புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
7 Posts - 4%
prajai
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பலகார டிப்ஸ்! Poll_c10பலகார டிப்ஸ்! Poll_m10பலகார டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலகார டிப்ஸ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 5:38 pm

பலகார டிப்ஸ்! P72a


பலகார டிப்ஸ்! P72b

பலகார டிப்ஸ்! P72c

நன்றி- அவள்விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 5:53 pm

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?!

கிச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

வாங்கும் டப்பாக்கள் எல்லாம் ஒரே அளவிலோ அல்லது ஒரே டிசைனாகவோ இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

காய்கறி நறுக்கும்போது அடியில் ஒரு பேப்பரை போட்டுக்கொண்டால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

25 கிலோ அரிசியை வாங்கிவந்தால், அதை இரண்டு, மூன்று டப்பாக் களில் பிரித்துச் சேமிக் கலாம்.

எண்ணெய் வைக்கும் இடத்துக்கு அருகில் கத்தி, தேங்காய் துருவி, குட்டி ஸ்பூன் போன்றவற்றை வைத்தால், அவசரத் துக்கு தேடும்படி இருக்காது.

அன்றாட தேவைக்கான மளிகை, மசாலா பொருட்களை அடுப்புக்கு இடதுபுறத்தில் வைத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் கீழே கொட்டி விட்டால், உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவைப் போட்டு, வழித்தெடுத்தால், எண்ணெய் பசை இருக்காது.

அடுப்புக்கு கீழே உள்ள 'சிலாப்’பில், தினமும் பயன்படுத்தும் குக்கர் மற்றும் கடாய்களை முதல் வரிசையில் வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மட்டுமே பயன் படுத்தும் மாவு டப்பாக்களை அடுத்த வரிசையில் வைத்துக் கொள்ளலாம்.

முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால் உடனே அதன் மீது உப்பைக் கொட்டினால், வாடை குறைந்துவிடும், சுலபமாக சுத்தம் செய்யலாம். சமையலறையில் நாம் நிற்பதற்கு வலதுபுறத்தில் மிக்ஸி, கிரைண்டர், 'மைக்ரோவேவ் அவன்’ போன்றவற்றை வைத்தால், கையாள சுலபமாக இருக்கும்.

கண்ணாடிப் பொருட்கள், கப் அண்ட் சாஸர் போன்றவற்றை எப்போதும் அடுப்புக்கு எதிர்புறத்தில், மேலேதான் வைக்க வேண்டும். அடுப்பு அருகில் வைத்தால் பிசுபிசுப்பு ஒட்டும். வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

'சிலாப்’களாக இல்லாமல், மாடுலர் கிச்சன்களில் வரிசையாக பல 'டிரா’க்கள் வைத்திருப்பவர்கள், முதல் வரிசையில்... டீ, காபித்தூள், சர்க்கரை போன்ற... காலை எழுந்ததும் தேவைப்படும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது அடுக்கில்... சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா பொருட்கள்; மூன்றாவது அடுக்கில்... பருப்பு வகைகள்; நான்காவது அடுக்கில்... அஞ்சறைப் பெட்டி, அருகிலேயே காய்ந்த மிளகாய் என வைத்துக்கொள்ளலாம். மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளை ஐந்தாவது அடுக்கில் வைக்கலாம். கடைசி அடுக்கில் அரிசி வகைகளை வைக்கலாம்.

அடுப்புக்கு வலப்புறம் எண்ணெய் கன்டெய் னர்களை வைக்கலாம். சந்தையில் இப்போது பலவிதமான 'ஹூக்’கள் கிடைக்கின்றன. அவற்றை சுவரில் மாட்டி, ஆயில் கன்டெய்னரை மாட்டிவிட்டால், கீழே சிலாப்பில் எண்ணெய் பசைபடும் என்கிற கவலை இல்லை. சுவரில் மாட்ட வசதியில்லை என்றால், சின்ன ஸ்டாண்டு வைத்து, அதில் தடிமனான அட்டை வைத்து, அதன் மீது எண்ணெய் கன்டெய்னரை வைத்துப் பயன்படுத்தலாம். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.

உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். வெறும் கையில் உப்பை எடுத்தால், உப்பில் நீர் கசியும். பச்சை மிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒருமுறை அதனை மாற்றினால் போதுமானது.

துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்துவிட்டால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

'என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி' என்ற நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் அதன் மீது உரிமையும், அக்கறையும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் வரும்!

-அவள்விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 5:57 pm

கண்ணே அதிரசம் பண்ண ஆசையா!

''வீடே மணமணக்க அதிரசம் சுட்டு, சட்டியில இருந்து எடுக்கும்போதே ஒண்ணு, ரெண்டை கிண்ணத்துல வெச்சு வீட்டுல இருக்குறவுகளுக்கு சூடா கொடுத்துட்டு, அப்புறம் சுட்ட அதிரசத்தை எல்லாம் அண்டாவுல, கூடையில அடுக்கி, தீபாவளி அன்னிக்கு அக்கம்பக்கத்துக்கு கொடுத்துனு... அதிரசம் செய்றதே எங்களுக்கெல்லாம் தீபாவளிதானப்பு!'' என்று சொல்லும் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த கலைச்செல்வி ரமேஷ், தான் தயாரிக்கும் அதிரசங்களை வணிக ரீதியில் பல ஊர்களுக்கும் சப்ளை செய்துகொண்டிருக்கிறார்.

'ம்க்கும், நமக்கெல்லாம் வீட்டுக்கு அதிரசம் செய்யுறதுக்கே திணற வேண்டியிருக்கு. பத்து வருஷமா மெனக்கெட்டாலும், இந்த அதிரசம் பதம் மட்டும் பிடிபடவே மாட்டேங்குது' என்கிறீர்களா? கவலையை விடுங்கள்... கலைச்செல்வயின் கைப்பக்குவத்தைக் கவனியுங்கள்.
பலகார டிப்ஸ்! P42
தேவையான பொருட்கள் (நான்கு நபர்களுக்கு அதிரசம் செய்ய):

பச்சரிசி - 750 கிராம், வெல்லம் - 500 கிராம், தண்ணீர் - 100 - 150 மில்லி, ஏலக்காய், சுக்கு, நெய் - சிறிதளவு, கடலை எண்ணெய் (அல்லது) ரீஃபைண்டு ஆயில் - ஒரு லிட்டர். (1 படி அல்லது ஒன்றரை கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ வெல்லம், 200 முதல் 250 மில்லி தண்ணீர் என்கிற கணக்கில் எடுத்துக்கொள்ளவும்).

பச்சரிசியை அலசி 20 நிமிடம் நன்றாக ஊறவைத்து, பின்னர் அரிசியில் ஈரப்பதம் இல்லாதவாறு பருத்தித் துணியில் கொட்டி உலர்த்தவும்.

நன்கு உலர்த்திய அரிசியை ரைஸ் மில்லில் கொடுத்து அதிரசத்துக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லி, அரைத்து வாங்கவும். அல்லது, வீட்டு உரல்/மிக்ஸி மூலமாக அரிசியில் 75% மாவாகவும், 25% குருணையாகவும் இருக்கும்படி இடித்துக்கொள்ளவும்.

அதிரசம் தயாரிப்பதில் முக்கியமான வேலை, பாகு காய்ச்சுவது. வெல்லத்தை நன்றாக இடித்து, சட்டியில் வைத்து, தண்ணீர் ஊற்றி, காய்ச்சவும். அடிபிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கம்பி பதம் வந்தவுடன் நிறுத்தவும் (பாகைக் காய்ச்சி, ஒரு துளியை தண்ணீர் இருக்கும் ஒரு பாத்திரத்தில் விழும்படி செய்தால், இலகுவாகவும் இல்லாமல், கெட்டியாக இல்லாமல் கம்பி போல நீண்டு விழுந்தால் கம்பி பாகு பதம்).

பொடித்த ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்க்கவும் (விருப்பத்துக்கு ஏற்ப).

காய்ச்சிய பாகு இளஞ்சூட்டில் இருக்கும்போது, இடித்து வைத்திருக்கும் அரிசி மாவை சிறிது சிறிதாகக் கலக்கவும். கலக்கும்போது கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது முக்கியம்.
பலகார டிப்ஸ்! P42a
இந்தப் பாகு, அரிசி மாவுக் கலவையை 7 - 8 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். இரண்டு நாட்கள் வரைகூட இது கெடாமல் இருக்கும்.

தயாரித்து வைத்திருக்கும் மாவு இறுகியிருக்கும் என்பதால், அதிரசம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கைகளால் கலந்துகொண்டால், அதிரசம் செய்ய எளிமையாக இருக்கும். கூடவே, லேசாக மாவையும் தூவிக் கலப்பது நல்லது.

இப்படிச் செய்யும்போது, கை படுவதாலும், தண்ணீர் சேர்ப்பதாலும் இந்த மாவை அன்றைக்கே அதிரசம் செய்யப் பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால் மாவு அதிகமாகப் புளித்து வீணாகிவிடும்.

மாவை சிறிது எடுத்து உருட்டி, தட்டி, சட்டியில் நன்றாகக் காய்ந்த கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயிலில் விடவும். அப்படித் தட்டும்போது, நெய்/எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது கனமான பிளாஸ்டிக் கவரில் (ரீஃபைண்டு ஆயில் கவரை கட் செய்து, அதன் உட்புறம்) வைத்துத் தட்டினால், ஒட்டிக்கொள்ளாமல் வரும். வெந்த பதம் பார்த்து அதிரசத்தை எடுக்கவும்.

சுட்ட அதிரசங்களை எண்ணெய் வடியவிட்டு, பாத்திரத்தில் வைக்கவும்.

இவ்வாறு செய்யப்படும் அதிரசம் ஒரு வாரம் வரை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்!

நன்றி- அவள்விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 6:26 pm

சுவையான பகிர்வு நேசன் புன்னகை நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 07, 2014 6:43 pm

அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் .... புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 6:56 pm

ராஜா wrote:அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் .... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093578

வாவ் ! நிஜமாகவா? சுவை எப்படி இருக்கும் ராஜா? புன்னகை .....நிஜமாகவே நல்லா இருக்கும்...........நான் கேட்பது பொறிப்பதற்கும் shallow fry என்று சொல்லப்படும் இதற்கும் வித்தியாசம் இருக்குமா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 07, 2014 10:37 pm

krishnaamma wrote:
ராஜா wrote:அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் .... புன்னகை
வாவ் ! நிஜமாகவா? சுவை எப்படி இருக்கும் ராஜா? புன்னகை .....நிஜமாகவே நல்லா இருக்கும்...........நான் கேட்பது பொறிப்பதற்கும்   shallow  fry  என்று சொல்லப்படும் இதற்கும் வித்தியாசம்  இருக்குமா?

இப்படி தோசை கல்லில் செய்வதை கச்சுவத்தல் என்பார்கள் கிருஷ்ணாம்மா. மொறு, மொறுப்பான சுவையில் ஜோராக இருக்கும்.

நீங்கள் கேட்பது போல இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், அதிரசத்திற்கு செய்வது போல இதற்கு மெனக்கெட தேவையில்லை. (பாகு பதம் பார்க்கும் டென்ஷன் இல்லை) வைத்திருந்து சாப்பிடமுடியாது - அவ்வளவு தான்.



பலகார டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார டிப்ஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:57 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:அருமை.....எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கம்மா எண்ணையில் பொரிக்காமல் தோசைகல்லில் செய்வார்கள் .... புன்னகை
வாவ் ! நிஜமாகவா? சுவை எப்படி இருக்கும் ராஜா? புன்னகை .....நிஜமாகவே நல்லா இருக்கும்...........நான் கேட்பது பொறிப்பதற்கும்   shallow  fry  என்று சொல்லப்படும் இதற்கும் வித்தியாசம்  இருக்குமா?

இப்படி தோசை கல்லில் செய்வதை கச்சுவத்தல் என்பார்கள் கிருஷ்ணாம்மா. மொறு, மொறுப்பான சுவையில் ஜோராக இருக்கும்.

நீங்கள் கேட்பது போல இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், அதிரசத்திற்கு செய்வது போல இதற்கு மெனக்கெட தேவையில்லை. (பாகு பதம் பார்க்கும் டென்ஷன் இல்லை) வைத்திருந்து சாப்பிடமுடியாது - அவ்வளவு தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1093632

இதனுடைய ரெசிப் என்ன விமந்தினி, சொல்லுங்களேன்......செய்து பார்க்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 10:25 pm

புழுங்கல் அரிசி, கடலை பருப்பு - 3:1 என்ற விகிதத்தில் ஊறவைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைவை பாதியாக இருக்கும் போதே தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து  அரைக்க வேண்டும். வெல்லம் சேர்த்திருப்பதால் மாவு இளகிவிடும். ஆகவே அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் குழி கரண்டியில் மாவு எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும்.

இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் என்று மேலும் இதன் சுவை கூட சேர்த்துக்கொள்ளலாம்.

மாவு புளிக்காத வரையிலும் எண்ணெய் இழுக்காது. மறுநாள் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

தீபாவளி அன்று என் பாட்டி (அம்மா-வை பெற்றவர்) இதை மிக முக்கியமாக செய்வார்களாம்.

அப்போதே சாப்பிட, குழிவான தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை தேய்க்காமல் குண்டாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.



பலகார டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலகார டிப்ஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலகார டிப்ஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 11:15 pm

விமந்தனி wrote:புழுங்கல் அரிசி, கடலை பருப்பு - 3:1 என்ற விகிதத்தில் ஊறவைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைவை பாதியாக இருக்கும் போதே தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து  அரைக்க வேண்டும். வெல்லம் சேர்த்திருப்பதால் மாவு இளகிவிடும். ஆகவே அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் குழி கரண்டியில் மாவு எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும்.

இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் என்று மேலும் இதன் சுவை கூட சேர்த்துக்கொள்ளலாம்.

மாவு புளிக்காத வரையிலும் எண்ணெய் இழுக்காது. மறுநாள் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

தீபாவளி அன்று என் பாட்டி (அம்மா-வை பெற்றவர்) இதை மிக முக்கியமாக செய்வார்களாம்.

அப்போதே சாப்பிட, குழிவான தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல் மாவை தேய்க்காமல் குண்டாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1093919

நன்றி விமந்தினி புன்னகை ஆனால் அதிரசத்துக்கு வெறும் அரிசி மட்டும் தான் , இதற்கு கடலை பருப்பும் போடவேண்டி இருக்கு ....இல்லையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக