ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

3 posters

Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by M.M.SENTHIL Mon Mar 17, 2014 10:00 pm

கடன் பட்டிருந்தால்…

“கடனானதற்குப் பிறகு சிலர், இப்படியாகி விட்டதே, நான் என்ன பாவம் செய்தேனோ’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்.

இன்னும் சிலர் ‘இப்படி செய்திருக்க வேண்டும் இப்படி செய்திருக்கக் கூடாது, இப்படி செய்ததால் தான் இப்படி ஆனது’ என்று பழைய சம்பவ ஆராய்ச்சிகளிலேயே மீண்டும் மீண்டும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பர்.

இன்னும் சிலர் “கோபம், டென்சனாகி யார் இவ்வாறு நடக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் திட்டிக் கொண்டும், சபித்துக் கொண்டும் இருப்பர்.

இன்னும் சிலர், கவலைப்பட்டுக் கவலைப்பட்டு கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுவர்.

நண்பர்களே! கடந்தவை கடந்தவைதான். அவற்றிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்க. இந்த அனுபவத்தை வைத்து மீண்டும் தொடர்ந்து செயல்பட்டால் கடன்களிலிருந்து மீளமுடியும். செல்வம் குவிக்க முடியும். அந்த ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது. இதை உணருங்கள்.
கடனுக்குக் காரணமானவரையும் ஏமாற்றியவரையும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், எதிர்மறைஎண்ணங்கள் அதிகமாகும். மனச்சக்தி வீணாகும். அது உங்கள் ஆக்க அறிவு செயல்படுவதைத் தடை செய்யும்.

கடன் நினைவுகள் வரும்பொழுதெல்லாம், அதை ஒரு சவாலாக மாற்றுங்கள். எழுந்து நில்லுங்கள். உங்களால் ஜெயிக்க முடியும்!

(என்னுடைய “தோல்வியிலிருந்து வெற்றிக்கு’ நூலில் இன்னும் பல விளக்கங்கள் உள்ளன)

கடன் அதிகமாய் இருந்தால், வட்டி அதிகம் கட்ட வேண்டியது வந்தால், உங்களது சொத்துக்களை விற்றும் கட்டுங்கள். சமுதாய அந்தஸ்து என்றபோலி கௌரவம் பார்க்க வேண்டாம். கடன்களைக் கட்டியபிறகு மனச்சிக்கல் இல்லாமல் உற்சாகமாகத் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள். பணம் வந்துவிட்டால் எல்லா மதிப்பும் தானே வந்துவிடும்.

கடன் பட்டதற்குப் பிறகு சிலர் கடன் கொடுத்தவர்களை சந்திக்கப் பயந்து கொள்வர். “சொன்ன தவணைக்கு கொடுக்க முடியுமோ, முடியாதோ, என்னாகுமோ’ என்ற மன உளைச்சலில் இருப்பர்.
நீங்கள் 5ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 5ம் தேதி உங்களால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், 4ம் தேதியே கடன் கொடுத்தவரைச் சந்தித்து நிலையை விளக்கி விடுங்கள். மீண்டும் திருப்பிக் கொடுக்க சற்று அவகாசம் வாங்கி வாருங்கள். இதனால் கடன் கொடுத்தவர் சற்று சங்கடப் பட்டாலும் அது பிரச்சனையாகாது.

ஆனால் 5ம் தேதி பணம் இல்லை என்று பிரச்சனையில் போகாவிட்டால், அவர் 6ம் தேதி உங்களை சந்திக்க வந்தால் வரும்போது எப்படி வருவார்? அது உங்களுக்கே தெரியும்.
ஆகவே, சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தியுங்கள்.

மீண்டும், மீண்டும் எண்ணுங்கள். “பணத்தை சம்பாதித்துக் கடனைக் கட்டியே தீருவேன்’ என்று செயல்படுங்கள். உங்களால் முடியும்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty Re: பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by M.M.SENTHIL Mon Mar 17, 2014 10:01 pm

கடனிலிருந்து விடுபடும் பயிற்சி
‘Think Yourself Rich’ என்றநூலில் டாக்டர் ஜோசப் மர்ஃபி கூறுகிறார்.

அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். பணம் உங்களுக்கு நிறையக் கிடைப்பது போலவும், அதை எடுத்துச் சென்று கடன் கொடுத்தவரிடம் கொடுப்பது போலவும், அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்வதைப் போலவும், நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு, நிம்மதி சந்தோசத்துடன் வீடு திரும்புவது போலவும் போன்ற காட்சிகளை மனத்திரையில் பாருங்கள். இப்பொழுது கண்களை விழித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பயிற்சியைக் காலையிலும், மாலையிலும் செய்து வரவர இந்தக் காட்சிகள் மேல் மனதிலிருந்து உள் மனத்தில் பதிந்து வெற்றியாக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.
கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனைகளைச் செய்து விட்டுத் தொடர்ந்து செயல் புரியுங்கள்.
வாழ்த்துக்கள்!

கடனை வசூலிக்கும் முறைகள்

1. கடன் பெற்றபணத்தை என்றைக்குத் திருப்பித் தருகிறார்கள் என்று கேட்டு நாளைக் குறித்துக் கொள்ளவும். அந்த நாளில் சரியாக அவர்களிடம் கேட்கவும். மாறாக, இந்தப் பணம் வராது, இவர் திருப்பிக் கொடுக்க மாட்டார் என்றஅனுமானத்தில்கேட்காமல் விடக்கூடாது.

ஒருமுறைT.V. பேட்டியில் ஒரு Finance சொன்னார், நம் முன்னோர்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பது பற்றி பழமொழி ஒன்றைக் கூறியுள்ளார்கள். “கறக்காத பாலும், கேட்காத கடனும் திரும்ப வராது’ அதேபோலக் கொடுத்த கடனைக் கேட்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பணம் திரும்பி வரும்’.

2. “இப்படிக் கடனை வாங்கித் திரும்பக் கொடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக் கிறார்களே, இப்படி இருந்து கொண்டிருக் கிறார்களே’ என்று எரிச்சலடையாமல் அவரை சபிக்காமல் கீழ்க் கண்டவாறு அவர்களை வாழ்த்த வேண்டும்.

நம்மிடம் பணம் வாங்கியவரை மனதில் கொண்டு வந்து “அவரிடம் செல்வம் பெருக வேண்டும். அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கும் நிலையை அடைய வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும்’ என்று தினமும் வாழ்த்துங்கள். இந்த வாழ்த்து எண்ண அலைகள் அவருடைய மனதில் பதிந்து, பணம் சம்பாதிக்கும் எண்ணங்களைத் தூண்டி செயல்படுத்த வைத்து, பணத்தைத் திருப்பிக் கொடுக்க வைக்கும். நல்ல எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

இந்தப் பயிற்சி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்திற்கு அளித்த மாபெரும் பரிசு.
வசூல் செய்யும் மனக்காட்சிப் பயிற்சி ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்க. ஒவ்வொரு முறையும் வசூல் செய்யப் போகும் முன்பும் இந்தப் பயிற்சியைக் செய்துவிட்டுப் போகவும்.

அமைதியாக அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்க. மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்க. 10லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணிக்கொள்க. இப்பொழுது மனக்காட்சியில் உங்களிடம் கடன் வாங்கியவருடைய உருவத்தைக் கொண்டு வருக.

நீங்கள் அவரிடம் செல்வது போலவும், அவரிடம் பணம் கேட்பது போலவும், அவர் சந்தோசமாக பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவது போலவும், நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்த்துச் சொல்லி திரும்புதல் போலவும் காட்சிகளை மனத்திரையில் பார்க்கவும். பின் மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளவும்.

இந்தப் பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, ஆழ்மனத்தில் பதிந்து அது நடைமுறையில் சாத்தியமாகும் சூழ்நிலை உருவாகும்.

இன்னொன்று எதை எதிர்பார்க் கிறோமோ அதுவே நடக்கிறது. எதிர்பார்ப்பு விதி (Law of Expectation) அதைத்தான் சொல்லுகிறது.

கொடுத்தது திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் பொழுது அந்தப்பணம் திரும்பி வரும். இப்பொழுது செய்த மனக் காட்சிப் பயிற்சி அந்த நம்பிக்கையை பலப்படுத்தும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty Re: பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by M.M.SENTHIL Mon Mar 17, 2014 10:02 pm

பணத்தைக் கேட்கும் முறை

கொடுத்த பணத்தைக் கேட்கப் போகும் பொழுது, பணம் வசூலாகாத பட்சத்தில் திரும்பி வருவதற்கு முன்பு சிலர் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர்.

“எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு, நீ கொடுக்க மாட்டே, இந்தப் பணம் போனது போனதுதான். இனிமேல் எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை. நீ அநியாயமா ஏமாத்தற, இப்படியெல்லாம் செய்தால் நீ உருப்பட மாட்ட….’இவ்வாறு சொல்லக்கூடாது. ஆனால் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

‘உங்களை நம்பித்தான் கொடுத்தேன். அடிப்படையில் நீங்கள் ரொம்ப நல்லவர். அடுத்தவர் காசை ஏமாற்றும் எண்ணம் உங்களுக்குக் கிடையாது. அது எனக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு உங்கள் தேவைக்கு உதவத்தான் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது பணம் எனக்கு மிக அவசரத் தேவையாக இருக்கிறது. பணத்தை வாங்கிய உங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது, நாணயம் காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் நிச்சயம் சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள் என்று 100% நம்பிக்கைக் கொண்டு எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நிலைமைக்கு பணம் உங்களுக்கு வருவதற்கு நல்வாழ்த்துக்கள்!

ஆகவே, நண்பர்களே! இவ்வாறு கடனைக் கேட்டுவிட்டுத் திரும்பிவரும் போது சொல்கிறசொற்கள் உடன்பாட்டுச் சொற்களாக நல்ல எதிர்பார்ப்புடன் சொல்லிவிட்டு வரவேண்டும்.

“யாரை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே ஆகிறார்கள்’. நாம் இவ்வாறு பெருந்தன்மையுடன் நடத்தும்பொழுது பணம் அவர்களுக்கு வருகிறகால கட்டத்தில் முதலில் நமக்குக் கொடுப்பார்கள்.

பணம் வசூலாகாவிட்டால்…

மேற்கூறிய பணத்தை வசூலிக்கும் முறைகள் அனைத்தையும் உபயோகித்தும் பணம் வசூலாகாவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணம் வீண் போகாது. வேறொரு ஏதேனும் ஒரு ரூபத் திலோ, தொழில் வாய்ப்பாகவோ திரும்பி விடும்.
ஏனென்றால் சில அடிப்படைப் பிரபஞ்ச நியதிகளின் படி இந்த உலகம் இயங்குகிறது. ஒருவர் உழைத்த உழைப்பினால் சேர்த்த பணம் எந்த வகையிலும் வீண் போகாது. பணமாக வராவிட்டாலும், அது வேறு ஏதேனும் நன்மையாகவாவது மாறும். ஓர் உதாரணத்திற்கு உங்கள் உடல் நலம் அல்லது சந்ததியாருக்கு நன்மை இப்படி ஏதேனும் ஒருவகையில் திரும்பக் கிடைக்கும். ஆகவே, இழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் அதையே எண்ணி மனம் சோர்வடையாமல் தொடர்ந்து அவர்களுக்குத் திரும்பச் செலுத்த போதிய அவகாசம் கொடுங்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். இழந்தது 5 இலட்சம், ஆனால் 50 இலட்சம் சம்பாதிப்பேன். அது என்னால் முடியும் என்று இழந்த நினைவு வரும்போதெல்லாம், ஏமாற்றப்பட்ட நினைவு வரும் போதெல்லாம் அதைச் சவாலாக மாற்றுங்கள். வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்!

சூரியன், தன்னம்பிக்கை இதழில்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty Re: பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by ஜாஹீதாபானு Tue Mar 18, 2014 4:10 pm

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) 103459460 பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty Re: பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 23, 2014 7:20 pm

எம் . எம் .செந்தில் கூறியுள்ளது சிறப்பு ! தேவையானது ! என் தந்தையார் , அடுத்தவாரம் ஒருவருக்குத் தரவேண்டிய பணத்தை இப்போதே எடுத்து ஒரு தாளில் மடித்து அலமாரியில் தனியாக வைத்துவிடுவார்கள் ! அப்பழக்கம் எனக்கும் வந்துள்ளது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty Re: பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by M.M.SENTHIL Mon Mar 24, 2014 4:41 pm

Dr.S.Soundarapandian wrote:எம் . எம் .செந்தில் கூறியுள்ளது சிறப்பு ! தேவையானது ! என் தந்தையார் , அடுத்தவாரம் ஒருவருக்குத் தரவேண்டிய பணத்தை இப்போதே எடுத்து ஒரு தாளில் மடித்து அலமாரியில் தனியாக வைத்துவிடுவார்கள் ! அப்பழக்கம் எனக்கும் வந்துள்ளது !


மிகவும் நல்ல பழக்கம் ஐயா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்) Empty Re: பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum