புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
61 Posts - 43%
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
6 Posts - 4%
prajai
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
21 Posts - 5%
prajai
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டாரப் பாட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 02, 2014 5:07 pm

ஆன்ம வீரம், படை வீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது மறப்படையையும் வெல்லும் ஆற்றல், அறப்படையை எடுத்து ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது பண்டைத் திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும்.

சைவ சமயத்தை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய நால்வருள் ஒருவராய திருநாவுக்கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி, அவர் வாழ்க்கையையும் வாய்மொழியையும் பாரதியார் நன்கு உணர்ந்துள்ளார். மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்லலாகுமென்று ஆயிரத் திருநூறு ஆண்டுகட்கு முன்னரே உலக மக்களுக்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். அவரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று.

இவ்வுலகில் புயவலியும் படைவலியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுகின்றனர். புயவலியினும், படைவலியினும் பெரிய ஆன்மத் திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்கினார். சமண சமயத்தைக் கைவிட்டு அப்பெரியார், சைவ நெறியைச் சார்ந்தபொழுது, சமண மன்னன் சீற்றமுற்றான். இதனால் நாவுக்கரசரைக் கொணருமாறு வேம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ்வீரர், அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆரவாரித்தனர் எனினும், அவரது உருண்டு திரண்ட மேனியைக் கண்டு அப்பர் சிறிதும் அஞ்சினாரல்லர்; அவர் கையிலமைந்த படைக்கலங்களைக் கண்டு இறையளவும் கலங்கினாரல்லர்; ""நாமார்க்கும் குடியல்லோம், நமனை யஞ்சோம்'' என்று வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தமியராய், அஞ்சா நெஞ்சினராய் நின்று, அவன் மறப்படையைத் தம் ஆன்மவலியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.

யார்க்குங் குடியல்லேன் யான்என்ப
தோர்ந்தனன் மாயையே - உன்தன்
போர்க்கஞ் சுவேனோ பொடியாக்கு
வேன்உன்னை மாயையே


என்று தம்மை அச்சுறுத்திய மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப்பாட்டில் திருநாவுக்கரசரது வீரவுள்ளம் விளங்கக் காணலாம். பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாய நிற்கும் தகுதி வாய்ந்தது, "அச்சமில்லை' என்று தொடங்கும் "பண்டாரப் பாட்டே' யாகும். அப்பாட்டிலே,

பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்றெழுந்த அடிகள், நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்தமுடையதாகும். மேலும், திருநாவுக்கரசரைத் துன்புறுத்தக் கருதிய அரசன், அவரை நீற்றறையிலிட்டான். அந்நீற்றறையின் வெம்மையை,""மாசில் வீணையும் மாலை மதியமும்'' எனப்பாடி நாவுக்கரசர் தம் மனச் செம்மையால் வென்றார்.

ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நிலையிலும் அவர் பெருமையை அரசன் அறிந்தானில்லை. பிறகு நஞ்சு கலந்த உணவை ஊட்டச் செய்தான். அந்த நஞ்சு கலந்த மாந்தரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினாரல்லர்; அவரிட்ட சோற்றை உண்டு மகிழ்ந்தார். இங்ஙனம் பகைவரிட்ட நஞ்சையும் நண்பரிட்ட நல்லமுதெனக் கருதியுண்ட நாவுக்கரசர், "பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்'' என்னும் திருக்குறளுக்கு நனி சிறந்த சான்றாயினார். இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ்செயலை வள்ளுவர் அருளிய கருத்தோடு கலந்து,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர்ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று பாரதியார் நல்ல தமிழ் விருந்தளித்தார். ""ஊனம் ஒன்றில்லாத இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்'' வேறொன்றையும் பொருளாகக் கருதார். மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும், ஞாயிறும் திங்களும் திசை மாறினாலும் அன்னார் மனந் துளங்குவதில்லை. இவ்வுண்ணையை,

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிவென்....
ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான்மத் திறலின் அருமையறிந்த பாரதியார்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப் போந்தார். உரன் என்னும் கருவியால் ஐம்பொறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான் மங்கையர் தோற்றொழிந்தனர். காதல் புரியும் மாதரார்,

கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை


என்ற பாரதியார் பாட்டு இவ்வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆகவே, முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப்பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக் கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது. - (ரா.பி.சேதுப்பிள்ளை, நூல்: "தமிழின்பம்'.)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக