புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
59 Posts - 55%
heezulia
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
3 Posts - 3%
Guna.D
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
54 Posts - 55%
heezulia
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_m10'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:00 pm

மேஷம் :பலன் எதிர்பாராமல் சேவை செய்யும் மேஷ ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் சுக்கிரன் பிப்., 25 வரை தனுசு ராசியில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மார்ச் 10ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் ,செவ்வாய் ஆகியோராலும் நன்மை உண்டாகும். சனி, கேது,ராகு,குரு ஆகியோரால் நற்பலன் கிடைக்காது. சூரியனால் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல்நலம் சீராகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிப்., 25 வரை பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.

எதிரி தொல்லை மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,25-ந் தேதிக்கு பிறகு போட்டி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். புதிய பதவி கிடைக்க பெறுவர். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க ஏற்ற காலகட்டம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பெண்கள் குடும்பநலனில் ஆர்வம் காட்டுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.

நல்ல நாள்: பிப்., 18,19, 20, 24, 25, 26, 27, 28, மார்ச் 1,2,5,6,9,10,11
கவன நாள்: பிப்., 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: செந்தூரம், பச்சை எண்: 1,5,9
வழிபாடு: சனிக்கிழமை நரசிம்மர் கோயிலுக்குச் செல்லுங்கள். பிப்.,25க்குபிறகு வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கும் சென்று வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:00 pm

உற்சாகத்துடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்வில் நன்மை அதிகரிக்கும் மாதம். குரு,சனி,ராகு, சூரியன், சுக்கிரன் ஆகியோரால் நற்பலன் ஏற்படும். மார்ச் 10 ல் புதன் 10-ம் இடத்திற்கு வருவதால், குடும்பநிலை மேம்படும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். புது முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். செவ்வாய் ராசிக்கு 5ல் இருப்பதால் எதிரி தொல்லை உருவாகலாம்.

உடல் நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. சுக்கிரனால் குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தம்பதியர் இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். மார்ச் 9க்குப் பிறகு வீண்செலவு குறையும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு. எதிரிகள் பயந்தோடுவர். பணியாளர்களுக்கு மார்ச் 10-ந் தேதி வரை பணிச்சுமை இருந்தாலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் காணப்படுவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ்,பாராட்டு கிடைக்கும். விவசாயிகள் காய்கறி, பழ வகைகள் மூலம் நல்ல விளைச்சலும், ஆதாயமும் காண்பர். புதிய சொத்து வாங்க விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பிப். 13,14, மார்ச் 12,13ல் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். மார்ச் 9 க்கு பிறகு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.

நல்ல நாள்: பிப்., 13, 14, 20, 21, 22, 28, மார்ச்1, 2, 3, 4, 7, 8, 12, 13
கவன நாள்: பிப்.,23, 24,25
அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: மஞ்சள், செந்தூரம், வெள்ளை
வழிபாடு: கேதுவை வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். புதனன்று குல தெய்வத்தை வழிபடுங்கள். பசுவுக்கு உணவளியுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் நன்மை அதிகரிக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:01 pm

மதிநுட்பத்துடன் செயல்பட்டு வரும் மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் கேது நன்மை அளிக்கிறார். புதன் மார்ச் 10 வரை சாதகமாக நிற்கிறார். சுக்கிரன் பிப்., 24க்குப் பிறகு நற்பலன் தருவார். சூரியன், செவ்வாய், குரு,சனி,ராகு ஆகியோரால் நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. குருவின் 5,7,9-ம் பார்வையால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வருமானம் கூடும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதனால், முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை சேரக்கும். செவ்வாயால் வீண்விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. சிக்கனத்தை பின்பற்றுவது அவசியம். பிப்., 24 வரை சுக்கிரன் சாதககமற்று இருப்பதால், பெண்களால் சிரமம் நேரலாம். புதன் மார்ச் 10க்குப் பிறகு சாதகமற்ற இடத்திற்கு செல்வதால், வாக்குவாதம் செய்ய நேரிடும்.

பொறுமை காப்பது நல்லது. சூரியன் 9-ம் இடத்திற்கு செல்வதால் அவப்பெயர் உருவாகலாம் கவனம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நண்பர்களால் பிரச்னை உருவாகலாம், கவனம். புதிய தொழில் தொடங்க முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் நம்பி பணத்தை கொடுத்து விடாதீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசு ஊழியர்கள் சந்தித்த பிரச்னை அனைத்தும் தீரும். கலைஞர்களுக்கு கடின முயற்சியால், புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,24க்குப் பின் புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தை காண்பர். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பாராட்டு காண்பர். விரும்பியபடி ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது அவசியம். மார்ச் 9க்குப் பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையும் கவனம்.

நல்ல நாள்: பிப்.,15,16,17,22,23,24, மார்ச்3,4,5,6,9, 10,11,14
கவனநாள்: பிப்.25,26,27 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். மார்ச் 9 க்கு பிறகு குல தெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யுங்கள். சூரியவழிபாட்டால் நன்மை உண்டாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:02 pm

நினைத்ததை சாதிக்க துடிக்கும் கடக ராசி அன்பர்களே!

புதன் மார்ச் 9 க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். செவ்வாயால் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். சனியின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைவதால், நன்மை மேலோங்கும். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால், பொருளாதார வளம் சிறக்கும். சுக்கிரனால் பிப்., 24 வரை சோர்வு ஏற்படும். பெண்களால் தொல்லை ஏற்படலாம். ஒதுங்கி இருக்கவும். சூரியனால் அரசு வகையில் அனுகூலம் குறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

உடல் நலம் பாதிக்கப்படலாம். புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மார்ச் 9க்குப் பிறகு தம்பதி இடையே இருந்த பிணக்கு மறையும். ஒற்றுமை உண்டாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனம் செலுத்தவும். உங்கள் கோரிக்கை நிறைவேறும். போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர்.மார்ச் 9 க்கு அரசுப்பணியாளர்களுக்கு இருந்து வந்த பிரச்சினை நீங்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் பிப்ரவரி 24க்கு பிறகு, சுக்கிரன் சாதகமாவதால், கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல், மக்கள் நலனுக்காகப் பாடுபடவேண்டியதிருக்கும். விவசாயிகள் கிழங்கு வகைகள் நிலக்கடலை, காய்கறி, கீரை வகைகள் போன்றவற்றில் அதிக மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று மகிழ்வர். மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.

நல்ல நாள்: பிப்.,13,14,18,19,24,25,26,27, மார்ச் 5,6,7,8, 12,13
கவன நாள்: பிப்., 28, மார்ச்1,2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ரங்கநாதரை வழிபடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:02 pm

மன உறுதியும், செயல்திறமும் மிக்க சிம்மராசி அன்பர்களே!

கிரகங்களில் குரு,சனி,ராகு நற்பலனை வழங்க காத்திருக்கின்றனர். சூரியன், செவ்வாய், ராகு நன்மை தர இயலாதவராக உள்ளனர். சுக்கிரன் பிப்., 9 வரையிலும், புதன் மார்ச் 24 வரையிலும் நற்பலன் வழங்குவர். சனியால் பொருளாதார வளம், தொழில் வளர்ச்சி உண்டாகும். புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர். லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பிப்., 9 க்கு பிறகு ராசிக்கு 6 ல் இருப்பதால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.

சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். மார்ச் 24 க்கு பிறகு புதனால், குடும்ப பிரச்னை தலைதூக்கலாம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. செவ்வாய் 2 ல் இருப்பதால் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் தொல்லை உருவாகும். அரசு வகையில் ஆதாயம் இல்லை. வரவு, செலவுக் கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பணிஇடத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்., 24க்கு பிறகு, புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ப பலன் பெறுவர். விவசாயிகள் மிதமான லாபம் காண்பர். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருப்பது கூடாது. பெண்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். பிப்., 20,21ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.

நல்ல நாள்: பிப்.,15,16,17,20, 21, 26,27,28, மார்ச்1,7,8,9, 10,11,14
கவன நாள்: மார்ச் 2,3,4
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை
வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன், மாரியம்மனைத் தரிசனம் செய்யுங்கள். மார்ச் 9க்கு பிறகு குலதெய்வத்தை வணங்குவது நல்லது. தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:03 pm

அனைவரையும் கவரும் இயல்புள்ள கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். புதன், மார்ச் 9 க்கு பிறகு நற்பலனைக் கொடுப்பார். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். தம்பதியரிடையே பாச உணர்வு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.பிப்., 24 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் சேரும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் ராசியில் இருந்து, தடைகளை உருவாக்கினாலும், எளிதாக முறியடிப்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். மார்ச் 9க்கு பிறகு, புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். தொழிலை விரிவுப்படுத்தும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய பணி, இடமாற்றம் பெறலாம். மார்ச் 24க்கு பிறகு, பணியில் உன்னத பலன்களை எதிர்பார்க்கலாம்.வேலையின்றி இருப்பவர்கள், புதிய வேலை கிடைக்கப் பெறுவர். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல பணப்புழக்கத்துடன் இருப்பர். தலைமையின் ஆதரவால், புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு பழ வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் காணப்படவில்லை. வழக்கு விவகாரங்களில் பின்னடைவு ஏற்படலாம். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். புதன் மார்ச் 9க்குப் பிறகு சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைப்பதோடு, போட்டிகளில் வெற்றியும் காணலாம்.

நல்ல நாள்: பிப்., 13,14,18,19,22,23,28, மார்ச் 1,2,3,9,10, 11,12,13
கவன நாள்: மார்ச் 4,5,6
அதிர்ஷ்ட எண் : 7,9 நிறம்: செந்தூரம், வெள்ளை
வழிபாடு: சிவன், துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
செவ்வாய், வெள்ளியன்று முருகனையும் வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:03 pm

கடும் உழைப்புக்கு உதாரணமான துலாம் ராசி அன்பர்களே!

குரு தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். புதன் மார்ச் 10 வரை நன்மை செய்வார். சுக்கிரன் பிப்., 25ல் மகரத்திற்கு சென்றாலும், மாதம் முழுவதும் நன்மை செய்வார். மற்ற கிரகங்களில், சனிபகவானின் 3-ம் இடத்துப்பார்வை மட்டும் சாதகமான இடத்தில் விழுகிறது. இதன் மூலம் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளமும், குடும்ப மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் இருக்கிறது. நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் பொருள் சேரும். தேவையான வசதிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. பெண்களால் இருந்து வந்த இடையூறு மறையும். ஆனால், போட்டியாளர்களின் தொல்லைதலை தூக்கும். கவனம். மார்ச் 9க்கு பிறகு, தொழில் ரீதியாக சிலர் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மார்ச் 9க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி வரும். விண்ணப்பித்துள்ள சலுகைகளுக்காக அவசரப்பட வேண்டாம். தாமதமாக கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தங்கு தடையின்றி கிடைக்கும்.

அரசியல்வாதிகள், உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள், கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.பெண்கள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும்.

நல்ல நாள்: பிப்., 13,14,15,16,17,20,21,24,25, மார்ச் 3,4,5, 12,13,14
கவனநாள்: மார்ச் 6,7,8 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மஞ்சள் எண்: 4,6
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடவும். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். இதனால் உடல் நலம் சிறப்படையும்..நவக்கிரகங்களில் ராகு-கேதுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:04 pm

என்ன நடந்தாலும் மனம் தளராத விருச்சிக ராசி அன்பர்களே!

கேது,செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் பிப்.,25ல் மகரத்திற்கு சென்றாலும் அவர் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மார்ச் 9-க்கு பிறகு கும்பத்தில் நின்று குடும்ப நிலையை மேம்படுத்துவார். பொருள் சேரும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும், செவ்வாயால் அதை முறியடித்து வெற்றி காணும் வல்லமையை பெறுவீர்கள். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.கேதுவால் அபார ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். பிப்.,24க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.

வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும்.பெண்களால் தொல்லைகள் வரலாம். கேதுவின் பலத்தால் எந்த தொய்வும் ஏற்படாது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். உங்கள் பொறுப்புகளை வேறுயாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மார்ச் 9க்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம், விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். மார்ச் 9க்கு பிறகு, புதன் சாதகமாக இருப்பதால். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்குகள் சாதகமான பாதையில் செல்லும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். நகை வாங்குவர். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.

நல்ல நாள்: பிப்ரவரி 15,16,17,18,19,22,23,26,27, மார்ச்5,6,7,8
கவன நாள்: மார்ச் 9,10. சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை. எண்: 5,7
வழிபாடு: வியாழக்கிழமை குருவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள், ராமரை வணங்கி வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:04 pm

எதிலும் சாதித்துக் காட்டும் தனுசு ராசி அன்பர்களே!

சனி, ராகு, குருவால் நன்மைகள் தொடரும். சுக்கிரன்,சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் தருவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பெண்கள் மூலமாக பொருள் சேரும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மார்ச் 9வரை அவப்பெயர் வரலாம். குடும்ப, அலுவலக விஷயங்களில் ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலையும், எதிரிகளால் இடையூறும் வரலாம். குடும்பத்தில் ஆனந்தம் தொடரும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலம் தரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் வீடு கடைகள் அதிகாரிகளால் சோதனைக்கு ஆளாகலாம். செவ்வாயால் போட்டியாளர்களின் தொல்லை ஏற்படும். பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. குரு சாதகமாக இருப்பதால் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், போதுமான வருவாயும் கிடைக்கும். புகழ் பாராட்டு பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் பொதுவாக சிறப்பான பலனை பெற்று வந்தாலும், புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சற்று முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிது. விவசாயிகளுக்கு கிழங்கு, நிலக்கடலை, மொச்சை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு பணவரவும், அக்கம் பக்கத்தினர் அனுசரணையும் உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: பிப்ரவரி 18,19,20,21,24,25,28, மார்ச்1,2,7,8,9, 10,11
கவனநாள்: பிப்., 13,14 மார்ச்12,13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். செந்தூரம் எண்: 2,3,9 .
வழிபாடு: முருகன் கோயிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் உடல் நலம் சிறப்படையும். பைரவர் வழிபாடு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 4:05 pm

குழந்தைகள் மீது பாசம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்ரவரி 25ல் உங்கள் ராசிக்கு இடம் மாறி நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், எந்த ஒரு செயல்பாட்டையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால், குருவின் 9-ம் இடத்து பார்வை கும்பத்தில், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் விழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீட்டினுள்ளும், உறவினர் வகையிலும் பிரச்னை வரலாம். மார்ச் 9க்கு பிறகு, அவப்பெயரை சந்திக்க நேரிடலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். குடும்பத்தில், தீவிர முயற்சியின் பேரில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாய் காணும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள். போட்டியாளர்களின் தொல்லைகள் அவ்வப்போது தலை தூக்கும். மார்ச் 9,10,11ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறை காட்டவும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம். சலுகைகளை அதிக சிரத்தை எடுத்தே பெற வேண்டியிருக்கும். இடமாற்ற பீதி மார்ச் 9க்கு பிறகு பிறகு மறையும். எனினும், பணியில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்களுக்கு போதிய வருமானம், எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு சுமாரான நிலைதான் நிலவுகிறது. எனினும், குருவின் 9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருப்பதால், முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். மாத பிற்பகுதியில் ஆபரணங்கள் வாங்க யோகம் கூடி வரும்.

நல்ல நாள்: பிப்., 13,14,20,21,22,23,26,27 மார்ச் 3,4,9,10, 11,12,13
கவன நாள்: பிப்ரவரி15,16,17, மார்ச் 14 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை. எண்: 7.
வழிபாடு: சனிக்கிழமை சனிபகவானுக்கும் வியாழக்கிழமை குருவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டால், தடை அகன்று நன்மை கிடைக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக