Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
+3
prabagaran.r
கு.கோகிலா
சாமி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
‘வீட்டுக் கிணற்று நீரில் சோறு சமைத்தால் தும்பைப் பூவைப் போல இருக்கும். அதன் மணமே அள்ளித் தின்னச் சொல்லும்' என்று பாட்டி சொன்னவை கதைகளாக மட்டும் நினைவில் நிற்கின்றன. இன்று அந்தக் கிணறு நீர் வற்றியிருந்த இடம் தெரியாமல், கழிப்பறைக் குழியாக மாறி இருப்பதைத் துயரம் நிறைந்த மனத்தோடுதான் கடக்க வேண்டி இருக்கிறது.
ஆறுகள், அருவிகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் இருக்கும் ஊர்களின் நிலைமையும்கூட இன்றைக்குத் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இல்லை. பல ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த குளங்கள், இன்றைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் பேருந்து நிலையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் மாறி மிரட்டுகின்றன.
தண்ணீர் பற்றாக்குறை
‘தண்ணீர் பிடிப்பதற்காக இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலை மூன்று மணிக்குத்தான் தண்ணீர் வந்தது' என்று அயர்ந்து சிவந்த கண்களுடன், அடுத்த நாள் கூறினாள் தில்லியில் தனி வீடு எடுத்துத் தங்கி பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பு படிக்கும் என் தோழி.
சிறு நகரங்கள், கிராமங்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் பெண்கள் நீர் சேகரிப்பிற்காக அதிக நேரம் செலவிட்டு வருவதற்கான நேரடி சாட்சி இது. ஒரு பக்கம் கிராமங்களில் சுத்தமான தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படாத நிலையில், மற்றொரு புறம் நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களும் மின்தடை நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறார்கள்.
ஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் இயலுகிறது. இந்தப் பற்றாக்குறையை நிலத்தடி நீர் சிறிதளவு சமன் செய்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் சதவீதம் நூற்றுக்கு 80 சதவீதமாகச் சரிந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விவசாயத்துக்கு அதிக அளவு
நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதன் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்காலத்திய தொழிற்சாலைப் பெருக்கமும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றமும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. இந்த நீர் உணவுப் பயன்பாட்டிற்கு எந்த அளவு பாதுகாப்பானது என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
நிலத்தடி நீரின் தரத்தின் மீதான சந்தேகம் அதனைப் புறத் தேவைகளுக்கான ஒன்றாக மட்டும் மாற்றி இருக்கிறது.
பெண்களும் தண்ணீரும்
நம் நாட்டுப் பண்பாடு நீரை மையமாகக்கொண்டது. ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகம் நம்முடையது. தமிழர்களான நாமும் காவிரியை வாழ்த்தியும் வையையில் புனலாடியும் வளர்ந்திருக்கிறோம். வீட்டு வேலை மட்டுமே கடமையென உணர்த்தப்பட்ட நம் பண்பாட்டில், பெண்கள் அதிக நேரம் செலவிடுவது நீர் சேகரிப்புக்குத்தான். இந்தியாவில் சமைப்பதற்குத்தான் மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
சமைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒரு டம்ளர் அரிசியை வேக வைக்க இரண்டு பங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அரிசியைச் சமைக்கும் முன்னர் களைந்து சுத்தம் செய்வதற்கு, வேக வைப்பதற்குத் தேவைப்படுவதைவிட அதிகத் தண்ணீர் தேவை.
நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்களின் நீர் சேகரிப்பு மதிப்பிட முடியாத அவர்களின் ஆளுமையையும் சிந்தனையும் சிதைக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, மாற்றுச் சிந்தனை போன்றவை பெண்களிடமிருந்து இன்னும் வெகு தொலைவில் தள்ளி நிற்பதற்குக் காரணம், அவர்களுடைய சிந்தனையை நிரப்பியிருக்கும் வீட்டுக் கடமைகளே.
நீர் சேகரிக்கும் பெண்கள் குழாயடிச்சண்டை போடுவதை நகைச்சுவையாக ஏற்று ரசிக்கும் மனம், அந்த யதார்த்தம் உணர்த்தும் சமூகச் சிக்கலைக் கேள்வி கேட்காமல் கடந்து செல்கிறது. நீர் சேகரிக்கும்போது தொடங்கும் சண்டை, இறுதியில் நடத்தை, பண்பு பற்றிய பரஸ்பரப் புறம்பேசுதலில் சென்று முடிகிறது. இத்தகைய சூழலில் பெண்கள் எந்த மாற்றுச் சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியும்?
உலக யுத்தம்?
சுற்றுச்சூழல் காரணங்களால் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தண்ணீருக்காக உலக யுத்தம் வரும் என்று எச்சரிக்கிறார்கள். நதி நீர் இணைப்பில் ஏற்படும் பெருமளவு புவியியல் மாற்றங்கள், அதற்கான முதன்மைத் தடையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் உள்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை நிறைவு செய்யாத ஆட்சியாளர்கள், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்குச் சொற்பக் கட்டணத்தில் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தும் உரிமங்களை வாரி வழங்குகிறார்கள். உழவுத் தொழில் அடிப்படையில் அமைந்த இந்தியச் சமூகம் இன்னும் தன்னிறைவு பெறாமலேயே வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பொதுச் சொத்து என்ற அடிப்படை உரிமை காற்றில் போய்விட்டது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கை அடியொற்றி வாழ்ந்து வந்த நம்முடைய உழவுச் சமூகம், இன்றைக்குத் தொழிற் சமூகமாக மாறிவருகையில், மக்களின் நீர்த் தேவை குறித்து அரசுக்குக் கவனம் தேவை. ஒரு நூற்றாண்டு காலத்தில் மக்கள்தொகையில் நான்கு மடங்கு விருத்தி அடைந்துள்ளது இந்தியா. மக்கள்தொகையின் பெருக்கத்தையும் நகரங்களில் அதிகபட்ச மக்கள் திரள்வதையும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட வேண்டும். ஜே.எஸ்.அனார்கலி thehindutamil
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
மிகவும் உண்மை.சாமி wrote:
ஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் இயலுகிறது. இந்தப் பற்றாக்குறையை நிலத்தடி நீர் சிறிதளவு சமன் செய்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் சதவீதம் நூற்றுக்கு 80 சதவீதமாகச் சரிந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விவசாயத்துக்கு அதிக அளவு
நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதன் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்காலத்திய தொழிற்சாலைப் பெருக்கமும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றமும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. இந்த நீர் உணவுப் பயன்பாட்டிற்கு எந்த அளவு பாதுகாப்பானது என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
நிலத்தடி நீரின் தரத்தின் மீதான சந்தேகம் அதனைப் புறத் தேவைகளுக்கான ஒன்றாக மட்டும் மாற்றி இருக்கிறது.
பெண்களும் தண்ணீரும்
நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்களின் நீர் சேகரிப்பு மதிப்பிட முடியாத அவர்களின் ஆளுமையையும் சிந்தனையும் சிதைக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, மாற்றுச் சிந்தனை போன்றவை பெண்களிடமிருந்து இன்னும் வெகு தொலைவில் தள்ளி நிற்பதற்குக் காரணம், அவர்களுடைய சிந்தனையை நிரப்பியிருக்கும் வீட்டுக் கடமைகளே.
நீர் சேகரிக்கும் பெண்கள் குழாயடிச்சண்டை போடுவதை நகைச்சுவையாக ஏற்று ரசிக்கும் மனம், அந்த யதார்த்தம் உணர்த்தும் சமூகச் சிக்கலைக் கேள்வி கேட்காமல் கடந்து செல்கிறது. நீர் சேகரிக்கும்போது தொடங்கும் சண்டை, இறுதியில் நடத்தை, பண்பு பற்றிய பரஸ்பரப் புறம்பேசுதலில் சென்று முடிகிறது. இத்தகைய சூழலில் பெண்கள் எந்த மாற்றுச் சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியும்?
அழிந்த குளங்களையும் குட்டைகளையும் மீட்டெடுப்பது மிகவும் சிரமமே.மிஞ்சிஇருபவற்றையாவது காக்க வேண்டும்; அதை அரசாங்கம் செய்யுமென்று நினைத்திருந்தாள் இன்னும் அதிகமான தண்ணீர் பிரச்சனையை சந்திக்கப்போவது பொதுமக்களாகிய நாமே. இனியாவது இயற்கையை அழிப்பதை விடுவோம் பணம் மட்டுமே எதையும் கொடுத்துவிடாது
என்பதை நம் அடுத்த தலைமுறைக்காவது உணர்த்துவோம்.
கு.கோகிலா- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
சத்தியமான உண்மை. நீரின்றி அமையாது உலகு என்பதை அனைவரும் உணர்ந்து நீர் நிலை கலை பாதுகாக்க வேண்டும். நம்மால் முடிந்த வரை சிக்கனமாக தண்ணீர் செலவழிக்க வேண்டும். நாடும் வீடும் நலம் பெரும்.
prabagaran.r- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 12/06/2015
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
முக்கால் பங்குக்கு கடல்சூழ்ந்த பூமியிலே
...முனகுகின்றார் மக்களெல்லாம் ஒருகுடத்து நீருக்கு !
விக்கலுக்கு நீரின்றி தவிக்கின்ற மக்களுக்கு
...விலைபேசி நீரினை விற்கின்ற அரசாங்கம் !
பக்கலிலே இருக்கின்ற கருநாடக அரசாங்கம்
...பதுக்குகிறார் நீரினை அணைபோட்டுத் தடுத்தங்கே !
சிக்கலிலே தமிழ்நாடு ! சிரிப்பதற்கு வழியின்றி
...சிந்துகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் வான்முகிலே !
...முனகுகின்றார் மக்களெல்லாம் ஒருகுடத்து நீருக்கு !
விக்கலுக்கு நீரின்றி தவிக்கின்ற மக்களுக்கு
...விலைபேசி நீரினை விற்கின்ற அரசாங்கம் !
பக்கலிலே இருக்கின்ற கருநாடக அரசாங்கம்
...பதுக்குகிறார் நீரினை அணைபோட்டுத் தடுத்தங்கே !
சிக்கலிலே தமிழ்நாடு ! சிரிப்பதற்கு வழியின்றி
...சிந்துகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் வான்முகிலே !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
மேற்கோள் செய்த பதிவு: 1144382M.Jagadeesan wrote:முக்கால் பங்குக்கு கடல்சூழ்ந்த பூமியிலே
...முனகுகின்றார் மக்களெல்லாம் ஒருகுடத்து நீருக்கு !
விக்கலுக்கு நீரின்றி தவிக்கின்ற மக்களுக்கு
...விலைபேசி நீரினை விற்கின்ற அரசாங்கம் !
பக்கலிலே இருக்கின்ற கருநாடக அரசாங்கம்
...பதுக்குகிறார் நீரினை அணைபோட்டுத் தடுத்தங்கே !
சிக்கலிலே தமிழ்நாடு ! சிரிப்பதற்கு வழியின்றி
...சிந்துகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் வான்முகிலே !
எப்பொழுதும் போல் அருமையான கவிதை அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
உண்மை நகரவாழ்க்கையில் தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிற அவலம்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146032சரவணன் wrote:நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
இல்லை தொல்பொருட்சாலைல பிள்ளை இதுதான் தண்ணீர் என விளக்கம் கொடுக்கிற காலமாக இருக்கும்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
எங்க அம்மா இருக்குற வரைக்கும் எங்க ஊர்ல் தண்ணீர் பிரச்னை வரவே வராது (டாஸ்மாக்)ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146032சரவணன் wrote:நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
இல்லை தொல்பொருட்சாலைல பிள்ளை இதுதான் தண்ணீர் என விளக்கம் கொடுக்கிற காலமாக இருக்கும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146037சரவணன் wrote:எங்க அம்மா இருக்குற வரைக்கும் எங்க ஊர்ல் தண்ணீர் பிரச்னை வரவே வராது (டாஸ்மாக்)ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146032சரவணன் wrote:நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்பது போல....வருங்காலங்களில் பூமியில் தண்ணீர் கண்டுபிடிப்பு என்று வரும் போலிருக்கிறது...
இல்லை தொல்பொருட்சாலைல பிள்ளை இதுதான் தண்ணீர் என விளக்கம் கொடுக்கிற காலமாக இருக்கும்
ஹீஹீஹீ
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» நீருக்கு அடியில் வேட்டையாடும் மனிதன்
» ஒரே மாதத்தில் மூடப்பட்ட மய்யம்!
» மலை, நீருக்கு அடியில் பிரமாண்ட ஹோட்டல் : சாதனையின் படங்கள்!
» மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..
» நீருக்கு அடியில் வேட்டையாடும் மனிதன்
» ஒரே மாதத்தில் மூடப்பட்ட மய்யம்!
» மலை, நீருக்கு அடியில் பிரமாண்ட ஹோட்டல் : சாதனையின் படங்கள்!
» மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|