புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_vote_lcapபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_voting_barபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_vote_lcapபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_voting_barபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_vote_lcapபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_voting_barபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 10:30 pm

பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! EXa2xBp7TB6x32aOCNno+x1barbi_1766440h.jpg.pagespeed.ic.YOP0g7w76m

பார்பி பொம்மையைப் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. நீண்ட கூந்தலும், ஒடுங்கிய இடையும், மெல்லிய கால்களும் கொண்ட அந்தப் பொம்மையைப் பார்த்துப் பெண்கள் பலரும் பொறாமைப்படலாம். அது போன்ற உடலையும், அழகையும் பெறப் பலர் ஆசைப்படலாம். ஆனால் உண்மையில் பார்பி பொம்மை நாம் பொறாமைப்படும் அளவுக்கு அழகானதா? அந்த அழகு உண்மையில் சாத்தியம்தானா?

உண்மையில் பார்பி பொம்மையைப் போல் உலகில் எவருமே இருக்க முடியாது என்று உடற்கூறு வல்லுநர்கள் கூறுகிறார்கள். பார்பி பொம்மையை வைத்துச் செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகள் இதை நிரூபிக்கின்றன. பார்பியை ஒத்த உடலமைப்பு கொண்ட ஒரு நிஜப் பெண்னின் அளவுகள் இப்படி இருக்கும்: உயரம் 5.9 அடி, மார்பு 36 அங்குலம், இடை 18, இடுப்பு 33. எடை 49.90 கிலோ.

5.9 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச எடை 56.24. எனவே கிட்டத்தட்ட 50 கிலோ என்பது அபாயகரமான அளவு என்பது வெளிப்படை. 18 அங்குல இடுப்பு என்பது சாத்தியமே இல்லை. அதுவும் 5.9 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கு. அப்படி இருந்தால் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய உள் உறுப்புகளுக்குப் போதிய இடம் இருக்காது. உடலைத் தாங்கும் திறன், மெல்லிய கால்களுக்கு இருக்காது. இத்தகைய உடலையும் கால்களையும் கொண்ட பெண் கால்நடைகளைப் போல நான்கு கால்களில்தான் நடமாட முடியும். கால்களால் மட்டும் நடந்தால் மிஞ்சுவது இடுப்பு வலியாகத்தான் இருக்கும்.

சாத்தியமே இல்லாத இத்தகைய ‘அழகு’ உலகம் முழுவதிலும் பெண்களையும் குழந்தைகளையும் கவர்வது ஏன்?

பார்பி பிறந்த கதை

1959ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ருத் ஆண்ட்லர் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது பார்பி. ருத் ஆண்ட்லர் தனது பெண் குழந்தை பார்பரா, காகிதங்களை வைத்து இளம் பெண்களின் பொம்மைகளை உருவாக்குவதையும், அதை தன் நண்பர் களோடு கூடி விளையாடுவதையும் பார்த்திருக்கிறார். அது போன்ற ஒரு பொம்மையை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆண்ட்லர், ஜெர்மனியில் நடந்த ஒரு கண்காட்சியில் பில்ட் லிலி என்ற பொம்மையைப் பார்த்து, பார்பியை உருவாக்கினார்.

ஒரு இளம் பெண்ணின் மாதிரியாக உருவாக்கப்பட்ட பார்பி, இன்று 100க்கும் மேற்பட்ட வடிவங்களில் 150 நாடுகளில் உருவெடுத்துள்ளது. தயாரிக்கப்பட்ட முதல் ஆண்டு 3 லட்சம் பார்பிகள் 3 டாலருக்கு விற்கப்பட்டன. இன்று சராசரியாக மூன்று நொடிகளுக்கு ஒரு பார்பி பொம்மை விற்கப்படுகிறதாம்.

பார்பி ஏற்படுத்தும் தாக்கம்

அழகு இதுதான் என்று ஒரு வரை யறையைத் தருகிறது பார்பி. ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்ற பிற்போக்கான கருத்தியலுக்கு உருவம் அளித்திருக்கிறது பார்பி. பெண் எப்படியான உடல் அமைப்புகளுடன் இருக்க வேண்டும் என்று இந்த ஆணாதிக்கச் சமூகம் எதிர்பார்க்கிறது என்பது பார்பியின் வழியாகக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லித் தரப்படுகிறது.

ஒவ்வொருவர் உடலும் முகமும் வேறுபட்டது என்ற நிதர்சனமான உண்மையையும் அந்த வித்தியாசத்தைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும் பார்பி முன்வைக்கும் ஆதர்ச பிம்பம் மறுத்து விடுகிறது. நான் நானாக இருப்பது அழகு, ஆரோக்கியமே அழகு என்பதையெல்லாம் விட்டு யாரோ ஒருவர் கூறும் அறிவியல்பூர்வமற்ற, அடைய முடியாத அழகின் இலக்கணத்தை அடையப் பெண்களை இது நிர்பந்திக்கிறது.

பார்பியின் சந்தை வலிமைதான் இதற்குக் காரணம். பார்பியை உருவாக்கி விற்பவர்கள், மக்கள் மத்தியில் பார்பிக்கு ஈர்ப்பை ஏற் படுத்தப் பல விதமான உத்திகளைக் கையாள்கிறார்கள். ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த மே மாதம் பார்பி டிரீம் ஹவுஸ் (கனவு இல்லம்) என்ற பிரம்மாண்ட அரங்கு வடிவமைக்கப்பட்டது. அதில் பிங்க் நிறத்தில் ஒரு சமையலறை, பார்பி பயன்படுத்தும் பொருட்கள், உடைகள், உள்ளிட்டவைகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விருப்பப்பட்டவர்கள் அந்தச் சமைய லறையில் டச் ஸ்கீரீன் மூலம் கேக் தயாரிக்கலாம், பார்பியின் உடைகளை அணிந்து பார்க்கலாம். 25000 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்ட அந்த அரங்கு, பெண்ணை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறது. அமெரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பாவாக இருந்தாலும் பெண்ணையும் சமையலையும் பிரிக்க இயலவில்லை! பார்பியின் கனவு இல்லத்துக்கு இடதுசாரிகளிடமிருந்தும் பெண்கள் அமைப்புகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

உலகில் உள்ள வெவ்வேறு கலாச் சாரத்தைச் சேர்ந்த பெண்கள் மீது ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கிறது பார்பி. இதுவும் உலகமயமாக்கலின் விளைவே. நமது தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மைகள் அழகு இல்லையா?அவரவர் மண்ணுக்கான அழகியல் வேறுபட்டதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள விடாமல் செய்கிறது பார்பி முன்வைக்கும் ஒற்றை அழகியல். பார்பி பொம்மைக்கு சீனாவிலும் ஆப்ரிக்காவிலும்கூடப் பெரும் சந்தைகள் உள்ளன. ஷாங்காய் நகரத்தில் பார்பி பொம்மைக்கென்றே தனிக் கடை திறக்கப்பட்டுள்ளது.

புற அழகு என்பது மாறக்கூடியது, உண்மையான அழகு என்பது அகத்தில் உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான இந்த உண்மையை உணரும்வரை பார்பிகளின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

Thanks : The Hindu



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 25, 2014 10:38 am

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்று புரியவில்லை...உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு என்பது எப்படி ஆணாதிக்கம் ஆகும்... பரந்த மார்பன், திரண்ட தோள்கள் என்று ஆணை வர்ணிப்பது போல், பெண்ணை சிற்றிடையால், மூங்கில் தோளால் என்று வர்ணனை செய்யப்படுகிறது....இன்று ஆண் நடிகர்களும் சிக்ஸ் pack maintain செய்ய வேண்டிய காலகட்டத்தில் உலகம் உள்ளது. இது ஆண் ஆதிக்கமும் இல்லை, பெண் ஆதிக்கமும் இல்லை. சந்தைமயமாக்களில் ஒரு பொருளை விற்பனை செய்ய அனைத்து தந்திரங்களும் செய்யப்படுகிறது...நம் கோவில் சிற்பங்களிலும் இது போன்ற சிலை அமைப்புகள் உள்ளது. கொடியிடை, கனமார்பு, கொவ்வை செவ்வாய் என்று....இது தவறா ?? ஒரு பொம்மையை இப்படியாக சித்தரிப்பது சரியா ??



சதாசிவம்
பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து ! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 25, 2014 11:45 am

சதாசிவம் wrote:இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்று புரியவில்லை...உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு என்பது எப்படி ஆணாதிக்கம் ஆகும்... பரந்த மார்பன், திரண்ட தோள்கள் என்று ஆணை வர்ணிப்பது போல், பெண்ணை சிற்றிடையால், மூங்கில் தோளால் என்று வர்ணனை செய்யப்படுகிறது....இன்று ஆண் நடிகர்களும் சிக்ஸ் pack maintain செய்ய வேண்டிய காலகட்டத்தில் உலகம் உள்ளது. இது ஆண் ஆதிக்கமும் இல்லை, பெண் ஆதிக்கமும் இல்லை. சந்தைமயமாக்களில் ஒரு பொருளை விற்பனை செய்ய அனைத்து தந்திரங்களும் செய்யப்படுகிறது...நம் கோவில் சிற்பங்களிலும் இது போன்ற சிலை அமைப்புகள் உள்ளது. கொடியிடை, கனமார்பு, கொவ்வை செவ்வாய் என்று....இது தவறா ?? ஒரு பொம்மையை இப்படியாக சித்தரிப்பது சரியா ??
திரு சதாசிவம் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ,  நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 25, 2014 12:17 pm

சின்ன வயதில் இந்தப் பொம்மையை வைத்து விளையாடிய நினைவு வருகிறது. ஊரணிக்கு குளிக்கப் போகும்போது இந்தப் பொம்மையையும் கொண்டு போய் குளிப்பாட்டி கொண்டு வருவோம்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 25, 2014 1:07 pm

ஜாஹீதாபானு wrote:சின்ன வயதில் இந்தப் பொம்மையை வைத்து விளையாடிய நினைவு வருகிறது. ஊரணிக்கு குளிக்கப் போகும்போது இந்தப் பொம்மையையும் கொண்டு போய் குளிப்பாட்டி கொண்டு வருவோம்புன்னகை
யாரோட சின்ன வயசுல புன்னகை, பார்பி பொறந்ததே 1959ல தானாம்  சிரி சிரி நீங்கல்லாம் சுதந்திரத்துக்கு முன்னாடியே ரேஷன்கார்ட் வாங்கிய பேட்ச் தானே ,இந்த டகால்டி வேலையெல்லாம் எங்ககிட்ட ஆகாது.
 சிரி சிரி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 25, 2014 1:08 pm

சோகம் 


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 25, 2014 1:13 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சின்ன வயதில் இந்தப் பொம்மையை வைத்து விளையாடிய நினைவு வருகிறது. ஊரணிக்கு குளிக்கப் போகும்போது இந்தப் பொம்மையையும் கொண்டு போய் குளிப்பாட்டி கொண்டு வருவோம்புன்னகை
யாரோட சின்ன வயசுல புன்னகை, பார்பி பொறந்ததே 1959ல தானாம்  சிரி சிரி நீங்கல்லாம் சுதந்திரத்துக்கு முன்னாடியே ரேஷன்கார்ட் வாங்கிய பேட்ச் தானே ,இந்த டகால்டி வேலையெல்லாம் எங்ககிட்ட ஆகாது.
 சிரி சிரி

உஷ் இப்படியா பப்ளிக்ல சொல்விங்க தனிமடல் எதுக்கு இருக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக