புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 8:10 pm

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! NA5fkv8LT0eAeZChXUB3+sl1743

நீதிபதி சந்துருவுக்கு அறிமுகம் அவசியமில்லை. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மனிதராகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றவர். நீதித்துறையில் நேர்மையானவர் சந்துரு என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, அவருக்கு சட்ட நுணுக்கம் மட்டுமல்ல, சமையலின் நுணுக்கமும் தெரியும் என்பதை அறிந்தபோது ஆச்சர்யம். அடுக்களைக்குச் செல்வதையே ஆண்கள் இழுக்காக நினைக்கும் சூழலில் சந்துருவின் சமையலறை அனுபவங்கள்... விவரிக்க வார்த்தைகளில்லை. அவரது வார்த்தைகளில் கேட்கும்போது உங்களுக்கே புரியும்!

‘‘என்னோட அஞ்சு வயசுல எங்கம்மா இறந்துட்டாங்க. நாங்க நாலு பசங்க. ஒரு அக்கா. நான் மூணாவது பையன். எங்கப்பாவுக்கு ரெண்டு ஆப்ஷன் இருந்தது. ஒண்ணு... இன்னொரு கல்யாணம் பண்றது. இன்னொண்ணு... சமையலுக்கு ஆள் வச்சுக்கிறது. முதல் விஷயத்துல அப்பாவுக்கு உடன்பாடில்லை. அவரோட குறைஞ்ச சம்பளத்துல சமையலுக்கு ஆள் வச்சுக்கிறதும் சாத்தியப்படலை. நாங்களே சமைச்சு சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா எங்களுக்கு சமையல் கத்துக் கொடுத்தார்.

ஆறாவது படிக்கிற காலத்துலேயே நான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன். ஒருவேளை நானும், இன்னொரு வேளை என் அண்ணனுமா சமைப்போம். சமையல்னா, வெறுமனே எப்படி சாதம் வைக்கிறது, குழம்பு பண்றதுங்கிறதை மட்டும் நான் கத்துக்கலை. அந்தக் காலத்துல ஃப்ரிட்ஜ் கிடையாது. அதுக்கேத்தபடி, அன்னிக்கே செலவாகிற மாதிரி காய்கறியா பார்த்து வாங்கணும். மோரோ, தயிரோ புளிச்சிட்டா அதை மோர் குழம்பாகவோ, அவியலாகவோ மாத்தணும். கடைக்குப் போறப்ப எந்தக் காய்கறி மலிவா இருக்குன்னு பார்த்து வாங்கணும். சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மாவு வகைகளை அரைக்க அரவை மெஷினுக்கு போனா பெரிய கூட்டம் காத்திருக்கும். எதுக்குப் பிறகு என்ன அரைப்பாங்கன்னு பார்த்து அரைச்சு வாங்கிட்டு வரணும்.

பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப ஸ்ரீராமநவமிக்கு, வாத்தியார் என்னைத்தான் பானகமும் பருப்பு சுண்டலும் செய்யச் சொல்வார். அத்தனை பசங்களுக்கும் நான் தனியாளா செய்வேன். எங்கக்காவோட ரெண்டு பிரசவத்தின் போதும், அவங்களுக்கான லேகியம் நான்தான் தயார் பண்ணிக் கொடுத்தேன்.
எனக்கு 15 வயசிருக்கும்போது அப்பாவும் தவறிட்டார். நாங்க எல்லாரும் படிப்பு, வேலைன்னு ஆளுக்கொரு திசையில போயிட்டோம். வேலைக்குப் போனதும், தனியா வீடெடுத்துத் தங்கினேன். நானேதான் சமையல்.

தொடரும்...............




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 8:11 pm

அப்ப எனக்குள்ளே அப்படியோர் அபார தன்னம்பிக்கை. மேன்ஷன்ல தங்கியிருக்கிற பேச்சிலர்கள் பலருக்கும் சமைக்கத் தெரியாது. பந்த் மாதிரியான நாள்கள்ல ஹோட்டல் இல்லாம அவங்க படற அவதி ரொம்பப் பரிதாபமா இருக்கும். சமைக்கக் கத்துக்கிட்டா இந்த மாதிரிப் பிரச்னைகள் வராதில்லையா? கல்யாணமான பிறகும், என்னோட சமையல் பணி தொடரவே செய்தது. காய்கறி வெட்டறது மாதிரியான உதவிகளை செய்து கொடுத்திட்டிருந்தேன். அப்புறம் எங்களுக்குக் குழந்தை பிறந்ததும், என் மனைவி குழந்தையைப் பார்த்துக்கற நேரம், நான் சமையலைக் கவனிச்சுப்பேன். என் மனைவி பாரதி, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர். மகள் ஷக்தி, பள்ளி இறுதி படிக்கிறாங்க.

கோர்ட்டுலதான் நான் ஜட்ஜ். வீட்டுக்கு வந்தா, குடும்பத்துல ஒரு உறுப்பினர்... அவ்வளவுதான். வேலையில இருந்தப்ப, காலையில 10:30 மணிக்கு கோர்ட்டுல இருக்கணும்னா, 10:15க்கே இருப்பேன். மாலையிலேயும் வேலை முடிஞ்சு தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவேன். அதையெல்லாம் காரணம் காட்டி, நான் சமையல் வேலைகள்லேருந்து தப்பிக்க நினைச்சதில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்களா சமைக்கிறேன். அது எனக்கு அலுப்பைக் கொடுத்ததே இல்லை. சொந்தக்காரங்க வீடுகளுக்கோ, சக நீதிபதிகள் வீடுகளுக்கோ போனாலும், அங்கேயும் காய்கறி நறுக்கிறது, சமையலுக்கு உதவறதுன்னு என் வேலைகள்ல இறங்கிடுவேன். நான் சமைக்கிறதைப் பார்த்துட்டு, அங்கே சின்னதா ஒரு சலனம் உண்டாகும்.

‘பாருங்க... அவர் சமைக்கிறப்ப நீங்க பண்ணினா என்ன’ன்னு கேள்விகள் கிளம்பும். ‘நீ வந்தாலே பிரச்னைதான். தயவு செய்து வீட்டுக்கு வராதே’ன்னு சொன்னவங்களும் உண்டு! நாம எல்லாரும் உழைக்கிறதே அந்த உணவுக்காகத்தான். அப்படி சாப்பிடுற சாப்பாட்டுல நம்ம பங்கும் ஏதோ ஒரு வகையில இருக்குங்கிற நினைப்பே எவ்வளவு சுகமானது தெரியுமா? ஆண்கள் ஏன் சமைக்கணுங்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும். ஒண்ணாம் கிளாஸ் படிக்கிற குழந்தையோட பாடப் புத்தகத்துல அப்பா என்பவர் செய்தித்தாள் படிக்கிறவர், சம்பாதிக்கிறவர்னும், அம்மா என்பவர் சமைப்பவர், வீட்டு வேலைகளைப் பார்ப்பவர்னும் இருக்கு.

சமையல் பெண்களோட வேலைங்கிற பார்வையை மாத்தறதுக்கான பயிற்சி, பள்ளிக்கூடத்துலேருந்தே தொடங்கப்படணும். படிச்சு முடிச்சிட்டு, வெளிநாட்டுக்கு வேலைக்குப்போக வேண்டி வந்தால், அந்த ஆண் பிள்ளைகளுக்கு சாப்பாடு பெரிய பிரச்னையாகுது. சமைக்கத் தெரியாது. ஹோட்டலும் காஸ்ட்லி. என்ன செய்வாங்க? கல்யாணமாகி, மனைவி வந்ததும், அவ என்ன சமைச்சுக் கொடுத்தாலும், அம்மா செய்ற மாதிரி வரலைங்கிற குறை பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கு. அம்மாவோட கைமணம் மனைவிக்கு வரணும்னு எதிர்பார்க்கிறதைத் தவிர்த்து, தானே அம்மாகிட்ட சமைக்கக் கத்துக்க வேண்டியதுதானே? இதுல அம்மாக்களோட பங்கும் அதிகம். தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 8:12 pm

ஆம்பிளைப் பையன் வேலை செய்யக்கூடாதுன்னு பொத்திப்பொத்தி வளர்க்கறாங்க. கல்யாணத்துக்குப் பிறகு அம்மாவா, மனைவியாங்கிற கம்பேரிசன் வருது. அதன் தொடர்ச்சியா மாமியார்-மருமகள் பிரச்னை வருது. ஒவ்வொரு ஆணும் மதியச் சாப்பாட்டுக்கு டப்பாவை திறக்கும்போது, அதுல உள்ள புதுவகை உணவை ருசிக்கிறாங்களே தவிர, அதன் பின்னணியில மறைஞ்சிருக்கிற மனைவியோட தியாகத்தையோ, சிரமங்களையோ பார்க்கறதில்லை. ‘என் வேலை சம்பாதிச்சுக் கொடுக்கறது மட்டும்தான்’னு ஒதுங்கிக்கிறாங்க. மார்க்கெட்டுல பேரம் பேசி காய்கறி வாங்கறதுல தொடங்கி, ஒவ்வொரு கட்டத்துலேயும் ஒரு பெண் சந்திக்கிற அவமானங்களும் அவதூறுகளும் கொஞ்சநஞ்சமில்லை.

வசதியில்லாதவங்க நிலைமை ரொம்பப் பாவம். சில வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு பெண் வக்கீல் ரொம்ப வருத்தத்தோட ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கிட்டாங்க. ‘உங்க அளவுக்கு எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்கக்கிட்ட திறமை இருக்கு. ஆனாலும், ஆண் வழக்கறிஞர்கள் அளவுக்கு எங்களால பிரபலமாக முடியறதில்லை. காரணம், எங்களுக்கு வீடு, வேலைன்னு ரெண்டு வித கமிட்மென்ட்ஸ் இருக்கு. ரெண்டையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய கட்டாயம்’னு சொன்னாங்க. பெண்களை வீட்டு வேலைகள்லேருந்து விடுவிச்சாதான், தொழில்ல பிரகாசிக்க முடியும். அதுக்கு ஆண்களோட உதவி அவசியம். ரிட்டயர் ஆன ஆண்கள்கூட, ஓய்வுக்குப் பிறகு பேப்பர் படிக்கிறதும், அரட்டை அடிக்கிறதுமா காலம் கழிக்கிறாங்க. ‘அவருக்கு வெந்நீர் கூட வச்சுப் பழக்கமில்லை’ன்னு பெருமையா சொல்லிக்கிற மனைவிகளும் இருக்காங்க. இந்த அடிமை
மனப்பான்மை மாறணும்...’’ சந்துருவின் அனுபவப் பேச்சு, ஒரு நல்ல தீர்ப்பைக் கேட்ட திருப்தியைத் தருகிறது. மேல்முறையீடு அவசியமில்லாத அருமையான தீர்ப்பு அது!

தொடரும்...............




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 8:13 pm

அவரின் ஸ்பெஷல் ரெசிபி

பூண்டு வத்தக் குழம்பு

என்னென்ன தேவை?

சுண்டைக்காய், கொத்தவரங்காய் மாதிரி ஏதேனும் ஒரு வற்றல் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 1 கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

புளியைக் கரைத்து வடிகட்டவும். அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, வற்றலையும், பூண்டுப் பற்களையும் தனித்தனியே வதக்கி வைக்கவும். மறுபடி சிறிது எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியே வைக்கவும். புளிக் கரைசல் நன்கு கொதித்து வரும்போது, அதில் வதக்கிய பூண்டு, வற்றல், தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். குழம்பு பாதிக்குப் பாதியாக சுண்டும் அளவுக்குக் கொதித்ததும் இறக்கவும்.

உருளைக் கறி

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 4, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்துத் தோல் நீக்கி, சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்கவும்.இந்த உருளைக்கிழங்கு கறியில் காரம் குறைவாக இருக்கும். பூண்டு வத்தக் குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும் என்பதால், அதற்கு சரியான மேட்ச் இந்தக் கறி. கூடவே சுட்ட அப்பளம் இருந்தால், சூப்பர் காம்பினேஷன்.

- ஆர்.வைதேகி
படங்கள்: பரணி
நன்றி குங்குமம் தோழி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2014 8:21 pm

நளபாகம் என்றால் ஆண்கள் சமையல் அப்டின்னு அர்த்தம்.
-


மகாபாரதத்தின் துணைக்கதைகளில் ஒன்றின்
தலைவன் நளன்
சமையல் கலையில் வல்லவன்.
அவனது பெயரிலிருந்து நளபாகம் என்ற சொற்றொடர்
உருவானது
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 8:37 pm

ayyasamy ram wrote:நளபாகம் என்றால் ஆண்கள் சமையல் அப்டின்னு அர்த்தம்.
-


மகாபாரதத்தின் துணைக்கதைகளில் ஒன்றின்
தலைவன் நளன்
சமையல் கலையில் வல்லவன்.
அவனது பெயரிலிருந்து நளபாகம் என்ற சொற்றொடர்
உருவானது
-

ரொம்ப சரி, நளன் மட்டும் அல்ல. பீமனும் தான். அவ்வளவு ஏன் இன்றும் 5 நட்சத்திர ஹோடல்களிலிருந்து டாபா வரை ஆண்கள் தானே ஆளுகிறார்கள் . அதை பார்க்கும்போது வெளி இல் சமைக்கும் பெண்கள் குறைவு தானே ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2014 8:48 pm


ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! 2mG5fR0QkSJPOkkAzROG+19RS-coimbpict-_634943f
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.

489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Feb 21, 2014 9:06 pm

ayyasamy ram wrote:
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! 2mG5fR0QkSJPOkkAzROG+19RS-coimbpict-_634943f
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.

489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.

RIP - மாரடைப்பு காரணமாக இவர் இறக்கையில் அவரின் வயது வெறும் 38 மட்டுமே .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:20 pm

ஈகரையன் wrote:
ayyasamy ram wrote:
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! 2mG5fR0QkSJPOkkAzROG+19RS-coimbpict-_634943f
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.

489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.

RIP - மாரடைப்பு காரணமாக இவர் இறக்கையில் அவரின் வயது வெறும் 38 மட்டுமே .

ம்..பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2014 9:39 pm

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! QsoMA5NvRGOwRVGfMQGU+Jacobworldrecord3
-


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக