Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்!
3 posters
Page 1 of 1
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்!
''ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதில் 15 பேரைக் காப்பாற்றினார்கள். அப்போது சொல்லப்பட்ட முக்கிய காரணம்... கருணை மனுவைப் பரிசீலனை செய்வதில் காலதாமதம் என்பதுதான். அதில், 'இறந்துபோன ஒருவனை ஒருமுறைதான் எரிக்கிறார்கள். சிறைக்குள் வந்த ஒவ்வொரு நாளும் கைதி தகனம் செய்யப்படுகிறான். மனதால் எரிந்து போகிறான்’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இப்போது கொடுத்த தீர்ப்பின் சாராம்சமும் அதுதான்'' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் போன்ற பரபரப்பான சூழ்நிலையில் தீப்பொறிப் பறக்க பேச ஆரம்பித்தார் தோழர் தியாகு.
''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?''
'' கடந்த ஜனவரி 21-ம் தேதி 15 பேரைத் தூக்கிலிருந்து விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபோதே, இந்த மூவர் வழக்கிலும் இந்தத் தீர்ப்புதான் வர முடியும் என்று நினைத்து இருந்தோம். அதேபோல், பிப்ரவரி 18-ம் தேதி அதே அடிப்படையில் மூன்று பேருக்கான தூக்குத் தண்டனையைக் குறைத்து இருக்கிறார்கள். மத்திய அரசால் நீதிமன்றங்கள் ஏற்கும்படியான புதிய வாதங்கள் எதையும் வைக்க முடியவில்லை. 'இவர்கள் சிறையில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பொது வாழ்க்கை வாழ்ந்தார்கள். நாடகம் நடித்தார்கள். ஆடல், பாடலுடன் இருந்தார்கள். ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அதையெல்லாம் நீதிபதிகள் நிராகரித்துவிட்டார்கள். அந்தத் தீர்ப்பின் கடைசி பத்தியில் மாநில அரசுக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆயுள் தண்டனை என்று சொல்வது ஒரு ஆயுட்கால தண்டனைதான்’ என்று நீதிபதிகளே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தண்டனையைக் குறைப்பதற்கும், விடுதலை செய்வதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433ஏ-ன்படி இதனை உரிய அரசு செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யச்சொல்லி பரிந்துரையும் செய்யவில்லை. விடுதலை செய்யக் கூடாது என்று உத்தரவும் போடவில்லை.''
''சரி, நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் ஏன் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்?''
''தண்டனைக் குறைப்புடன் தீர்ப்பு முடிந்து இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? நீதிபதிகளுக்கு அப்படிச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தங்களைச் சுற்றி நடப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர், மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லிப் போராடுவதையும் அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மரண தண்டனைக்கு பதிலாக சாகும்வரை ஜெயிலில் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், மரண தண்டனையும் அதுவும் ஒன்றுதான். சொல்லப்போனால் அதைவிட இது மிகவும் கொடுமையானது. சாகும் வரை கைதியை உள்ளேயே வைத்திருந்தால் எப்படி மறுவாழ்வு தர முடியும்? அதனால்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மாநில அரசு அதனால்தான் இதனை முன்னெடுக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சரியானது.''
''முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களையே வெளியே விட்டால், இந்த நாட்டில் என்ன சட்டம் - ஒழுங்கு இருக்கிறது என காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கொடி பிடிக்கிறார்களே?''
''நம் நாட்டின் தண்டனைச் சட்டத்தில் பிரதமர் கொலைக்கு என்று ஒரு தனி தண்டனையும் சாமானியன் கொலைக்கு என்று ஒரு தண்டனையுமா இருக்கிறது? சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதுவும் மனிதக் கொலைக் குற்றம்தான், அதுவும் மனிதக் கொலைக் குற்றம்தான். இது தடா சட்டத்தின்படி என்று வைத்துக்கொண்டாலும்கூட, தடா சட்டத்தைக் கொண்டுவந்ததும் காங்கிரஸ் அரசாங்கம்தான்; அதனை வேண்டாம் என்று கைவிட்டதும் காங்கிரஸ் அரசாங்கம்தான். கைதுசெய்யப்பட்ட மறுநாளே அவர்களை விடுதலை செய்யவில்லையே! எப்படி பிரதமர் கொலை என்பதற்காகப் பிடித்துக்கொண்டுபோய் சுட முடியாதோ... அதேபோல் பிரதமர் கொலை என்பதற்காக 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் விடுதலை செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்போது திடீரென்று காங்கிரஸ்காரர்கள் குதிப்பதற்கு அர்த்தமே இல்ல.
இவர்களுடைய கோப்புகள் முழுவதும் இருந்தது மத்திய உள்துறை அமைச்சகத்தில். மத்திய உள்துறை அமைச்சகத்தில் யார் இருந்தார்கள்? காங்கிரஸ்காரர்கள்தானே? கால தாமதத்தால்தான் இவர்களுக்கு தண்டனை குறைக்கப்படுகிறது என்று தீர்ப்பிலேயே சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கால தாமதத்துக்கு யார் காரணம் என்று ராகுல் கூப்பிட்டு விசாரிக்கட்டும். யார் யாரின் உருவ பொம்மையையோ எரிக்கும் காங்கிரஸ்காரர்கள், ப.சிதம்பரம், சுசில் குமார் ஷிண்டே உருவ பொம்மையையும் எரிக்கட்டும்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மகாத்மா காந்தி கொல்லப்பட்டது, 1948 ஜனவரி 30. அந்த வழக்கில் நாதுராம் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. சவார்கர் விடுதலை செய்யப்பட்டார். கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள். நாதுராம் கோட்சே 1948 நவம்பர் 20 சிறையில் அடைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 1949 நவம்பர் 14 அன்று தூக்கில் போடப்பட்டார். கோபால் கோட்சே சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். அவர், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 1961-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரை விடுதலை செய்ய முடியாது என்று 1961 ஜனவரி 12-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியானால் கோபால் கோட்சே சிறையில் தானே வாழ்நாள் முழுக்க இருந்திருக்க வேண்டும்.? அதுதான் இல்லை!
1964 அக்டோபர் மாதம் 13ம் தேதி கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்தவர், அன்றைய மகாராஷ்டிரா காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக். அதாவது காந்தி கொலையாளியை விடுதலை செய்தது காங்கிரஸ் ஆளும் மாநில அரசாங்கம். கோபால் கோட்சே விடுதலையாகி வரும்போது பூனாவில் பெரிதாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காந்தியவாதிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். காந்தி கொலைகாரர்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கலாமா என்ற கேள்விகள் எழ, யார் அப்படி வரவேற்பு கொடுத்தார்கள் என்று கமிஷன் போட்டு விசாரித்தனர். கோபால் கோட்சேவுக்கு வரவேற்பு கொடுத்தது தவறு என்றுதான் குற்றம் சாட்டினார்களே தவிர, கோபால் கோட்சேவை விடுதலை செய்த காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக்கை யாரும் திட்டவில்லை. கொடிபிடித்துப் போராடவில்லை. அப்படி இருக்கும்போது, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் 23 ஆண்டுகள் கழித்து, வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடக் கூடாது; விட்டால், அது தேச துரோகம்; நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல்... என்று சொல்வதில் என்ன நியாயம்? மகாத்மா காந்தி வழக்கில் ஒரு நீதி... ராஜீவ் காந்தி வழக்கில் மட்டும் வேறு நீதியா?'' என்ற கேள்வியுடன் முடிக்கிறார் தியாகு.
விகடன்
''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?''
'' கடந்த ஜனவரி 21-ம் தேதி 15 பேரைத் தூக்கிலிருந்து விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபோதே, இந்த மூவர் வழக்கிலும் இந்தத் தீர்ப்புதான் வர முடியும் என்று நினைத்து இருந்தோம். அதேபோல், பிப்ரவரி 18-ம் தேதி அதே அடிப்படையில் மூன்று பேருக்கான தூக்குத் தண்டனையைக் குறைத்து இருக்கிறார்கள். மத்திய அரசால் நீதிமன்றங்கள் ஏற்கும்படியான புதிய வாதங்கள் எதையும் வைக்க முடியவில்லை. 'இவர்கள் சிறையில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பொது வாழ்க்கை வாழ்ந்தார்கள். நாடகம் நடித்தார்கள். ஆடல், பாடலுடன் இருந்தார்கள். ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அதையெல்லாம் நீதிபதிகள் நிராகரித்துவிட்டார்கள். அந்தத் தீர்ப்பின் கடைசி பத்தியில் மாநில அரசுக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆயுள் தண்டனை என்று சொல்வது ஒரு ஆயுட்கால தண்டனைதான்’ என்று நீதிபதிகளே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தண்டனையைக் குறைப்பதற்கும், விடுதலை செய்வதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433ஏ-ன்படி இதனை உரிய அரசு செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யச்சொல்லி பரிந்துரையும் செய்யவில்லை. விடுதலை செய்யக் கூடாது என்று உத்தரவும் போடவில்லை.''
''சரி, நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் ஏன் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்?''
''தண்டனைக் குறைப்புடன் தீர்ப்பு முடிந்து இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? நீதிபதிகளுக்கு அப்படிச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தங்களைச் சுற்றி நடப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர், மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லிப் போராடுவதையும் அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மரண தண்டனைக்கு பதிலாக சாகும்வரை ஜெயிலில் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், மரண தண்டனையும் அதுவும் ஒன்றுதான். சொல்லப்போனால் அதைவிட இது மிகவும் கொடுமையானது. சாகும் வரை கைதியை உள்ளேயே வைத்திருந்தால் எப்படி மறுவாழ்வு தர முடியும்? அதனால்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மாநில அரசு அதனால்தான் இதனை முன்னெடுக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சரியானது.''
''முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களையே வெளியே விட்டால், இந்த நாட்டில் என்ன சட்டம் - ஒழுங்கு இருக்கிறது என காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கொடி பிடிக்கிறார்களே?''
''நம் நாட்டின் தண்டனைச் சட்டத்தில் பிரதமர் கொலைக்கு என்று ஒரு தனி தண்டனையும் சாமானியன் கொலைக்கு என்று ஒரு தண்டனையுமா இருக்கிறது? சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதுவும் மனிதக் கொலைக் குற்றம்தான், அதுவும் மனிதக் கொலைக் குற்றம்தான். இது தடா சட்டத்தின்படி என்று வைத்துக்கொண்டாலும்கூட, தடா சட்டத்தைக் கொண்டுவந்ததும் காங்கிரஸ் அரசாங்கம்தான்; அதனை வேண்டாம் என்று கைவிட்டதும் காங்கிரஸ் அரசாங்கம்தான். கைதுசெய்யப்பட்ட மறுநாளே அவர்களை விடுதலை செய்யவில்லையே! எப்படி பிரதமர் கொலை என்பதற்காகப் பிடித்துக்கொண்டுபோய் சுட முடியாதோ... அதேபோல் பிரதமர் கொலை என்பதற்காக 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் விடுதலை செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்போது திடீரென்று காங்கிரஸ்காரர்கள் குதிப்பதற்கு அர்த்தமே இல்ல.
இவர்களுடைய கோப்புகள் முழுவதும் இருந்தது மத்திய உள்துறை அமைச்சகத்தில். மத்திய உள்துறை அமைச்சகத்தில் யார் இருந்தார்கள்? காங்கிரஸ்காரர்கள்தானே? கால தாமதத்தால்தான் இவர்களுக்கு தண்டனை குறைக்கப்படுகிறது என்று தீர்ப்பிலேயே சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கால தாமதத்துக்கு யார் காரணம் என்று ராகுல் கூப்பிட்டு விசாரிக்கட்டும். யார் யாரின் உருவ பொம்மையையோ எரிக்கும் காங்கிரஸ்காரர்கள், ப.சிதம்பரம், சுசில் குமார் ஷிண்டே உருவ பொம்மையையும் எரிக்கட்டும்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மகாத்மா காந்தி கொல்லப்பட்டது, 1948 ஜனவரி 30. அந்த வழக்கில் நாதுராம் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. சவார்கர் விடுதலை செய்யப்பட்டார். கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள். நாதுராம் கோட்சே 1948 நவம்பர் 20 சிறையில் அடைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 1949 நவம்பர் 14 அன்று தூக்கில் போடப்பட்டார். கோபால் கோட்சே சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். அவர், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 1961-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரை விடுதலை செய்ய முடியாது என்று 1961 ஜனவரி 12-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியானால் கோபால் கோட்சே சிறையில் தானே வாழ்நாள் முழுக்க இருந்திருக்க வேண்டும்.? அதுதான் இல்லை!
1964 அக்டோபர் மாதம் 13ம் தேதி கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்தவர், அன்றைய மகாராஷ்டிரா காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக். அதாவது காந்தி கொலையாளியை விடுதலை செய்தது காங்கிரஸ் ஆளும் மாநில அரசாங்கம். கோபால் கோட்சே விடுதலையாகி வரும்போது பூனாவில் பெரிதாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காந்தியவாதிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். காந்தி கொலைகாரர்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கலாமா என்ற கேள்விகள் எழ, யார் அப்படி வரவேற்பு கொடுத்தார்கள் என்று கமிஷன் போட்டு விசாரித்தனர். கோபால் கோட்சேவுக்கு வரவேற்பு கொடுத்தது தவறு என்றுதான் குற்றம் சாட்டினார்களே தவிர, கோபால் கோட்சேவை விடுதலை செய்த காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக்கை யாரும் திட்டவில்லை. கொடிபிடித்துப் போராடவில்லை. அப்படி இருக்கும்போது, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் 23 ஆண்டுகள் கழித்து, வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடக் கூடாது; விட்டால், அது தேச துரோகம்; நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல்... என்று சொல்வதில் என்ன நியாயம்? மகாத்மா காந்தி வழக்கில் ஒரு நீதி... ராஜீவ் காந்தி வழக்கில் மட்டும் வேறு நீதியா?'' என்ற கேள்வியுடன் முடிக்கிறார் தியாகு.
விகடன்
Re: காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்!
கடந்த கால உண்மைகளை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» 31 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி கொலையாளியை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் | வழக்கு காலவரிசை
» காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்?
» காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?
» 4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
» காந்தி குடும்பத்தின் பிடியிலிருந்து விடுபடுமா காங்கிரஸ்?
» காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?
» 4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|