ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குக்கூ: திரை விமர்சனம்

2 posters

Go down

குக்கூ: திரை விமர்சனம் Empty குக்கூ: திரை விமர்சனம்

Post by சிவா Mon Mar 24, 2014 4:10 am

குக்கூ: திரை விமர்சனம் 564xNx1cuckoo_1805214g.jpg.pagespeed.ic.xNvOLJ4nN1

நகைச்சுவை, மசாலா படங்களுக்கு இடையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் ஒரு யதார்த்த சினிமா முயற்சி ராஜு முருகனின் குக்கூ. எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாகியிருக்கிறது. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம்.

சென்னைப் புறநகர் ரயில் நிலையங் களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் (தினேஷ்). கூடவே பாட்டுக் கச்சேரி களிலும் பங்கேற்பவர். கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. (மாளவிகா). இருவரும் கண் பார்வை இழந்தவர்கள்.

வழக்கம் போலவே மோதலில் ஆரம்பிக் கிறது காதல். தமிழ் சுதந்திரக்கொடியைக் காதலிக்க, சுதந்திரக்கொடியோ கண் பார்வை இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறார். இவர் கள் இருவருக்கும் காதல் வந்ததா, இவர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.

சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை முதல் படத்துக்கான கதைக்களமாக எடுத் துக்கொண்ட ராஜு முருகன் பாராட்டப்பட வேண்டியவர். கதையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமட்டாமல், கதாபாத்திரங்கள் தேர்வு, வசனங்கள் ஆகியவற்றிலும் ராஜு முருகன் ஆச்சரியப்படுத்துகிறார்.

‘தல, தளபதி இருக்கிற இடத்துல மஞ்சுளாவுக்கு என்ன வேலை, இப்ப சின்ன அண்ணன்தான் எல்லாம், பொம்பள வலியை முழுசா புரிஞ்சவன் எவனும் இல்லை, கவர்னர் வந்தா ஆட்சியை கலைச்சிடுவார்’ என்பன போன்ற வசனங் கள் படத்தின் கூர்மையைக் கூட்டுகின்றன.

‘அண்ணா ஹசாரே கூட்டத்துல பார்த் தேன், இன்னிக்கு பேஸ்புக்கல ஏகப்பட்ட லைக் விழும்’ என்று தற்போதைய இளை ஞர்களின் ‘சமூக சேவை’யை முகத்தில் அறைந்தது போல சொல்வது நச்.

வசனங்களுக்குச் சமமாக பி.கே. வர்மாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்குப் பெரிய பலமாக விளங்குகின்றன. கதைக்களத்தைப் பின்னணி இசை மூலமாகவே உணர முடிகிறது.

தினேஷும் மாளவிகாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நிறை வாகவே நடித்திருக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் வாழ்க்கை, குத்துப்பாட்டு இல்லாதது, ஆபாச காமெடி இல்லாதது, வசனங்கள் என எத்தனையோ நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியை உணர முடியவில்லை. ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்ட அதே காதல் கதை. பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள் எனப் படம் தனது இலக்கை எட்டத் தவறுகிறது. காதலை அடிப்படையாகக் கொண்ட கதையில் மாற்றமில்லை. காதலிப்பவர்களின் அடையாளங்கள் மட்டுமே மாறுகின்றன. அவர்களது அடையாளங்களும் அவர்களது வாழ்வின் கூறுகளோடு வெளிப்படவில்லை. காதலர்கள் மீது அனுதாபம் ஏற்பட வைப்பதற்கு மட்டுமே இந்த அடையாளம் பயன்படுகிறது.

முழுக்க முழுக்கப் பார்வையற்றவர் களைச் சுற்றியே கதை நகருகிறது. ஆனால் அவர்களது எந்தத் துயரமும் மனதைத் தொடுமளவுக்குக் காட்சிப் படுத்தப்படவில்லை. பார்வையற்றவர்கள் பற்றிய சித்திரிப்பு மிகவும் மேலோட்டமாக உள்ளது. படத்தின் நீளம் மிக அதிகம். திரைக்கதையில் திருப்பங்களை உரு வாக்கும் காட்சிகளில் போதிய அளவு நம்பகத்தன்மை இல்லை. இதனால் படத்திற்கும் ரசிகர்களுக்குமான ஒருங் கிணைப்பு சாத்தியமாகவில்லை.

இரண்டாவது பாதியில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டாலும், கொஞ்சம் இழுத்து ‘ஐயய்யோ என்ன ஆகுமோ’ என்று பார் வையாளருக்குப் பதற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதுவும் காதல், ‘மூன்றாம் பிறை’ போன்ற படங்களை நினைவூட்டும் விதமாகவே உள்ளது. இளையராஜா பாடல்கள், நடிகர்கள் போல் வேடமணிந்து ஆடுவோர் போன்ற காட்சிச் சித்தரிப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. புதிய இயக்குநர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

எளிய மனிதர்களின் காதலைச் சொல்ல முனைந்ததற்காகப் பாராட்ட லாம். அதை அவர்களுக்கான பின்னணி யோடு பொருத்தி அழுத்தமாகச் சொல்லி யிருந்தால் இன்னும் பாராட்டியிருக்கலாம்.

- இந்து டாக்கீஸ் குழு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குக்கூ: திரை விமர்சனம் Empty Re: குக்கூ: திரை விமர்சனம்

Post by ayyasamy ram Mon Mar 24, 2014 7:36 am

குக்கூ: திரை விமர்சனம் Z6JVbchQluJoONqNvGaW+22-cuckoo-tamil-movie-600
--

இந்தக் கதை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்...
என்பதையெல்லாம் யோசிக்காமல்,
எந்த மனிதருக்கும்
காதல் வரும்.. அதில் சோதனைகள் வரும்.

அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் மனசில்
பதியும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் தன்
முதல் படத்தைத் தந்திருக்கும் ராஜூ முருகனை
வாழ்த்தி வரவேற்போம்!
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குக்கூ: திரை விமர்சனம் Empty Re: குக்கூ: திரை விமர்சனம்

Post by சிவா Tue Mar 25, 2014 1:36 am

குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய பிரபல படத்தயாரிப்பாளர்!

ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை எண்ணி சந்தோஷப்படுகிறவர்கள் திரைப்படத்துறையில் மிகக்குறைவு. பொறாமைத்தீயில் பொசுங்கிப்போகிறவர்களே அதிகம். அவன் யாரென்றே தெரியாவிட்டாலும், அடுத்தவனின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத நல்ல உள்ளங்கள் நிறைந்த இடம்தான் திரைப்படத்துறை. இன்று வெளியாகி இருக்கும் குக்கூட படம் அருமையாக இருக்கிறது என்றும், படம் வெற்றியடைவது உறுதி என்றும் ரசிகர்கள் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், பிரபல படத்தயாரிப்பாளர் ஒருவர் கடும் சோகத்தில் இருக்கிறாராம்!

அவர்..நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. அது சரி.. குக்கூ ஹிட்டானால் இவருக்கு என்ன?

சில வருடங்களுக்கு முன் தன் மகன் ஜானியை ஹீரோவாக வைத்து ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு பூஜைபோட்டார் சக்கரவர்த்தி. 18 வயசு என்ற படத்தை ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்திலும், சந்திரபாபு என்ற படத்தை லிங்குசாமியின் உதவியாளரான ராஜுமுருகன் என்ற புதுமுக இயக்குநரை வைத்தும் தொடங்கினார்.

18 வயசு படம் 2012 ஆம் வருடம் வெளியானது. 15 நாட்கள் படப்பிடிப்பி நடைபெற்றநிலையில் சந்திரபாபு படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் சக்கரவர்த்தி. அதற்கு அவர் சொன்ன காரணம்..அந்த டைரக்டருக்கு படம் எடுக்கத் தெரியலை என்பதுதான். அன்று அவரால் படம் எடுக்கத் தெரியலை என்று குற்றம்சாட்டப்பட்ட ராஜுமுருகன்தான் இன்றைய குக்கூ படத்தின் இயக்குநர். இந்த ப்ளாஷ்பேக்கின் காரணமாகவே குக்கூ படத்தின் வெற்றி எஸ்.எஸ். சக்கரவர்த்தியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.

மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க மக்களே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குக்கூ: திரை விமர்சனம் Empty Re: குக்கூ: திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum