புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
1 Post - 4%
viyasan
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_m10படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்!


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 27, 2014 10:36 am

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவியாகவும், ஹீரோவை வேலைவெட்டிக்கு செல்லாமல், குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் ஊர்சுற்றும் இளைஞனாகவும் காட்டுகிறார்கள். அந்தப் படங்களும் வெற்றிபெறுகின்றன. அந்த வெற்றிக்குப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்தே இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை எடுக்கிறார்கள் என்பதுதானே காரணம். தங்களின் வியாபாரத்திற்காக இப்படிப்பட்ட படங்களை எடுப்பது சரியா?
சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்று சொல்பவர்களே, அதைத் தவறாக உபயோகப்படுத்தலாமா? நாட்டில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று காரணங்கள் சொல்வது நியாயமாகாது. இளம் தலைமுறை எப்படி இருக்கிறது என்று காட்டுவதைவிட, எப்படி இருக்கவேண்டும் என்பதைக் காட்டுவதுதானே சமூக அக்கறையுள்ள படைப்பாளிகளின் கடமை.

மாணவப் பருவத்தில் உள்ளோர் காதலில் விழுவதில் சினிமாவின் தாக்கம் நிச்சயமாக உள்ளது. ஏனென்றால், மாணவர்கள் பெற்றோரைவிட தங்களின் நண்பர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். நண்பர்களிடம்தான் மனம்விட்டு பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது சினிமாதான் அவர்களின் முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. தொலைக்காட்சி, செல்பேசி, இணையம் போன்ற எல்லாவற்றிலும் சினிமாவே பிரதானமாக இருக்கிறது.

இதுபோன்ற திரைப்படங்கள் இங்கே U-சான்று பெற்று வெளிவருகிறது. ஆனால் இதே படங்களை வெளிநாடுகளில் 13 அல்லது 15 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் இங்கே எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பிறந்த குழந்தை முதல் அனைவரும் பார்க்கிறார்கள். தணிக்கை குழுவும் இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களுக்கு அனுமதி அளிக்கிறதே?

பெற்றோரும் இதுபற்றி எதுவும் கவனிப்பதில்லை. அவர்களுக்கு குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவே நேரம் போதவில்லை போலும். தமிழ்த் திரையுலக படைப்பாளிகள், பள்ளி மாணவ, மாணவியரின் காதலைப்பற்றி படம் எடுப்பதில் தங்களின் படைப்புத்திறமையைக் காட்டுவதை விடுத்து, பள்ளிகளில் இருக்கவேண்டிய கண்ணியமான ஆண்-பெண் நட்பைக் காட்டலாமே? அதுபோக திரைப்படமாக எடுக்க இன்னும் எவ்வளவோ வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறதே. தனது மகள்/மகன் பள்ளியில் படிக்கும்போதே காதலிப்பதைக் கண்டு எந்த பெற்றோராவது மகிழ்ச்சியடைவரா?

இங்கு யாரும் காதலுக்கு எதிரியல்ல. காதல் என்பது வாழ்வில் சரியான தருணத்தில் சரியான நபரைச் சந்தித்து, பரஸ்பர புரிதலுக்குப்பிறகு ஏற்படவேண்டிய ஒரு உணர்வு. ஆனால் அதைத் தூண்டுகிற வேலையை யாரும் செய்யவேண்டாமே. படைப்பாளிகள் அதைத் தவிர்க்கலாமே.

படைப்பாளிகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் இதில் பெரும்பங்கு உண்டு. இப்போது காதல் செய்யும், காதலர்தினம் கொண்டாடும் கல்லூரி மாணவர்களைவிட, பள்ளி மாணவர்களே அதிகம். பல குடும்பங்களில் குழந்தைகளும் பெற்றோரும் மனம் விட்டு பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடைவெளி உண்டாகிவிட்டது. இது மிகவும் ஆபத்தானது. இந்த வயதில் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது? தன்னைப்பற்றித் தனக்கே முழுமையாகத் தெரியாத வயதில், எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைப் புரிந்துகொண்டு, தேர்ந்தெடுத்துக் காதலிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காதல் ஒன்றும் பள்ளியிலேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்து விடுகின்ற உணர்வு அல்லவே.

அடுத்து இணையம், செல்பேசி போன்றவை சினிமாவைவிட பலமடங்கு மோசமானவை. இவற்றால் எந்த அளவுக்கு நமக்கு நன்மை கிடைக்கிறதோ அதே அளவு தீமையும் உள்ளது. சினிமாவைப் பார்த்து மாணவர்கள் அறியாத வயதில் காதலில் விழுகிறார்கள் என்றால், இதுபோன்ற தொழில்நுட்பங்களைத் தவறான முறையில் உபயோகித்து அவர்கள் குற்றவாளிகளாகவே மாறுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அவலம்?

இப்போதுள்ள சூழ்நிலையில், மாணவர்களுக்குத் தனிமையும் இணையம், செல்பேசி போன்ற தகவல்தொடர்பு சாதனங்களும் சுலபமாகக் கிடைப்பதே, மாணவர்கள் மற்றவர்களின் துணை இல்லாமலேயே தீயப்பழக்கங்களைக் கற்று தீயவழியில் செல்ல காரணமாக இருக்கின்றது. இப்படி இருந்தால் எப்படி ஒழுக்கமான சமுதாயம் உருவாகும்?
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில நிகழ்ச்சிகள் சினிமாவைவிட ஆபாசமானவை. 'நெடுந்தொடர்' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் நமது பண்பாட்டை சீர்குலைத்துக்கொண்டு இருக்கின்றன. இவையெல்லம் பெற்றோரும் தங்களின் குழந்தைகளுடன் அமர்ந்து, பார்த்து ரசிக்கிறார்கள் என்பது கொடுமை.

குழந்தைகள் எதைப் பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் அவர்களின் பெற்றோர்தான் தணிக்கைக் குழுவாக இருந்து கண்காணிக்க வேண்டும். தொலைக்காட்சி, இணையம், செல்பேசி இவை எல்லாவற்றையும் குழந்தைகள் பயன்படுத்த பெற்றோர்தான் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுபோன்ற சாதனங்களை குழந்தைகள் உபயோகப்படுத்தும்போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்.

தேவையான அளவு மட்டும் இதுபோன்ற தொழிநுட்ப சாதனங்களை உபயோகப்படுத்திவிட்டு, மற்ற நேரத்தை அறிவார்ந்த புத்தகங்களை வாசிக்கச் சொல்லிப் பழக்கலாம். அதற்கு முதலில் பெற்றோர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களைப்பார்த்துதானே குழந்தைகள பழகுவார்கள்.

மேலும் நேரம் கிடைக்கும்போது வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்ளலாம். நல்ல புத்தகங்களும், பயணங்களும் வளரும் இளம் பருவத்தினருக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கும். 'அதற்கெல்லாம் நேரம் இல்லை' எனச் சொல்வது நியாயமாகாது. குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்கியதுபோல, அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக, பண்புள்ளவர்களாக வளர்க்கவும் நேரம் ஒதுக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமைதானே.

குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க மற்றவர்களை நம்பி எந்த பயனுமில்லை. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு செய்தியைக் கூறலாம்.

ஒரு குழந்தை, வேலைக்கு செல்லும் தன் தாயிடம் கேட்கிறது: "அம்மா, நீ வெளியே செல்லும்போது உனது பணப்பை அல்லது வேறு எதாவது விலையுயர்ந்த பொருளை, வேலையாட்களை நம்பி விட்டுச்செல்வாயா?" என்று கேட்கிறது. அதற்கு அந்தத் தாய் 'நிச்சயமாக மாட்டேன்" என்று பதில் கூறுகிறாள். பெண் குழந்தை கேட்கிறது "பின் எந்த நம்பிக்கையில் என்னை அவர்களுடன் விட்டு செல்கிறாய்?" என்று. இந்தக் கேள்விக்கு அந்தத் தாயால் என்ன பதில் கூற முடியும்? இதுதானே இன்று பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.

மொத்தத்தில் இதில் நாம் எல்லோருமேதான் தவறு செய்கிறோம். அதை உணர்ந்து, தவறுகளைத் திருத்தி, நமது சமூகத்தை நாம்தானே நல்வழிபடுத்தவேண்டும்.
வெ.பூபதி, கட்டுரையாளர்,




சதாசிவம்
படித்ததில் பிடித்தது--தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 10:43 am

//இப்போது காதல் செய்யும், காதலர்தினம் கொண்டாடும் கல்லூரி மாணவர்களைவிட, பள்ளி மாணவர்களே அதிகம். பல குடும்பங்களில் குழந்தைகளும் பெற்றோரும் மனம் விட்டு பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடைவெளி உண்டாகிவிட்டது. இது மிகவும் ஆபத்தானது. இந்த வயதில் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது? தன்னைப்பற்றித் தனக்கே முழுமையாகத் தெரியாத வயதில், எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைப் புரிந்துகொண்டு, தேர்ந்தெடுத்துக் காதலிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காதல் ஒன்றும் பள்ளியிலேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்து விடுகின்ற உணர்வு அல்லவே.//

ரொம்ப அருமையான கட்டுரை புன்னகைபகிர்வுக்கு நன்றி !

ஒரு குழந்தை, வேலைக்கு செல்லும் தன் தாயிடம் கேட்கிறது: "அம்மா, நீ வெளியே செல்லும்போது உனது பணப்பை அல்லது வேறு எதாவது விலையுயர்ந்த பொருளை, வேலையாட்களை நம்பி விட்டுச்செல்வாயா?" என்று கேட்கிறது. அதற்கு அந்தத் தாய் 'நிச்சயமாக மாட்டேன்" என்று பதில் கூறுகிறாள். பெண் குழந்தை கேட்கிறது "பின் எந்த நம்பிக்கையில் என்னை அவர்களுடன் விட்டு செல்கிறாய்?" என்று. இந்தக் கேள்விக்கு அந்தத் தாயால் என்ன பதில் கூற முடியும்? இதுதானே இன்று பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.

சபாஷ் ! சரியான கேள்வி,  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி நெத்தியடி............ சூப்பருங்க

//மொத்தத்தில் இதில் நாம் எல்லோருமேதான் தவறு செய்கிறோம். அதை உணர்ந்து, தவறுகளைத் திருத்தி, நமது சமூகத்தை நாம்தானே நல்வழிபடுத்தவேண்டும்.//

ரொம்ப சரி, நாம் அதாவது பெற்றோர்கள் தான் தன் குழந்தைகளை நல்லா வளர்க்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 27, 2014 10:48 am

வீட்டுக்கு வேலைக்காரியாக வருபவள்
வீட்டு எஜமானனுக்கு சின்ன வீடாக
மாறி விடுவாள் என்ற கருத்தில் பல
ஜோக்குகள் உண்டு...
-
அப்படி ஒரு நகைச்சுவையை எனது வலைத்தளத்தில்
பதிந்த போது மிக மனம் வருந்தி ஒருவர் கடிதம்
எழுதினார்...
-
தனது வீட்டில் வேலைக்காரியாக இருப்பவர் தனது
தாய்க்கு சமானம் என்றும், மிகவும் தாயுள்ளம்
படைத்தவர் என்றும் , வேலைக்காரிகளைப் பற்றி
இழிவாக ஜோக்குகள் பதியாதீர்கள் என்று கேட்டுக்
கொண்டிருந்தார்...
-
ஆகவே குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலைக்காரிகளில்
ஓரிருவர் தவறு செய்யலாம்...
-
பெரும்பான்மையோர் நலவர்களே...!!


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 12:29 pm

சதாசிவம் wrote: இப்போதுள்ள சூழ்நிலையில், மாணவர்களுக்குத் தனிமையும் இணையம், செல்பேசி போன்ற தகவல்தொடர்பு சாதனங்களும் சுலபமாகக் கிடைப்பதே, மாணவர்கள் மற்றவர்களின் துணை இல்லாமலேயே தீயப்பழக்கங்களைக் கற்று தீயவழியில் செல்ல காரணமாக இருக்கின்றது. இப்படி இருந்தால் எப்படி ஒழுக்கமான சமுதாயம் உருவாகும்?
வெ.பூபதி, கட்டுரையாளர்

சரியான சவுக்கடி கேள்வி.
பெரும்பாலும் வீட்டில் உள்ள குழந்தைகளை தனிமையில் விடுவது அவர்களை ஒருவித மன இறுக்கத்திற்கு கொண்டு சென்று, தீய வழியில் செல்ல வைக்கும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக