புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
7 Posts - 2%
prajai
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராணங்களும், அறிவியலும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:47 pm

புதியவை கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றால் கனவு காணுங்கள் என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். கனவு காண்பதன் அடிப்படையே கற்பனையில் பிறப்பதுதானே? நமது புராணங்களும் இதிகாசங்களும் வெறும் கற்பனையில் தோன்றியவையே என்று ஒரு சிலர் வாதிடுவது உண்டு. ஆனால் புராணங்களிலும் நமது தமிழ் இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளைக் காண்கிறபோது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு

எங்கேயோ நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், கோவில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தொலைக்காட்சிகள் இன்று உடனுக்குடன் நேரடியாக ஒளிபரப்புச் செய்கின்றன. இந்த விஞ்ஞான வினோதத்தை வீட்டுக்குள் இருந்தபடியே நாமும் அனுபவித்து வருகிறோம். நேரடி ஒளிபரப்பு நிகழ்வதைப் போன்ற காட்சியை நமது புராணங்களும் அன்றே சொல்லியிருக்கின்றன. சிவபெருமானுக்கும், இமவான் மன்னனின் மகள் பார்வதிக்கும்  இமயமலையில் உள்ள கைலாயத்தில் திருமணம் நடக்கிறது. சீரும் சிறப்புமாக நடந்த அந்தத் திருமணத்தை அகத்திய முனிவர் பொதிகை மலையில் இருந்தபடியே பார்த்துப் பரவசப்பட்டாராம். வடகோடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, தென்கோடியில் இருந்து ஒருவர் உடனுக்குடன் கண்டதும், உள்ளம் களிப்படைந்ததும் நேரடி ஒளிபரப்பு போன்றது அல்லாமல் வேறென்ன?

ஆதிரை என்பவளின் கணவன் சாதுவன் வியாபாரம் நிமித்தமாக நண்பர்களுடன் சேர்ந்து கடல் பயணம் மேற்கொள்கிறான். திடீரென்று கப்பல் மூழ்கிவிடுகிறது. ஆபத்திலிருந்து தப்பித்த சாதுவன், நாகர்கள் எனப்படும் ஆதிவாசிகள் வாழும் ஒரு தீவில் கரையேறு  கிறான். சாதுவனைப் போலவே ஆபத்திலிருந்து தப்பித்த அவனது நண்பர்களில் சிலர் ஊர் திரும்புகின்றனர். சாதுவன் கடலில் மூழ்கிவிட்டதாக ஆதிரையிடம் தெரிவிக்கின்றனர். கணவர் இறந்த பின்பு தான் மட்டும் வாழ்ந்து பயனில்லை என்று மனம் வெதும்பி தீக்குளிக்க முயற்சிக்கிறாள் ஆதிரை.

அப்போது வானத்திலிருந்து ஓர் அசரீரி கேட்கிறது. உன் கணவன் சாகவில்லை, பத்திரமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறான் என்கிறது அக்குரல். அசரீரியின் வார்த்தையை நம்பிய ஆதிரை, தீக்குளிப்பதை நிறுத்துகிறாள். சாதுவனும் உயிருடன் திரும்புகிறான். இந்த அசரீரியின் வாக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒருவர் மற்றவருடன் உரையாட முடியும் என்கிற அறிவியல் உண்மையை உள்ளடக்கியதாகவே தென்படுகிறது. வயர்லெஸ், செல்போன் கருவிகள் வழியாக இன்று நாம் பேச்சுக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், எந்தவிதக் கம்பித் தொடர்பும் இல்லாமல் அன்று அசரீரியின் குரலை ஆதிரை கேட்டு ஆறுதல் அடைந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:47 pm

அணு

அணுவைப் பிளக்க முடியும், அதன்மூலம் ஆற்றலைப் பெறமுடியும் என்கிற கருத்தெல்லாம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் காலத்துக்குப் பின்னரே உலகில் வலுப்பெற்றது. ஆனால் தமிழ் மூதாட்டி அவ்வையார், அணுவைத் துளைத்து, எழுகடலைப் புகட்டி என்று பாடி அணுவைத் துளைக்க முடியும், அதைப் பிளக்கவும் முடியும் என்கிற உண்மைகளையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே புட்டுப் புட்டு வைத்து விட்டாரே? ராமாயணத்தில் வரும் ஒரு கிளைக்கதையும் அணுவின் தன்மை பற்றிய செய்திக்கு பெரும் ஆதாரம் சேர்ப்பதாக அமைகிறது. புராண காலத்திலேயே அணுக் கொள்கை புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு இவற்றை விட வேறென்ன சான்று வேண்டும்?

அணு குறித்த மேலும் ஒரு வியப்பூட்டும் தகவலும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மகாபாரதச் சண்டை நடந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதிசயம் என்னவென்றால், அந்த இடத்தில் இப்போதும் கூட கதிரியக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். கதிரியக்கம் வெளிப்படுவதால், அணு ஆயுதங்கள் போன்ற சண்டைக் கருவிகள் மகாபாரத யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:48 pm

வான்வெளிப் பயணம்

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விடுகிறான். சீதையைக் கவர்ந்த இடத்துக்கு ராமனும், லெட்சுமணனும் வருகிறார்கள். அங்கே தேர்ச்சக்கரங்களின் தடம் மட்டுமே தென்படுகிறது. தடம் போகும் திசையில் இருவரும் நடக்கிறார்கள். சிறிது தூரத்தில் தடம் மறைந்து விடுகிறது. அப்படியானால் தேர் என்னவாயிற்று? ஒன்று பூமிக்குள் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானத்தில் பறந்திருக்க வேண்டும். ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் சென்றது ஊர்ஜிதமாகிவிட்டதால், தேர் பூமிக்குள் புதைய வாய்ப்பேயில்லை. வான்வெளிப் பயணம் மட்டும்தான் ஒரே வழி. அப்படியானால் சிறிது தூரம் ஓடி, பின் மேலெழும்புகிற மாதிரியான வடிவமைப்புடன் ராவணின் தேர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ‘ரன்வே’யில் ஓடி பின் ‘டேக் ஆப்’ ஆகிற தற்கால கனரக விமானங்களுக்கெல்லாம் முன்னோடியாக ராவணின் தேர் இருந்திருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா?

ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவரும் கூட அந்தச்  சிந்தனை தனக்கு மட்டுமே சொந்தம் என பெருமையடித்துக் கொள்ள முடியாது. சீவக சிந்தாமணியில் உலவும் கதாபாத்திரமான சச்சந்தனுக்கும் அதில் பங்குண்டு. ஆபத்துக்காலத்தில் தப்பிப்பதற்காக தனது மனைவிக்கு சச்சந்தன் ‘மயில் பொறி’ என்னும் வாகனத்தைப் பரிசளிக்கிறான். ஹெலிகாப்டரைப் போலவே அந்த மயில் பொறியும் நின்ற இடத்திலிருந்து ‘ஜிவ்’வென்று வானத்தில் எழும்பும் இயக்கத்தைப் பெற்றதுதானாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:49 pm

கண் மருத்துவம்

மருத்துவம் இன்று மலையளவு வளர்ந்திருக்கிறது. மனிதனை அப்படியே நகல் எடுத்துத் தரும் குளோனிங் வரை முன்னேறியிருக்கிறது. மண்ணை விட்டுப் போனாலும் கண்ணை விட்டுச் செல்வோம் என்கிற கோஷம் தற்காலத்தில் உலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஒருவரது கண்ணை மற்றவருக்குப் பொருத்த முடியும் என்கிற மருத்துவ வளர்ச்சியே அதற்குக் காரணம்.

உலகின் முதல் கண் மருத்துவர் யார் தெரியுமா? சாட்சாத் கண்ணப்ப நாயனார்தான். அவர்தான் முதன்முதலில் கண் மாற்றும் அறுவைச் சிகிச்சையை உலகில் அறிமுகப்படுத்தியவர். கண்ணப்ப நாயனார் சிவபெருமானின் தீவிரத் தொண்டர். சிவனுக்கு தொண்டு செய்வதையே பெரும் பாக்கியமாகக் கருதுபவர். ஒருநாள் சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துவிடுகிறார். நெஞ்சம் பதறிவிடுகிறார். செய்வதறியாது நின்ற கண்ணப்பரின் மனதில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. தனது கண்களைப் பிடுங்கி எடுத்து சிவபெருமானின் முகத்தில் ஒட்டுகிறார். உடனே விக்கிரகத்தில் ரத்தம் வழிவது நின்று விடுகிறது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சை பற்றிய இந்த செய்தி கண்ணப்ப நாயனார் புராணத்தில் வருகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:49 pm

அண்டங்கள்

மேலும் பல்வேறு புராணங்களும் வெளிப்படுத்தும் ஒரு தகவல், வான்வெளியில் 1008 கோடி அண்டங்கள் உள்ளன என்பதுதான். விஞ்ஞானி கலிலியோ காலத்தின் பின்பே வான்வெளி ஆய்வுகள் உலகில் தீவிரப்படுத்தப்பட்டன. டெலஸ்கோப் அல்லது செயற்கைக்கோள் இன்றி அன்றே எப்படி அண்டங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள் என்பது புதிராகத்தான் உள்ளது. பூலோக மனிதர்கள் வானலோகம் சென்றதாகவும், வானலோகத் தேவர்கள் பூலோகம் வந்ததாகவும் புராணங்கள் கூறுவது நம்பும்படியாகவா உள்ளது என்று கேட்கலாம். இன்று நிலவில் காலடி வைத்து விட்டானே மனிதன்? செவ்வாய்க் கிரகம் செல்வதற்கும் முயற்சி எடுத்து விட்டானே?

புராணங்களில் வரும் செய்திகளெல்லாம் உண்மையாகி வருவதைப் பார்த்தால், பூலோக மனிதரும், வானலோகப் பிறவிகளும் சந்தித்துக்கொள்ளும் நிலை வரலாம். அப்போது இரு தரப்பினரும் சேர்ந்து விருந்துண்ணும் வைபவங்கள் வானத்தையும் வையத்தையும் தூள் பரத்தலாம்!

தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக