Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் நலமறிய ஆவல்!
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நலம் நலமறிய ஆவல்!
உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு - பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் சைனஸ் பிரச்சினை இருக்கிறது. இதற்காக இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். ஆனால், பாலிப் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் பெரிதும் அவதிப்படுவதால், நன்றாகத் தூங்கவோ, சாப்பிடவோ, சாப்பாட்டின் ருசியை அறியவோ முடியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சை இல்லாமல், இதற்கு வேறு தீர்வு இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ரதிப்பிரியா, உடுமலைப்பேட்டை
சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.
குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.
நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.
யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.
உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம். thehindutamil
எனது கணவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாகச் சைனஸ் பிரச்சினை இருக்கிறது. இதற்காக இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். ஆனால், பாலிப் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படவில்லை. அவர் பெரிதும் அவதிப்படுவதால், நன்றாகத் தூங்கவோ, சாப்பிடவோ, சாப்பாட்டின் ருசியை அறியவோ முடியவில்லை. அடுத்த மாதம் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சை இல்லாமல், இதற்கு வேறு தீர்வு இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ரதிப்பிரியா, உடுமலைப்பேட்டை
சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.
குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.
நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.
யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.
உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம். thehindutamil
Last edited by சாமி on Wed Mar 26, 2014 4:20 pm; edited 1 time in total
Re: நலம் நலமறிய ஆவல்!
நான் HBs Ag பாசிட்டிவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதை நெகட்டிவாக மாற்ற முடியாதா? இதற்காக நான் அலோபதி மருந்து எடுத்துவருகிறேன். இதன் மூலம் கல்லீரல் புற்றுநோயிலிருந்து நான் பாதுகாப்பாக இருக்கலாம் என்கிறார் என் டாக்டர். ஆனால், HBs Agயை நெகட்டிவாக மாற்ற முடியாது என்கிறார். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தீர்க்கவும் முடியாது என்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்?
- ராஜ்வந்த், மின்னஞ்சல் மூலம்
HBs Ag பாசிட்டிவ் என்பது ஹெபாடைட்டிஸ்- பி வைரஸின் தொற்று இருப்பதைக் குறிக்கிறது. அந்த வைரஸ் பெருக்கத்தைக் கீழாநெல்லி முதலான சித்த மூலிகைகள் சில கட்டுப்படுத்துவதை நவீன ஆய்வுகளும்கூட உறுதிப்படுத்தியிருக்கின்றன. வைரஸ் பெருகாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஈரல் சுருக்க நோய்(cirrhosis)/ புற்று (hepato cellular carcinoma) வருவதைத் தடுக்க முடியும். எல்லா நேரமும் இந்த மருந்துகளால், முழுமையாக நெகட்டிவ் ஆக்க முடிவதில்லை. சிலருக்கு வைரஸின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்குக் குறைந்து போய் நெகட்டிவ் முடிவு கிடைக்கிறது. ஆனால், ஒருவேளை சோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தாலும்கூட, வைரஸின் எண்ணிக்கை குறைவுபட்டு, ஈரலின் பணி சிறப்பாக நடைபெறவும், பின்னாளில் அந்த வைரஸ் நோய் வராது காக்கவும் கீழாநெல்லி பயன்தருவது உறுதி. அதேநேரம், மது குடிப்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகள் எடுப்பதும் ஈரலைச் சிதைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
- ராஜ்வந்த், மின்னஞ்சல் மூலம்
HBs Ag பாசிட்டிவ் என்பது ஹெபாடைட்டிஸ்- பி வைரஸின் தொற்று இருப்பதைக் குறிக்கிறது. அந்த வைரஸ் பெருக்கத்தைக் கீழாநெல்லி முதலான சித்த மூலிகைகள் சில கட்டுப்படுத்துவதை நவீன ஆய்வுகளும்கூட உறுதிப்படுத்தியிருக்கின்றன. வைரஸ் பெருகாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஈரல் சுருக்க நோய்(cirrhosis)/ புற்று (hepato cellular carcinoma) வருவதைத் தடுக்க முடியும். எல்லா நேரமும் இந்த மருந்துகளால், முழுமையாக நெகட்டிவ் ஆக்க முடிவதில்லை. சிலருக்கு வைரஸின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்குக் குறைந்து போய் நெகட்டிவ் முடிவு கிடைக்கிறது. ஆனால், ஒருவேளை சோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தாலும்கூட, வைரஸின் எண்ணிக்கை குறைவுபட்டு, ஈரலின் பணி சிறப்பாக நடைபெறவும், பின்னாளில் அந்த வைரஸ் நோய் வராது காக்கவும் கீழாநெல்லி பயன்தருவது உறுதி. அதேநேரம், மது குடிப்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகள் எடுப்பதும் ஈரலைச் சிதைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
Re: நலம் நலமறிய ஆவல்!
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அசிடிட்டி, பித்தத்தால் நான் அவதிப்பட்டுவருகிறேன். இதனால் வாந்தி, தலைவலி, அயர்ச்சி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதற்காக அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டேன். அவற்றைச் சாப்பிடும்போது பிரச்சினையில்லை. ஆனால், நிறுத்திவிட்டால் பழைய தொல்லைகள் வந்துவிடுகின்றன. இதற்கு வேறு தீர்வுகள் உண்டா?
- வி.சீனிவாசன், கொல்கத்தா
பித்தம் மற்றும் குடற்புண்களை வெறும் மருந்துகளால் மட்டும் குணப்படுத்துவது இயலாத ஒன்று. உணவு, உள்ளம் இரண்டையும் சீராக்க வேண்டும். காரமான உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, கிழங்கு உணவு, நேரம் தவறி எடுக்கும் உணவு, மது, புகை எல்லாமே பித்தத்தைக் கூட்டிக் குடற்புண்ணை உருவாக்கும். இவற்றை எல்லாம் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
அடுத்து பரபரப்பான மனம், பாதுகாப்பில்லாத உணர்வு, தூக்கமற்ற இரவுறக்கம் என மனச் சஞ்சலத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் வாழ்வை நகர்த்துவதும்கூடக் குடற்புண்ணுக்கு இரைப்பையில் நிரந்தரக் குடியுரிமை வழங்கிவிடும். நீங்கள் தினசரி காலையில் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். சாப்பிட்டதும் சீரகத் தண்ணீர் குடியுங்கள். உங்கள் அருகிலுள்ள சித்த மருத்துவரை ஆலோசித்துக் குடற்புண் நீக்கிக் குன்மம் போக்கும் சித்த மருந்துகளைச் சில காலம் எடுத்துவாருங்கள்.
சரியான மருந்தும் வாழ்க்கை முறை மாற்றமும் மட்டுமே இந்த நோயிலிருந்து முழுமையான விடுதலையைத் தரும்.
மிக நாட்பட்ட வயிற்று வலியை வெறும் குடற்புண்ணாக எடுத்துக் கொள்வதும் தவறு. இரைப்பை கணையப் புற்றுக்கட்டிகள்கூட வயிற்று வலி போன்றே தெரியும். அல்ட்ரா சவுண்ட், தேவைப்பட்டால் எண்டாஸ்கோபி முதலான சோதனைகளும் Tumor Markers சோதனைகளையும் குடும்ப மருத்துவரை ஆலோசித்துச் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். பயம் கொள்ள வேண்டாம். அதே சமயம் அக்கறை கொள்வதை அலட்சியப்படுத்தவும் வேண்டாம்.
- வி.சீனிவாசன், கொல்கத்தா
பித்தம் மற்றும் குடற்புண்களை வெறும் மருந்துகளால் மட்டும் குணப்படுத்துவது இயலாத ஒன்று. உணவு, உள்ளம் இரண்டையும் சீராக்க வேண்டும். காரமான உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, கிழங்கு உணவு, நேரம் தவறி எடுக்கும் உணவு, மது, புகை எல்லாமே பித்தத்தைக் கூட்டிக் குடற்புண்ணை உருவாக்கும். இவற்றை எல்லாம் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
அடுத்து பரபரப்பான மனம், பாதுகாப்பில்லாத உணர்வு, தூக்கமற்ற இரவுறக்கம் என மனச் சஞ்சலத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் வாழ்வை நகர்த்துவதும்கூடக் குடற்புண்ணுக்கு இரைப்பையில் நிரந்தரக் குடியுரிமை வழங்கிவிடும். நீங்கள் தினசரி காலையில் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். சாப்பிட்டதும் சீரகத் தண்ணீர் குடியுங்கள். உங்கள் அருகிலுள்ள சித்த மருத்துவரை ஆலோசித்துக் குடற்புண் நீக்கிக் குன்மம் போக்கும் சித்த மருந்துகளைச் சில காலம் எடுத்துவாருங்கள்.
சரியான மருந்தும் வாழ்க்கை முறை மாற்றமும் மட்டுமே இந்த நோயிலிருந்து முழுமையான விடுதலையைத் தரும்.
மிக நாட்பட்ட வயிற்று வலியை வெறும் குடற்புண்ணாக எடுத்துக் கொள்வதும் தவறு. இரைப்பை கணையப் புற்றுக்கட்டிகள்கூட வயிற்று வலி போன்றே தெரியும். அல்ட்ரா சவுண்ட், தேவைப்பட்டால் எண்டாஸ்கோபி முதலான சோதனைகளும் Tumor Markers சோதனைகளையும் குடும்ப மருத்துவரை ஆலோசித்துச் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். பயம் கொள்ள வேண்டாம். அதே சமயம் அக்கறை கொள்வதை அலட்சியப்படுத்தவும் வேண்டாம்.
Re: நலம் நலமறிய ஆவல்!
என் வயது 21. எனது உயரம் 158 செ.மீ., எடை 76 கிலோ. என் எடையைக் குறைக்க ஆசைப்படுகிறேன். என் அப்பாவுக்குக் கடந்த 23 வருடங்களாகச் சர்க்கரை நோய் இருக்கிறது. எனக்குச் சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு என் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
- எலிசா பொன்ஸி, மின்னஞ்சல் மூலம்
நீரிழிவு நோய் வராமல் தடுக்க அல்லது தள்ளிப் போட உடல் எடையை நீங்கள் கண்டிப்பாகக் குறைத்தே ஆகவேண்டும். தடாலடியாக அது நடக்காது. உணவும் உடற்பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும்தான் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்க முடியும்.
கொல்லிமலையில் அல்லது அமேசான் காட்டில் இருந்து ஒரு அரிய மூலிகை வந்து ஸீரோ சைஸ் இடுப்பைத் தந்துவிடாதா எனக் கனவு காண்பது புத்திசாலித்தனமல்ல.
உணவில் பால், தயிர், இனிப்பு, எண்ணெயில் பொரித்தவை ஆகியவற்றை அறவே தவிர்த்து விடுங்கள். நிறைய மோர் குடியுங்கள். பட்டை தீட்டிய தானியங்களைச் சாப்பிடாதீர்கள். அது அரிசி கோதுமையாக இருந்தாலும் சரி, தினை, வரகு, சாமை எனச் சிறுதானியங்களாக இருந்தாலும் சரி. பட்டை தீட்டித் தவிட்டை நீக்கிவிட்டால் பலனும் குறையும். உடலில் வேகமாகச் சர்க்கரையைச் சேர்க்கத் தொடங்கும். பழுப்பு அரிசி, வண்ணப் பாரம்பரிய அரிசிகள், பட்டை தீட்டாத தினை, வரகு சாமையில் மதிய உணவு அமையட்டும்.
புளிக்குப் பதிலாகக் குடம்புளி பயன்படுத்துங்கள். குடம்புளியின் hydroxy citric acid சத்து உடல் எடையைக் குறைக்க உதவுவதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது.
சிறிய வெங்காயம் சேர்த்த கம்பங்கூழ், கொள்ளு ரசம், கோகம் பழம் எனும் குடம்புளி ஜூஸ், வெந்தய-கறிவேப்பிலை பொடி இவையெல்லாம் எடை குறைக்க உதவும் உணவு வகைகள்.
தீவிர நடைப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் dynamic yoga எனும் ஆசனப் பயிற்சித் திட்டத்தையும் கடைப்பிடித்தால் எதிர்பார்த்தபடி எடை குறையும். உணவுக் கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி காரணமாக உடல் களைப்படையாது உற்சாகமாக இருக்க யோகாசனங்கள் கைகொடுக்கும்.
- எலிசா பொன்ஸி, மின்னஞ்சல் மூலம்
நீரிழிவு நோய் வராமல் தடுக்க அல்லது தள்ளிப் போட உடல் எடையை நீங்கள் கண்டிப்பாகக் குறைத்தே ஆகவேண்டும். தடாலடியாக அது நடக்காது. உணவும் உடற்பயிற்சியும், யோகாசனப் பயிற்சியும்தான் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்க முடியும்.
கொல்லிமலையில் அல்லது அமேசான் காட்டில் இருந்து ஒரு அரிய மூலிகை வந்து ஸீரோ சைஸ் இடுப்பைத் தந்துவிடாதா எனக் கனவு காண்பது புத்திசாலித்தனமல்ல.
உணவில் பால், தயிர், இனிப்பு, எண்ணெயில் பொரித்தவை ஆகியவற்றை அறவே தவிர்த்து விடுங்கள். நிறைய மோர் குடியுங்கள். பட்டை தீட்டிய தானியங்களைச் சாப்பிடாதீர்கள். அது அரிசி கோதுமையாக இருந்தாலும் சரி, தினை, வரகு, சாமை எனச் சிறுதானியங்களாக இருந்தாலும் சரி. பட்டை தீட்டித் தவிட்டை நீக்கிவிட்டால் பலனும் குறையும். உடலில் வேகமாகச் சர்க்கரையைச் சேர்க்கத் தொடங்கும். பழுப்பு அரிசி, வண்ணப் பாரம்பரிய அரிசிகள், பட்டை தீட்டாத தினை, வரகு சாமையில் மதிய உணவு அமையட்டும்.
புளிக்குப் பதிலாகக் குடம்புளி பயன்படுத்துங்கள். குடம்புளியின் hydroxy citric acid சத்து உடல் எடையைக் குறைக்க உதவுவதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது.
சிறிய வெங்காயம் சேர்த்த கம்பங்கூழ், கொள்ளு ரசம், கோகம் பழம் எனும் குடம்புளி ஜூஸ், வெந்தய-கறிவேப்பிலை பொடி இவையெல்லாம் எடை குறைக்க உதவும் உணவு வகைகள்.
தீவிர நடைப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் dynamic yoga எனும் ஆசனப் பயிற்சித் திட்டத்தையும் கடைப்பிடித்தால் எதிர்பார்த்தபடி எடை குறையும். உணவுக் கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி காரணமாக உடல் களைப்படையாது உற்சாகமாக இருக்க யோகாசனங்கள் கைகொடுக்கும்.
Re: நலம் நலமறிய ஆவல்!
எனது மகளுக்கு 13 வயது. அவளுக்கு 9 வயதிலிருந்தே முடி நரைக்கத் தொடங்கிவிட்டது. இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இது மிகப் பெரிய கவலையாக இருக்கிறது.- வி.விஜய்குமார், மின்னஞ்சல் மூலம்
இளநரைக்குப் பித்தமும் ஒரு காரணம். பலருக்கும் இது இயல்பாக மாறிவிடும். அதிகம் அச்சப்படத் தேவையில்லை. அதிக அளவில் இருந்தால், கரிசலாங்கண்ணி சேர்த்த கூந்தல் தைலத்தை அருகில் உள்ள மருத்துவரை அணுகிப் பெற்று, பயன்படுத்துங்கள்.
உணவில் இரும்புச்சத்தும், கூந்தல் அதிகம் செழித்து வளர அவசியமான கனிம உயிர்ச்சத்தும் நிறைந்த கீரைகள், பெரு நெல்லிக்காய், அத்திப்பழம், மாதுளை, காய்ந்த திராட்சை, கம்பு ஆகியவற்றைத் தினசரி சாப்பிடக் கொடுத்து வாருங்கள். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை இந்தக் கோடையில் இருந்து தொடங்குங்கள்.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை அவமானமாகவும், நாகரிகமற்ற செயலாகவும் நவீன நாகரிகம் மாற்றிவிட்டது. அதுவும் தலையில் பிசுபிசுப்பு இருப்பது ஏதோ நோய் போல, அழுக்கு போல, ஒழுங்கீனம் போல நவீன வாழ்வு சித்தரித்து விட்டது. பிசுபிசுப்பற்ற எண்ணெயின் சந்தைக்காக, எண்ணெய்க்குப் பெயர் மாற்றி கண்டிஷனர் என்று விற்கப்படும் பொருளின் வணிகத்துக்காக, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் வழக்கொழிந்துவருகிறது.
எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு மட்டுமல்ல. கூந்தல் மயிர்க்கால்களின் வழியாக மூளை முதலான உள்ளுறுப்புகளின் பித்தம் போக்கும் நலவாழ்வுப் பயிற்சியும் சிகிச்சையும் என்பதை உணர்ந்து சொன்னது, தமிழ் மருத்துவ வாழ்க்கைமுறை. அதை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை.
இளநரைக்குப் பித்தமும் ஒரு காரணம். பலருக்கும் இது இயல்பாக மாறிவிடும். அதிகம் அச்சப்படத் தேவையில்லை. அதிக அளவில் இருந்தால், கரிசலாங்கண்ணி சேர்த்த கூந்தல் தைலத்தை அருகில் உள்ள மருத்துவரை அணுகிப் பெற்று, பயன்படுத்துங்கள்.
உணவில் இரும்புச்சத்தும், கூந்தல் அதிகம் செழித்து வளர அவசியமான கனிம உயிர்ச்சத்தும் நிறைந்த கீரைகள், பெரு நெல்லிக்காய், அத்திப்பழம், மாதுளை, காய்ந்த திராட்சை, கம்பு ஆகியவற்றைத் தினசரி சாப்பிடக் கொடுத்து வாருங்கள். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை இந்தக் கோடையில் இருந்து தொடங்குங்கள்.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை அவமானமாகவும், நாகரிகமற்ற செயலாகவும் நவீன நாகரிகம் மாற்றிவிட்டது. அதுவும் தலையில் பிசுபிசுப்பு இருப்பது ஏதோ நோய் போல, அழுக்கு போல, ஒழுங்கீனம் போல நவீன வாழ்வு சித்தரித்து விட்டது. பிசுபிசுப்பற்ற எண்ணெயின் சந்தைக்காக, எண்ணெய்க்குப் பெயர் மாற்றி கண்டிஷனர் என்று விற்கப்படும் பொருளின் வணிகத்துக்காக, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் வழக்கொழிந்துவருகிறது.
எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு மட்டுமல்ல. கூந்தல் மயிர்க்கால்களின் வழியாக மூளை முதலான உள்ளுறுப்புகளின் பித்தம் போக்கும் நலவாழ்வுப் பயிற்சியும் சிகிச்சையும் என்பதை உணர்ந்து சொன்னது, தமிழ் மருத்துவ வாழ்க்கைமுறை. அதை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை.
Re: நலம் நலமறிய ஆவல்!
கடந்த 20 ஆண்டுகளாக என்னால் நன்றாகத் தூங்க முடியவில்லை. பல ஆண்டுகளாக மது அருந்துகிறேன். தற்போது இன்சோம்னியாவும், டைப் 2 நீரிழிவு நோயும் என்னைத் தாக்கியுள்ளன. இதற்கு மருந்து உட்கொண்டு வருகிறேன். மருந்து சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல், நல்ல உணவுப் பழக்கம் போன்றவை இருந்தாலும், தூக்கம் மட்டும் வரமாட்டேன் என்கிறது. இரவு முழுக்க விழித்திருந்தாலும், அடுத்த நாள் அயர்ச்சியாக இருப்பதில்லை. மனஅழுத்தம், மனநெருக்கடிகளும் இல்லை. தூக்கமின்மைக்கு நான் எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை. தொடர்பற்ற காட்சிகள் மனதுக்குள் ஓடுகின்றன. அதைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், மனது கட்டுப்பட மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வது? - எம். சுப்ரமணியன், சென்னை
உறக்கம் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள மாபெரும் நோய் சீராக்கும் அமைப்பு. பகல் முழுவதும் நம் அன்றாடப் பணிகளில், உணவில், மன விகாரங்களில், சிந்தனை ஓட்டத்தில் சிதைவுறும் செல்கள் நோயாக மாறாமல் இயல்பாக உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மூலம் காத்துக்கொள்வதும், பழுது பார்த்துக்கொள்வதும், இரவு உறக்கத்தில்தான்.
அடுக்குத் தும்மலில் இருந்து புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உண்டு. அது சீராக நடக்க, உறக்கம் மிகமிக அவசியமான ஒன்று.
உங்கள் மதுப்பழக்கம் உங்கள் உறக்கத்தைப் பாதித்தது மட்டுமில்லாமல், நீரிழவு நோயையும் வரவழைத்துள்ளது.
இன்றைக்குப் பெருவாரியான இளைஞர்கள் மதுவில் சிக்குகிறார், இளமையில் பெருகும் நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் அதற்கு முக்கியக் காரணம் இரவில், அதுவும் குறிப்பாக நல்ல இருட்டில்தான் தூங்க வேண்டும் என இன்றைய அறிவியல் ஆராய்ந்து சொல்வதைக் கடைப்பிடிக்காமல் இருப்பதுதான். இரவில் தூங்கும் போதுதான் melatonin எனும் ஹார்மோன் சுரந்து புற்றுநோய் முதலான பல வாழ்க்கைமுறை நோய்கள் வராது தடுக்க உதவுகிறது.
நடுஇரவு வரை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருப்பது, பின்னிரவில் வேலை பார்த்தால்தான் எனக்கு மூளை வேலை செய்யும் எனப் பகலில் தூங்கி இரவில் வேலை செய்வது, உடலில் அமைக்கப்பட்டுள்ள Circadian rhythm சுழற்சியைச் சங்கடப்படுத்தி உறக்கத்தைப் பாதிக்கும்.
நீங்கள் முதலில் மதுவில் இருந்து முற்றிலும் வெளியேறுங்கள். அடுத்து, இரவில் அல்லது மாலையில் 45 நிமிட வேக நடைப்பயிற்சியைச் செய்துவிட்டு, இளஞ்சூடான வெந்நீரில் குளியல் எடுங்கள். காலையிலும் மாலையிலும் பிராணயாம மூச்சுப் பயிற்சியும், யோக நித்திரை சிகிச்சைகளான Deep relaxation technique, Instant relaxation technique எனும் யோகப் பயிற்சிகளை முறையாகப் பயின்று, செய்துவாருங்கள்.
உணவில் ஜாதிக்காய், கசகசா முதலியவற்றைக் கொஞ்சமாக இரவில் சேர்ப்பதும் மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதும் உறக்கம் தரும் எளிய பழக்கங்கள்.
சித்த மருத்துவ மூலிகையான அமுக்கரா கிழங்குச்சூரணத்தைச் சித்த மருத்துவரிடம் ஆலோசித்துப் பெற்று, பாலில் கலந்து இரவில் சாப்பிட்டு வரத் தூக்கமின்மை நோய் அகலும். தலைக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உறக்கத்தைச் சீர்ப்படுத்தி, பித்தத்தைச் சீராக்கும் தமிழர் வாழ்க்கைமுறைப் பயிற்சி. அதை உடனடியாகத் தொடங்குங்கள்.
உறக்கம் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள மாபெரும் நோய் சீராக்கும் அமைப்பு. பகல் முழுவதும் நம் அன்றாடப் பணிகளில், உணவில், மன விகாரங்களில், சிந்தனை ஓட்டத்தில் சிதைவுறும் செல்கள் நோயாக மாறாமல் இயல்பாக உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மூலம் காத்துக்கொள்வதும், பழுது பார்த்துக்கொள்வதும், இரவு உறக்கத்தில்தான்.
அடுக்குத் தும்மலில் இருந்து புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உண்டு. அது சீராக நடக்க, உறக்கம் மிகமிக அவசியமான ஒன்று.
உங்கள் மதுப்பழக்கம் உங்கள் உறக்கத்தைப் பாதித்தது மட்டுமில்லாமல், நீரிழவு நோயையும் வரவழைத்துள்ளது.
இன்றைக்குப் பெருவாரியான இளைஞர்கள் மதுவில் சிக்குகிறார், இளமையில் பெருகும் நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் அதற்கு முக்கியக் காரணம் இரவில், அதுவும் குறிப்பாக நல்ல இருட்டில்தான் தூங்க வேண்டும் என இன்றைய அறிவியல் ஆராய்ந்து சொல்வதைக் கடைப்பிடிக்காமல் இருப்பதுதான். இரவில் தூங்கும் போதுதான் melatonin எனும் ஹார்மோன் சுரந்து புற்றுநோய் முதலான பல வாழ்க்கைமுறை நோய்கள் வராது தடுக்க உதவுகிறது.
நடுஇரவு வரை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருப்பது, பின்னிரவில் வேலை பார்த்தால்தான் எனக்கு மூளை வேலை செய்யும் எனப் பகலில் தூங்கி இரவில் வேலை செய்வது, உடலில் அமைக்கப்பட்டுள்ள Circadian rhythm சுழற்சியைச் சங்கடப்படுத்தி உறக்கத்தைப் பாதிக்கும்.
நீங்கள் முதலில் மதுவில் இருந்து முற்றிலும் வெளியேறுங்கள். அடுத்து, இரவில் அல்லது மாலையில் 45 நிமிட வேக நடைப்பயிற்சியைச் செய்துவிட்டு, இளஞ்சூடான வெந்நீரில் குளியல் எடுங்கள். காலையிலும் மாலையிலும் பிராணயாம மூச்சுப் பயிற்சியும், யோக நித்திரை சிகிச்சைகளான Deep relaxation technique, Instant relaxation technique எனும் யோகப் பயிற்சிகளை முறையாகப் பயின்று, செய்துவாருங்கள்.
உணவில் ஜாதிக்காய், கசகசா முதலியவற்றைக் கொஞ்சமாக இரவில் சேர்ப்பதும் மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதும் உறக்கம் தரும் எளிய பழக்கங்கள்.
சித்த மருத்துவ மூலிகையான அமுக்கரா கிழங்குச்சூரணத்தைச் சித்த மருத்துவரிடம் ஆலோசித்துப் பெற்று, பாலில் கலந்து இரவில் சாப்பிட்டு வரத் தூக்கமின்மை நோய் அகலும். தலைக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உறக்கத்தைச் சீர்ப்படுத்தி, பித்தத்தைச் சீராக்கும் தமிழர் வாழ்க்கைமுறைப் பயிற்சி. அதை உடனடியாகத் தொடங்குங்கள்.
Re: நலம் நலமறிய ஆவல்!
எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. கைவைத்தியம், மற்ற வைத்திய முறைகளைச் செய்து பார்த்துவிட்டேன். மருந்தை நிறுத்திய கொஞ்ச நாளில் மீண்டும் தலைகாட்டி விடுகிறது. இதைப் போக்க என்ன வழி டாக்டர்? - கோ. சுரேஷ், திருச்சி
தினசரி உணவில் மோர் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடுதலாக ஒரு கப் மோரைக் காலை, மாலையில் குடிக்கலாம். மணத்தக்காளிக் கீரையை வாரம் மூன்று நாள் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தவறாமல் எண்ணெய்க் குளியல் எடுங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், உணவுக்குப் பின்னர் சீரகத் தண்ணீர் குடிப்பதும் நல்லது.
இரவு நெடுநேரம் கண் விழிப்பது, மனப்பதற்றம் ஆகியவைகூட வாய்ப்புண் அடிக்கடி வருவதற்கான காரணமாக இருக்கலாம். இதற்குச் சீதளி பிராணயாம யோகப் பயிற்சியுடன் தியானப் பயிற்சியையும் சேர்த்துச் செய்வது சிறந்தது. உயிர்சத்து பி (வைட்டமின்) குறைவாலும் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புள்ளதால், சில காலம் அந்தச் சத்தைத் தரும் உணவோ அல்லது உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, நேரடி உயிர்ச்சத்து பி தரும் மருந்துகளையோ எடுத்துக்கொள்வது நல்லது.
தினசரி உணவில் மோர் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடுதலாக ஒரு கப் மோரைக் காலை, மாலையில் குடிக்கலாம். மணத்தக்காளிக் கீரையை வாரம் மூன்று நாள் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தவறாமல் எண்ணெய்க் குளியல் எடுங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், உணவுக்குப் பின்னர் சீரகத் தண்ணீர் குடிப்பதும் நல்லது.
இரவு நெடுநேரம் கண் விழிப்பது, மனப்பதற்றம் ஆகியவைகூட வாய்ப்புண் அடிக்கடி வருவதற்கான காரணமாக இருக்கலாம். இதற்குச் சீதளி பிராணயாம யோகப் பயிற்சியுடன் தியானப் பயிற்சியையும் சேர்த்துச் செய்வது சிறந்தது. உயிர்சத்து பி (வைட்டமின்) குறைவாலும் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புள்ளதால், சில காலம் அந்தச் சத்தைத் தரும் உணவோ அல்லது உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, நேரடி உயிர்ச்சத்து பி தரும் மருந்துகளையோ எடுத்துக்கொள்வது நல்லது.
Re: நலம் நலமறிய ஆவல்!
எனக்கு வயது 43. கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு யூரிக் அமிலம் அதிகமாகச் சுரந்து கால் வீக்கம் ஏற்படுகிறது. இப்போது என் யூரிக் அமில அளவு 8. இதற்குத் தேவையான மருந்துகளையும், உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். - கே. புகழேந்தி, சிதம்பரம்
உணவில் அதிகப் புரதச் சத்துள்ள மீன், கோழிக் கறி, முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, கடலைப் பருப்பு முதலிய உணவு வகைகளை நீங்கள் மிகமிகக் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். முழுமையாகத் தவிர்த்தால்கூட நல்லது.
யூரிக் அமில அதிகரிப்பு gout arthritisயையோ அல்லது சிறுநீரகத்தில் யூரிக் அமிலக் கற்களையோ உருவாக்கக் கூடும். உங்கள் கால்வீக்கம் gout ஆக இருக்கலாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசித்து, இது வேறு காரணத்தால் ஏற்பட்ட வீக்கமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறுநீரை அதிகம் வெளியேற்ற உதவும் வெள்ளரிக் காய், பார்லி, முள்ளங்கி, வாழைத்தண்டு முதலியவற்றைச் சேர்ப்பதும்கூட யூரிக் அமிலத்தால் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும். துரித உணவுகளையும், புட்டியில் அடைத்துச் சந்தையில் விற்கப்படும் ஊட்டப் புரத உணவுகளையும் முற்றிலும் தவிர்த்துவிடலாம்.
உணவில் அதிகப் புரதச் சத்துள்ள மீன், கோழிக் கறி, முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, கடலைப் பருப்பு முதலிய உணவு வகைகளை நீங்கள் மிகமிகக் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். முழுமையாகத் தவிர்த்தால்கூட நல்லது.
யூரிக் அமில அதிகரிப்பு gout arthritisயையோ அல்லது சிறுநீரகத்தில் யூரிக் அமிலக் கற்களையோ உருவாக்கக் கூடும். உங்கள் கால்வீக்கம் gout ஆக இருக்கலாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசித்து, இது வேறு காரணத்தால் ஏற்பட்ட வீக்கமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறுநீரை அதிகம் வெளியேற்ற உதவும் வெள்ளரிக் காய், பார்லி, முள்ளங்கி, வாழைத்தண்டு முதலியவற்றைச் சேர்ப்பதும்கூட யூரிக் அமிலத்தால் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும். துரித உணவுகளையும், புட்டியில் அடைத்துச் சந்தையில் விற்கப்படும் ஊட்டப் புரத உணவுகளையும் முற்றிலும் தவிர்த்துவிடலாம்.
Re: நலம் நலமறிய ஆவல்!
எனக்குக் கேட்கும் திறன் குறைவாக உள்ளது. குறிப்பாக எனது இடது காதைவிட, வலது காது குறைவாகவே கேட்கிறது. முன்பு அதிகச் சத்தம் மிகுந்த தொழிற்சாலைகளில் நான் வேலை பார்த்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு அலோபதி மருத்துவ ஆலோசனை பெற்றபோது, எனது வலது காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு மருந்து கிடையாது என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது? - சுரேஷ், மின்னஞ்சல்.
நகரமயமாக்கல் பெருகிவருவதன் காரணமாக, ஒலி மாசு மோசமடைந்து இயல்பாகவே எல்லோரது கேட்கும் திறனும் படிப்படியாகக் குறைந்து வருவதும், அது தொடர்பான அக்கறை நம்மிடம் பெரிதாக இல்லாதிருப்பதும் வேதனையான விஷயம்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப்போயிடுவோம் என்கிற மாதிரி, எல்லோருமே ஆம்புலன்ஸ் ஓட்டுவது போல சைரனை அடித்துக்கொண்டே சாலையில் செல்வது, உலகிலேயே நம்ம ஊரில் மட்டும்தான் நடக்கிறது. ஒலி மாசினால் உங்கள் கேட்கும் திறன் குறைவடைந்திருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினையாகவே இருக்கக்கூடும். நரம்பு பாதிக்கப்பட்டதால் ஒலிகளைக் கடத்தும் திறன் குறையும்பட்சத்தில், அதற்குத் தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை. காது, தலைப் பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள்.
பிற காது நோய்களுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அளவுக்கு, காது கேட்கும் திறன் குறைவுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகமில்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்குச் சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், படிப்படியாகக் காது, தொண்டைக் குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும்.
மூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவரத் தண்டின் உலர்ந்த பொடியை உள்மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும்பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம்.
இன்றளவும் காது கேட்க உதவும் கருவியை (ஹியரிங் எய்டு) பயன்படுத்துவதைச் சமூக அவமானமாகக் கருதும் நிலை வேதனையானது. கண் பார்வைக்கு உதவும் மூக்குக் கண்ணாடியை அழகாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், காது கேட்க உதவும் கருவிக்கு வராதது ஏன் என உண்மையில் புரியவில்லை.
ஏளனப்படுத்துவார்கள் என்ற எண்ணத்திலேயே பலரும் அதைத் தவிர்ப்பது நம் ஊரில் மிக அதிகம். நவீனத் தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமாய்க் கேட்கச் செய்யும் பல வகைக் கருவிகள் தற்போது கிடைக்கின்றன. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இந்தத் திறன் குறைவாக இருந்தால், அவர்களின் பேச்சுத் திறன், கல்வித் திறன் இரண்டுமே குறையும்.
நகரமயமாக்கல் பெருகிவருவதன் காரணமாக, ஒலி மாசு மோசமடைந்து இயல்பாகவே எல்லோரது கேட்கும் திறனும் படிப்படியாகக் குறைந்து வருவதும், அது தொடர்பான அக்கறை நம்மிடம் பெரிதாக இல்லாதிருப்பதும் வேதனையான விஷயம்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப்போயிடுவோம் என்கிற மாதிரி, எல்லோருமே ஆம்புலன்ஸ் ஓட்டுவது போல சைரனை அடித்துக்கொண்டே சாலையில் செல்வது, உலகிலேயே நம்ம ஊரில் மட்டும்தான் நடக்கிறது. ஒலி மாசினால் உங்கள் கேட்கும் திறன் குறைவடைந்திருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினையாகவே இருக்கக்கூடும். நரம்பு பாதிக்கப்பட்டதால் ஒலிகளைக் கடத்தும் திறன் குறையும்பட்சத்தில், அதற்குத் தீர்வு தரும் மூலிகை மருந்துகளின் பயன் இதுவரை முழுமையாக ஆய்வு செய்து அறிவிக்கப்படவில்லை. காது, தலைப் பகுதியில் செய்யப்படும் வர்ம மருத்துவம் பயனளிக்கக் கூடும். தேர்ந்த வர்ம மருத்துவரை அணுகி ஆலோசியுங்கள்.
பிற காது நோய்களுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அளவுக்கு, காது கேட்கும் திறன் குறைவுக்குப் பயன்படும் மூலிகை மருந்துகள் அதிகமில்லை. சளி, நீர் அடைப்பதால் ஏற்படும் கேட்கும் திறன் குறைவுக்குச் சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், படிப்படியாகக் காது, தொண்டைக் குழலில் தங்கியுள்ள நீர்த்திவலைகள் குறைந்து கேட்கும் திறன் சீராகும்.
மூக்கடைப்புடன் கூடிய செவித்திறன் குறைவுக்கு, சீந்தில் எனும் தாவரத் தண்டின் உலர்ந்த பொடியை உள்மருந்தாக அரை டீ ஸ்பூன் அளவு வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிடுகையில், கபம் குறைந்து கேட்கும் திறன் சரியாகும். மருத்துவ வாய்ப்புகள் இல்லாத நரம்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனும்பட்சத்தில், காது கேட்கும் கருவியின் உதவியை நாடுவதில் தயக்கம் வேண்டாம்.
இன்றளவும் காது கேட்க உதவும் கருவியை (ஹியரிங் எய்டு) பயன்படுத்துவதைச் சமூக அவமானமாகக் கருதும் நிலை வேதனையானது. கண் பார்வைக்கு உதவும் மூக்குக் கண்ணாடியை அழகாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், காது கேட்க உதவும் கருவிக்கு வராதது ஏன் என உண்மையில் புரியவில்லை.
ஏளனப்படுத்துவார்கள் என்ற எண்ணத்திலேயே பலரும் அதைத் தவிர்ப்பது நம் ஊரில் மிக அதிகம். நவீனத் தொழில்நுட்பத்தில் மிகத் துல்லியமாய்க் கேட்கச் செய்யும் பல வகைக் கருவிகள் தற்போது கிடைக்கின்றன. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இந்தத் திறன் குறைவாக இருந்தால், அவர்களின் பேச்சுத் திறன், கல்வித் திறன் இரண்டுமே குறையும்.
Re: நலம் நலமறிய ஆவல்!
எனக்குச் 54 வயதாகிறது. உயரம் 5.2 அடி, எடை 65 கிலோ. எனக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பி.பி. போன்ற எதுவும் இல்லை. ஆனால், நான் ஒரு Poor eater. அதனால் டயட் இருப்பதும் சாத்தியமில்லை. என்னுடைய எடையைக் குறைக்க வேண்டும். எப்படிச் செய்வது? - சசிகலா, மின்னஞ்சல்
முதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். Poor eater என நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, உங்கள் எடை குறைப்புக்குச் சாதகமானதல்ல. சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும்.
தேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக்கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.
வெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.
முதல் விஷயம், பட்டினி இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். Poor eater என நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, உங்கள் எடை குறைப்புக்குச் சாதகமானதல்ல. சில நேரத்தில் வயோதிகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில், கால்சியம் முதலான சத்துக்குறைவைக் கொடுத்துவிடக்கூடும்.
தேர்ந்தெடுத்த, சரியான அளவிலான, அதிகப் பழங்கள் கீரைகள் கொண்ட லோ கிளைசிமிக் உணவுத் திட்டம் உங்களுக்கு வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் 45 நிமிடங்கள், கபாலபாதி பிராணாயாமம் 30 நிமிடம் செய்வது போன்றவை உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவும். குறிப்பிட்ட சில யோகாசனங்களை மூச்சுப் பயிற்சியுடன் இணைத்து, தற்போது Dynamic yoga எனக் கற்றுத்தருகிறார்கள். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். குடம்புளி எனும் கோகம் புளி பற்றி உங்களுக்குத் தெரியுமா? பொதுவாகக் கேரளத்தில் மீன்கறி சமைக்க, இந்தப் புளியைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் புளிதான் நாம் பண்டைக் காலத்தில் பயன்படுத்தியது என்று சொல்வோரும் உண்டு. இந்தப் புளியில் Hydroxy citrate என்ற சத்து உண்டு. உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாகப் பல ஆய்வுகள் சொன்னதால், இந்தக் குடம்புளிச் சத்து எடை குறைக்கும் பல மருந்துகளிலும், உணவு வகைகளிலும் பயன்படுகிறது. நீங்கள் இந்தப் புளியைக்கொண்டு சமைக்கலாம். அல்லது அது உள்ள மூலிகை மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்குப் பின் வாங்கிப் பயன்பெறலாம்.
வெந்தயம், பூண்டு, கொள்ளு, சின்னவெங்காயம் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். திட உணவு வரிசையில் தினசரி தினை, ராகி, கம்பு, சோளம், வரகரிசி ஆகியவற்றில் ஒன்று இடம்பெறட்டும். இட்லி-தோசையாக, சோறாக, சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்தத் தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைந்த அளவு சாப்பிட்டாலே பசியைப் போக்குவதுடன், அதிக ஊட்டமும் தரும் லோகிளைசிமிக் தன்மையுடைய உணவு வகைகள் இவை.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|