Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
+4
ayyasamy ram
ராஜா
ஈகரைச்செல்வி
சாமி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
First topic message reminder :
தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர்
உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவும் எழுத்துரு (FONT) ஒன்றை வடிவமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமார்.
கல்வெட்டில் காணப்படும் எழுத்து வடிவங்களை சங்ககாலத்தமிழி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எழுத்துருவில் உள்ளீடு செய்தால் அவற்றை தற்போதைய தமிழ் எழுத்துக்களாக மாற்றித் தருகிறது. இதன் மூலம் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து அறிந்திடாத யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும். தகவல் தொழில் நுட்பவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள சிவக்குமார், தற்போது மதுரை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நாவல் ஒன்றை எழுதத் தொடங்கினேன். அதற்காக தமிழ் மொழி குறித்த தகவல்கள் திரட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அந்த இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் எளிதாக கல்வெட்டுக்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நான் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவன் என்பதால் அனைவருக்கும் உதவும் வகையில் கணினியில் கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டு வரலாமே என்ற எண்ணம் தோன்றியது. எனவே கல்வெட்டுக்கென மென்பொருள் ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தேன். மென்பொருள் உருவாக்கத் தொடங்கும் முன் கல்வெட்டு எழுத்துக்களுக்கென ஓர் எழுத்துருவை உருவாக்கினால் மென்பொருளை வடிவமைப்பது எளிதாக இருக்கும் என்பதால் முதலில் எழுத்துரு உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்.
ஆனால் அதை சாத்தியமாக்குவது எளிதான காரியமாக இல்லை. ஏனெனில் தமிழ் மொழியானது தமிழ் பிராமி, வட்டெழுத்துக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று தற்போதைய எழுத்து வடிவத்தை அடைந்துள்ளது.ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. எனவே எல்லா காலத்திற்குமான துல்லியமான எழுத்துருவை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்த காலகட்டங்களைப் பிரித்து அட்டவணைப்படுத்தி, ஒவ்வொரு காலகட்டத்திற்கான எழுத்துருவை உருவாக்க முடிவு செய்தேன். தற்போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கான எழுத்துருவை உருவாக்கியுள்ளேன்" என்கிறார் சிவக்குமார்.
தமிழில் தட்டச்சு செய்ய நாம் பயன்படுத்தும் வானவில், செந்தமிழ் போன்ற எழுத்துருக்களைப் போல கல்வெட்டு எழுத்துக்களைத் தரும் ஓர் எழுத்துருதான் இந்த சங்ககாலத்தமிழி. தமிழைத் தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது எப்படி தமிழ் தட்டச்சு நமக்கு சுலபமாகிவிடுகிறதோ அது போல சங்ககாலத்தமிழியை தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது கல்வெட்டு எழுத்துக்களும் நமக்கு அத்துப்படியாகும். தட்டச்சு மட்டுமின்றி கல்வெட்டு எழுத்துக்களை தமிழில் மாற்றித் தரும் converter ஆகவும் இந்த எழுத்துரு செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
சங்ககாலத் தமிழி எழுத்துருவை கணினியில் தேர்ந்தெடுத்த பின்பு கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களுக்கான பொத்தான்களை கணினியில் அழுத்தினால் அதற்கான தற்போதைய தமிழ் வடிவம் திரையில் தெரிகிறது. மேலும் தற்போதைய தமிழை தட்டச்சு செய்தால் அதற்கேற்ற மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு எழுத்துக்கள் கிடைக்கின்றன.
கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து எனக்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் இந்த எழுத்துருவை உருவாக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆயின. இதை உருவாக்க எனக்கு ஊக்கமளித்து வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த எழுத்துருவை உருவாக்கியதன் முக்கிய நோக்கமே கணினி தெரிந்த யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும் என்ற சூழல் உருவாக வேண்டும் என்பதுதான்.இந்த எழுத்துரு பிரபலமடைந்தால் தற்போதைய தலைமுறையினர் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வெட்டுக்கள் குறித்த ஆராய்ச்சிகளும் வளரும். மேலும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் கல்வெட்டுக்களை எளிதாக ஆவணப்படுத்த முடியும்.
தற்போதைக்கு சங்ககாலத் தமிழி எழுத்துரு, 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்களை மட்டுமே மாற்றும்.விரைவில் ஒவ்வொரு நூற்றாண்டிற்கான எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.எழுத்துருக்கள் உருவாக்கி முடித்ததும், அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தமிழ் கல்வெட்டு எழுத்துகளுக்கான முழுமையான மென்பொருளை உருவாக்க உள்ளேன்.கல்வெட்டுக்களை நிழற்படம் எடுத்து கணினியில் உள்ளீடு செய்தால், கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தி மற்றும் கல்வெட்டு உருவாக்கப்பட்ட காலகட்டம் ஆகியவற்றைக் கூறும் வகையில் இந்த மென்பொருள் அமையும்.
சங்ககாலத் தமிழி என்னுடைய முதல் முயற்சி. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி தொல்லியல் அறிஞர்கள் என்னை வழிநடத்த வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்"என்கிறார் சிவக்குமார்.
தொடர்புக்கு: 95668 68500
வல்லுநர் கருத்து : கணினியில் ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்! : நாராயணமூர்த்தி, தொல்லியல் அறிஞர்
5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டின்போது சிதைந்து போனால், அந்தக் கல்வெட்டில் உள்ள செய்தியைப் படித்து பத்தாம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அதே செய்தியை மீண்டும் கல்வெட்டாக உருவாக்கும் வழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது. யார் காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் கல்வெட்டில் உள்ள செய்திகள் எக்காரணம் கொண்டும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கம் இது. இப்படி உருவாக்கப்படும் கல்வெட்டுக்கள் அதன் தொடக்கத்தில் இது ஒரு பழங்கல்படி என்ற சொல்லோடு தொடங்கும். இந்த வார்த்தையிலிருந்தே அது பிரதி எடுக்கப்பட்ட கல்வெட்டு எனப் புரிந்து கொள்ளலாம்.இந்தப் பழங்கல்படி முறை போன்ற ஒரு நல்ல முயற்சிதான் சங்ககாலத் தமிழி எழுத்துரு.
தமிழ் மொழியில் இது போன்று ஒரு முயற்சி இதற்கு முன்னர் நடந்ததில்லை எனக் கூறலாம். தற்காலத்தில் அனைத்துத் துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தற்போது வரை தமிழ்க் கல்வெட்டுக்கள் நிழற்படம் எடுக்கப்பட்டுதான் ஆவணப்படுத்தப்படுகின்றன. இனி வரும் காலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்களை கணினியில் ஆவணப்படுத்த இந்த எழுத்துரு மிகவும் உதவியாக இருக்கும். இந்த எழுத்துரு மூலம் தமிழ் பிராமி குறித்த அறிமுகம் இல்லாதவர்களும், கல்வெட்டு வாசிக்க முடியாதவர்களும் பயன்பெற முடியும். சிவக்குமாரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது". (எம். செந்தில்குமார்-
புதியதலைமுறை)
தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர்
உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவும் எழுத்துரு (FONT) ஒன்றை வடிவமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமார்.
கல்வெட்டில் காணப்படும் எழுத்து வடிவங்களை சங்ககாலத்தமிழி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எழுத்துருவில் உள்ளீடு செய்தால் அவற்றை தற்போதைய தமிழ் எழுத்துக்களாக மாற்றித் தருகிறது. இதன் மூலம் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து அறிந்திடாத யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும். தகவல் தொழில் நுட்பவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள சிவக்குமார், தற்போது மதுரை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நாவல் ஒன்றை எழுதத் தொடங்கினேன். அதற்காக தமிழ் மொழி குறித்த தகவல்கள் திரட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அந்த இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் எளிதாக கல்வெட்டுக்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நான் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவன் என்பதால் அனைவருக்கும் உதவும் வகையில் கணினியில் கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டு வரலாமே என்ற எண்ணம் தோன்றியது. எனவே கல்வெட்டுக்கென மென்பொருள் ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தேன். மென்பொருள் உருவாக்கத் தொடங்கும் முன் கல்வெட்டு எழுத்துக்களுக்கென ஓர் எழுத்துருவை உருவாக்கினால் மென்பொருளை வடிவமைப்பது எளிதாக இருக்கும் என்பதால் முதலில் எழுத்துரு உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்.
ஆனால் அதை சாத்தியமாக்குவது எளிதான காரியமாக இல்லை. ஏனெனில் தமிழ் மொழியானது தமிழ் பிராமி, வட்டெழுத்துக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று தற்போதைய எழுத்து வடிவத்தை அடைந்துள்ளது.ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. எனவே எல்லா காலத்திற்குமான துல்லியமான எழுத்துருவை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்த காலகட்டங்களைப் பிரித்து அட்டவணைப்படுத்தி, ஒவ்வொரு காலகட்டத்திற்கான எழுத்துருவை உருவாக்க முடிவு செய்தேன். தற்போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கான எழுத்துருவை உருவாக்கியுள்ளேன்" என்கிறார் சிவக்குமார்.
தமிழில் தட்டச்சு செய்ய நாம் பயன்படுத்தும் வானவில், செந்தமிழ் போன்ற எழுத்துருக்களைப் போல கல்வெட்டு எழுத்துக்களைத் தரும் ஓர் எழுத்துருதான் இந்த சங்ககாலத்தமிழி. தமிழைத் தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது எப்படி தமிழ் தட்டச்சு நமக்கு சுலபமாகிவிடுகிறதோ அது போல சங்ககாலத்தமிழியை தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது கல்வெட்டு எழுத்துக்களும் நமக்கு அத்துப்படியாகும். தட்டச்சு மட்டுமின்றி கல்வெட்டு எழுத்துக்களை தமிழில் மாற்றித் தரும் converter ஆகவும் இந்த எழுத்துரு செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
சங்ககாலத் தமிழி எழுத்துருவை கணினியில் தேர்ந்தெடுத்த பின்பு கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களுக்கான பொத்தான்களை கணினியில் அழுத்தினால் அதற்கான தற்போதைய தமிழ் வடிவம் திரையில் தெரிகிறது. மேலும் தற்போதைய தமிழை தட்டச்சு செய்தால் அதற்கேற்ற மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு எழுத்துக்கள் கிடைக்கின்றன.
கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து எனக்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் இந்த எழுத்துருவை உருவாக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆயின. இதை உருவாக்க எனக்கு ஊக்கமளித்து வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த எழுத்துருவை உருவாக்கியதன் முக்கிய நோக்கமே கணினி தெரிந்த யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும் என்ற சூழல் உருவாக வேண்டும் என்பதுதான்.இந்த எழுத்துரு பிரபலமடைந்தால் தற்போதைய தலைமுறையினர் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வெட்டுக்கள் குறித்த ஆராய்ச்சிகளும் வளரும். மேலும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் கல்வெட்டுக்களை எளிதாக ஆவணப்படுத்த முடியும்.
தற்போதைக்கு சங்ககாலத் தமிழி எழுத்துரு, 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்களை மட்டுமே மாற்றும்.விரைவில் ஒவ்வொரு நூற்றாண்டிற்கான எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.எழுத்துருக்கள் உருவாக்கி முடித்ததும், அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தமிழ் கல்வெட்டு எழுத்துகளுக்கான முழுமையான மென்பொருளை உருவாக்க உள்ளேன்.கல்வெட்டுக்களை நிழற்படம் எடுத்து கணினியில் உள்ளீடு செய்தால், கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தி மற்றும் கல்வெட்டு உருவாக்கப்பட்ட காலகட்டம் ஆகியவற்றைக் கூறும் வகையில் இந்த மென்பொருள் அமையும்.
சங்ககாலத் தமிழி என்னுடைய முதல் முயற்சி. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி தொல்லியல் அறிஞர்கள் என்னை வழிநடத்த வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்"என்கிறார் சிவக்குமார்.
தொடர்புக்கு: 95668 68500
வல்லுநர் கருத்து : கணினியில் ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்! : நாராயணமூர்த்தி, தொல்லியல் அறிஞர்
5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டின்போது சிதைந்து போனால், அந்தக் கல்வெட்டில் உள்ள செய்தியைப் படித்து பத்தாம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அதே செய்தியை மீண்டும் கல்வெட்டாக உருவாக்கும் வழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது. யார் காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் கல்வெட்டில் உள்ள செய்திகள் எக்காரணம் கொண்டும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கம் இது. இப்படி உருவாக்கப்படும் கல்வெட்டுக்கள் அதன் தொடக்கத்தில் இது ஒரு பழங்கல்படி என்ற சொல்லோடு தொடங்கும். இந்த வார்த்தையிலிருந்தே அது பிரதி எடுக்கப்பட்ட கல்வெட்டு எனப் புரிந்து கொள்ளலாம்.இந்தப் பழங்கல்படி முறை போன்ற ஒரு நல்ல முயற்சிதான் சங்ககாலத் தமிழி எழுத்துரு.
தமிழ் மொழியில் இது போன்று ஒரு முயற்சி இதற்கு முன்னர் நடந்ததில்லை எனக் கூறலாம். தற்காலத்தில் அனைத்துத் துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தற்போது வரை தமிழ்க் கல்வெட்டுக்கள் நிழற்படம் எடுக்கப்பட்டுதான் ஆவணப்படுத்தப்படுகின்றன. இனி வரும் காலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்களை கணினியில் ஆவணப்படுத்த இந்த எழுத்துரு மிகவும் உதவியாக இருக்கும். இந்த எழுத்துரு மூலம் தமிழ் பிராமி குறித்த அறிமுகம் இல்லாதவர்களும், கல்வெட்டு வாசிக்க முடியாதவர்களும் பயன்பெற முடியும். சிவக்குமாரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது". (எம். செந்தில்குமார்-
புதியதலைமுறை)
Re: கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
விக்ரம் அவர்களுக்கு இது பற்றி தெரியுமா?T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145786சரவணன் wrote:மேலதிக தகவல்களை தாருங்கள்....அய்யா!
சாமிதான் சொல்லணும் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
சிவகுமாருக்கு தெரியும்
சாமிக்கு தெரிந்து இருக்கலாம்
எனக்குத் தெரியாது
விக்ரமுக்கும் தெரியாது என்பது
சாமிக்கு தெரிந்து இருக்கலாம் என்பது
எனக்கு தெரியாது
ரமணியன்
சாமிக்கு தெரிந்து இருக்கலாம்
எனக்குத் தெரியாது
விக்ரமுக்கும் தெரியாது என்பது
சாமிக்கு தெரிந்து இருக்கலாம் என்பது
எனக்கு தெரியாது
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
![கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!
வெம்முக ஆண்டு: 10 - சுறவம்(தை) - 2047
வணக்கம்!
கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அன்பர் சிவகுமார் அவர்களின் செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டேன்.
"தாற்காலிகமாக இணைப்பில் இல்லை..." என்ற தகவல் வந்தது.
தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.
நன்றி
வணக்கம்!
கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அன்பர் சிவகுமார் அவர்களின் செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டேன்.
"தாற்காலிகமாக இணைப்பில் இல்லை..." என்ற தகவல் வந்தது.
தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.
நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
» ஆழப்பதிந்த சில கல்வெட்டு
» உத்திரமேரூர் கல்வெட்டு
» என்ன படிக்கலாம் ...........
» உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!
» ஆழப்பதிந்த சில கல்வெட்டு
» உத்திரமேரூர் கல்வெட்டு
» என்ன படிக்கலாம் ...........
» உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|