ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
VENKUSADAS
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
VENKUSADAS
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

+3
ஜாஹீதாபானு
krishnaamma
சாமி
7 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 03, 2014 8:49 pm

First topic message reminder :

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Sat Mar 29, 2014 5:28 pm

6. ஓமம் - கேழ்வரகு களி

தேவையானவை:
ஓமம் - 50 கிராம்
கறுப்பு உளுந்து - 50 கிராம்
கறுப்பு எள் - 25 கிராம்
கேழ்வரகு - 100 கிராம்
கைக்குத்தல் அவல்- 100 கிராம்
சுண்டைக்காய் வற்றல் - 100 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி.

செய்முறை:

• மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்து, ஆற வைத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.

• இந்த மாவில் தேவையான அளவு எடுத்துக் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.

• ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அதில் கரைத்துவைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

• களி பதத்துக்கு வந்ததும் அதன் மேல் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றிக் கீழே இறக்கி பரிமாறவும்

குறிப்பு: இந்த ஓமக்களி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by ஜாஹீதாபானு Sat Mar 29, 2014 6:09 pm

சாமி wrote:5. கேழ்வரகு அடை

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:-
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சூடான சூப்பர் கேப்ப அடை ரெடி..!!

செய்து பார்க்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Sun Mar 30, 2014 2:34 pm

7. கேழ்வரகு புட்டு

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கேழ்வரகு மாவில் இளசுகளுக்குப் பிடிக்கும் அருமையான புட்டு செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – மூன்று கப்
உப்பு – அரை ஸ்பூன் அல்லது தேவையான அளவு
துருவிய தேங்காய் – அரை மூடி
சர்க்கரை – 1 கப்
நெய் – 1 ஸ்பூன்

செய்யும் முறை:
கேழ்வரகு மாவில் உப்பை கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். இறுத்திப்பிடித்தால், கட்டியாகவும், சற்று அழுத்தினால் மாவாக உதிரும்படி பிசையவும்.

பிறகு, இட்லி குண்டானை அடுப்பில் வைத்து கீழே தண்ணீர் விட்டு, ஒரு இட்லி தட்டை மட்டும் வைத்து, அதில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது உதிர்த்து வைத்துள்ள மாவை தட்டுக்களில் பரப்பிவிட்டு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

எடுத்த உடனேயே சூட்டிலிருக்கும் போதே தேங்காய் துருவலையும் கொட்டி நன்றாக உடைத்து விடவும். சூடான சத்தான கேழ்வரகு புட்டு தயார். சாப்பிடும் பொழுது சிறிது சர்கரை மற்றும் நெய் சேர்த்து சூடாக சாப்பிடவும்.

நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு இல்லாதவர்கள், புட்டில் சர்க்கரை, நெய் சேர்த்து சாப்பிடலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 31, 2014 8:45 pm

8. கேழ்வரகு குலுக்கு ரொட்டி
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Fsa27xtT0aLqJr9vc6oz+kezhvaragurotti

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை லேசாக வறுத்து... பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.

இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 31, 2014 8:49 pm

9. கேழ்வரகு இனிப்பு அடை
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 YOs4EJCxRZqp23gEvTr8+inippuatai
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந் திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 31, 2014 9:00 pm

10. கேழ்வரகு இனிப்பு உருண்டை

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 VSQODGHQiGp7xZfgufEe+kezhvaraguurundai

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு – 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி… வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 31, 2014 9:05 pm

11. கேழ்வரகு சப்பாத்தி
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 YELRCHUiRW49DjC4pd2W+kelvaragusppathij

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய், 50 மி.லி.

செய்முறை :
வெல்லத்தைப் பாகாக் காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து, அத்துடன் கேழ்வரகு மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒரு மணி நேரம் நன்றாக ஊற வி்டவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, சற்று கனமான சப்பாத்தியகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, ஓரத்தில் சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு, நன்றாக வேகவிட்டு எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட, இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் அருமையாக இருக்கும்.

கால்சியம், இரும்புச் சத்தும் நிறைந்த முழுமையான உணவு. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 31, 2014 9:09 pm

12. கேழ்வரகு பக்கோடா
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Po4YDuFkRLOEUn8Shz6v+kezhvaragupakkoda

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்புசேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
கடாயில் எண் ணெய் காயவைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும்.
கேழ்வரகில் இரும்பு ச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத் து எல்லாம் இருக்கின்றன. மலச் சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 31, 2014 9:13 pm

13. கேழ்வரகு தோசை
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 8978B3HVTg9KVYubqXG2+kezhvaragudosai

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 200 மில்லி
அரிசிமாவு-50மில்லி
வெல்லம்-200மில்லி தூள் செய்தது
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்

செய்முறை :
வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.

இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது.  இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Thu Apr 03, 2014 9:46 pm

14. கேழ்வரகு இனிப்பு அடை

கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 க‌ப் (ராகி மாவு)
வெல்லம் - 1/2 கப்
துறுவிய தேங்காய் - 1/4 க‌ப்
ஏலக்காய் பொடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெல்லத்தை உ‌தி‌ர்‌த்து ஒரு பா‌த்‌தி‌ர‌த்‌தி‌ல் போ‌ட்டு அ‌தி‌ல் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துறுவிய தேங்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும். உ‌தி‌ரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.
சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற இ‌னி‌ப்பு அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum