Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதியில், தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட விராட்கோலி ஆட்ட நாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் 173 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர்கள் #ரோஹித் சர்மாவும், ரஹானேவும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். ஆனால், 10 ஓவர்கள் முடியும் முன்னரே ரோஹித் 24 ரன்களுக்கும், ரஹானே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து யுவராஜ் சிங்குடன் இணைந்த கோலி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சி செய்தார்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை இந்த இணை எளிதாக சமாளித்து ஆடினாலும், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வருவது கடினமாகவே இருந்தது. விராட் கோலி 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவர் அரை சதம் கடந்த ஓவரிலேயே யுவராஜ் சிங் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரெய்னா பர்னல் வீசிய 17-வது ஓவரில் 17 ரன்கள் அடிக்க 3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கட்டம் வந்தது. ஸ்டெய்ன் வீசிய 18-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் அடித்து 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலுக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 19.1 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.
#கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், #இலங்கை அணியை இந்தியா சந்திக்கவுள்ளது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்கா, முதல் ஓவரிலேயே துவக்க வீரர் டி காக் விக்கெட்டை பறிகொடுத்தது.
மோஹித் சர்மா வீசிய ஆட்டத்தின் 4-வது ஒவரில் 17 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா, அந்த ஓவரிலிருந்து வேகமான ரன் குவிப்பை ஆரம்பித்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறு முனையில் இருக்கும் வீரர்கள் இந்தியர்களின் பந்துவீச்சை விளாசினர்.
சிக்ஸர்களும், பவுண்டரிகளும் எளிதாக வர ஆரம்பித்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 41 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் தரப்பில், அஸ்வின் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட விராட்கோலி ஆட்ட நாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் 173 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர்கள் #ரோஹித் சர்மாவும், ரஹானேவும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். ஆனால், 10 ஓவர்கள் முடியும் முன்னரே ரோஹித் 24 ரன்களுக்கும், ரஹானே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து யுவராஜ் சிங்குடன் இணைந்த கோலி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சி செய்தார்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை இந்த இணை எளிதாக சமாளித்து ஆடினாலும், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வருவது கடினமாகவே இருந்தது. விராட் கோலி 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவர் அரை சதம் கடந்த ஓவரிலேயே யுவராஜ் சிங் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரெய்னா பர்னல் வீசிய 17-வது ஓவரில் 17 ரன்கள் அடிக்க 3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கட்டம் வந்தது. ஸ்டெய்ன் வீசிய 18-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் அடித்து 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலுக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 19.1 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.
#கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், #இலங்கை அணியை இந்தியா சந்திக்கவுள்ளது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்கா, முதல் ஓவரிலேயே துவக்க வீரர் டி காக் விக்கெட்டை பறிகொடுத்தது.
மோஹித் சர்மா வீசிய ஆட்டத்தின் 4-வது ஒவரில் 17 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா, அந்த ஓவரிலிருந்து வேகமான ரன் குவிப்பை ஆரம்பித்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறு முனையில் இருக்கும் வீரர்கள் இந்தியர்களின் பந்துவீச்சை விளாசினர்.
சிக்ஸர்களும், பவுண்டரிகளும் எளிதாக வர ஆரம்பித்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 41 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் தரப்பில், அஸ்வின் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியிலும் இந்தியா வெற்றிபெற வாழ்த்துகள்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
விராட் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது , நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த சேசிங் பார்த்தேன்
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
இந்திய அணியின் வீரர் ரோஹித் ஷர்மா 24 ரன்களும்,
ரஹானே 32 ரன்களும் எடுத்திருந்த நிலையில்
அவுட்டாகி வெளியேறினர். யுவராஜ் சிங் 18 ரன்களும்,
சுரேஷ் ரெய்னா 21 ரன்களும் எடுத்தனர்.
-
விராத் கோஹ்லி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.
இதில் ஐந்து பவுண்ட்ரிகளும், மூன்று சிக்ஸர்களும்
அடங்கும். கடைசி ஓவரில் ஐந்து பந்துகள் மீதமிருக்கும்
நிலையில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள்
எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
-
இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
இந்திய அணியின் வீரர் ரோஹித் ஷர்மா 24 ரன்களும்,
ரஹானே 32 ரன்களும் எடுத்திருந்த நிலையில்
அவுட்டாகி வெளியேறினர். யுவராஜ் சிங் 18 ரன்களும்,
சுரேஷ் ரெய்னா 21 ரன்களும் எடுத்தனர்.
-
விராத் கோஹ்லி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.
இதில் ஐந்து பவுண்ட்ரிகளும், மூன்று சிக்ஸர்களும்
அடங்கும். கடைசி ஓவரில் ஐந்து பந்துகள் மீதமிருக்கும்
நிலையில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள்
எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
-
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம்!
நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இருக்கும் நிலவரங்களைப் பார்க்கும்போது இந்தியா கோப்பையை வெல்லவே வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது.
போட்டிகள் துவங்கும் முன் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று எழுதினோம், ஆந்னால் அப்போது சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சி எதிரணியினருக்கு மட்டுமல்ல நமக்குமே ஆச்சரியம்தான், இந்த நிலையில் இயற்கையின் சதி தவிர இந்தியா கோப்பையை வெல்லாமல் போக வாய்ப்பு குறைவுதான் என்று தோன்றுகிறது.
அப்படி வென்றால் 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து வென்ற பெருமை தோனிக்கும் இந்தியாவுக்கும் கிடைக்கும்.
நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இருக்கும் நிலவரங்களைப் பார்க்கும்போது இந்தியா கோப்பையை வெல்லவே வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது.
போட்டிகள் துவங்கும் முன் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று எழுதினோம், ஆந்னால் அப்போது சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சி எதிரணியினருக்கு மட்டுமல்ல நமக்குமே ஆச்சரியம்தான், இந்த நிலையில் இயற்கையின் சதி தவிர இந்தியா கோப்பையை வெல்லாமல் போக வாய்ப்பு குறைவுதான் என்று தோன்றுகிறது.
அப்படி வென்றால் 2011 உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து வென்ற பெருமை தோனிக்கும் இந்தியாவுக்கும் கிடைக்கும்.
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
என்னுடைய சிறந்த £T20 இன்னிங்ஸ் - கோலி
தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை £விராட் கோலி தன்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ளார்.
"இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆம்! இதுதான் எனது சிறந்த T20 இன்னிங்ஸ் என்கிறார் கோலி. ஆனால் இந்தப் போட்டியைவிட மற்ற போட்டிகளில் பந்துகளை நான் சிறப்பாக அடித்தேன், ஒரு 5 அல்லது 6 பவுண்டரிகளை இறங்கியவுடன் அடித்துவிடுவேன், ஆனால் அது கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் கடுமையாக ரன்களுக்கு போராடவேண்டியதாயிற்று, அதனாலேயே இது எனது சிறந்த T20 இன்னிங்ஸ்.
அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். கடைசி வரை நிற்பது என்பது முதலிலேயே முடிவான விஷயம்.
நெருக்கடி இல்லை என்று கூற முடியாது, ஆனால் அதனை எதிரணியினர் சுலபத்தில் கண்டுபிடித்து விட அனுமதிக்கக் கூடாது என்பது முக்க்யம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு உலகத் தரம் வாய்ந்தது. அவர்கள் எதிரே சிறு தவறு கூட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
நான் இறங்குவதற்கு முன்பு எந்த ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் பார்ப்பேன். ஆனால் தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிராக நல்ல துவக்கம் கண்டோம். முதல் 3 ஓவர்களில் ஓவருக்க்கு 10 ரன் என்ற விகிதத்தில் சென்றோம். இத்வே ஓவருக்கு 6 ரன்கள்தான் இருந்திருந்தால் நான் விரைவில் ரன் குவிக்க் எத்தனித்து அவுட் கூட ஆகியிருப்பேன்.
இதில் திட்டமிடுதல் தேவை அவர்களது முக்கிய பவுலர்களுக்கு எவ்வளவு ஓவர்கள் உள்ளன. பகுதி நேர பவுலர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுவார்கள், யாரை அடிக்க தேர்ந்தெடுப்பது என்று திட்டமிடுதல் அவசியம்.
நான் 17 பந்துகளில் 20 ரன்களில் இருந்தேன். பவுண்டரி இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டை ரொடேட் செய்வது முக்கியம். ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொண்டிருந்தால், விக்கெட்டை விடாமல் இருந்தால் எதிரணி கேப்டன் ஏதாவது வித்தியாசமாக யோசிப்பார் நாம் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கலாம் அந்த ஓவர் ஒரு நல்ல ஓவராக நமக்கு அமையும். ஆகவே T20 கிரிக்கெட்டிலும் சிங்கிள், இரண்டுகள், மிக முக்கியமானது.
டேல் ஸ்டெய்ன் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அவரை விக்கெட் எடுக்கவே கொண்டு வருவார்கள் ஆனால் நம் ஒரு 6 அல்லது 7 ரன்களை அவர் பந்து வீசில் எடுத்து விட்டால் எதிரணி கேப்டன் வெறுப்படைவார்.
வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்ட்யில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.
வெற்றிக்கான ரன்களை அடிக்கும்போது மனது உற்சாமகடைகிறது. இதற்கு வாய்ப்பளித்த கேப்டன் தோனிக்கு நன்றி.
இவ்வாறு கூறினார்.
தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை £விராட் கோலி தன்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ளார்.
"இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆம்! இதுதான் எனது சிறந்த T20 இன்னிங்ஸ் என்கிறார் கோலி. ஆனால் இந்தப் போட்டியைவிட மற்ற போட்டிகளில் பந்துகளை நான் சிறப்பாக அடித்தேன், ஒரு 5 அல்லது 6 பவுண்டரிகளை இறங்கியவுடன் அடித்துவிடுவேன், ஆனால் அது கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் கடுமையாக ரன்களுக்கு போராடவேண்டியதாயிற்று, அதனாலேயே இது எனது சிறந்த T20 இன்னிங்ஸ்.
அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். கடைசி வரை நிற்பது என்பது முதலிலேயே முடிவான விஷயம்.
நெருக்கடி இல்லை என்று கூற முடியாது, ஆனால் அதனை எதிரணியினர் சுலபத்தில் கண்டுபிடித்து விட அனுமதிக்கக் கூடாது என்பது முக்க்யம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு உலகத் தரம் வாய்ந்தது. அவர்கள் எதிரே சிறு தவறு கூட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
நான் இறங்குவதற்கு முன்பு எந்த ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் பார்ப்பேன். ஆனால் தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிராக நல்ல துவக்கம் கண்டோம். முதல் 3 ஓவர்களில் ஓவருக்க்கு 10 ரன் என்ற விகிதத்தில் சென்றோம். இத்வே ஓவருக்கு 6 ரன்கள்தான் இருந்திருந்தால் நான் விரைவில் ரன் குவிக்க் எத்தனித்து அவுட் கூட ஆகியிருப்பேன்.
இதில் திட்டமிடுதல் தேவை அவர்களது முக்கிய பவுலர்களுக்கு எவ்வளவு ஓவர்கள் உள்ளன. பகுதி நேர பவுலர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுவார்கள், யாரை அடிக்க தேர்ந்தெடுப்பது என்று திட்டமிடுதல் அவசியம்.
நான் 17 பந்துகளில் 20 ரன்களில் இருந்தேன். பவுண்டரி இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டை ரொடேட் செய்வது முக்கியம். ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொண்டிருந்தால், விக்கெட்டை விடாமல் இருந்தால் எதிரணி கேப்டன் ஏதாவது வித்தியாசமாக யோசிப்பார் நாம் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கலாம் அந்த ஓவர் ஒரு நல்ல ஓவராக நமக்கு அமையும். ஆகவே T20 கிரிக்கெட்டிலும் சிங்கிள், இரண்டுகள், மிக முக்கியமானது.
டேல் ஸ்டெய்ன் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அவரை விக்கெட் எடுக்கவே கொண்டு வருவார்கள் ஆனால் நம் ஒரு 6 அல்லது 7 ரன்களை அவர் பந்து வீசில் எடுத்து விட்டால் எதிரணி கேப்டன் வெறுப்படைவார்.
வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்ட்யில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.
வெற்றிக்கான ரன்களை அடிக்கும்போது மனது உற்சாமகடைகிறது. இதற்கு வாய்ப்பளித்த கேப்டன் தோனிக்கு நன்றி.
இவ்வாறு கூறினார்.
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
விரட்டல் மன்னன் விராட் கோலி; பரிதாப தென் ஆப்பிரிக்கா - புள்ளிவிவரங்கள்!
இந்தியா நேற்று அரையிறுதியில் சற்றும் எதிர்பாராதவிதமாக 173 ரன்கள் இலக்கை சிறிதும் மனக்கிலேசமின்றி விரட்டல் மன்னன் விராட் கோலியின் அபார திங்க்கிங் கிரிக்கெட் மூலம் சுலபத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சில சுவையான புள்ளிவிவரங்கள் இதோ:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 169 ரன்களையே அதிகபட்சமாக துரத்தபப்ட்டுள்ளது. அந்த நியூசீலாந்து. இப்போது அந்த சாதனை காலி. இந்தியாதான் இப்போது T20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 170 ரன்களுக்கு மேல் எடுத்ததை சிறப்பாக விரட்டி வெற்றி கண்ட முதல் அணியாக உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 12 நாக்-அவுட் போட்டிகளில் அடையும் 10வது தோல்வியாகும் இது.
விராட் கோலியின் நேற்றைய 72 ரன்கள் அவரது 7வது T20 அரைசதம் துரத்தலில் 5வது. T20 கிரிக்கெட்டில் மட்டும் துரத்தலில் விராட் கோலி 496 ரன்களை 82.66 என்ற சராசரியில் வைத்துள்ளார்.
நடப்பு T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோலி 242 ரன்களை 121 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களை அடித்த வீராக திகழ்கிறார். இவருக்கு முன்பு நெதர்லாந்தின் டாம்கூப்பர் அதிகபட்சமாக இருந்தார். கம்பீர் 227 ரன்கள் எடுத்தார் எப்போது? 2007 T20 உலகக் கோப்பையில்.
டேல் ஸ்டெய்ன் நேற்று 3 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்தார். T20 கிரிக்கெட்டில் அவரது மோசமான பந்து வீச்சில் இது 2வது இடம் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவர் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
[thanks] வெப்துனியா [/thanks]
இந்தியா நேற்று அரையிறுதியில் சற்றும் எதிர்பாராதவிதமாக 173 ரன்கள் இலக்கை சிறிதும் மனக்கிலேசமின்றி விரட்டல் மன்னன் விராட் கோலியின் அபார திங்க்கிங் கிரிக்கெட் மூலம் சுலபத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சில சுவையான புள்ளிவிவரங்கள் இதோ:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 169 ரன்களையே அதிகபட்சமாக துரத்தபப்ட்டுள்ளது. அந்த நியூசீலாந்து. இப்போது அந்த சாதனை காலி. இந்தியாதான் இப்போது T20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா 170 ரன்களுக்கு மேல் எடுத்ததை சிறப்பாக விரட்டி வெற்றி கண்ட முதல் அணியாக உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 12 நாக்-அவுட் போட்டிகளில் அடையும் 10வது தோல்வியாகும் இது.
விராட் கோலியின் நேற்றைய 72 ரன்கள் அவரது 7வது T20 அரைசதம் துரத்தலில் 5வது. T20 கிரிக்கெட்டில் மட்டும் துரத்தலில் விராட் கோலி 496 ரன்களை 82.66 என்ற சராசரியில் வைத்துள்ளார்.
நடப்பு T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோலி 242 ரன்களை 121 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களை அடித்த வீராக திகழ்கிறார். இவருக்கு முன்பு நெதர்லாந்தின் டாம்கூப்பர் அதிகபட்சமாக இருந்தார். கம்பீர் 227 ரன்கள் எடுத்தார் எப்போது? 2007 T20 உலகக் கோப்பையில்.
டேல் ஸ்டெய்ன் நேற்று 3 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்தார். T20 கிரிக்கெட்டில் அவரது மோசமான பந்து வீச்சில் இது 2வது இடம் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவர் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
[thanks] வெப்துனியா [/thanks]
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
-
2007 -ஆம் ஆண்டு முதன்முறையாக
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
நடத்தப்பட்ட போது, அதில் இந்தியாவுக்கு சாம்பியன்
பட்டம் வென்று கொடுத்த தோனிக்கு ,
தற்போதும் அதற்காக வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
-
2007 -ஆம் ஆண்டு முதன்முறையாக
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
நடத்தப்பட்ட போது, அதில் இந்தியாவுக்கு சாம்பியன்
பட்டம் வென்று கொடுத்த தோனிக்கு ,
தற்போதும் அதற்காக வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
-
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சிவா wrote:[link="/t109139-20#1056506"]என்னுடைய சிறந்த £T20 இன்னிங்ஸ் - கோலி
தென் ஆப்பிரிக்காவை நேற்று வீட்டுக்கு அனுப்பிய அதி அற்புத 72 நாட் அவுட் இன்னிங்ஸை £விராட் கோலி தன்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ் என்று வர்ணித்துள்ளார்.
"இந்த ஆட்டத்தின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, ஆம்! இதுதான் எனது சிறந்த T20 இன்னிங்ஸ் என்கிறார் கோலி. ஆனால் இந்தப் போட்டியைவிட மற்ற போட்டிகளில் பந்துகளை நான் சிறப்பாக அடித்தேன், ஒரு 5 அல்லது 6 பவுண்டரிகளை இறங்கியவுடன் அடித்துவிடுவேன், ஆனால் அது கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் கடுமையாக ரன்களுக்கு போராடவேண்டியதாயிற்று, அதனாலேயே இது எனது சிறந்த T20 இன்னிங்ஸ்.
அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். கடைசி வரை நிற்பது என்பது முதலிலேயே முடிவான விஷயம்.
நெருக்கடி இல்லை என்று கூற முடியாது, ஆனால் அதனை எதிரணியினர் சுலபத்தில் கண்டுபிடித்து விட அனுமதிக்கக் கூடாது என்பது முக்க்யம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு உலகத் தரம் வாய்ந்தது. அவர்கள் எதிரே சிறு தவறு கூட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
நான் இறங்குவதற்கு முன்பு எந்த ரன் விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் பார்ப்பேன். ஆனால் தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிராக நல்ல துவக்கம் கண்டோம். முதல் 3 ஓவர்களில் ஓவருக்க்கு 10 ரன் என்ற விகிதத்தில் சென்றோம். இத்வே ஓவருக்கு 6 ரன்கள்தான் இருந்திருந்தால் நான் விரைவில் ரன் குவிக்க் எத்தனித்து அவுட் கூட ஆகியிருப்பேன்.
இதில் திட்டமிடுதல் தேவை அவர்களது முக்கிய பவுலர்களுக்கு எவ்வளவு ஓவர்கள் உள்ளன. பகுதி நேர பவுலர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுவார்கள், யாரை அடிக்க தேர்ந்தெடுப்பது என்று திட்டமிடுதல் அவசியம்.
நான் 17 பந்துகளில் 20 ரன்களில் இருந்தேன். பவுண்டரி இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டை ரொடேட் செய்வது முக்கியம். ஒன்று இரண்டு என்று எடுத்துக் கொண்டிருந்தால், விக்கெட்டை விடாமல் இருந்தால் எதிரணி கேப்டன் ஏதாவது வித்தியாசமாக யோசிப்பார் நாம் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கலாம் அந்த ஓவர் ஒரு நல்ல ஓவராக நமக்கு அமையும். ஆகவே T20 கிரிக்கெட்டிலும் சிங்கிள், இரண்டுகள், மிக முக்கியமானது.
டேல் ஸ்டெய்ன் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அவரை விக்கெட் எடுக்கவே கொண்டு வருவார்கள் ஆனால் நம் ஒரு 6 அல்லது 7 ரன்களை அவர் பந்து வீசில் எடுத்து விட்டால் எதிரணி கேப்டன் வெறுப்படைவார்.
வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்ட்யில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.
வெற்றிக்கான ரன்களை அடிக்கும்போது மனது உற்சாமகடைகிறது. இதற்கு வாய்ப்பளித்த கேப்டன் தோனிக்கு நன்றி.
இவ்வாறு கூறினார்.
ஒருவருடத்திற்கு முன்பு இந்த கோலியை பார்க்கும்போது விளையாட்டுதனமான சிறுபிள்ளை போல தான் இருக்கும்,முன்கோபம் வேறு ஆனால் இப்போ கொடுத்துள்ள பேட்டியை பார்க்கும்போது எவ்வளவு முதிர்ச்சியான வார்த்தைகள்
வாழ்த்துகள் விராட் கோலி , டோனிக்கு பிறகு இந்தியாவை இப்ப இருப்பதை விட இன்னும் மிகசிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள்.
Re: டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டோனி ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம்.வெற்றி ரன்களை தோனியே அடித்திருக்கலாம் அப்படித்தான் நானும் கூறினேன் ஆனால் இந்தப் போட்டியில் நான் உனக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது சிறப்பாக விளையாடிய நீதான் வெற்றி ரன்களையும் அடிக்கவேண்டும் என்றார்.
Hats off டோனி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» U19 உலக கோப்பை: பாகிஸ்தானை 10 விக்கெட்டில் துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
» இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி
» மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு
» இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி' அஞ்சல்தலையை அச்சடித்த ஜெர்மனி
» மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|