புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
19 Posts - 3%
prajai
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாராய், நீ வாராய்! Poll_c10வாராய், நீ வாராய்! Poll_m10வாராய், நீ வாராய்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாராய், நீ வாராய்!


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 4:31 am

கொஞ்சம் பொறுங்கள்! உங்களோடு ஒரு ஐந்து நிமிடம் பேசவேண்டும். உங்கள் இறுகிய முகத்தைப் பார்க்கும்போது ஏதோ விபரீதமான முடிவு எடுத்துவிட்டது போலத் தெரிகிறது.


தற்கொலை செய்து கொள்ள தயாராக இருந்தாலோ, அல்லது தயார்படுத்திக் கொண்டிருந்தாலோ, அல்லது தயார்படுத்திக் கொண்டிருந்தாலோ என்னோடு வாருங்கள், நான் உங்களுக்கு உதவிசெய்கிறேன்!

நான் சொல்வதை சற்று கவனமாகக் கேளுங்கள். அதன்பிறகு முடிவெடுங்கள். மற்றவர்களைப் போல, இந்த நேரத்தில் தத்துவங்களை சொல்லியோ உங்களை மேலும் குழப்பப் போவதில்லை. சாதாரணமாகவே பேசுகிறேன். நான் சொல்லும் வார்த்தைகள் உங்களுக்கு பயன் அளிக்கவில்லையானால் நீங்கள் தூக்குப் போட்டுக் கொள்ளவோ, கிணற்றில் விழவோ, விஷம் அருந்தவோ வேண்டிய உதவிகளை செய்து தர சித்தமாயிருக்கிறேன். மேலும் பிணத்தை அறுவை சோதனை செய்து வீடு கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு. கவலையை விடுங்கள்.

நீங்கள் தற்கொலை செய்ய வேண்டியதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது தோல்வி என்ற வேரிலிருந்து விளைந்த மரமாகத்தான் இருக்கும்.

தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, கொடுக்கல் வாங்கலில் தோல்வி, எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால் தோல்வி, உங்கள் மறைவான குற்றங்கள் வெளியரங்கமானதால் மானத்துக்கு ஏற்பட்ட தோல்வி, உங்கள் எதிரி வெற்றி அடைந்ததால் வீரத்திற்கும் விவேகத்திற்கும் ஏற்பட்ட தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, தொழிலில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தோல்வி, – இப்படி ஏதாவது ஒரு தோல்விதான் உங்களின் இந்த முடிவுக்குக் காரணம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 4:31 am

இந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல், தோற்றுப் போனதாக எண்ணி வாழ்விற்கு புறமுதுகு காட்டி உயிரை மாய்த்துக்கொள்ள , ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்.

“நான் இறந்து போனால், என் மீது விழுந்த பழிச்சொல் மறைந்து விடும். பெரும் பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். கண்ட கண்ட நாய்களிடத்தில் கைகட்டி தலைகுனிந்து நிற்க வேண்டிய அவலம் இல்லை.

என்னை ஏளனம் செய்தவர்கள் ஏமாற்ற நினைத்தவர்கள், ஏமாற்றியவர்கள், வீண்பழி சுமத்தியவர்கள் திகைத்துப் போவார்கள். என் நிம்மதியைக் கெடுத்தவர்கள் வாய் அடைத்துப் போகும். அவர்களைப் பழிவாங்க இதுதான் சரியான வழி. உலகம் இனி என்ன செய்யும்?” இதுதானே உங்கள் தீர்மானம்?

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்?” என்று கேட்பதும் எனக்குப் புரிகிறது. அப்படியானால், விலை மதிப்பில்லாத உங்கள் உயிரைக் காட்டிலும், வேறு ஏதோ ஒன்றை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள். அதை இழந்து விட்டதாகவும் எண்ணுகிறீர்கள். அது என்ன?

மானம், மரியாதை, கௌரவம், சமாதானம், பணம், சொந்த பந்தம், இதர செல்வங்கள் இவைகளில் ஏதாவது ஒன்றை உயிரினும் மேலாகக் கருதியிருக்கலாம். அதுபோனபின் உங்கள் உயிர், கீழே விழுந்து முடிக்கு சமமாகிவிட்டது! சரிதானே?

வாருங்கள். அந்த மலை உச்சிக்கு பேசிக்கொண்டே போவோம். அங்கிருந்து குதித்தால் சுலபத்தில் மண்டை உடைந்து மூளை சிதறி, இறந்து போகலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 4:32 am

நீங்கள், எப்போதாவது, உங்களுக்காக வாழ்ந்திருக்கிறீர்களா? அதாவது மானத்துக்காக, மரியாதைக்காக வாழாமல் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறீர்களா? ஏனெனில், மானமும் மரியாதையும் உங்கள் பிறப்புரிமை அல்ல. நீங்கள் சேர்த்து வைத்த சொத்துமல்ல. அது பிறர் கொடுக்கப் பெற்றுக் கொள்வது. அன்புகூட, பிறருக்குக் கொடுத்தால்தான் திரும்ப உங்களுக்குக் கிடைக்கும். இது அனுபவ உண்மை. இதுதான் மானம், இதுதான் மரியாதை என்று இலக்கணம் ஏதாவது உண்டா? அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம் மாறும். பச்சோந்தி! இதையா பெரிதாக எண்ணுகிறீர்கள்.

நம் ஊரில் ஒரு பெண் குளிப்பதை ஒரு ஆண் பார்த்துவிட்டால், மானம் போய்விட்டது என்கிறோம். ஆனால் அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் முழு நிர்வாணமாக எதிர்எதிரில் நின்று வலைப்பந்து விளையாடுகிறார்கள். இந்த கர்மத்தை என்ன சொல்வது! அப்படியானால், மானம் என்பது என்ன? பச்சோந்திதானே?

மனதில் நாமாக வரிந்து கொண்ட பண்பாட்டு அடையாளங்கள். இதுதான் வாழ்க்கை என்று நாமாக ஏற்படுத்திக்கொண்ட முறை. நாமாகப் போட்டுக் கொண்ட பொன்விலங்கு. ஒரு நெல்மணிக்காக, தன்னை அடிமைப்படுத்திக்கொண்ட கூண்டுக்கிளி. இதைத்தானே, நீங்கள் இழந்து விட்டதாக எண்ணி கவலைப்படுகிறீர்கள்?

அதோ, அந்த மரத்தின் உச்சியில், மனிதர்கள் எட்ட முடியாத இடத்தில் கூடுகட்டியிருக்கும் பறவையைப் பாருங்கள். தனது சிறு குஞ்சுகளை கூட்டிலிருந்து கொத்திக் கீழே தள்ளிவிடுகிறது. அந்தக் குஞ்சுகளுக்கு பறக்கவே தெரியாது. பாவம். இவ்வளவு நாள் அன்புடன் பாதுகாத்து வந்த தாயே, திடீரென அவைகளைக் கீழே தள்ளும்போது அவைகளுக்கு எப்படி இருக்கும்? அது போலத்தானே நீங்களும் இப்போது ஆதரவின்றி தவிக்கிறீர்கள்? அந்தக் குஞ்சுகள் எப்படியும் பறந்துவிடும். மீண்டும் கூட்டுக்குத் திரும்பும் என்பது அதன் தாய்க்குத் தெரியும். அதுதான் வாழ்வின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லையா? ஒரு பறவையை விட நீங்கள் பலவீனமானவரா?




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 4:32 am

இறந்து போவதால், உங்களுக்கு விடுதலை கிடைக்குமென்று யார் சொன்னது? உங்கள் உயிரை துச்சமாக எண்ணியதுபோல், உங்கள் ,துயரங்களையும் தோல்விகளையும் ஏன் துச்சமாய் எண்ண முடியவில்லை.

விரலுக்கேற்ற வீக்கம் எனபது போல், உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சோகம் நிழல் போல் பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அதேபோல, ஒவ்வொரு வரும் ஒரு குற்றவாளிகள் தான். அதற்காக அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை.

சாவுதான் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்றால், முக்கால்வாசி உலகம் காலியாகத்தான் இருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனையும் பகத்சிங்கையும் தூக்கில் ஏற்றினார்கள். அவர்கள் உயிர் போகும்போது, என்ன நினைத்திருப்பார்கள்?

“இந்த நாட்டில் விடுதலைக்காக என் உயிரைக்கொடுப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் இறப்பதால் என்ன பெருமை வரப்போகிறது? யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? நீங்கள் எதைக் கண்டு ஆனந்திக்கப் போகிறீர்கள்? ஒன்றுமில்லை.

காலை இழந்தவன் நடக்கிறான். கண் இல்லாதவன் படிக்கிறான். கை இல்லாதவன் ஓவியம் வரைகிறான். அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட தடைக்கல்லை, படிக்கல்லாக மாற்றிக் கொண்டார்கள்.

நீங்கள் ஒரு சந்து வழியாகப் போகும்போது ஒரு பாம்பு படுத்திருப்பதைக் காண்கிறீர்கள். தைரியமிருந்தால், அதை எதிர்கொள்ளலாம். அல்லது வேறு வழியில் போகலாம். அதைவிட்டு உங்கள் பயணத்தை அத்துடன் முடித்துக் கொண்டு திரும்புவது கோழைத்தனம். அறிவீனமும் கூட.

தற்கொலையும் அதுபோல கோழைத்தனம். உங்களை நம்புங்கள். உங்களுக்கு நீங்களே தீங்கு உண்டாக்கிக் கொள்ள மாட்டீர்கள். உற்றார் உறவினர் மேலும், உலகத்தின் மேலும் உலகத்தில் உள்ள செல்வங்கள் மேலும் வைதிருக்கும் நம்பிக்கைப் போரவையை களைத்தெரியுங்கள். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்வில் தென்றல் வீசி, வசந்தம் வலம் வருவதைக் காணலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 4:33 am

இப்போது நாம் மலை உச்சியை அடைந்துவிட்டோம். உங்கள் முடிவு என்ன? மூளைப் பந்தை வெளியேற்றி விடலாமா? அல்லது உள்ளே வைத்து இன்னொரு முறை வாழ்வை விளையாடிப் பார்க்கலாமா?

ஆம்… வாருங்கள் நண்பரே.. மலைச்சாரல் வசந்தம் அழைக்கிறது. தோல்வி என்பது விசைத்தடுப்பான் (ஸ்பீடு பிரேக்கர்)! அதுவும் உங்கள் பாதுகாப்புக்காகத்தான். தாண்டி வாருங்கள்! நம்பிக்கையுடன் கைகொடுங்கள் அதோ புதிய வெளிச்சம்.

Author: தேவமணி க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 4:45 am

இதுதான் மானம், இதுதான் மரியாதை என்று இலக்கணம் ஏதாவது உண்டா? அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம் மாறும். பச்சோந்தி! இதையா பெரிதாக எண்ணுகிறீர்கள். wrote:


அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி செந்தில்

எனக்கு தற்கொலை செய்தவர்களை நினைத்தால் கோவம் தான் வரும். செத்து என்ன சாதிக்கப் போற. வாழ்ந்து சாதித்துக் காட்டலாமே. பிரச்சனை பக்கத்தில் இருந்தால் பிரச்சனை இல்லாத இடமாக வேறு எங்காவது ஓடி விடு ஏன் உலகத்தை விட்டு ஓடனும்னு நினைக்கிற? மான, அவமானத்துக்கு பயம்னா அது சம்பந்தப்பட்டவங்களோட இருந்தால் தானே வேதனை அவர்கள் இல்லாத இடமா பார்த்து எங்காவது தொலைந்து போ. ஏன் உயிரை விடனும்.
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 4:48 am

பொய்யான வாழ்க்கையில் புதைந்தவர்கள், இப்படித்தான் புத்தி கேட்டுப் போய், கிடைத்தற்கரிய வாழ்வை தொலைக்கிறார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக