Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 21 of 21
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கன்னித்தீவு கதை போல் ஆகிவிட்டது இந்த விமான கதை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கடலில் விழுந்த போது ‘ஆட்டோ பைலட்’ முறையில் பறந்தது மலேசிய விமானம்: ஆஸ்திரேலியா புதிய தகவல்
சிட்னி: தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான போது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக இயங்கக் கூடிய ‘ஆட்டோ பைலட்’ முறையில் பறந்தது என செயற்கைக்கோள் தகவல்களை ஆராய்ந்த ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி இரவு, கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநர் பீஜிங்குக்கு புறப்பட்டு சென்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும், விமான சிப்பந்திகள் 12 பேரும் பயணம் செய்தனர். புறப்பட்ட 1 மணி நேரத்தில், அந்த விமானத்திலிருந்து தகவல் தொடர்பு துண்டானது. இன்மர்சாட் செயற்கைக் கோள் மூலம் விமானத்தின் ரேடியா ஒலி அலைகளை ஆராய்ந்ததில், அந்த விமானம் பயணப் பாதையில் இருந்து விலகி தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக 7 மணி நேரம் பறந்தது தெரியவந்தது.
விமானத்தில் எரிபொருள் தீர்ந்து, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த விமானத்தை தேடும் முயற்சியில் சர்வதேச நாடுகள் இறங்கின. ஆனால், விமானத்தின் எந்த பாகத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதியில் விழுந்து விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை விரிவாக ஆராயும் பணியில் ஆஸ்திரேலிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் இறங்கினர். இது குறித்து அதன் தலைமை ஆணையர் மார்டின் டோலன் கூறுகையில், ‘‘செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை ஆராய்ந்ததில், மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானபோது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ‘‘ஆட்டோ பைலட்’’ முறையில் பறந்துள்ளது.
விமானத்தின் எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளாகும் வரை அந்த விமானம் ஆட்டோ பைலட் முறையிலேயே பறந்துள்ளது. விமானத்தின் ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். ஆனால், எப்போது ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டது என தெரியவில்லை.’’ என்றார். விமானி வேண்டும் என்றே இப்படி செய்தாரா அல்லது தீவிரவாதிகளின் கைவரிசையா என்ற கேள்விக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை. இருந்தாலும் விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் நீர்மூழ்கி ட்ரோன் மூலம் சுமார் 850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலின் அடிப்பகுதியில் தேடும் பணி கடந்த வாரம் நடந்தது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள உள்ள பகுதியில் தற்போது தேடும் பணி நடக்கிறது. இங்கு சக்திவாய்ந்த சோனார் கருவி மூலம் விமானத்தின் பாகங்கள் தேடப்படுகின்றன.
-- தினகரன்
சிட்னி: தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான போது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக இயங்கக் கூடிய ‘ஆட்டோ பைலட்’ முறையில் பறந்தது என செயற்கைக்கோள் தகவல்களை ஆராய்ந்த ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி இரவு, கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநர் பீஜிங்குக்கு புறப்பட்டு சென்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும், விமான சிப்பந்திகள் 12 பேரும் பயணம் செய்தனர். புறப்பட்ட 1 மணி நேரத்தில், அந்த விமானத்திலிருந்து தகவல் தொடர்பு துண்டானது. இன்மர்சாட் செயற்கைக் கோள் மூலம் விமானத்தின் ரேடியா ஒலி அலைகளை ஆராய்ந்ததில், அந்த விமானம் பயணப் பாதையில் இருந்து விலகி தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக 7 மணி நேரம் பறந்தது தெரியவந்தது.
விமானத்தில் எரிபொருள் தீர்ந்து, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த விமானத்தை தேடும் முயற்சியில் சர்வதேச நாடுகள் இறங்கின. ஆனால், விமானத்தின் எந்த பாகத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதியில் விழுந்து விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை விரிவாக ஆராயும் பணியில் ஆஸ்திரேலிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் இறங்கினர். இது குறித்து அதன் தலைமை ஆணையர் மார்டின் டோலன் கூறுகையில், ‘‘செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை ஆராய்ந்ததில், மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானபோது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ‘‘ஆட்டோ பைலட்’’ முறையில் பறந்துள்ளது.
விமானத்தின் எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளாகும் வரை அந்த விமானம் ஆட்டோ பைலட் முறையிலேயே பறந்துள்ளது. விமானத்தின் ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். ஆனால், எப்போது ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டது என தெரியவில்லை.’’ என்றார். விமானி வேண்டும் என்றே இப்படி செய்தாரா அல்லது தீவிரவாதிகளின் கைவரிசையா என்ற கேள்விக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை. இருந்தாலும் விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் நீர்மூழ்கி ட்ரோன் மூலம் சுமார் 850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலின் அடிப்பகுதியில் தேடும் பணி கடந்த வாரம் நடந்தது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள உள்ள பகுதியில் தற்போது தேடும் பணி நடக்கிறது. இங்கு சக்திவாய்ந்த சோனார் கருவி மூலம் விமானத்தின் பாகங்கள் தேடப்படுகின்றன.
-- தினகரன்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
எம்எச்370: பயணிகள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் – ஆஸ்திரேலியா அதிர்ச்சி தகவல்
மாஸ் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்பதோடு அந்த விமானம் ‘ஆட்டோ பைலட் மோட்’ இந்தியப் பெருங்கடல் வரை சென்று எரிபொருள் தீர்ந்தவுடன் கடலில் விழுந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற கருத்தை, இதற்கு முன் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை ஆய்வாளர்களும், வல்லுநர்களும் கூறிய போது, அவர்களது கருத்துகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதே வேளையில், இது போன்ற கருத்துகளை மலேசிய அரசாங்கமும், செய்தியாளர்கள் சந்திப்புகளில் தொடர்ச்சியாக மறுத்து வந்தது.
இந்நிலையில், இத்தனை நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அரசாங்கம், நேற்று 55 -பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், பயணிகள் 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று எதை வைத்து ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் இறுதி முடிவிற்கு வந்தார்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Australian Transport Safety Board) தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை தேடுதல் வேட்டை நடந்த பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி புதிய முயற்சிகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பகுதி, ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைக்கு சுமார் 2,000 கிமீ தெற்காக இருக்கிறது. சுமார் 60,000 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய தேடல் முயற்சிகள் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்பதோடு அந்த விமானம் ‘ஆட்டோ பைலட் மோட்’ இந்தியப் பெருங்கடல் வரை சென்று எரிபொருள் தீர்ந்தவுடன் கடலில் விழுந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற கருத்தை, இதற்கு முன் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை ஆய்வாளர்களும், வல்லுநர்களும் கூறிய போது, அவர்களது கருத்துகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதே வேளையில், இது போன்ற கருத்துகளை மலேசிய அரசாங்கமும், செய்தியாளர்கள் சந்திப்புகளில் தொடர்ச்சியாக மறுத்து வந்தது.
இந்நிலையில், இத்தனை நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அரசாங்கம், நேற்று 55 -பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், பயணிகள் 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று எதை வைத்து ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் இறுதி முடிவிற்கு வந்தார்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Australian Transport Safety Board) தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை தேடுதல் வேட்டை நடந்த பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி புதிய முயற்சிகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பகுதி, ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைக்கு சுமார் 2,000 கிமீ தெற்காக இருக்கிறது. சுமார் 60,000 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய தேடல் முயற்சிகள் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமேல் இதில் அதிர்ச்சியடைய என்ன உள்ளது எனத் தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மர்ம நபரால் அண்டார்டிக்காவிற்கு திருப்பப்பட்ட எம்எச்370 – ஆவணப்படம் அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும் ஒன்றின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காரணம் எம்எச்370 விமானத்தில் விமானிகள் அறையில் இருந்த மர்ம நபர் ஒருவரால், அவ்விமானம் மூன்று முறை திசை திருப்பப்பட்டிருப்பதாகவும், இறுதியாக விமானம் அண்டார்டிகாவுக்கு திருப்பப்பட்டிருக்கலாம் என அத்தகவல் கூறுகின்றது.
இந்த ஆவணப்படம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார்.
இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும் ஒன்றின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காரணம் எம்எச்370 விமானத்தில் விமானிகள் அறையில் இருந்த மர்ம நபர் ஒருவரால், அவ்விமானம் மூன்று முறை திசை திருப்பப்பட்டிருப்பதாகவும், இறுதியாக விமானம் அண்டார்டிகாவுக்கு திருப்பப்பட்டிருக்கலாம் என அத்தகவல் கூறுகின்றது.
இந்த ஆவணப்படம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார்.
இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1122708சிவா wrote: மர்ம நபரால் அண்டார்டிக்காவிற்கு திருப்பப்பட்ட எம்எச்370 – ஆவணப்படம் அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும் ஒன்றின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காரணம் எம்எச்370 விமானத்தில் விமானிகள் அறையில் இருந்த மர்ம நபர் ஒருவரால், அவ்விமானம் மூன்று முறை திசை திருப்பப்பட்டிருப்பதாகவும், இறுதியாக விமானம் அண்டார்டிகாவுக்கு திருப்பப்பட்டிருக்கலாம் என அத்தகவல் கூறுகின்றது.
இந்த ஆவணப்படம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார்.
இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடாடா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
ஒரு வருசம் ஆகப்போகுது, இது வரைக்கும் எந்த நல்ல பதிலும் இல்ல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மக்களின் நிலைமை எப்படி உள்ளதோ ???????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை
மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வருகிற 8-ம் தேதியுடன் விமானம் மாயமாகி ஒருவருடம் ஆக உள்ளது. இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் டோனி அபோட் பேசுகையில், மாயமான விமானத்தை தேடுவதில் எங்களுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு வெற்றிபெறும் என்று நாங்கள் உங்களுக்கு(விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு) மீண்டும் உறுதிஅளிக்கிறேன். எப்போதும் இதே தீவிரத்துடன் தேடுதல் பணியில் ஈடுபடுவோம் என்று நான் வாக்குறுதி அளிக்க முடியாது, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரையில் விமானம் மாயமான பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். பதில் அளிப்போம். என்று கூறினார். ஏற்கனவே ஆஸ்திரேலியா துணை பிரதமர் வார்ரென் பேசுகையில், நாங்கள் எப்போதும் தெளிவாக தேடிக்கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டார்.
மாயமான விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் நடைபெற்று வந்தது. விமானத்தை தேடுவதில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் 60,000 சதுர கி.மீ. பரப்பளவில் கவனம் செலுத்துகிறது. இந்திய பெருங்கடலில் மிகவும் கடினமான பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெறுகிறது என்று டோனி அப்போட் தெரிவித்துள்ளார். விமானத்தை தேடுவதற்காக 93 அமெரிக்க டாலர் அளவில் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா சார்பில் இணையாக பட்ஜெட் போடப்பட்ட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வருகிற 8-ம் தேதியுடன் விமானம் மாயமாகி ஒருவருடம் ஆக உள்ளது. இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் டோனி அபோட் பேசுகையில், மாயமான விமானத்தை தேடுவதில் எங்களுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு வெற்றிபெறும் என்று நாங்கள் உங்களுக்கு(விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு) மீண்டும் உறுதிஅளிக்கிறேன். எப்போதும் இதே தீவிரத்துடன் தேடுதல் பணியில் ஈடுபடுவோம் என்று நான் வாக்குறுதி அளிக்க முடியாது, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரையில் விமானம் மாயமான பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். பதில் அளிப்போம். என்று கூறினார். ஏற்கனவே ஆஸ்திரேலியா துணை பிரதமர் வார்ரென் பேசுகையில், நாங்கள் எப்போதும் தெளிவாக தேடிக்கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டார்.
மாயமான விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் நடைபெற்று வந்தது. விமானத்தை தேடுவதில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் 60,000 சதுர கி.மீ. பரப்பளவில் கவனம் செலுத்துகிறது. இந்திய பெருங்கடலில் மிகவும் கடினமான பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெறுகிறது என்று டோனி அப்போட் தெரிவித்துள்ளார். விமானத்தை தேடுவதற்காக 93 அமெரிக்க டாலர் அளவில் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா சார்பில் இணையாக பட்ஜெட் போடப்பட்ட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
Page 21 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|