருடமாக இருக்கும். அதிகமான வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள் : இந்த வருடம் கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
சதயம் : இந்த வருடம் குடும்பத்தினரிடம் உறவு சிறக்க மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஸ்ரீ கணபதிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இலுப்பை எண்ணெய் விட்டு ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மீனம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும்
எந்த ஒரு பிரச்னை களையும் சமாதான மாகப் பேசி முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த நீங்கள், அனுபவ அறிவு மிக்கவர். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்யத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் ராசியாதிபதி குரு தற்போது ராசிக்கு 4ம் இடத்திலிருந்து பல லாபங்களைத் தருகிறார். அத்துடன் பணவர த்தும் திருப்தி தருவதாக உள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி குரு உச்ச குருவாக பெயர்ச்சியாவதால் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.
தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்கலாம். துணிந்து புதிய முடிவுகள் எடுக்கலாம். பழைய பாக்கிகளை சீக்கிரமாக வசூலிப்பீர்கள். எதையும் செய்து முடிக்கும் நிலையை உருவாக்கும். பிள்ளைகள் வழியில் கல்வி மற்றும் திருமணச் செலவு உண்டாகலாம். முதலீடு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வையால் புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும். சுகானுபவம் உண்டாகும்.
கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வழக்குகளில் சாதகமான பலன் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரப் போட்டிகள் விலகும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்கிறார். இந்தச் சனியால் உங்களது சேமிப்பு குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உ ண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
டிசம்பர் 12ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாகிறார். பாக்கிய சனி பொன்னும், பொருளும் தருவார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். தற்போது ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கேதுவும் 8ல் சஞ்சரிக்கும் ராகுவும் பல நன்மைகளை செய்து வருவார்கள். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மனைவியின் உடல்நிலையில் கவனம் தேவை. ஜூன் 21ல் வரும் ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு ராசியில் கேதுவும், ஏழாம் ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு பணவரத்தை அதிகப்படுத்தும். விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மன மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள்.
கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்கள் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இந்த வருடம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற வருடமிது. சமூக வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழும் விருதும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஏற்றங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
பூரட்டாதி 4 பாதம் : இந்த வருடம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுகநிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.
உத்திரட்டாதி : இந்த வருடம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்.
ரேவதி : இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.
சிறப்பு பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 3 ஐந்து முக மண் பித்தளை விளக்குகளை நல்லெண்ணெய் விட்டு ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
எந்த ஒரு பிரச்னை களையும் சமாதான மாகப் பேசி முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த நீங்கள், அனுபவ அறிவு மிக்கவர். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்யத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் ராசியாதிபதி குரு தற்போது ராசிக்கு 4ம் இடத்திலிருந்து பல லாபங்களைத் தருகிறார். அத்துடன் பணவர த்தும் திருப்தி தருவதாக உள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி குரு உச்ச குருவாக பெயர்ச்சியாவதால் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.
தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்கலாம். துணிந்து புதிய முடிவுகள் எடுக்கலாம். பழைய பாக்கிகளை சீக்கிரமாக வசூலிப்பீர்கள். எதையும் செய்து முடிக்கும் நிலையை உருவாக்கும். பிள்ளைகள் வழியில் கல்வி மற்றும் திருமணச் செலவு உண்டாகலாம். முதலீடு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வையால் புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும். சுகானுபவம் உண்டாகும்.
கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வழக்குகளில் சாதகமான பலன் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரப் போட்டிகள் விலகும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்கிறார். இந்தச் சனியால் உங்களது சேமிப்பு குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உ ண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
டிசம்பர் 12ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாகிறார். பாக்கிய சனி பொன்னும், பொருளும் தருவார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். தற்போது ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கேதுவும் 8ல் சஞ்சரிக்கும் ராகுவும் பல நன்மைகளை செய்து வருவார்கள். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மனைவியின் உடல்நிலையில் கவனம் தேவை. ஜூன் 21ல் வரும் ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு ராசியில் கேதுவும், ஏழாம் ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு பணவரத்தை அதிகப்படுத்தும். விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மன மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள்.
கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்கள் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இந்த வருடம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற வருடமிது. சமூக வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழும் விருதும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஏற்றங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
பூரட்டாதி 4 பாதம் : இந்த வருடம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுகநிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.
உத்திரட்டாதி : இந்த வருடம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்.
ரேவதி : இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.
சிறப்பு பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 3 ஐந்து முக மண் பித்தளை விளக்குகளை நல்லெண்ணெய் விட்டு ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குரு பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி எழுதிய பொது ஜாதக பலன்கள்.
நன்றி.
இந்த ஆண்டு டிசம்பரில் சனிப் பெயர்ச்சி வேறு வருகிறது.
ரமணியன்
நன்றி.
இந்த ஆண்டு டிசம்பரில் சனிப் பெயர்ச்சி வேறு வருகிறது.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
» நந்தன வருட ராசி பலன்கள்
» 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்
» 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !
» 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)
» நந்தன வருட ராசி பலன்கள்
» 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்
» 2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !
» 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|