Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 17 of 21
Page 17 of 21 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கிருஷ்ணா wrote:[link="/t108708p150-mh370#1059670"]உறுதி செய்வது இயலாத காரியம் என்றால், எப்படி உறுதி செய்யப்பட்டது. ஆதாரம் தர இயலாது ஆனால் உறுதியாக கூறுகிறேன் என்றால் எப்படி நம்புவது. அதைதான் உறவினர்கள் கேட்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றால், நம்பக்கூடிய ஆதாரம் தாருங்கள் என்கிறார்கள். ஏன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஏன் முழு சரக்குப்பட்டியலைக் கூற இயலவில்லை. சந்தேகப்படுமாறு நடந்து கொள்வோம் ஆனால் சந்தேகப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். உறவினர்களை இழந்தவர்கள் இழந்தோமா இல்லையா என தவிப்பது முட்டாள்தனம் அல்ல, உயிரோடு இருக்கமாட்டார்களா எனும் நப்பசையாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கிருஷ்ணா wrote:[link="/t108708p150-mh370#1059670"]உறுதி செய்வது இயலாத காரியம் என்றால், எப்படி உறுதி செய்யப்பட்டது. ஆதாரம் தர இயலாது ஆனால் உறுதியாக கூறுகிறேன் என்றால் எப்படி நம்புவது. அதைதான் உறவினர்கள் கேட்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றால், நம்பக்கூடிய ஆதாரம் தாருங்கள் என்கிறார்கள். ஏன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஏன் முழு சரக்குப்பட்டியலைக் கூற இயலவில்லை. சந்தேகப்படுமாறு நடந்து கொள்வோம் ஆனால் சந்தேகப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். உறவினர்களை இழந்தவர்கள் இழந்தோமா இல்லையா என தவிப்பது முட்டாள்தனம் அல்ல, உயிரோடு இருக்கமாட்டார்களா எனும் நப்பசையாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.
எந்த மாதிரியான ஆதாரம் எதிர்பார்க்கிறீர்கள் ..?
ரோல்ஸ் Royce என்ஜின் தகவல் மற்றும் satellite feed மூலம் கிடைத்த தகவலின் படி விமானம் கடலில் தான் விழுந்தது
மேலும் AUV -க்களால் 11000 அடி ஆழம் வரை தான் செல்ல முடியும் ..ஆனால் விமானம் விழுந்த இடம் அதை விட ஆழமான பகுதி . மேலும் கடலடி நீரோட்டத்திலும் அடித்து செல்லப்படும் வாய்ப்புகளும் அதிகம்.
கார்கோ விபரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது
1. 3 முதல் 4 டன் வரை மங்குஸ்தீன் பழம்
2. எளிதில் தீப்பற்றக் கூடிய Lithium ion Batteries
இவை அனைத்தும் ICAO விதிமுறைப்படி பரிசோதிக்கப்பட்டு தான் விமானத்தில் ஏற்றப்பட்டது ..
மீண்டும் ஒரு முறை... வதந்திகளை நம்ப வேண்டாம்
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
அறிவியல் வளர்ந்த இந்த நவீன யுகத்தில் காணாமல் போன ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகவும் கேவலமான விடயம்...!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கோ. செந்தில்குமார் wrote:[link="/t108708p150-mh370#1059735"]அறிவியல் வளர்ந்த இந்த நவீன யுகத்தில் காணாமல் போன ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகவும் கேவலமான விடயம்...!
கடலுக்கு அடியில் மலை இடுக்குகளில் 11000 அடி ஆழத்தில் இருப்பதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை ..
இதில் கேவலப்பட என்ன இருக்கிறது ...?
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
ஆப்கானிஸ்தானில் எம்எச்370 விமானமா? ஆராயும்படி பயணிகளின் குடும்ப உறுப்பினர் வேண்டுகோள்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24 – காணாமல் போன எம்.எச். 370 விமானம் ஆப்கானிஸ்தானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய உளவுத் துறை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அவ்விமானத்தை ஆப்கானிஸ்தானில் தேடுமாறு மலேசிய அரசாங்கத்திற்கும், இடைக்கால போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடினுக்கும் பிரதமருக்கும் கடந்த ஏப்ரல் 14இல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதையடுத்து அங்கு தீவிர தேடும் பணியில் ஆஸ்திரேலியா நாட்டினரும் அனைத்துலக குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
எம்.எச்.370 விமானம் காணாமல் போய் 47 நாட்கள் ஆகியும் எந்தவொரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனிடையே, காணாமல் போன எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கு அரசாங்கம் அனைத்துலக குழு ஒன்றை நியமித்துள்ளதாக இடைக்கால போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24 – காணாமல் போன எம்.எச். 370 விமானம் ஆப்கானிஸ்தானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய உளவுத் துறை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அவ்விமானத்தை ஆப்கானிஸ்தானில் தேடுமாறு மலேசிய அரசாங்கத்திற்கும், இடைக்கால போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடினுக்கும் பிரதமருக்கும் கடந்த ஏப்ரல் 14இல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதையடுத்து அங்கு தீவிர தேடும் பணியில் ஆஸ்திரேலியா நாட்டினரும் அனைத்துலக குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
எம்.எச்.370 விமானம் காணாமல் போய் 47 நாட்கள் ஆகியும் எந்தவொரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனிடையே, காணாமல் போன எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கு அரசாங்கம் அனைத்துலக குழு ஒன்றை நியமித்துள்ளதாக இடைக்கால போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கோலாலம்பூர், ஏப்ரல் 25- MH370 விமானத்தின் பயணிகள் இறந்து விட்டதாக உறுதி செய்ய மலேசியா தயாராக இல்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
“நான் பிறகு அறிவிப்பேன். தற்போதைக்கு பயணிகளின் உறவினர்களின் உணர்வுகளைக் கருத்தில்கொள்கிறேன். உறுதியான ஓர் ஆதாரம் கிடைக்காதவரை அவர்கள் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டார்கள்” என CNN செய்தியாளர் ரிச்சர்ட் குவெஸ்டுடனான நேர்க்காணலின் போது பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இவ்வாறு தெரிவித்தார்.
MH370 விமானம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக அரசாங்கம் அடுத்தவாரம் பூர்வாங்க அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் பிரதமர் நஜீப் அந்த நேர்க்காணலின் போது தெரிவித்தார்.
அதே அறிக்கை ஏற்கெனவே ஐ.நா சபைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
எம்.எச் 370: 50வது நாளாக முன்னேற்றமின்றி தொடரும் தேடல்
நடுவானில் மாயமான எம்.எச். 370 மலேசிய விமானத்தை தேடும் பணி இன்றுடன் 50-வது நாளாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்ற யூகத்துடன் ஆஸ்திரேலிய கடற்படையுடன் அமெரிக்க கடற்படை விமானம் ஒன்றும் தேடலில் ஈடுப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தேடல் இன்றுடன் 50-வது நாளாக எந்த முன்னேற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது.
உலக நாடுகளின் தேடுதல் வேட்டை:
ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. (JACC) தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் தலைமையில், தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
உடைந்த பாகங்கள் போன்ற சில உதிரிப் பாகங்கள் தெற்கு இந்திய கடலில் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் தேடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கறுப்புப் பெட்டியின் சிக்னல்கள் சில இடைவேளைகளில் அதே இடத்தில் பதிவானதை அடுத்து அங்கு அமெரிக்காவின் சோனார், இங்கிலாந்தின் பிளு பின் - 24 போன்ற கருவிகள் சிக்னலை பதிவு செய்து, பின்னர் அந்த பகுதிக்கு தேடல் வட்டம் சுறுக்கிகொள்ளப்பட்டது.
கறுப்புப் பெட்டி செயலிழந்தது
விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுனர். தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவானது.
இருப்பினும் கறுப்புப் பெட்டியின் சிக்னலை ப்ளுபின் - 21 என்ற கருவியால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளியான சிக்னல்கள் திடீரென நின்றது. கருப்புப் பெட்டியின் பேட்டரி ஒரு மாததிற்கு மட்டும் செயல்படும் பின்னர் அது காலாவதி ஆக விடும் என்ற நிலையில், சிக்னல் பதிவு நின்ற நிகழ்வு பெறும் பின்னடைவாக கருதப்பட்டது.
இதனை அடுத்து, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபாட், "காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை எமது நாடு கைவிடப் போவதில்லை.
எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில் நாங்கள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளோம்" என்றார்.
தேடலுக்கு முட்டுக்கட்டை:
தேடலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கம் முதல் தற்சமயம் வரை தெற்கு இந்திய பெருங்கடலில் அடிக்கடி நிகழ்ந்த வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்ற காரணத்தால் எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி பல முறை நிறுத்தப்பட்டது. கறுப்புப் பெட்டி இருப்பதாக கணிக்கப்பட்ட கடற்பரப்பின் தரைப்பரப்பிற்கு ஆளில்லா நீர்மூழ்கி அனுப்பப்பட்டது, முதன் முறை பாதையிலிருந்து விலகி பாதி வழியில் கடல்மட்டத்திற்கு வந்த அந்த இயந்திரம், மீண்டும் திட்டமிடப்பட்டு தரைப்பரப்பிற்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்றும் தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேட பயன்படுத்தப்பட்ட அதிநவீன உத்திகளை இந்த தேடலுக்கு பயன்படுத்த ஆஸ்திரேலிய கடற்படை நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய தேடுல் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இடைவேளைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேடல் இன்றுடன் 50- வது நாளாக எந்த ஒரு உறுதியான தகவலும் இன்றி நீடிக்கிறது.
புளுபின்21-நீர்மூழ்கி மூலம் ஆழ்கடலிலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. விமான தேடுதல் குறித்து மலேசிய அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிட வில்லை. இதனால் எம்எச் 370 விமான பயணிகளின் உறவினர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து மலேசிய பிரதமர் நிஜாப் ராசாக் விமானம் காணாமல் போனதற்கான காரணம் அதை தேடும் பணி கூறித்த நிலவரம் குறித்து அடுத்தவாரம் அறிக்கை வெளியிடப்படும் என கூறி உள்ளார்.
இது குறித்து அவர், ‘’மலேசிய அரசு மற்றும் ஐ நா சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் தயாரித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. சர்வதேச விசாரணைக்குழு தாங்கள் சேகரித்த தகவல்களை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள்’’ என்றார். விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டதை அடுத்து மலேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடுவானில் மாயமான எம்.எச். 370 மலேசிய விமானத்தை தேடும் பணி இன்றுடன் 50-வது நாளாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்கிறது.
இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்ற யூகத்துடன் ஆஸ்திரேலிய கடற்படையுடன் அமெரிக்க கடற்படை விமானம் ஒன்றும் தேடலில் ஈடுப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தேடல் இன்றுடன் 50-வது நாளாக எந்த முன்னேற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது.
உலக நாடுகளின் தேடுதல் வேட்டை:
ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. (JACC) தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் தலைமையில், தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
உடைந்த பாகங்கள் போன்ற சில உதிரிப் பாகங்கள் தெற்கு இந்திய கடலில் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் தேடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கறுப்புப் பெட்டியின் சிக்னல்கள் சில இடைவேளைகளில் அதே இடத்தில் பதிவானதை அடுத்து அங்கு அமெரிக்காவின் சோனார், இங்கிலாந்தின் பிளு பின் - 24 போன்ற கருவிகள் சிக்னலை பதிவு செய்து, பின்னர் அந்த பகுதிக்கு தேடல் வட்டம் சுறுக்கிகொள்ளப்பட்டது.
கறுப்புப் பெட்டி செயலிழந்தது
விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுனர். தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவானது.
இருப்பினும் கறுப்புப் பெட்டியின் சிக்னலை ப்ளுபின் - 21 என்ற கருவியால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளியான சிக்னல்கள் திடீரென நின்றது. கருப்புப் பெட்டியின் பேட்டரி ஒரு மாததிற்கு மட்டும் செயல்படும் பின்னர் அது காலாவதி ஆக விடும் என்ற நிலையில், சிக்னல் பதிவு நின்ற நிகழ்வு பெறும் பின்னடைவாக கருதப்பட்டது.
இதனை அடுத்து, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபாட், "காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை எமது நாடு கைவிடப் போவதில்லை.
எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில் நாங்கள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளோம்" என்றார்.
தேடலுக்கு முட்டுக்கட்டை:
தேடலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கம் முதல் தற்சமயம் வரை தெற்கு இந்திய பெருங்கடலில் அடிக்கடி நிகழ்ந்த வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்ற காரணத்தால் எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி பல முறை நிறுத்தப்பட்டது. கறுப்புப் பெட்டி இருப்பதாக கணிக்கப்பட்ட கடற்பரப்பின் தரைப்பரப்பிற்கு ஆளில்லா நீர்மூழ்கி அனுப்பப்பட்டது, முதன் முறை பாதையிலிருந்து விலகி பாதி வழியில் கடல்மட்டத்திற்கு வந்த அந்த இயந்திரம், மீண்டும் திட்டமிடப்பட்டு தரைப்பரப்பிற்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்றும் தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேட பயன்படுத்தப்பட்ட அதிநவீன உத்திகளை இந்த தேடலுக்கு பயன்படுத்த ஆஸ்திரேலிய கடற்படை நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய தேடுல் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இடைவேளைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேடல் இன்றுடன் 50- வது நாளாக எந்த ஒரு உறுதியான தகவலும் இன்றி நீடிக்கிறது.
புளுபின்21-நீர்மூழ்கி மூலம் ஆழ்கடலிலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. விமான தேடுதல் குறித்து மலேசிய அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிட வில்லை. இதனால் எம்எச் 370 விமான பயணிகளின் உறவினர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து மலேசிய பிரதமர் நிஜாப் ராசாக் விமானம் காணாமல் போனதற்கான காரணம் அதை தேடும் பணி கூறித்த நிலவரம் குறித்து அடுத்தவாரம் அறிக்கை வெளியிடப்படும் என கூறி உள்ளார்.
இது குறித்து அவர், ‘’மலேசிய அரசு மற்றும் ஐ நா சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் தயாரித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. சர்வதேச விசாரணைக்குழு தாங்கள் சேகரித்த தகவல்களை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள்’’ என்றார். விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டதை அடுத்து மலேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
காணாமல் போன விமானத்தை பற்றிய செய்திகள் இங்கு வந்தால்
தெரிந்து கொள்ள முடிகிறது. விமானத்தை பற்றிய செய்திகள்
நாளேடுகளில் வருவதில்லை
நன்றி
தெரிந்து கொள்ள முடிகிறது. விமானத்தை பற்றிய செய்திகள்
நாளேடுகளில் வருவதில்லை
நன்றி
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கை நாளை வெளியீடுகிறது மலேசியா
மாயமான விமானம் தொடர்பான மிகவும் எதிர்பார்க்கப்படும் முதற்கட்ட அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிகிறது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதியில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொடங்கப்பட்டது. விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை நாளை மலேசியா வெளியீடுகிறது.இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹிசான் தெரிவித்தார்.
மாயமான விமானம் தொடர்பான மிகவும் எதிர்பார்க்கப்படும் முதற்கட்ட அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிகிறது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதியில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொடங்கப்பட்டது. விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை நாளை மலேசியா வெளியீடுகிறது.இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹிசான் தெரிவித்தார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான மலேசிய விமானம்: பயணிகளின் உறவினர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்
கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, மார்ச், 8ல், சீனாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் மாயமானது. 239 பேருடன் சென்ற விமானம், இந்திய பெருங்கடலில், ஆஸ்திரேலியா அருகே, விழுந்திருக்கலாம், என்ற நம்பிக்கையில், தேடும் பணி நடக்கிறது.
விமானத்தில் பயணத்தவர்களுடைய, உறவினர்கள், கோலாலம்பூரில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர். உறவினர்களை பற்றிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். இதற்குரிய செலவை, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஏற்றுள்ளது.
மாயமான விமானம் குறித்து, இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.எனவே, உறவினர்கள் வீணாக இங்கு காத்திருக்காமல், வீடுகளுக்கு திரும்பி செல்லும்படி, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
'உடனடியாக வீடுகளுக்கு திரும்பி செல்லும் உறவினர்களுக்கு, விபத்தில் மறைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும்' என, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமானம் மாயமானது குறித்த முதல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, மார்ச், 8ல், சீனாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் மாயமானது. 239 பேருடன் சென்ற விமானம், இந்திய பெருங்கடலில், ஆஸ்திரேலியா அருகே, விழுந்திருக்கலாம், என்ற நம்பிக்கையில், தேடும் பணி நடக்கிறது.
விமானத்தில் பயணத்தவர்களுடைய, உறவினர்கள், கோலாலம்பூரில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர். உறவினர்களை பற்றிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். இதற்குரிய செலவை, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஏற்றுள்ளது.
மாயமான விமானம் குறித்து, இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.எனவே, உறவினர்கள் வீணாக இங்கு காத்திருக்காமல், வீடுகளுக்கு திரும்பி செல்லும்படி, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
'உடனடியாக வீடுகளுக்கு திரும்பி செல்லும் உறவினர்களுக்கு, விபத்தில் மறைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும்' என, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமானம் மாயமானது குறித்த முதல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
Page 17 of 21 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
Page 17 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|