புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமெடியின் களப்பிரர் காலம்!
Page 1 of 1 •
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அதில் நகைச்சுவை நடிகர்களின் பெயர்கள் நிச்சயம் இடம்பெறும். கலைவாணர், டி.எஸ். பாலையா, நாகேஷ் என்று தொடங்கும் அந்தப் பட்டியலில் கடைசியாக இடம்பெறும் காமெடியன் வடிவேலுதான். அதன் பின்னர் நகைச்சுவை நடிகர்கள் யாரும் இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் அவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சுவையாக இல்லை என்பதுதான்.
நகைச்சுவையில் இந்தியத் திரையுலகின் எந்தப் பகுதிக்கும் சவால் விடும் வகையிலான சிறந்த கலைஞர்களைக் கொண்டது தமிழ் சினிமா. என்றாலும் கடந்த சில வருடங்களாக நகைச்சுவை என்ற பெயரில் ஒப்பேற்றிக்கொண்டிருப்பவர்களை சிறந்த கலைஞர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. எனவேதான் நகைச்சுவை வறட்சி மிக்க இந்தக் காலகட்டத்தை ‘காமெடியின் களப்பிரர் காலம்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
சந்தானம், சூரி, தம்பி ராமையா, பிரேம்ஜி, சத்யன், கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்கள் கடந்த சில வருடங்களாக இயங்கிவந்தாலும் அவர்கள் நடிக்கும் காட்சிகள் பெரும்பாலானவை கற்பனை வறட்சி கொண்டவையாகவும் வெறுப்பை ஏற்படுத்தும் விதமாகவும்தான் உள்ளன. நாயக நடிகர்களின் நண்பர்களாகப் படம் முழுவதும் வரும் பாத்திரங்களில் சந்தானம், சூரி இருவரும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக ட்ராக் காமெடியாக இல்லாமல் ’கதையுடன் இணைந்த கதாபாத்திர’ங்களில் நடித்துவருகிறார்கள். முன்னவர் கவுண்டமணியையும் பின்னவர் வடிவேலுவையும் அப்பட்டமாக நகலெடுத்தாலும் அவர்கள் இருவரிடம் இயல்பாகவே இருந்த நகைச்சுவையில் பத்து சதவீதம்கூட இவர்களிடம் இல்லை. அரசியல் காரணங்களால் வனவாசத்திற்குச் சென்றுவிட்ட வடிவேலு ஏற்படுத்திய வெற்றிடத்தில் இந்த நடிகர்கள் வேரூன்றிவிட்டார்கள்.
லொள்ளு சபா காலத்தில் ‘யாரிந்த இளைஞர்?’ என்று திரும்பிப் பார்க்க வைத்த சந்தானம் சினிமாவில் நுழைந்தபோது சின்னச் சின்னப் பாத்திரங்களில் கவனம் ஈர்த்தார். லொள்ளு சபாவில் பெரிய நடிகர்களை இமிடேட் செய்து நடித்து வந்தவர், பிரதான நகைச்சுவை நடிகராகத் திரையில் வளர்ந்தபோது கவுண்டமணியின் பாணியையே பின்பற்றினார்.”யாருடா இவன் பன்னிக்கு பனியன் போட்ட மாதிரி?” “யாருடாது காக்கையை வறுத்து கல்லாவில் உக்கார வச்சது?” போன்ற வசனங்கள் கவுண்டரின் பாதிப்பில் உருவானவை என்றாலும், காட்சிகளின் ஓட்டத்தில் இயல்பாக வெளிப்படும் கிண்டலாக இல்லாமல் (உருவம் தொடர்பான கிண்டல் சரியா என்பது வேறு விவாதம்!) எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற பிரயத்தனத்துடன் எழுதப்படும் வசனங்களாக இவை அமைந்துவிடுகின்றன. தொடர்ந்து “யாருடா இவன் டேஷ் டேஷ் மாதிரி இருக்கான்” போன்ற வசனங்களைத்தான் சந்தானம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அதில் பாதிக்கு மேல் சிரிப்பை வரவழைப்பதில்லை.
ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்திலிருந்துதான் நாயகனுடன் எல்லாக் காட்சிகளிலும் வரும் சந்தானம் நடிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தில் பல காட்சிகள் மிகவும் நீளமான, வலிந்து சிரிக்க வைக்கும் காட்சிகளாக இருந்தன. ராஜேஷின் அடுத்த படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானத்தின் காமெடி சந்தேகமில்லாமல் நன்றாகவே அமைந்தது. எனினும், எதிராளி தேமேயென்று பார்த்துக்கொண்டிருக்க சந்தானம் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதைத் தொடங்கி வைத்தது இந்தப் படம் தான். அதன் பின்னர் வந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திலும் இதே மாதிரியான காட்சிகள்தான். ராஜேஷ்- சந்தானத்தின் அடுத்த ’படைப்பான’ ’ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் சாயம் முற்றிலும் வெளுத்தது. ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரவில்லை என்று ரசிகர்கள் திரையைக் கிழிக்காத குறை.
சூரியின் கதையும் கிட்டதட்ட இதே தான். பரோட்டா கடையில் “இது தப்பாட்டம்..மொதல்லேருந்து கோட்டைப் போடு” என்ற வசனத்தை இயல்பாகப் பேசியதன் மூலம் கவனம் ஈர்த்த இவரும் பிற்பாடு நகைச்சுவை என்ற பெயரில் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறார். பிரேம்ஜி போன்றவர்கள் இந்தக் கணக்கில்கூட வர மாட்டார்கள்.
கலைவாணர் காலத்திய நகைச்சுவைக் காட்சிகளில் வர்க்க ஏற்றத்தாழ்வின் முரண், வருத்தம் தோய்ந்த நகைச்சுவையில் வெளிப்படும். எளிய மனிதர்களைச் சுரண்டும் மேல்தட்டு வர்க்கத்தினரை எள்ளி நகையாடும் கலைவாணர் தன்னையே கோமாளியாகக் காட்டிக்கொள்ளத் தயங்கியதில்லை. அவரை அடுத்து சந்திரபாபு, நாகேஷ் தொடங்கி அற்புதமான பல கலைஞர்கள் தமக்கே உரிய பாணிகளில் வெற்றிபெற்றனர்.
எழுபதுகளின் இறுதியில் இருந்த வெற்றிடத்தைப் போக்கியதுடன் திரைப்படங்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர்ந்தவர் கவுண்டமணி. அவரது நகைச்சுவை குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது அபாரமான டைமிங்கும் பேச்சில் கொங்கு மண்ணின் ராகமும் இன்றும் ரசிக்கத்தக்கவை. வடிவேலுவின் இயல்பான வசன உச்சரிப்பு, உடல் மொழி, ’மதுரைத் தமில்’ போன்றவை அவரது வெற்றியை உறுதி செய்தன. இவர்களுக்குப் பின்னர் வளர்ந்திருக்கும் நடிகர்கள் படம் முழுவதும் தலை தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நகைச்சுவையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து பல படங்கள் நடிப்பதையும் ஒரு காரணமாக சொல்லமுடியாது. கவுண்டமணி- செந்தில் இணை வருடத்துக்கு 50 படங்கள்கூட நடித்தது. அவற்றில் பல காட்சிகள் வயிற்றைப் பதம் பார்ப்பவை. சம்பந்தப்பட்ட நடிகர்கள் உழைக்கவில்லை என்றால் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. திரைக்கடலில் மூழ்கி மறைந்தவர்கள் ஏராளம்.
இவ்வளவுக்குப் பிறகும் அதிர்ஷ்டவசமாக , கவுண்டமணி (49-ஓ), வடிவேலு (ஜ.பு. தெனாலிராமன்), விவேக் (நான்தான் பாலா), சந்தானம் (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்) ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படங்கள் இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றன. இருண்ட காலத்துக்குப் பின்னர் கொஞ்சம் நம்பிக்கை வெளிச்சம் தரும் செய்தியாக இதைக் கருதலாம்! (வெ. சந்திரமோகன்-தெஹிண்டுதமிழ்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|