புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பஞ்சாங்கம் Poll_c10பஞ்சாங்கம் Poll_m10பஞ்சாங்கம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாங்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:40 am

• மூன்று வகையான பஞ்சாங்கங்கள் உள்ளன. அவை வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம், எபிமெரிஸ் பஞ்சாங்கம் ஆகும்.

• வாக்கியப் பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் கணித்து சொல்லப்பட்ட சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது.

• திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது கோள்களின் பாதையில் ஏற்படும் இயக்கநிலை வித்தியாசத்தைக் கணக்கில்கொண்டு கணிக்கப்படுவது.

• எபிமெரிஸ் பஞ்சாங்கம் என்பது மேல்நாட்டு முறைப்படி கணிக்கப்படுவது.

• பஞ்சாங்கத்தின் உதவியுடனே தினசரி நாள்காட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஜோதிடக் கலைக்கு பஞ்சாங்கமே அடிப்படை ஆகும்.

• பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்தில் இருந்தே ஆரம்பம் ஆகிறது.

• சூரியன், சந்திரனின் இயக்கத்தை கணக்கில் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

• சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் நாள்தான் தமிழ் மாதப் பிறப்பாகும். அதாவது சித்திரை மாதம் பிறப்பு அன்று மேஷ ராசிக்குள் சூரியன் வரும் நாள். அடுத்த ராசியான ரிஷபத்திற்கு வரும் பொழுது வைகாசி மாதப் பிறப்பாகும்.

• ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின்போது நடப்பில் இருக்கும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் முதலியவையே பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

மேலும் குறிப்பிடப்பட்ட நேரமும் நட்சத்திரம், திதி முதலியவை முடியும் நேரமே ஆகும்.

பஞ்சாங்கம் என்ற சொல்லுக்கு ஐந்து அங்கங்கள் என்று பொருளாகும். அவை:

1. வாரம்: வாரம் என்ற சொல்லிற்கு கிழமை எனப் பொருள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகளே வாரம் ஆகும்.

2. திதி: திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம். சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் இணைந்து இருந்தால் அமாவாசை திதி ஆகும். ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருந்தால் பௌர்ணமி திதி ஆகும்.

திதிகள் மொத்தம் 30. இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அமாவாசை முதல் பௌர்ணமி வரையில் வளர்பிறை திதி அல்லது சுக்லபட்ச திதி. அவை மொத்தம் 14 ஆகும்.

பௌர்ணமி முதல் அமாவாசை வரையில் தேய்பிறை திதி அல்லது கிருஷ்ணபட்ச திதி. அவை மொத்தம் 14.

இவற்றுடன் அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டும் சேர்த்து 30 ஆகும்.

வளர்பிறை, தேய்பிறை எனப் பிரிக்கப்பட்டாலும் பெயர்களே ஒன்றுதான். பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 பெயர்களுக்கு முன்னும் வளர்பிறை தேய்பிறை என்று சேர்த்துச் சொல்லுவார்கள்.

(குறிப்பு - திதிகளின் பெயர்கள்: பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை).

3. நட்சத்திரம்: நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திரமே அன்றைய நாளின் நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரமே அந்த நேரத்தில் பிறந்த அனைவருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

(குறிப்பு - நட்சத்திரங்களின் பெயர்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகும்).

4. யோகம்: யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருள். வான் மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டினால் யோகம் கிடைக்கும். யோகங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும்.

(குறிப்பு - யோகங்களின் பெயர்கள்: விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வ்யதீபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுக்கிலம், பிராம்ஹம், ஐந்திரம், வைதிருதி).

5. கரணம்: கரணம் என்பது திதியில் பாதி ஆகும். அதாவது ஒரு திதிக்கு இரண்டு கரணங்கள். இவை சரகரணங்கள், ஸ்திர கரணங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

கரணங்கள் மொத்தம் 11 ஆகும். இதில் ஏழு கரணங்கள் சர கரணங்கள். இவை சுழற்சி முறையில் மாறி மாறி வரும். 4 கரணங்கள் ஸ்திர கரணங்கள் எனப்படும். இவை அமாவாசை ஒட்டிய நாள்களில் மட்டும் நடப்பில் இருக்கும்.

அதாவது அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசியின் இரண்டாம் பாதி, அமாவாசை முழுவதும், மறுநாள் வரும் வளர்பிறை பிரதமையின் முதல் பாதி வரை ஸ்திர கரணங்கள் 4 நடப்பில் இருக்கும். மற்ற ஏழு கரணங்களும் பிற நாள்களில் சுழற்சி முறையில் வரிசைப்படி வரும்.

(சரகரணங்களின் பெயர்கள்: பலம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை, வணிஜை, பத்திரை. ஸ்திரகரணங்கள்: சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகும்).

-கே. பார்வதி

NEWTAMILNESAN
NEWTAMILNESAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 30/03/2014

PostNEWTAMILNESAN Mon Mar 31, 2014 3:46 pm

நல்ல தகவல்.. நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 06, 2014 9:36 pm

நல்ல தகவல் சிவா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 12:55 pm

கே. பார்வதிக்கும் சிவாவுக்கும் நன்றி !

‘திதி’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தே ‘தேதி’ என்ற சொல் வந்தது என்று நான் எனது ஆய்வுநூல் ஒன்றில் எழுதியுள்ளேன் !

 :நல்வரவு: அருமையிருக்கு 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக