புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_m10கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 14, 2014 4:10 pm

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா DbrHGriARwGSFmQjQUlf+483xNxmylai__3__1786717g.jpg.pagespeed.ic.3YIip22gst

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த ஜோதியாக விளங்கும் சிவபெருமான் பல்வகைத் திருவுருவம் கொண்டு எழுந்தருளிய தலங்களுள் ஒன்று மயிலை. உமையவள் மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும் கடலைச் சார்ந்த இந்தத் தலத்தில்தான். திருஞான சம்பந்தர் என்பைப் பெண்ணுருவாக்கி அருளியதும், வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

அனைத்து உலகங்களுக்கும் நாயகனாக, விறகில் தீயாக, பாலில் படுநெய்யுமாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமானுக்குப் பங்குனிப் பெருவிழா கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிராம தேவதை பூஜை நடைபெற்றது. அம்பிகையின் சிறப்பு வடிவமான கோலவிழி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்று இரவு வெள்ளியாலான மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா 2mVbNF3JTde84weK5knC+564xNxmylai__1__1786719g.jpg.pagespeed.ic.AL5mlrwQcg
புன்னையில் எழுந்தருளியோன்
மயிலை, ஆதி காலத்தில் புன்னைக்காடாக இருந்ததாகவும், ஒரு புன்னை மரத்தின் அடியில் சிவபெருமான் எழுந்தருளியதாகவும் வரலாறு சொல்கிறது. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் புன்னை மர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அம்பிகை, கற்பக விருட்ச வாகனத்திலும், முருகன் வேங்கை மர வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். கானகத்தில் சிவபெருமான எழுந்தருளியதை உணர்த்தும் விதமாகவே கடவுளர்களுக்கு மரங்களை வாகனங்களாக அமைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் நாள் திருவிழாவில் காலை சூரிய வாகனத்திலும் மாலை சந்திர வாகனத்திலும் சிவபெருமான் எழுந்தருளினார்.

ஞானம் தரும் அதிகார நந்தி
மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்திக் காட்சி சிறப்பு வாய்ந்தது. மாட்டின் முகமும் சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறது. அம்பிகை, திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருமுலைப்பால் விழா நடைபெறும்.

மண்டபத்தில் ஞானசம்பந்தரின் திருமேனிக்குப் பால் ஊட்டும் வைபவம் நடைபெறும்போது, பக்தர்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவர். அப்படிச் செய்வதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இரவு பஞ்சபூத அமைப்பில் இருக்கும் பூத வாகனத்தில் சிவபெருமானும், பூதகி வாகனத்தில் அம்பிகையும் தாரகாசூரன் வாகனத்தில் முருகனும் எழுந்தருளுவார்கள்.

நான்காம் நாள் நாக வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருமானும், தங்க ரிஷப வாகனத்தில் அம்பிகையும், மயில் வாகனத்தில் முருகனும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளுவார்கள்.

திருமேனிகள் வீதியுலா போகும்போது என்னவெல்லாம் உபசாரம் நடக்குமோ, உள் பிரகாரத்துக்குத் திரும்ப வரும்போதும்போதும் அதே உபசாரங்கள் நடைபெறும். திருவுருவங்கள் கோயிலை அடைந்த அன்று அதிகாலை மட்டும் சிவனுக்கும் அம்பிகைக்கும் இடையே சோமாஸ்கந்தரின் உருவம் தெரிகிற மாதிரி அலங்காரம் செய்யப்படும்.

ஆறாம் நாள் யானை வாகனம். திருவுருவங்களுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்படும். யானை மேல் வெள்ளையாடை அணிவிப்பார்கள். ஏழாம் நாள் தேரில் இருக்கும் சிவபெருமானுக்கு வில், அம்புடன் அலங்காரம் நடைபெறும். திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம்.

எட்டாம் நாள் திருவிழாவும் முக்கியமானது. அன்று மயிலையின் தல வரலாற்றைச் சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா 1c3NjRuzRTGt87nIPQ8P+564xNxmylai__2__1786718g.jpg.pagespeed.ic.Z2wvOCTO2w

பூம்பாவை வரலாறு
ஒரு காலத்தில் செட்டியார் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூம்பாவை என்று அழகான பெண் குழந்தை இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக் கேள்விப்பட்ட செட்டியார், தன் மகளை அவருக்கு மணம் முடிக்க விரும்பினார். அதன்படியே மகளை வளர்த்தும் வந்தார். பூம்பாவைக்கு ஐந்து வயதானபோது அவள் பாம்பு தீண்டி இறந்துவிடுகிறாள்.

அவளுடைய பூத உடலை எரித்துச் சாம்பலாக்கி, அந்த அஸ்தியை ஒரு குடத்தில் இட்ட செட்டியார், அதைக் கன்னி மாடத்தில் வைத்துவிடுகிறார். இருந்தாலும் தன் மகள் உயிருடன் இருப்பதாக நினைத்து அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இது நடந்து சில வருடங்கள் கழித்து திருஞான சம்பந்தர் அந்த ஊருக்கு வருகிறார். அவரைப் பார்த்த ஊர் மக்கள் பூம்பாவையைப் பற்றிச் சொல்கிறார்கள். சம்பந்தர், ஆலயத்துக்குள் நுழையாமல் செட்டியாரைச் சந்திக்கிறார். அவருடைய மகளின் அஸ்தி இருக்கும் குடத்தை எடுத்துவரச் சொல்கிறார். அந்த அஸ்தியின் முன்னால் அமர்ந்து ஒவ்வொரு விழாவாகச் சொல்லி ஒவ்வொரு பதிகம் பாடுகிறார்.

“இந்த ஊரில் கார்த்திகை தீபம் நடக்கும், பெண்கள் எல்லாம் வீட்டில் விளக்கேற்றுவார்கள். அதைப் பார்க்காமல் மாண்டு போனாயே. இந்த ஊரில் தைப்பூசம் நடக்கும். பெண்கள் எல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். அதை எல்லாம் பார்க்காமல் மாண்டு போனாயே” என்று பாடுகிறார்.

சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பூம்பாவை, அவளுடைய அப்பா சிலைகளை வைத்து இந்த நிகழ்வு கதையாகச் சொல்லப்படும்.

அறுபத்து மூவர் பெருவிழா
அன்று மாலை 4 மணிக்கு அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். மாலை நான்கு மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நீளும் இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். திருவள்ளுவர், திரௌபதி, கிருஷ்ணர் புறப்பாடும் இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் சிந்தாரிப்பேட்டையில் இருந்து முருகன் திருவுருவம் எடுத்துவரப்படும். முன்பெல்லாம் வைரத்தில் அலங்காரம் செய்திருப்பார்கள். அதனால் சிந்தாரிப்பேட்டை முருகனை ‘வைர சாமி’என்றே அழைப்பார்கள். இப்போது வைர அலங்காரம் இல்லையென்றாலும் பிரமாண்ட அலங்காரத்தில்தான் முருகன் வலம் வருவார். மற்ற திருக்கோயில்களில் இருந்து விநாயகர் சிலைகளும் எடுத்துவரப்படும்.

அன்னமிடுதல் கோடிப் புண்ணியம்
அன்று நடைபெறும் அன்னதானம் சிறப்பு வாய்ந்தது. பெரிய அளவில் அடியவர்களுக்கு அன்னமிட இயலாதவர்களும் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டாவது தானம் அளிப்பார். ராயப்பேட்டையில் தொடங்கி மந்தைவெளி வரை இந்த அன்னதானம் நீளும்.

ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். அப்போது மோகினி வடிவில் இருக்கும் மகாவிஷ்ணு நடனமாடிக்கொண்டே வருவார்.

பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார். திருமணம் முடிந்து

இரவு கொடியிறக்கம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களைத் தரிசித்துப் பல நூல்களை எழுதியிருக்கும் அருணவசந்தன், மயிலை திருவிழா மகிமை குறித்துச் சொல்கிறார்: “ஒவ்வொரு நாள் விழாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இந்த நிகழ்வுகளைக் காணக் கண் கோடி வேண்டும். அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும். நோய் நொடிகள் நீங்கி, ஆயுள் அதிகரிக்கும். அம்பாள் திருமணம் முடிந்த அன்று அன்னதானம் செய்வதால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்” என்கிறார் அருணவசந்தன். (thehindutamil)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 14, 2014 4:17 pm

மிகப் பயனுள்ள பதிவு சாமி அவர்களே



கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Aகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Aகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Tகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Hகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Iகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Rகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Aகயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 14, 2014 7:03 pm

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா 103459460 
-
கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா 1znrlhd

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக