புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதிப்பு நமக்குத்தான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 5:57 pm

குஜராத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பு ஆறுகள் உள்பட நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 88 தொழில் நிறுவன குழுமங்கள் (இன்டஸ்டிரியல் கிளஸ்டர்) அடங்கிய பகுதிகளை மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்த ஆய்வை மேற்கொண்டது.

அதில், மிகமிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியாக குஜராத்தில் உள்ள அங்க்லேஷ்வர் 88.50 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் 81.79 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காற்று, நீர், நிலம் ஆகிய மூன்றுமே மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடலூர் 77.45 புள்ளிகளுடன் இந்திய அளவில் 16-வது இடத்திலும், சென்னை அருகே உள்ள மணலி 76.32 புள்ளிகளுடன் 20-வது இடத்திலும், கோவை 72.38 புள்ளிகளுடன் 34-வது இடத்திலும், திருப்பூர் 68.38 புள்ளிகளுடன் 51-வது இடத்திலும், மேட்டூர் 66.98 புள்ளிகளுடன் 56-வது இடத்திலும், ஈரோடு 58.19 புள்ளிகளுடன் 78-வது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத நகரங்கள் மாசுபடவில்லை என்று பொருள் அல்ல. மேலே குறிப்பிட்டுள்ள நகரங்கள் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்படவில்லை அவ்வளவே!

வேலூரில் தோல் தொழிற்சாலை கழிவுகளும், மணலியில் பல்வேறு விதமான தொழிற்சாலைகளின் கழிவுகளும், திருப்பூரில் சாயப் பட்டறைத் தொழிற்சாலைகளின் கழிவுகளும் நிலம், நீர், காற்றை மிகமிக மோசமாக பாதித்துள்ளன. இன்னும் சில பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட இந்த ஏழு நகரங்கள் மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாதவையாக மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. அப்படி அங்கு வாழும் நிலையில் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை ஏற்படும்.

புனிதமாகப் போற்றப்படும் கங்கை, 11 மாநிலங்களில் இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரை வழங்குகிறது. கங்கையில் மூழ்கினால் பாவம் கழியும் என்பது நம்பிக்கை. ஆனால், அப்படிப்பட்ட கங்கை இப்போது கழிவுகளால் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உலகிலேயே அதிகம் மாசுபட்ட ஆறுகளில் 5-வது இடத்தில் கங்கை உள்ளது.

கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதற்காக 1986-லேயே பணிகள் துவங்கப்பட்டு சில ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவானதுதான் மிச்சம். கங்கை தூய்மையடைவதாக இல்லை.

தமிழ்நாட்டிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நீர்நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலோ பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிற ஓலம் எழுகிறது. ஒரு சிலரின்பாதிப்பா, ஒட்டுமொத்த அழிவா என்கிற கேள்விக்கு விடை காண முடியாமல் அரசு தவிக்கிறது.

நமது முன்னோர்கள் இயற்கையைக் காக்கும்பொருட்டு, நீர் நிலைகளைத் தாயாகக் கருதும் எண்ணத்தை உருவாக்கினர். அதனால்தான் கங்கா மாதா, காவிரித் தாய் என்று ஆறுகளைத் தாயாக வழிபட்டனர். ஆனால், அது கட்டுப்பெட்டித் தனம் என்ற எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுடன், வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் சாத்தியமில்லை என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள்தொகைக்கும், அதிகரித்துவரும் மனித குலத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயம் இயற்கைக்கு ஏற்பட்டிருப்பதுதான் இந்த அவலத்துக்கு அடிப்படைக்காரணம்.

வளர்ச்சி என்பது வருங்கால சந்ததியினரைப் பாதிக்கும் விதத்தில் அமையுமேயானால், அதனால் யாருக்கென்ன லாபம்? சுற்றுச்சூழல் பாதிப்பு அடுத்த தலைமுறைக்காகக் காத்திருக்கும் என்று எண்ணுவது பேதைமை. உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளத் தவறினால், மாசுபட்டுப் பாழாகப்போவது நதிகளும், நீர்நிலைகளும் மட்டுமல்ல; மனித குலம் முழுமையும்தான் என்பதை உணர வேண்டிய தருணம் இது. (தினமணி தலையங்கம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக