புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயங்கள்! Poll_c10காயங்கள்! Poll_m10காயங்கள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காயங்கள்! Poll_c10காயங்கள்! Poll_m10காயங்கள்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயங்கள்! Poll_c10காயங்கள்! Poll_m10காயங்கள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காயங்கள்! Poll_c10காயங்கள்! Poll_m10காயங்கள்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:37 pm

தீபக் என்று ஒருவர், தன்னைப் பார்க்க காத்திருப்பதாக, ஆபிஸ் பாய் சொல்லவும், குழப்பமானாள் அர்ச்சனா. அவளுக்கு அந்த பெயரில் எவரையும் தெரியாது. யோசித்துக் கொண்டே, விசிட்டர் அறைக்குள் நுழைந்தாள்.
''ஹலோ மேடம்... என் பேர் தீபக். நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது; ஆனா, உங்கள எனக்கு நல்லாவே தெரியும். வர்ற சண்டே, உங்கள பொண்ணு பாக்கறதுக்காக வரப்போற சூர்யாவோட பிரண்ட்,'' என்று, அவன் சொல்லவும், மேலும் குழப்பமானாள்.

'ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பாக்க வர்றாங்க என்ற விஷயத்தையே காலையில தானே அப்பா சொன்னாரு... மாப்பிள்ள போட்டோவ கூட, பாக்கல; அப்படி இருக்க, அவன் நண்பன் எதுக்கு, என்கிட்ட பேச வந்திருக்கான்...' என்று நினைத்த அர்ச்சனா, குழப்பத்துடன் அவனைப் பார்த்து, ''உட்காருங்க; எதுக்கு என்னை பாக்க வந்திருக்கீங்கன்னு தெரியலையே... உங்க பிரண்ட் இங்க வந்திருக்காரா?'' என்று, கேட்டாள்.

''இல்ல மேடம். சூர்யா வரல; நான் இங்க வந்தது அவனுக்கு தெரியாது. ஒரு பொண்ணோட எதிர்காலம் பாழாயிடக் கூடாதுன்னுதான், உங்க கிட்ட பேச வந்தேன்.''புதிர் போடுவது போல், தொடர்ந்தான் தீபக்...''மேடம், உங்கள பொண்ணு பாக்க வர்ற சூர்யா நல்லவனில்ல; அவன் ஒரு பொம்பள பொறுக்கி. நிறைய பொண்ணுங்கள நாசம் செய்துருக்கான். அவனால தினமும் தண்ணி அடிக்காம, தூங்க முடியாது. வீட்ல யாரோட பேச்சையும் கேட்க மாட்டான். நீங்க, அவனை கல்யாணம் செய்துக்கிட்டா, உங்க நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போயிடும். நேத்து மாயா ஜால்ல உங்கள காட்டி, அவன் விஷயத்த சொன்னதும், எனக்கு, 'பகீர்'ன்னு ஆயிருச்சு. தெரிஞ்சே, ஒரு தப்புக்கு துணை போறோமேன்னு, மனசுல ஒரு உறுத்தல்... அதான், உங்கள பாத்து, விஷயத்த சொல்லலாம்ன்னு வந்தேன். தயவு செஞ்சு, அந்த சூர்யாவ கல்யாணம் செய்யாதீங்க. அப் புறம், இந்த விஷயத்த நான் சொன்னேன்னு எங்கேயும் சொல் லிடாதீங்க. சூர்யாவுக்கு தெரிஞ்சா, என்னை கொன்னே போட்டுரு வான்,''என்று சொல்லி, தீபக் சென்று விட, அர்ச்சனாவிற்கு தலையை வலிக்க ஆரம்பித்தது.

தீபக் சொன்ன விஷயத்தை, வீட்டில் சொன்னதும், அம்மா சாவித்திரி அதிர்ச்சியடைந்தாள்.
''என்னங்க, இது அநியாயமா இருக்கு... 'பையன் சாப்ட்வேர் கம்பெனில, நல்ல வேலைல இருக்கான்; மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறான். ஒரே பையன்... பிக்கல் பிடுங்கல் இல்ல, பையனுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்ல'ன்னு தரகர் சொன்னாரே... நல்லவேள, யாரு செய்த புண்ணியமோ... அந்தப் பையனப் பத்தின விஷயமெல்லாம், இப்பவே தெரிஞ்சுது. கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சிருந்தா, நம்ம பொண்ணோட கதி என்னவாயிருக்கும்? முதல்ல, அந்த தரகருக்கு போன போட்டு, அவங்கள வர வேண்டாம்ன்னு சொல் லிடுங்க,'' என்று, கணவரிடம் திட்டவட்டமாக சொன்னாள் சாவித்திரி.

''அம்மா, அவசரப்படாத... தீபக் உண்மையாகவே சூர்யாவோட, 'பிரண்ட்'தானான்னு, நமக்கு தெரியாது. ஒருவேள, அவன் சூர்யாவுக்கு வேண்டாதவனா இருந்து, கல்யாணம் நடக்க கூடாதுங்கறதுக்காக கூட, நம்மள குழப்பலாம் இல்லையா?'' அர்ச்சனா கேட்கவும், அவளின் வார்த்தைகள், அப்பா ராகவனுக்கும் சரி என்று தோன்றியதால், ஒப்புதலாக தலையசைத்தார்.''அப்படின்னா... ஞாயித்துக்கெழம, அவங்க பொண்ணு பாக்க வரட்டும்ன்னா சொல்றீங்க?'' என்று கணவனிடம் கேட்டாள் சாவித்திரி.

''சாவித்திரி, அவங்க பொண்ணு தானே பாக்க வர்றாங்க; வந்து பாத்துட்டு போகட்டும். அப்புறம், மெதுவா விசாரிக்கலாம்; தரகர் கிட்ட யும் கேட்கலாம். எவனோ சொன்னதக் கேட்டு, தீர விசாரிக்காம, பொண்ணு பாக்க வர்றத நிறுத்த வேணாம்,'' என்று, ராகவன் முடிவாக சொல்லவும், சாவித்திரியால் தொடர்ந்து பேச முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை -

சூர்யா, அவன் அப்பா, அம்மா, தரகருடன் காரில் வந்து இறங்கவும், ராகவனும், சாவித்திரியும் அவர்களை வரவேற்று, சோபாவில் அமர வைத்தனர். சூர்யா நல்ல பர்சனாலிட்டியாக இருந்தான். அவனது பேச்சும், பணிவும், பெரியவர்களுக்கு அவன் தந்த மரியாதையை கண்டதும், ராகவனுக்கும், சாவித்திரிக்கும் அவனை பிடித்துப் போனது. ஆனால், தீபக் சொன்னது மட்டும், மனதின் ஓரத்தில், உறுத்தலாகவே இருந்தது.

''தரகர் உங்க குடும்பத்த பத்தி சொன்னதும், எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. அதுக்கேத்த மாதிரி, 'ரெண்டு பேரோட ஜாதகமும் அமோகமா பொருந்தியிருக்கு'ன்னு ஜோசியரும் சொல்லிட்டாரு. அதான், நல்ல காரியத்த தள்ளி போட வேணாம்ன்னு, உடனே, வந்துட்டோம். இதுல, உங்களுக்கு ஒண்ணும் அசவுகர்யமில்லையே?'' என்று, சூர்யாவின், அப்பா ராமநாதன் கேட்டார்.

''அதெல்லாம் ஒண்ணுமில்ல; ஆனா, பையனோட போட்டோவக் கூட காட்டாம, நேரா பொண்ணு பாக்க வர்றீங்கன்னு சொன்னதும் தான், கொஞ்சம் யோசனையா இருந்துச்சு,'' என்று, தயங்கியபடி சொன்னார் ராகவன்.
''தரகர்கிட்ட நானும் பொண்ணோட போட்டவ கேட்டேன். ஆனா, அவர் தான், 'சூர்யாவும், அர்ச்சனாவும் பொருத்தமான ஜோடிங்க. கண்டிப்பா, உங்க ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சுப் போகும்'ன்னு உறுதியா சொல்லிட்டாரு,'' ராமநாதன் சொல்லவும், சிரித்தபடி ஆமோதித்தார் தரகர்.

''அதெல்லாம் இருக்கட்டுங்க. நல்லநேரம் போயிட்டு இருக்கு, பொண்ண வரச் சொன்னா, பாத்துட்டு, அப்புறம் நிதானமா பேசலாம்,'' நடுவில் புகுந்து சொன்னாள்,சூர்யாவின் அம்மா.''சாவித்திரி... அர்ச்சனாகிட்ட காபிய குடுத்து அனுப்பும்மா,'' என்றார் ராகவன். கையில் காபி டிரேயுடன், அர்ச்சனா ஹாலுக்குள் நுழைந்தாள். அதிக ஒப்பனை இல்லாமல், எளிமையான, அலங்காரத்துடன், தேவதையாக ஜொலித்தாள் அர்ச்சனா.

thodarum..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 1:39 pm

சூர்யாவின் பெற்றோர் மற்றும் தரகருக்கு காபியை தந்தவள், சூர்யாவுக்கு தர, காபி டிரேயை நீட்டியவள், அவனைப் பார்த்ததும், அதிர்ந்து போய், அதை தவற விட்டாள். டிரே கீழே விழுந்து, காபி முழுவதும், சூர்யாவின் மேல் கொட்டியது. சில நிமிடங்களில், இது நடந்து விட்டது.
''அர்ச்சனா... என்னாச்சும்மா? காபிய பாத்துக் கொடுக்க கூடாதா? தம்பியோட டிரஸ்ல காபி கொட்டிடுச்சு பாரு,'' பதறிப் போனாள் சாவித்திரி.

''பரவாயில்ல... அவங்க மேல தப்பு இல்ல. என்னப் பாத்த அதிர்ச்சியில, அவங்க கை தவறிடுச்சு,'' சூர்யா சாதாரணமாக சொல்லவும், அனைவரும் குழப்பத்துடன் அவனைப் பார்த்தனர்.
''ரெண்டு நாளைக்கு முன்னால, தீபக்ன்னு ஒருத்தன், அர்ச்சனா ஆபிசுக்கு வந்து, என்னப் பத்தி, மோசமாக சொன்னான் இல்லையா?'' அர்ச்சனாவைப் பார்த்துக் கொண்டே சூர்யா, கேட்கவும், ராகவனும், சாவித்திரியும் அதிர்ந்தனர்.

''அந்த தீபக் வேற யாருமில்ல; நான் தான். அதனாலதான், அர்ச்சனா, 'ஷாக்'காகி, காபிய தவற விட்டுட்டாங்க,'' நிறுத்தி, நிதானமாக சொன்னான் சூர்யா. இதைக் கேட்டதும், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

''என்னடா சொல்ற? உன்னப் பத்தி, நீயே அர்ச்சனாகிட்ட தப்பா சொன்னியா... ஏண்டா அப்படிச் சொன்னே... உனக்கென்ன பைத்தியமா?'' கோபமாக கேட்டார் ராமநாதன்.''அப்பா... நான் வேலை செய்றது, சாப்ட்வேர் கம்பெனி. அங்க நிறைய பொண்ணுங்க கூட, நேரம், காலம் பாக்காம, வேலை செய்யணும். மீட்டிங், பார்ட்டின்னு நடக்கறப்போ, கொஞ்சமா லிக்கர் சாப்பிட வேண்டி இருக்கும். இதையெல்லாம், 'அவாய்டு' செய்ய முடியாது.

''எங்களுக்கு கல்யாணம் ஆன பின், எனக்கு வேண்டாதவங்க, அர்ச்சனாகிட்ட இதை எல்லாம் தப்புத்தப்பா சொல்லி, என் மேல அவளுக்கு சந்தேகம் உண்டாயிட்டா, எங்க வாழ்க்கையே நரகமாயிடும். எங்க கம்பெனில இந்த மாதிரி ஏற்கனவே நடந்திருக்கு. அதனால தான், நானே அர்ச்சனா ஆபிசுக்கு போய், என்னப் பத்தி, தப்பா சொன்னேன். அர்ச்சனா எப்படி, 'ரியாக்ட்' செய்றாங்கறதை தெரிஞ்சுக்கத்தான், இந்த சின்ன டெஸ்ட்,'' என்றான் சூர்யா.

''சரிடா... டெஸ்ட்டோட ரிசல்ட் என்ன? அர்ச்சனா, பாஸா, இல்லையா?'' ராமநாதன் கேட்கவும், அனைவரும் சூர்யாவை பார்த்தனர்.''என்னப் பத்தி தப்பான விஷயங்கள கேட்டும், அர்ச்சனா பதட்டப்படல. மத்தவங்களா இருந்தா வீட்ல சொல்லி, பொண்ணு பாக்க வர்ற புரோக்ராமையே கேன்சல் செய்திருப்பாங்க. அப்படி இல்லாம, எந்த விஷயத்தையும் யோசிச்சு, நிதானமா முடிவு செய்யற இப்படிப்பட்ட பொண்ணத்தான், நான் எதிர்பார்த்து இருந்தேன். அதனால, எனக்கு அர்ச்சனாவ கல்யாணம் செய்துக்க, பரிபூரண சம்மதம்,'' சூர்யா சந்தோஷமாக சொல்லவும், ராகவன், சாவித்திரி முகங்களில், சந்தோஷம் தொற்றி கொண்டது.

''என்ன தம்பி நீங்க... சினிமாவுல வர்ற மாதிரி, என்னென்னமோ சொல்றீங்க... இந்த ஒரு விஷயம் தான், எங்க மனசை அரிச்சிட்டு இருந்திச்சு. இப்பத்தான் நிம்மதியா இருக்கு,'' மனம் குளிர சொன்னார் ராகவன்.

''சரி... மாப்பிள்ள பையன், சம்மதத்த சொல்லிட்டாரு; பொண்ணுகிட்டயும் சம்மதம் கேட்டீங்கன்னா... தட்டை மாத்திக்கறதுக்கு நல்ல நாள் பாத்திடலாம்,'' தன் வேலையில் குறியாக இருந்தார் தரகர்.
''அர்ச்சனா, நீ என்னமா சொல்றே... உனக்கு சம்மதம் தானே?'' புன்னகையுடன், அர்ச்சனாவை கேட்டார் ராகவன்.

''இல்லப்பா, எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமில்ல,'' என்றாள் அர்ச்சனா.
இதைக் கேட்டதும், அனைவருடைய முகங்களில் இருந்த சிரிப்பு, தொலைந்து போனது.
''என்னம்மா சொல்றே நீ, புரிஞ்சு தான் பேசறியா... அந்த தம்பிய ஏன் வேணாங்கற, அவருக்கு அழகில்லயா இல்ல அறிவில்லயா... நல்ல குடும்பம், யோசிச்சு சொல்லும்மா,'' நிதானமாகவே கேட்டார் ராகவன்.

''அப்பா... அவருக்கு அழகு, அந்தஸ்து, படிப்பு, உத்யோகம் எல்லாமே இருக்கு; ஆனா, அடுத்தவங்களோட உணர்வுகள மதிக்கற குணம் இல்ல. தன்னோட சுயநலத்துக்காக, இவர் எந்த எல்லைக்கும் போவார்ன்னு நல்லாத் தெரியுது. இது ரொம்பவும் மோசமான குணம்.
''இதே மாதிரி நானும் என்னப் பத்தி, தப்பு தப்பா சொல்லிட்டு, அப்புறம், டெஸ்ட் செஞ்சேன்னு சொன்னா, இவரு ஒத்துக்குவாரா? நாளைக்கு, எங்களுக்கு கல்யாணம் ஆன பின், இப்படியே ஒவ்வொரு விஷயத்திலயும், 'டெஸ்ட்' வைக்க மாட்டாருன்னு என்ன நிச்சயம்? இவர் கூட வாழ்ந்தா, என்னோட வாழ்க்கை அழகான கோலமா இருக்காது; அலங்கோலமாத்தான் இருக்கும். அதனால, இவர எனக்கு பிடிக்கல,'' என்று, ஆணித்தரமாக அர்ச்சனா சொல்ல, அவளது ஒவ்வொரு கேள்விக்கும், பதில் சொல்ல முடியாமல், தலைகுனிந்தான் சூர்யா.

குரு பிரசாத்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 04, 2014 6:03 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றீமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 6:17 pm

நன்றி பானு புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக