புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
20 Posts - 3%
prajai
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_m10நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 4 Mar 2014 - 16:22

அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் ‘இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்’ பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங். ‘உலகின் மலிவுவிலை மருத்துவத் தலைநகரம்’ என இந்தியாவை பெருமையோடு சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு நேரம் சரியில்லை. இந்திய மருந்துகளை தரமற்றவை என நிராகரிப்பது, மருந்து தொழிற்சாலைகளை மூடச் சொல்வது, தரச் சான்றிதழ்களை திரும்பப் பெறுவது என உலக நாடுகள் அதிரடி காட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் பலவும் ஏற்றுமதிக்கு தனியாகவும், உள்ளூருக்குத் தனியாகவும் உற்பத்தி செய்கின்றன. ஏற்றுமதித் தரமே இப்படி என்றால், உள்ளூரில் நாம் சாப்பிடும் மருந்து பாதுகாப்பானதா?

* கொழுப்பைக் குறைக்கும் ‘லிபிடர்’ என்ற மாத்திரையை அமெரிக்க மார்க்கெட்டிலிருந்து இந்தியாவின் ரான்பாக்ஸி நிறுவனம் திரும்பப் பெற நேர்ந்தது. மருந்தில் கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதாக புகார் எழுந்ததே காரணம். இதற்காக அந்த நிறுவனம் 186 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது.

* வாயுக் கோளாறு போக்கும் மருந்தான ‘ரானிடிடின்’ தயாரிப்புகளை ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம், அமெரிக்காவிலிருந்து திரும்பப் பெற நேர்ந்தது. ஆபத்தான நுண்ணுயிரிகள் மருந்தில் கலந்திருந்ததே காரணம்.

* வோக்கார்ட் நிறுவனத் தயாரிப்பான ஆஸ்பிரின் மருந்துகளை ‘தயாரிப்பு முறை சரியில்லை’ எனக் கூறி திரும்பப் பெறச் செய்தது அபுதாபி அரசு. இதேபோல இந்த நிறுவனத்தின் இன்னொரு மருந்தும் நிராகரிக்கப்பட்டது.

* மருந்துப் பரிசோதனை நடைமுறை சரியில்லை எனவும், தரமில்லாத மருந்துகளைத் தயாரிப்பதாகவும் குற்றம் சாட்டி, ரான்பாக்ஸி நிறுவனத்துக்கு 3100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அமெரிக்கா.

* தரமற்ற தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுவதாகவும், சுகாதாரக் கேடு இருப்பதாகவும் குற்றம் சாட்டி, ரான்பாக்ஸியின் நான்கு இந்திய மருந்து ஆலைகளுக்கு ஏற்றுமதித் தடை விதித்திருக்கிறது அமெரிக்கா. இதேபோல வோக்கார்ட் நிறுவனத்தின் இரண்டு ஆலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வோக்கார்ட் நிறுவனத்தின் நான்கு வலி நிவாரணிகள், ஒரு நீரழிவு நோய் மருந்து என ஐந்து மருந்துகளுக்குத் தடை விதித்த பிரிட்டன், அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு வழங்கிய தரச்சான்றையும் திரும்பப் பெற்றுக் கொண்டது.

கடந்த ஓராண்டில் இந்திய நிறுவனங்கள் மீது வெளிநாடுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு சிறு துளியே இவை. இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் முதலீடு ஈட்டித் தருவது வெளிநாட்டு ஏற்றுமதியே! ஆண்டுக்கு 93 ஆயிரம் கோடி ரூபாய் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. மிகக் குறைந்த விலையில் தரமான மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்து தருவதாக நல்ல மதிப்பு பெற்றிருந்தது. உலகத்தரமான தொழிற்கூடங்களை பல நிறுவனங்கள் அமைத்துள்ளன. அமெரிக்காவின் மருந்துத் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்வது இந்தியாதான்.

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மருந்துகள் மீது நிறைய புகார்கள். கடந்த 2010ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வு ஒன்று, ‘இந்திய மருந்துகளில் 20 சதவீதம் போலி; 12 சதவீதம் கலப்படம்’ என்றது. இதைத் தொடர்ந்து பரிசோதனைகள் கடுமை ஆகின.

தங்கள் நாட்டுக்கு வரும் மருந்து எங்கு, எப்படிப்பட்ட சூழலில் தயாராகிறது என தொழிற்கூடங்களை வந்து பார்த்து ஆய்வு செய்வது அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வழக்கம். அப்படி சோதித்து திருப்தியடைந்த தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுப்பார்கள். அங்கு தயாராகும் மருந்துகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். அதே நிறுவனம், அதே மருந்தை அவர்களின் வேறொரு தொழிற்சாலையில் தயாரித்தால்கூட அதை ஏற்றுமதி செய்ய முடியாது. இதையெல்லாம் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அடிக்கடி ஆயுவு செய்வார்கள். முன்பெல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே ஆய்வுகளை நிகழ்த்துவார்கள். ஆனால் 2013ம் ஆண்டில் 160 இந்தியத் தொழிற்சாலைகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அந்த அமைப்பு கடந்த ஆண்டு கொடுத்த எச்சரிக்கை நோட்டீஸ்களில் பாதியைப் பெற்றது இரண்டு இந்திய நிறுவனங்களே!

அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கமிஷனர் மார்கரெட் ஹம்பர்க் இந்தியாவுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுப்பயணம் வந்து, கடந்த வாரம் திரும்பிப் போனார். மருந்துத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, தரத்தை வலியுறுத்திய அவர், ‘‘நம்பி வாங்கும் அளவுக்கு பாதுகாப்பானதாக மருந்துகள் இருக்க வேண்டும். நாங்கள் எதிர்பார்க்கும் தரம் இருக்க வேண்டும். தரமற்ற இந்திய மருந்துகளால் அமெரிக்கர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்
என சொல்லிவிட்டுப் போனார். சமீப ஆண்டுகளாக மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக சீனா வளர்ந்திருக்கிறது. ‘‘இந்தத் தொழில் போட்டியில் இந்தியாவை வீழ்த்த உலக நாடுகள் செய்யும் சதியே இந்த தடைகளும் நடவடிக்கைகளும்’’ என இந்திய மருந்து நிறுவனங்கள் சொல்கின்றன.ஆனாலும் இங்கு மருந்து தயாரிப்பில் ஏராளமான பிரச்னைகள் இருப்பது உண்மை. ஒரு புதிய மருந்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அதை விலங்குகளிடம் சோதித்துவிட்டு, பிறகு மனிதர்களிடமும் சோதிக்க வேண்டும். இதை ‘டிரக் ட்ரையல்’ என்பார்கள். இதில் அப்பாவி நோயாளிகளை மோசடி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளால், கிட்டத்தட்ட டிரக் ட்ரையலுக்கே மத்திய அரசு தடை விதித்து விட்டது.

நம் ஊரில் இருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிலும் போதுமான அதிகாரிகள் இல்லை.

இங்கேதான் அதிபயங்கரமான ஒரு கேள்வி எழுகிறது. இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஏற்றுமதித் தயாரிப்புகளே இப்படி என்றால், நம் ஊரில் கிடைக்கும் மருந்துகள்?

கிட்டத்தட்ட அவை எத்தகைய கண்காணிப்புக்கும் உட்படாதவை. இந்தியா முழுக்க மருந்துகளின் தரத்தைக் கண்காணிக்கவும், தயாரிப்பு முறைகளை பரிசோதிக்கவும் ஏற்படுத்தப்பட்ட சென்ட்ரல் டிரக் ஸ்டாண்டர்டு கன்ட்ரோல் ஆர்கனிசேஷனில் 5 ஆயிரம் அதிகாரிகள்கூட இல்லை. இதையெல்லாம் தாண்டி, ‘இந்த மருந்தை சாப்பிட்டால் நோய் குணமாகும்’ என்ற நம்பிக்கையே பலரைக் காப்பாற்றுகிறது. நம்பிக்கையும் பறிபோய், மருந்தும் தரமற்றதாக ஆகும் சூழ்நிலை ஆபத்தானது!



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 4 Mar 2014 - 17:15

பகிர்ந்தமைக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Mar 2014 - 18:35

நம் ஊரில் இருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிலும் போதுமான அதிகாரிகள் இல்லை.

இந்தியா முழுக்க மருந்துகளின் தரத்தைக் கண்காணிக்கவும், தயாரிப்பு முறைகளை பரிசோதிக்கவும் ஏற்படுத்தப்பட்ட சென்ட்ரல் டிரக் ஸ்டாண்டர்டு கன்ட்ரோல் ஆர்கனிசேஷனில் 5 ஆயிரம் அதிகாரிகள்கூட இல்லை.
இருந்தா மட்டும் என்ன நடந்துவிட போகிறது




ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் சாப்பிடும் மருந்து தரமானதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 4 Mar 2014 - 20:58

//இங்கேதான் அதிபயங்கரமான ஒரு கேள்வி எழுகிறது. இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஏற்றுமதித் தயாரிப்புகளே இப்படி என்றால், நம் ஊரில் கிடைக்கும் மருந்துகள்?//

நாம தான் சுனமிலேயே டைவ் அடிப்பவங்களாச்சே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக