Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
2 posters
Page 1 of 1
கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காகவே, தானும் அரசியலுக்கு வரவேண்டும் என அலம்பல் பண்ணும், ஆனால், எந்தவித தலைமைத்துவ தகுதிகளும் இல்லாத தனயன்கள் பலரை தமிழ் நாட்டு அரசியல் களம் ஏற்கனவே பார்த்திருக்கின்றது.
ஆனால், கல்வி, தலைமைத்துவ ஆற்றல், பேச்சுத் திறன், நவீன உலகமயமான சிந்தனைகள் என எல்லாத் தகுதிகளும் இருந்தும், தந்தையின் விஸ்வரூப ஆளுமையால் அரசியலில் தலைதூக்க முடியாமல் தவிக்கும் சிறந்த மகன்களும் உண்டு.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கார்த்தி சிதம்பரம்!
சிறந்த கல்வித் தகுதிகளும், பொது வாழ்க்கைப் பயணமும்
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகப் பட்டப்படிப்பு; பின்னர் பிரிட்டனின் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பெற்றோர்கள் வழியில் சட்டத் துறை பட்டப்படிப்பு என சிறந்த கல்வித் தகுதிகள் ஒரு புறம்!
பொது வாழ்க்கையில், அகில இந்திய டென்பின் போலிங் விளையாட்டு மன்றத்தின் தலைவர், அகில இந்திய டென்னிஸ் விளையாட்டு மன்றத்தில் உதவித் தலைவர், தமிழ் நாடு டென்னிஸ் விளையாட்டு மன்றத்தில் உதவித் தலைவர், இப்படியாக பல பதவிகள், பொறுப்புகள்.
அரசியல் ரீதியாகவும் மிக இளம் வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினராக இடம் பிடித்தவர்.
அப்பாவின் நிழலிலும், பணத்திலும் குளிர் காயாமல் சொந்தமாகவே பலவிதமான வணிக முயற்சிகள் எடுத்து வெற்றியடைந்தவர்.
அப்பாவின் பிரபலம் என்ற நுழைவாயில் இருந்தாலும், பாரம்பரிய குடும்பப் பின்னணி இருந்தாலும், காலப்போக்கில் தனது சொந்த குண நலன்களால், தமிழ் நாட்டின் அனைத்து தரப்பட்ட பிரமுகர்களிடத்திலும் தனக்கென தனியான தொடர்புகளையும், நட்பு வட்டாரத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளவர் கார்த்தி.
ஆனால், இத்தனை சிறப்புகள் இருந்தும், தந்தை சிதம்பரம், காங்கிரஸ் அரசியலில் முக்கிய இடம் வகித்ததாலும், மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்தில் நீண்ட காலம் இருந்ததாலும், முன்னணிக்கு வர முடியாமல் இருந்த கார்த்திக்கு இப்போது முதல் முறையாக சிக்கலான தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
Re: கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
வெற்றி வாய்ப்புகள் எப்படி?
தந்தையின் அதே சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கார்த்தி. ஆனால், இந்த முறை எல்லாக் கட்சிகளுமே, தனித் தனியாக போட்டியில் இறங்கியிருக்கின்ற சூழ்நிலை.
அதிலும், காங்கிரஸ் கட்சிக்கோ, தமிழ் நாட்டில் இக்கட்டான சூழ்நிலை. ஒரு பக்கம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அந்தக் கட்சி எடுத்த தொடர் முடிவுகளால், தமிழ் நாட்டு வாக்காளர்களின் பலத்த அதிருப்தியை அந்தக் கட்சி சம்பாதித்திருக்கும் நேரம் இது.
போதாக்குறைக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்ததால், காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசாங்கத்தின் மீது கணிசமான தமிழக வாக்காளர்கள் எதிர்ப்புணர்வோடு இருக்கின்றார்கள்.
இவ்வளவையும் மீறி, கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வென்று வர முடியுமா என்பதைக் காண தமிழக அரசியல் ஆர்வலர்கள் ஆர்வமுடன் ஒரு புறம் காத்திருக்கின்றார்கள்.
இன்னொரு புறத்திலோ, கார்த்தி அப்படியே வென்று நாடாளுமன்ற உறுப்பினராக காலடி எடுத்து வைத்தால், காங்கிரசும் மத்தியில் அதிர்ஷ்டவசமாக ஆட்சி அமைத்தால், கார்த்தி மத்திய அமைச்சரவையில் கூட இடம் பெறலாம், தந்தை விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்னும் அளவுக்கு டில்லி வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது.
இதனால், இந்த இந்தியத் தேர்தலில் அனைவராலும் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக கார்த்தி சிதம்பரம் தோற்றமெடுத்திருக்கின்றார்.
Re: கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
சாதக, பாதக அம்சங்கள்
, சிறந்த கல்வித் தகுதிகள், பேச்சாற்றல், தந்தையின் செல்வாக்கு, சிவகங்கை வட்டாரத்திற்கே உரிய நகரத்தார் சமூக ஆதரவு, பண பலம், காங்கிரசின் பாரம்பரிய வாக்குகள் – இவையெல்லாம் இந்த தேர்தலில் கார்த்திக்கு சாதகமான அம்சங்கள்.
சிதம்பரத்தின் மீது தனிப்பட்ட ஆத்திரத்தோடு செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் ஆத்திரம் – அது கார்த்தி மீதும் பாய்ந்து அவரையும் தோற்கடிக்க அவர் முனைப்பு காட்டலாம் என்ற நிலைமை; இலங்கைத் தமிழர் பிரச்சனையால் காங்கிரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் வாக்குகள், தனித் தனி கட்சிகளாகப் பிரிந்து நிற்பதால் வாக்குகள் சிதறும் சூழ்நிலை; வழக்கமாக காங்கிரசில் தொடரும் உள்கட்சி பின்னணி கீழறுப்புகள்; இவையெல்லாம் கார்த்திக்கு எதிராக வரிசை பிடித்து நிற்கும் அஸ்திரங்கள்.
வாக்குகள் தனித் தனி கட்சிகளுக்கும் பிரிவதால், தந்தை பல தவணைகள் அந்த தொகுதியில் உறுப்பினராக இருந்த காரணத்தால் இயல்பாகவே கார்த்திக்கு இருக்கக் கூடிய சில அனுகூலங்கள், அவற்றோடு அவரது தனிப்பட்ட செல்வாக்கு இவற்றால் கார்த்திக்கு சற்றே கூடுதலாக வெற்றி வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
இருப்பினும் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமைக்காவிட்டாலும் சரி – இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன்வழி தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்படத்தக்க ஓர் அரசியல்வாதியாக தடம் பதித்து விட்டார் கார்த்தி சிதம்பரம்!
-இரா.முத்தரசன் @ செல்லியல்.காம்
Re: கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?
கார்த்திக் சிதம்பரம்..தனது தனிப்பட்ட பழக்கவழக்கங்களால் பெயரை கெடுத்து வைத்திருப்பவர்.. கூட்டணி இல்லாமல் வெற்றி மிக கடினம்..பலமுனைப்போட்டி இருக்கும் சூழ்நிலையில் அவர் வெற்றி பெற்றால் குறிப்பிடத்தகுந்த அரசியல் நிகழ்கவாக அமையும் என்பதில் ஐயமில்லை...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
» கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
» திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
» கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|