Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 11 of 21
Page 11 of 21 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் , இந்த விபத்தில் உயிரிழந்த அப்பாவி பயணிகள் & விமான ஊழியர்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
அவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வருவார்கள் என்று மனதில் சின்னதா ஒரு நம்பிக்கை
இருந்தது. ஆனால் இந்த செய்தி கேட்டப்ப ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
அந்த பயணிகள் ஆத்மா சாந்தி அடையவும் அவர்களின் உறவினர்கள் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
இருந்தது. ஆனால் இந்த செய்தி கேட்டப்ப ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
அந்த பயணிகள் ஆத்மா சாந்தி அடையவும் அவர்களின் உறவினர்கள் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH370 குறித்து பேஸ்புக்கில் கருத்து – ஏர் ஏசியா எக்ஸ் விமானி பணி நீக்கம்!
MH370 விமானம் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருந்த தங்கள் ஏர் ஏசியா எக்ஸ் விமானிகளில் ஒருவரை, ஏர் ஏசியா நிறுவனம் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ், “ஏர் ஏசியா நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விதமாக, பேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்ட ‘ஏர் ஏசியா எக்ஸ்’ மூத்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார்” என்று தனது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து காயப்படுத்துவது போல் இருப்பதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டோனி தெரிவித்துள்ளார்.
MH370 விமானம் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருந்த தங்கள் ஏர் ஏசியா எக்ஸ் விமானிகளில் ஒருவரை, ஏர் ஏசியா நிறுவனம் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ், “ஏர் ஏசியா நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விதமாக, பேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்ட ‘ஏர் ஏசியா எக்ஸ்’ மூத்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார்” என்று தனது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து காயப்படுத்துவது போல் இருப்பதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டோனி தெரிவித்துள்ளார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
சிவா wrote: MH370 குறித்து பேஸ்புக்கில் கருத்து – ஏர் ஏசியா எக்ஸ் விமானி பணி நீக்கம்!
MH370 விமானம் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருந்த தங்கள் ஏர் ஏசியா எக்ஸ் விமானிகளில் ஒருவரை, ஏர் ஏசியா நிறுவனம் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ், “ஏர் ஏசியா நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விதமாக, பேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்ட ‘ஏர் ஏசியா எக்ஸ்’ மூத்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார்” என்று தனது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து காயப்படுத்துவது போல் இருப்பதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டோனி தெரிவித்துள்ளார்.
சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாயைத் திறக்க வேண்டும், அரசை எதிர்த்து ஏதாவது கேட்டால் உன் எதிர்கால வழ்க்கையே கேள்விக்குறிதான்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH370 பேரிடர்: கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவிருக்கும் மாஸ் நிறுவனம்!
MH370 விமானம் மாயமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பொருளாதார நெருக்கடியில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில், எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விபத்திற்குள்ளான விமானம் கிடைக்காத பட்சத்தில் பயணிகளின் குடும்பத்தாருக்கு பல மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை தர வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மாஸ் நிறுவனம் உள்ளது. காப்பீடு மூலமாகக் கிடைக்கும் நிதி ஓரளவிற்கு உதவும் என்று கருதினாலும், விமானத்தில் அசம்பாவிதம் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டால், பயணிகளின் உறவினர்கள் வழக்குத் தொடுத்து இன்னும் கூடுதலாக நஷ்ட ஈடு பெறவும் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்நிலையில், மாஸ் நிறுவனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் இந்த மூன்று வாரங்களில் பல மடங்கு சரிவடைந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய அரசாங்கத்தின் சொத்து நிதியில் 70 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ள மாஸ் நிறுவனம், கடைசியாக லாபம் அடைந்தது 2010 ஆம் ஆண்டு என்று அறிக்கை கூறுகின்றது.
அண்மையில், மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2012 ஆம் ஆண்டிற்கான முழு ஆண்டு மொத்த இழப்பு 432.58 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1.17 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் குடும்பத்திற்கு முதற்கட்ட இழப்பீடு
விபத்திற்குள்ளானதாகக் கருதப்படும் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேருக்கும், தலா 5000 டாலர் (16,502 ரிங்கிட்) முதற்கட்ட இழைப்பீடு அவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டும் என மாஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதே நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம் கண்டறியப்பட்டால், உறவினர்களை ஆஸ்திரேலியா பெர்த்துக்கு அழைத்துச் சென்று மீட்கப்பட்ட தடயங்களை காட்டுவதாகவும் மாஸ் உறுதியளித்துள்ளது.
தேடுதல் பணிக்குத் தேவையான அத்தனை செலவுகளையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானம் விபத்திற்குள்ளாகி, அதை தேடி உண்மை நிலவரத்தை கண்டறிய சுமார் இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதற்கு ஆன மொத்த செலவு 32 மில்லியன் ஈரோ (145 மில்லியன் ரிங்கிட்) ஆகும்.
ஆனால் அதை விட இன்னும் கூடுதலான நிதி MH370 விமானத்தை கண்டறிவதற்கு செலவிடப்படலாம் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
விமானம் கண்டுபிடிக்கப்படாமல் போனால், அனைத்துலக ஒப்பந்தத்தின் படி, உயிரிழந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா 175,000 அமெரிக்க டாலர் (5,78,025 ரிங்கிட்) வரையில் அவர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய பொறுப்பையும் மாஸ் விமானம் நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.
எனினும், மாஸ் நிறுவனத்திற்கு விமானத்தின் காப்பீடு மூலமாக எவ்வளவு நிதி கிடைக்கும் என்ற முழு விபரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கமாக போயிங் 777 விமானத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கிடைக்கும் என்று கருதப்படுகின்றது.
மாஸ் நிறுவனத்தின் பயண அனுபவங்கள் இதுவரை (MH370 க்கு முன்பு வரை) நல்ல நிலையிலேயே இருந்துள்ள காரணத்தால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, தனது பயணச் சீட்டுக்களின் விலையை மிகக் குறைவாக மாற்றி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முயற்சி செய்யும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
MH370 விமானம் மாயமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பொருளாதார நெருக்கடியில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில், எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விபத்திற்குள்ளான விமானம் கிடைக்காத பட்சத்தில் பயணிகளின் குடும்பத்தாருக்கு பல மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை தர வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மாஸ் நிறுவனம் உள்ளது. காப்பீடு மூலமாகக் கிடைக்கும் நிதி ஓரளவிற்கு உதவும் என்று கருதினாலும், விமானத்தில் அசம்பாவிதம் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டால், பயணிகளின் உறவினர்கள் வழக்குத் தொடுத்து இன்னும் கூடுதலாக நஷ்ட ஈடு பெறவும் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்நிலையில், மாஸ் நிறுவனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் இந்த மூன்று வாரங்களில் பல மடங்கு சரிவடைந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய அரசாங்கத்தின் சொத்து நிதியில் 70 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ள மாஸ் நிறுவனம், கடைசியாக லாபம் அடைந்தது 2010 ஆம் ஆண்டு என்று அறிக்கை கூறுகின்றது.
அண்மையில், மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2012 ஆம் ஆண்டிற்கான முழு ஆண்டு மொத்த இழப்பு 432.58 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1.17 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் குடும்பத்திற்கு முதற்கட்ட இழப்பீடு
விபத்திற்குள்ளானதாகக் கருதப்படும் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேருக்கும், தலா 5000 டாலர் (16,502 ரிங்கிட்) முதற்கட்ட இழைப்பீடு அவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டும் என மாஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதே நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம் கண்டறியப்பட்டால், உறவினர்களை ஆஸ்திரேலியா பெர்த்துக்கு அழைத்துச் சென்று மீட்கப்பட்ட தடயங்களை காட்டுவதாகவும் மாஸ் உறுதியளித்துள்ளது.
தேடுதல் பணிக்குத் தேவையான அத்தனை செலவுகளையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானம் விபத்திற்குள்ளாகி, அதை தேடி உண்மை நிலவரத்தை கண்டறிய சுமார் இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதற்கு ஆன மொத்த செலவு 32 மில்லியன் ஈரோ (145 மில்லியன் ரிங்கிட்) ஆகும்.
ஆனால் அதை விட இன்னும் கூடுதலான நிதி MH370 விமானத்தை கண்டறிவதற்கு செலவிடப்படலாம் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
விமானம் கண்டுபிடிக்கப்படாமல் போனால், அனைத்துலக ஒப்பந்தத்தின் படி, உயிரிழந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா 175,000 அமெரிக்க டாலர் (5,78,025 ரிங்கிட்) வரையில் அவர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய பொறுப்பையும் மாஸ் விமானம் நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.
எனினும், மாஸ் நிறுவனத்திற்கு விமானத்தின் காப்பீடு மூலமாக எவ்வளவு நிதி கிடைக்கும் என்ற முழு விபரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கமாக போயிங் 777 விமானத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கிடைக்கும் என்று கருதப்படுகின்றது.
மாஸ் நிறுவனத்தின் பயண அனுபவங்கள் இதுவரை (MH370 க்கு முன்பு வரை) நல்ல நிலையிலேயே இருந்துள்ள காரணத்தால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, தனது பயணச் சீட்டுக்களின் விலையை மிகக் குறைவாக மாற்றி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முயற்சி செய்யும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏர் ஆசியாவிற்குக் கொண்டாட்டம்
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
“கட்டுப்பாட்டு அறையின் கட்டளை படி விமானம் திரும்புவதாக நினைத்தோம்” – மலேசிய விமானப்படை அறிக்கை
கடந்த மார்ச் 8 ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, மலாக்கா நீரிணை வழியாக கடந்து சென்ற போது, அது கட்டுப்பாட்டு அறையின் கட்டளையின் பேரில் தான் திரும்புகிறது என்று “அனுமானம்” செய்து கொண்டதாக மலேசிய விமானப்படை (The Royal Malaysian Air Force) இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து துணை தற்காப்பு அமைச்சர் அப்துல் ரஹீம் பக்ரி கூறுகையில், “இராணுவ ரேடாரில் அதிகாலை 2.40 மணியளவில் கண்டறியப்பட்ட அந்த விமானம் முதலில் MH370 தான் என்பது அடையாள காணப்படவில்லை. ஆனால் அது ‘உளவு விமானம்’ அல்ல என்பதை மட்டும் அறிய முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விமானக் கட்டுப்பாட்டு அறையில் கிடைத்த தகவலின் படி தான், அந்த விமானம் திரும்புகிறது என்று நினைத்தோம்” என்று இன்று நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
“மலாக்கா நீரிணை அல்லது அந்தமானை கடலை நோக்கி அந்த விமானம் பறந்ததை நாங்கள் கவனித்தோம். அதனால் தான் அதற்கு அடுத்த நாள் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம்” என்றும் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
ஆமா, இதுதாங்க உண்மை! அட, சொன்னா நம்புங்க பாஸ்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
.
இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை ..செயற்கைக்கோள் மூலம் கிடைத்த படங்களின் அடிப்டையில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளன ..ஆனால் இது வரை உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை
இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை ..செயற்கைக்கோள் மூலம் கிடைத்த படங்களின் அடிப்டையில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளன ..ஆனால் இது வரை உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம்: ஆஸ்திரேலிய பிரதமர் சொல்கிறார்
மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் எங்களிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் எங்கள் அதிகாரிகள் பயன்படுத்தினார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.மேலும்,தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வானிலை சீரடைந்துள்ளது என்றும் விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், விமானத்தை தேடும் பணியில் 12 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2500 கி.மீட்டர் தொலைவில் 2 பாகங்கள் இந்திய பெருங்கடலில் இருப்பதாக ஆஅஸ்திரேலியா செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்ட்டன.
மேலும் சினாவின் செயற்கை கோளிலும் இது போன்ற பாகங்கள் தென்பட்டனஇதை தெடர்ந்து இந்திய பெருங்கடலிலும் அதன் தென் பகுதியிலும் தேடுதல் வேட்டையில் 29 விமானங்கள்,21 கப்பல்கள்,6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
இதனிடையே மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தர்.மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் , ஆஸ்திரலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில் நாங்கள் அந்த குடும்பங்களுக்கு கடமை பட்டிருக்கிறோம். கவலைக்குள்ளான உலக மக்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இறுதியாக நாங்கள் சிதைவு பொருட்களை கண்டறிந்தோம். மாயமான விமானத்தின் புதிரை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வருவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், மாயமான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினருக்கு நாங்கள் முடிந்த வரை தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலை , வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த மக்கள் தற்போது பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலிய வர விரும்பினால், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களுக்கு நாங்கள் எல்லைவகையிலும் முடிந்தவரை உதவி செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சீனா இந்த சிறப்பு தூதரை மலேசியவுக்கு அனுப்பியுள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாயமான மலேசிய விமானத்தின் புதிரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் எங்களிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் எங்கள் அதிகாரிகள் பயன்படுத்தினார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.மேலும்,தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வானிலை சீரடைந்துள்ளது என்றும் விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், விமானத்தை தேடும் பணியில் 12 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2500 கி.மீட்டர் தொலைவில் 2 பாகங்கள் இந்திய பெருங்கடலில் இருப்பதாக ஆஅஸ்திரேலியா செயற்கைக்கோளில் அடையாளம் காணப்பட்ட்டன.
மேலும் சினாவின் செயற்கை கோளிலும் இது போன்ற பாகங்கள் தென்பட்டனஇதை தெடர்ந்து இந்திய பெருங்கடலிலும் அதன் தென் பகுதியிலும் தேடுதல் வேட்டையில் 29 விமானங்கள்,21 கப்பல்கள்,6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
இதனிடையே மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தர்.மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் , ஆஸ்திரலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில் நாங்கள் அந்த குடும்பங்களுக்கு கடமை பட்டிருக்கிறோம். கவலைக்குள்ளான உலக மக்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இறுதியாக நாங்கள் சிதைவு பொருட்களை கண்டறிந்தோம். மாயமான விமானத்தின் புதிரை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வருவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், மாயமான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினருக்கு நாங்கள் முடிந்த வரை தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலை , வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த மக்கள் தற்போது பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலிய வர விரும்பினால், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களுக்கு நாங்கள் எல்லைவகையிலும் முடிந்தவரை உதவி செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சீனா இந்த சிறப்பு தூதரை மலேசியவுக்கு அனுப்பியுள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
உங்க மக தான் அந்த விமானத்தை விளையாட்டா கடல்ல தூக்கி போட்டதா எல்லாம் பேசிக்கிறாங்க. FBI இப்போ உங்க வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்காங்க. மாட்டுனாங்க உங்க பொண்ணூ. ஆ ஆ ஆ ஆ
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாணிக்கம் நடேசன் wrote:உங்க மக தான் அந்த விமானத்தை விளையாட்டா கடல்ல தூக்கி போட்டதா எல்லாம் பேசிக்கிறாங்க. FBI இப்போ உங்க வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்காங்க. மாட்டுனாங்க உங்க பொண்ணூ. ஆ ஆ ஆ ஆ
FBI போனால் என்ன BUKIT AMAN போனால் என்ன? என் மகள் பயப்பட மாட்டாள்!
Page 11 of 21 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
Page 11 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|