ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்க்கண்டேய புராணம்!

Go down

மார்க்கண்டேய புராணம்! Empty மார்க்கண்டேய புராணம்!

Post by சிவா Sun Apr 06, 2014 3:50 am

முருகப் பெருமான் தன் தந்தையான சிவபெருமானுக்கு உபதேசம் செய்த புராணக்கதை போலவே, இன்னொரு சம்பவமும் உண்டு. அதில் தந்தைக்கு உபதேசம் செய்தவன், பிருகு வம்ச அந்தணர் ஒருவரின் மகன். சகல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தாலும் பித்தனைப் போலத் திரிந்தான், அவன். அவனது தந்தையோ அவனிடம் குருகுல வாசம் முடிந்ததும், திருமணம் செய்து வைப்பதாகவும், அதன் பின் பித்ரு, தேவகாரியங்களைச் செய்து நற்கதி அடையலாம் என்றும் கூறினார்.

அவனோ பிறவிகள் பல எடுத்தும் ஏராளமான தான தர்மங்கள் செய்தும், பிறவிக் கடனை அடைக்க முடியவில்லை எனச் சொன்னான். அதோடு, இல்லறம் நடத்தவும் விருப்பமில்லாததால் துறவறம் பூண்டு வாழ விரும்புவதாகத் தன் தந்தையிடம் கூறினான்.

மகன் தீர்க்க ஞானியாய் விளங்குவது தந்தைக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது.

"அப்பனே! இதுவரை எடுத்த பல பிறவிகளில் நீ அறிந்த ரகசியங்களைக் கூறு?' என்று கேட்டார்.

"தந்தையே! உலகில் பிறந்த மனிதன் எத்தனை தடவை சுவாசிக்க முடியுமோ அது வரையிலும் உயிர் வாழ்கிறான். ஒருவனுடைய வாழ்நாட்களை அவன் மூச்சைக் கொண்டே கணக்கிட வேண்டும். புண்ணியம் பண்ணியவன் துன்பமின்றி உயிர் விடுகிறான். பாவம் செய்தவர்கள் உயிரை யமதூதர்கள் இழுத்துச் செல்கின்றனர்.

ஒருவன் இறந்தவுடன் அவனுடைய பிண்ட சரீரத்தின் வாழ்க்கை வாழ்வு பெறுகிறது. பின்னர் ஜீவனின் சரீர வாழ்க்கை தொடங்குகிறது. தான தர்மங்களைச் செய்தவனின் ஜீவன் நரக வேதனை அனுபவிப்பதில்லை. பாவங்கள் செய்தவன் அச்செயல்களுக்கு ஏற்ப நரக தண்டனைகளை அனுபவிக்கிறான்.

பலவித நரகங்கள் இருக்கின்றன. அவற்றில் வீழும் அவலத்தை அடையாமல் இருக்கப் பாவச் செயல்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நற்செயல்களைச் செய்வதே நரகத்தை தவிர்க்கும் என்ற ஞானம் உதயமாக வேண்டும்' என்று தந்தைக்கு உபதேசித்தான் மகன்.

தொடர்ந்து தன் பிறவியின் வரலாற்றøச் சொன்னான். அந்தப் பிறவிகளில் அவன் அடைந்த நரக வேதனைகளைச் சொன்னான்.

"இதற்கு முன் ஏழாவது பிறவியில் நான், தாகத்தோடு வந்த பசுக்களை தண்ணீர் குடிக்க விடாமல் அடித்து விரட்டினேன். அந்தப் பாவத்திற்கு தண்டனையாக ஜ்வாலாமுகி என்னும் நரகத்தில் தள்ளப்பட்டு, தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்தேன். அப்பொழுதுதான் ஓர் அற்புதம் நடந்தது!'

என்ன அதிசயம் மகனே? என்று தந்தை கேட்டார்.

சொல்கிறேன் தந்தையே! எப்பேர்ப்பட்ட பாவச் செயலுக்கும் தண்டனை உண்டு. நரகத்தில் நான் கிடந்தபோது என்னைப் போலவே மேலும் பலர் அவரவர் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது ஒரு விமானம் நாங்க இருந்த இடத்தைத் தாண்டிச் சென்றது. விபர்சித் ஜனகன் என்ற மன்னன் அந்த விமானத்தினுள் இருந்தான். அவன் மேல் பட்ட காற்று எங்கள் மேல் பட்டதும் எங்களது வேதனை மிகவும் குறைந்தது போன்ற ஆறுதல் ஏற்பட்டது. அவ்வரசனை நோக்கி கை உயர்த்தி வணங்கினோம். அவர் மேலும் சற்று நேரம் அங்கே இருந்தால் எங்களது துன்பம் மேலும் குறையும் என நினைத்தோம்.

மன்னன் விபர்ஜித் ஜனகன் எங்களைத் தாண்டிப் போனதும் எங்கள் துன்பம் குறைந்தது உண்மைதான். இன்னும் கொஞ்ச நேரம் அவன் இருந்தால் சுகத்தை அடைவோம் என்ற எண்ணமும் உண்டாயிற்று. இதுவே எங்கள் பிரார்த்தனையாயிற்று. மன்னன் விமானத்தை அருகே நிறுத்தச் சொல்லி எங்கள் அனைவரையும் பார்த்தான்.

எமதூதர்களே, என்னை இவ்வழியே அழைத்து வரக் காரணம் என்ன? என்று கேட்டான்.

எமதூதர்கள் மன்னனிடம், உனக்கு கைகேயி, பீலரி என்று இரண்டு மனைவியர். கைகேயி மேல் கொண்ட அன்பால் பீலரியை புறக்கணித்தால் அந்தப் பாவத்தின் பலனாய் தீஜ்வாலை நிரம்பிய இவ்வழியே வர நேர்ந்தது என்று விவரம் சொன்னார்கள்.

அப்பொழுது அரசரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவதூதர்கள் வந்தார்கள். நரகத்தில் துன்பப்படும் எங்களையும் அழைத்துக் கொண்டே சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்று, மன்னன் பிடிவாதம் பிடித்தான். அதற்காகத் தான் செய்திருந்த புண்ணியத்தில் சிறிதளவு பகிர்ந்து எங்களுக்கு அளிக்கவும் சம்மதித்தான். அவன் செய்த புண்ணியத்தால் நாங்கள் நற்கதி அடைந்தோம் என்று கூறினான்.

தன் மகன் கூறியதைக் கேட்ட அந்த அந்தணர் நரகத்தில் எந்தெந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்று கூறுமாறு கேட்டார்.

மகன், நரகலோக தண்டனைகள் பற்றி அக்னி புராணம், விஷ்ணு புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

பாவத்திற்கேற்ப தண்டனைகள் நிறையவே இருக்கின்றன.

பிறர் மனைவியைக் காமக் கண்கள் கொண்டு பார்ப்பவர்கள் கண்ணை இரும்பு முகமும், நீண்ட கூர் அலகுகளும் கொண்ட பறவைகள் கொத்தும்.

குருவை அவமதிப்போர், சாஸ்திரத்தையும் சாதுக்களையும் கேலி செய்வோர், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன், மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் சொல்லி எமதூதர்கள் கட்டாயப்படுத்துவார்கள்.

அக்கினி, குரு, பசு ஆகியவற்றைக் காலால் தீண்டியவர்களில் கால்கள் வெட்டப்படும்.

தெய்வ நிந்தனை, குரு நிந்தனை செய்வதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் காதுகளினுள் இரும்பு ஆணி அடிக்கப்படும்.

தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவர்கள், கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பார்கள்.

நீசனிடம் தானம் கேட்போர், யாசகர், குருவிடம் பொய் சொன்னோர் நாயாகப் பிறப்பார்கள்.

தானியத்தைத் திருடியவன் எலியாகவும், உடன் பிறந்தோன் மனைவியை மோகித்தவன் குயிலாகவும், குரு பத்தினியை வஞ்சித்தவன் பன்றியாகவும், உணவு, பால் களவாடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஹோமமும் பண்ணியவன் ஜீரண உறுப்பில் நோய் உள்ளவன் ஆகவும் பிறப்பர்.

இப்படி ஏராளமான தண்டனைகளை அவரவர் செய்த தீவினைப் பாவங்களுக்கு ஏற்ப நரகத்தில் அளிப்பார்கள். இத்தகைய கடுமையான தண்டனைகளில் இருந்து எவரும் தப்பிக்க இயலாது. அதனால் பாவத்திற்கேற்ப தண்டனைகள் நரகத்தில் உண்டு என்பதை உணர்ந்து புண்ணியத்தைச் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று தந்தையிடம் கூறிய பின்பு தன் தந்தையை வானப்ரஸ் தாசிரமத்தை அனுசரிக்கும்படியும் கூறினான்.

மகனின் உபதேசத்தைக் கேட்டார், தந்தை. அவன் தனக்கு ஞானத்தை உபதேசித்ததால் குருவுக்கு நிகரானவன் என்று, குருவான அவன், மேலும் ஞான மம்ரக்கத்தைத் தனக்கு உபதேசிக்க வேண்டும் என்றும் கேட்டார். மகன் சில முக்கியமானவற்றைக் கூறலானான்.

கணவனை தெய்வமாகக் கருதுவது எல்லா தர்மங்களையும் விட சிறந்தது. கற்புடைய பெண்டிரை மும்மூர்த்திகளும் பணிவர். அவர்களின் பேச்சுக்குக் கட்டுப்படுவர் என்றவன், அதை அறிவிக்க நளாயினியின் கதையையும், அனுசுயாவின் சிறப்பையும் கூற ஆரம்பித்தான்.

நளாயினியின் கதை: பிரதிஷ்டானம் என்ற ஊரில் கௌசிகன் என்ற அந்தணனும், அவன் மனைவி நளாயினியும் வசித்து வந்தனர். விதி வசத்தால் கௌசிகனை தொழுநோய் பற்றியது. பிணியின் பிடியில் உழன்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான். அவர் மனைவி நளாயினியோ கற்புக்கரசியாய், கணவனே கண்கண்ட தெய்வமாய் அவருக்கு பணிவிடை செய்வதே வாழ்வின் பலன் என்று வாழ்ந்து வந்தாள்.

ஆனால் கௌசிகன் போகப் போக தன் மனைவியை மிகவும் துன்புறுத்தினார். ஒருநாள் அவன் தாசி ஒருத்தியின் வீட்டிற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினான். என்ன செய்வாள் நளாயினி? தொழுநோயால் அவதிப்படுபவரை எப்படிக் கூட்டிச் செல்வது என்று தெரியாமல் தவித்தாள்.

கடைசியில் ஒரு கூடையில் உட்கார வைத்து தலைமீது சுமந்து தூக்கிச் சென்றாள். வழியில் மாண்டவ்யர் என்ற மகரிஷி, மன்னரின் ஆணைப்படி கழுவேற்றப்பட்ட நிலையில் இருந்தார்!

[thanks] லட்சுமி ராஜரத்னம் @ குமுதம் பக்தி[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum