புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
First topic message reminder :
பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?
தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.
இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.
இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
‘‘மக்களை முட்டாள்கள் ஆக்குவதை நிறுத்துங்கள்’’ நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கண்டிப்பு
மக்களை முட்டாள்கள் ஆக்குவதை நரேந்திரமோடி நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி கண்டிப்புடன் கூறினார்.
‘டாபி’ மாதிரி வளர்ச்சி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம், கிசான்கஞ்சில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
குஜராத் மாதிரி வளர்ச்சியை நீங்கள் டாபி மாதிரி (இனிப்பு மிட்டாய் மாதிரி) அல்லது பலூன் மாதிரி என அழைக்கலாம். இவையெல்லாம் டாடா, அதானி போன்ற பெரிய மனிதர்கள் பலன் அடையத்தக்க விதத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தவிர வேறொன்றும் இல்லை.
டாடாவுக்கு கடன்
பீகாரின் புர்னியா மாவட்ட அளவிலான நிலம், ஏழை, எளியோரின் 45 ஆயிரம் ஏக்கர் நிலம்– ஒற்றை மனிதருக்கு (தொழில் அதிபர் அதானிக்கு) ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில், அதாவது ஒரு இனிப்பு மிட்டாயின் விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நானோ கார் திட்டத்துக்காக டாடா மோட்டார்சுக்கு மோடி 0.1 சதவீத வட்டியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருக்கிறார். ஆனால் நாட்டில் சாமானிய மனிதர்கள் 12 சதவீத வட்டிக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெறுகிறார்கள். ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு ரூ.40 ஆயிரம் உதவி வழங்குகிறது.
ரூ.12 சம்பாதித்தால் பணக்காரர்
குஜராத் அரசில் கல்வி, சுகாதாரம், பிற மக்கள் நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடியை விடக்குறைவுதான்.
குஜராத்தில் தினமும் ரூ.11–க்கு குறைவாக சம்பாதிக்கிற 40 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக சொல்கிறார்கள். அப்படியானால், தினமும் ரூ.12 சம்பாதிக்கிற ஒருவர் குஜராத்தில் பணக்காரர்.
மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்
குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு பானை குடிநீர் கிடைப்பதில்லை. நரேந்திரமோடி அவர்களே, மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாதிரி, மற்றொரு மாநிலத்துக்கு சரிப்பட்டு வராது. பீகார் மாதிரி வளர்ச்சி என்றால் அது பீகாருக்கு மட்டுமே சரிபட்டு வரும். அவர் எல்லாம் தெரியும் என்கிறார். அவர் கூற்றுப்படி குஜராத் வளர்ச்சிக்கு அவரைத்தவிர யாருமே பங்களிப்பு செய்யவில்லை. அதையே அவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் கூறுவார்.
சித்தாந்த யுத்தம்
நடைபெறுகிற பாராளுமன்ற தேர்தல், இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான மோதல் அல்ல. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம்.
முதல் சித்தாந்தம், நாட்டின் வளர்ச்சியில் இந்துவா, முஸ்லிமா, பிற்படுத்தப்பட்டவரா, முற்பட்டவரா, ஏழையா, பணக்காரரா என பார்க்காமல் அத்தனைபேரையும் ஒன்றாக அழைத்துச்செல்கிற காங்கிரசின் சித்தாந்தம்.
அடுத்தது, பாரதீய ஜனதாவினுடையது. அது, முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை மோத விடுவது. மராட்டியத்துக்கு செல்கிற பீகார் மக்களை மராட்டிய மக்கள் அடிக்க தூண்டுவது. கர்நாடகத்தில் பெண்களை குறிவைப்பது.
காங்கிரசின் விருப்பம்
பாரதீய ஜனதாவினருக்கு இந்த தேர்தல் விவசாயிகளை, தொழிலாளர்களை, ஏழைகளை மாற்றுவதற்கான தேர்தல் அல்ல. ஒரே ஒரு மனிதரை மையப்படுத்தி, அவரை பிரதமராக ஆக்குவதற்கான தேர்தல்.
காங்கிரஸ் கட்சி, நாட்டில் வறுமைக்கோட்டுக்கு சற்று மேலே உள்ள 70 கோடி மக்களையும் உயர்த்த விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களை முட்டாள்கள் ஆக்குவதை நரேந்திரமோடி நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி கண்டிப்புடன் கூறினார்.
‘டாபி’ மாதிரி வளர்ச்சி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம், கிசான்கஞ்சில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
குஜராத் மாதிரி வளர்ச்சியை நீங்கள் டாபி மாதிரி (இனிப்பு மிட்டாய் மாதிரி) அல்லது பலூன் மாதிரி என அழைக்கலாம். இவையெல்லாம் டாடா, அதானி போன்ற பெரிய மனிதர்கள் பலன் அடையத்தக்க விதத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தவிர வேறொன்றும் இல்லை.
டாடாவுக்கு கடன்
பீகாரின் புர்னியா மாவட்ட அளவிலான நிலம், ஏழை, எளியோரின் 45 ஆயிரம் ஏக்கர் நிலம்– ஒற்றை மனிதருக்கு (தொழில் அதிபர் அதானிக்கு) ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில், அதாவது ஒரு இனிப்பு மிட்டாயின் விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நானோ கார் திட்டத்துக்காக டாடா மோட்டார்சுக்கு மோடி 0.1 சதவீத வட்டியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருக்கிறார். ஆனால் நாட்டில் சாமானிய மனிதர்கள் 12 சதவீத வட்டிக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெறுகிறார்கள். ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு ரூ.40 ஆயிரம் உதவி வழங்குகிறது.
ரூ.12 சம்பாதித்தால் பணக்காரர்
குஜராத் அரசில் கல்வி, சுகாதாரம், பிற மக்கள் நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடியை விடக்குறைவுதான்.
குஜராத்தில் தினமும் ரூ.11–க்கு குறைவாக சம்பாதிக்கிற 40 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக சொல்கிறார்கள். அப்படியானால், தினமும் ரூ.12 சம்பாதிக்கிற ஒருவர் குஜராத்தில் பணக்காரர்.
மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்
குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு பானை குடிநீர் கிடைப்பதில்லை. நரேந்திரமோடி அவர்களே, மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாதிரி, மற்றொரு மாநிலத்துக்கு சரிப்பட்டு வராது. பீகார் மாதிரி வளர்ச்சி என்றால் அது பீகாருக்கு மட்டுமே சரிபட்டு வரும். அவர் எல்லாம் தெரியும் என்கிறார். அவர் கூற்றுப்படி குஜராத் வளர்ச்சிக்கு அவரைத்தவிர யாருமே பங்களிப்பு செய்யவில்லை. அதையே அவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் கூறுவார்.
சித்தாந்த யுத்தம்
நடைபெறுகிற பாராளுமன்ற தேர்தல், இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான மோதல் அல்ல. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம்.
முதல் சித்தாந்தம், நாட்டின் வளர்ச்சியில் இந்துவா, முஸ்லிமா, பிற்படுத்தப்பட்டவரா, முற்பட்டவரா, ஏழையா, பணக்காரரா என பார்க்காமல் அத்தனைபேரையும் ஒன்றாக அழைத்துச்செல்கிற காங்கிரசின் சித்தாந்தம்.
அடுத்தது, பாரதீய ஜனதாவினுடையது. அது, முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை மோத விடுவது. மராட்டியத்துக்கு செல்கிற பீகார் மக்களை மராட்டிய மக்கள் அடிக்க தூண்டுவது. கர்நாடகத்தில் பெண்களை குறிவைப்பது.
காங்கிரசின் விருப்பம்
பாரதீய ஜனதாவினருக்கு இந்த தேர்தல் விவசாயிகளை, தொழிலாளர்களை, ஏழைகளை மாற்றுவதற்கான தேர்தல் அல்ல. ஒரே ஒரு மனிதரை மையப்படுத்தி, அவரை பிரதமராக ஆக்குவதற்கான தேர்தல்.
காங்கிரஸ் கட்சி, நாட்டில் வறுமைக்கோட்டுக்கு சற்று மேலே உள்ள 70 கோடி மக்களையும் உயர்த்த விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது; ராகுல் காந்தி
மத்தியபிரதேச மாநிலம் காண்ட்லாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும், பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரஸ் கட்சியினருடைய இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. உணவுப் பொருள்களுக்கான ஆதார விலையை காங்கிரஸ் அரசு பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசின் செயல்பாடு பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தால் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மத்தியபிரதேச மாநிலம் காண்ட்லாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும், பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரஸ் கட்சியினருடைய இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. உணவுப் பொருள்களுக்கான ஆதார விலையை காங்கிரஸ் அரசு பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசின் செயல்பாடு பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தால் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு தாவிய செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வில் இணைந்தார்
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை தி.மு.க.வில் பணியாற்றி வந்த, முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை மந்திரியுமான செஞ்சி ந.ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் டாக்டர் ஆர்.மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இணைந்த செஞ்சி ந.ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து வந்தார். ம.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியமந்திரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை தி.மு.க.வில் பணியாற்றி வந்த, முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை மந்திரியுமான செஞ்சி ந.ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் டாக்டர் ஆர்.மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இணைந்த செஞ்சி ந.ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து வந்தார். ம.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியமந்திரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ., பதில் சொல்ல வேண்டும்:பா.ஜ.,
நாகர்கோவில்: பா.ஜ., மாநில தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் கூறியதாவது: தமிழகத்தில் அதிக இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து, ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என, பெரும் வர்த்தகர்கள் சிலர் களத்தில் இறங்கி உள்ளனர்.இதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு முதல்வர் ஜெயலலிதாவும் பதில் சொல்ல வேண்டும். காரணம், இது அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறு, என்றார்.
நாகர்கோவில்: பா.ஜ., மாநில தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் கூறியதாவது: தமிழகத்தில் அதிக இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து, ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என, பெரும் வர்த்தகர்கள் சிலர் களத்தில் இறங்கி உள்ளனர்.இதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு முதல்வர் ஜெயலலிதாவும் பதில் சொல்ல வேண்டும். காரணம், இது அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறு, என்றார்.
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
இதெல்லாம் ஒரு பொழப்பா
ராமர் கோயில்: சட்ட விதிகளை மீற மாட்டோம்- பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் உறுதி
ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம் என, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
தமிழக அரசியல் பாதையில் மே 16-ம் தேதிக்குப் பின்னர் பெரிய மாற்றங்கள் இருக்கும். இதற்கு முன்பாக தமிழகத்தில் பாஜக தலைமையில் இவ்வளவு வலுவான கூட்டணி அமைந்தது இல்லை. தமிழகத்தில் அதிமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். திமுகவில் உள்கட்சி பூசல், குடும்பப் பிரச்சினை அதிகம் இருப்பதால் இந்த தேர்தலில் வலுவிழந்து உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், தமிழகம் ஒரு முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 9 இடங்களில் சூறா வளி பிரச்சாரம் மேற்கொண்டார். அத்வானியும் வரும் 21-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளார். இதனால், எங்களது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.
ஊழல், தவறான நிர்வாகம் போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட உள்ளது. நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். விவசாயம், தொழில் வளர்ச்சி, விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துதல், தெளிவான, ஊழல் அற்ற நிர்வாகம் எங்களது ஆட்சியின் முக்கிய குறிக்கோள்.
தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே முடியும். தமிழகத்தில் வேளாண் தொழில், மின் தட்டுப்பாடு பிரச்சினைகள், மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சரி செய்யப்படும் என்றார்.
நீலகிரியில் ஆதரவு யாருக்கு?
நீலகிரி தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
ராமர் கோயில் கட்டுவது சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாதா என கேட்ட போது, ராமர் கோயில் கட்டுவதில் அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம். எனவே, சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாது என்றார்.
தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என கேட்டபோது, பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும். எங்களுடன் கூட்டணி கட்சியினரும் உள்ளனர். எங்களுக்குள் தர்ம சங்கடத்தை நீங்கள் (பத்திரிகைகள்) ஏற்படுத்த வேண்டாம் என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறதே எனக் கேட்ட போது, அவர் பாமகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாரே, அது போதாதா. பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில்தானே உள்ளது. அவரும், எங்களுடனும், மோடியுடனும் தொடர்பில்தான் உள்ளார் என்றார்.
ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம் என, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
தமிழக அரசியல் பாதையில் மே 16-ம் தேதிக்குப் பின்னர் பெரிய மாற்றங்கள் இருக்கும். இதற்கு முன்பாக தமிழகத்தில் பாஜக தலைமையில் இவ்வளவு வலுவான கூட்டணி அமைந்தது இல்லை. தமிழகத்தில் அதிமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். திமுகவில் உள்கட்சி பூசல், குடும்பப் பிரச்சினை அதிகம் இருப்பதால் இந்த தேர்தலில் வலுவிழந்து உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், தமிழகம் ஒரு முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 9 இடங்களில் சூறா வளி பிரச்சாரம் மேற்கொண்டார். அத்வானியும் வரும் 21-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளார். இதனால், எங்களது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.
ஊழல், தவறான நிர்வாகம் போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட உள்ளது. நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். விவசாயம், தொழில் வளர்ச்சி, விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துதல், தெளிவான, ஊழல் அற்ற நிர்வாகம் எங்களது ஆட்சியின் முக்கிய குறிக்கோள்.
தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே முடியும். தமிழகத்தில் வேளாண் தொழில், மின் தட்டுப்பாடு பிரச்சினைகள், மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சரி செய்யப்படும் என்றார்.
நீலகிரியில் ஆதரவு யாருக்கு?
நீலகிரி தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
ராமர் கோயில் கட்டுவது சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாதா என கேட்ட போது, ராமர் கோயில் கட்டுவதில் அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம். எனவே, சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாது என்றார்.
தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என கேட்டபோது, பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும். எங்களுடன் கூட்டணி கட்சியினரும் உள்ளனர். எங்களுக்குள் தர்ம சங்கடத்தை நீங்கள் (பத்திரிகைகள்) ஏற்படுத்த வேண்டாம் என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறதே எனக் கேட்ட போது, அவர் பாமகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாரே, அது போதாதா. பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில்தானே உள்ளது. அவரும், எங்களுடனும், மோடியுடனும் தொடர்பில்தான் உள்ளார் என்றார்.
தமிழக மக்களுக்காக நான் 27 முறை சிறைக்கு சென்றுள்ளேன் : வைகோ பேச்சு
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி, புதிய பஸ் ஸ்டாண்டு, அண்ணாசிலை, ராமசாமிபுரம், காமராஜர் சிலை, நேரு மைதானம், பாவடி தோப்பு உள்பட பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியபோது, ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த பாராளுமன்ற தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடி சிறைக்கு சென்றுள்ளேன்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முல்லை பெரியார், காவேரி, பாலாறு, மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் தீர நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். நமது தொகுதியில் புதிய வாக்காளர்கள் அனைவரும் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. கட்சியின் பம்பரம் சின்னத்திற்கு வாக்களித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் அனைவரிடமும், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என அறிவுரை வழங்கி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை இந்தியாவிற்குள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்துவிட்டு, உள்ளுர் வியாபாரிகளின் தலையில் கல்லை தூக்கிபோட்டு விட்டது. தமிழகத்தில் குடியால் பாதிப்படைந்த குடும்பங்களை பாதுகாக்க மது கடைகளை மூட வேண்டும் என்று ஒரே நோக்கில் 1200 கி.மீ. தொலைவில் நடை பயணம் செய்தேன்.
மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மதுக்கடைகள் திறந்தால் 20 ஆயிரம் கோடி வருமானம் வரும் என மோடியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரோ 50 ஆயிரம் கோடி கிடைத்தாலும் நான் அதை திறக்கமாட்டேன் என உறுதியாக கூறினார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்டோர் காமராஜர் வீட்டிற்கு சென்றால் தோற்றுவிடுவோம் என்று பொய் கதைகளை கூறி வந்தனர். அக்கதைகளை மறைக்கவே நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் காமராஜர் வீட்டிற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்’’என்று கூறினார்.
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி, புதிய பஸ் ஸ்டாண்டு, அண்ணாசிலை, ராமசாமிபுரம், காமராஜர் சிலை, நேரு மைதானம், பாவடி தோப்பு உள்பட பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியபோது, ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த பாராளுமன்ற தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடி சிறைக்கு சென்றுள்ளேன்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முல்லை பெரியார், காவேரி, பாலாறு, மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் தீர நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். நமது தொகுதியில் புதிய வாக்காளர்கள் அனைவரும் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. கட்சியின் பம்பரம் சின்னத்திற்கு வாக்களித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் அனைவரிடமும், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என அறிவுரை வழங்கி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை இந்தியாவிற்குள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்துவிட்டு, உள்ளுர் வியாபாரிகளின் தலையில் கல்லை தூக்கிபோட்டு விட்டது. தமிழகத்தில் குடியால் பாதிப்படைந்த குடும்பங்களை பாதுகாக்க மது கடைகளை மூட வேண்டும் என்று ஒரே நோக்கில் 1200 கி.மீ. தொலைவில் நடை பயணம் செய்தேன்.
மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மதுக்கடைகள் திறந்தால் 20 ஆயிரம் கோடி வருமானம் வரும் என மோடியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரோ 50 ஆயிரம் கோடி கிடைத்தாலும் நான் அதை திறக்கமாட்டேன் என உறுதியாக கூறினார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்டோர் காமராஜர் வீட்டிற்கு சென்றால் தோற்றுவிடுவோம் என்று பொய் கதைகளை கூறி வந்தனர். அக்கதைகளை மறைக்கவே நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் காமராஜர் வீட்டிற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்’’என்று கூறினார்.
சிதம்பரத்தில் யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும்? :க.அன்பழகன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர், ’’பெரியார் ஊட்டிய உணர்வும், அண்ணா வளர்த்த பகுத்தறிவும்தான் நம்மை வாழ வைக்கிறது. அந்த கொள்கையுடன் வாழுபவர் திருமாவளவன். தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட, ஓரங்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் விழிப்புணர் வுக்காக பெரிய குரல் எழுப்பியவர். தன்னலம் கருதாமல் பாடுபடுபவர். சிதம்பரம் நகரில் 44 ஆண்டுகள் வாழ்ந்தவன், படித்தவன் நான். இங்கு யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும். யார் ஆத்திரப்படுவார்கள், யார் நஷ்டப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு இன்று ஒரு அமைதி.
ஜனநாயக மனப்பாண்மை, ஒரு ஒற்றுமை, நாம் அனைவரும் ஒரு குலம், தமிழர்களாக வாழ வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் நீதிகட்சி தலைவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஓடுக்கப்படுவது நியாயம் அல்லை என உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர்பதவி வழங்கி பெருமைபட்டவர் கருணாநிதி. அப்படிப்பட்ட வரலாற்றை படைத்துள்ள இயக்கம் திராவிட இயக்கங்கள்.
நடைபெறவுள்ள தேர்தலில் மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் தேவை, மற்றொன்று தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்னத்தை ஏற்படுத்தும் தேர்தலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எழுச்சியும், வரவேற்பும் உள்ளதை பார்த்தால், திமுவை இனி தோற்கடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுபாடு உள்ளது. பாசனத்திற்கு நீர் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வருமானம் இல்லாமலும், இழப்பீடு கிடைக்காமலும் விவசாயிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
கருணாநிதி பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். அத்திட்டத்தை ஜெயலலிதா அரசு காப்பாற்ற தவறிவிட்டது. வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்பதால் விவசாயிகள் பெற்ற 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தவர் கருணாநிதி. புதிய கடளை வட்டியில்லா கடனாக மாற்றினார்.
தமிழகத்தில் திமுகவிற்கும், அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளுடன் போட்டியில்லை. திமுகவினரி டையேதான், எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவது என்ற போட்டி நிலவுகிறது. இந்தியாவில் மோடி அலை வீசவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்’’ என்று பேசினார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர், ’’பெரியார் ஊட்டிய உணர்வும், அண்ணா வளர்த்த பகுத்தறிவும்தான் நம்மை வாழ வைக்கிறது. அந்த கொள்கையுடன் வாழுபவர் திருமாவளவன். தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட, ஓரங்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் விழிப்புணர் வுக்காக பெரிய குரல் எழுப்பியவர். தன்னலம் கருதாமல் பாடுபடுபவர். சிதம்பரம் நகரில் 44 ஆண்டுகள் வாழ்ந்தவன், படித்தவன் நான். இங்கு யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும். யார் ஆத்திரப்படுவார்கள், யார் நஷ்டப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு இன்று ஒரு அமைதி.
ஜனநாயக மனப்பாண்மை, ஒரு ஒற்றுமை, நாம் அனைவரும் ஒரு குலம், தமிழர்களாக வாழ வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் நீதிகட்சி தலைவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஓடுக்கப்படுவது நியாயம் அல்லை என உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர்பதவி வழங்கி பெருமைபட்டவர் கருணாநிதி. அப்படிப்பட்ட வரலாற்றை படைத்துள்ள இயக்கம் திராவிட இயக்கங்கள்.
நடைபெறவுள்ள தேர்தலில் மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் தேவை, மற்றொன்று தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்னத்தை ஏற்படுத்தும் தேர்தலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எழுச்சியும், வரவேற்பும் உள்ளதை பார்த்தால், திமுவை இனி தோற்கடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுபாடு உள்ளது. பாசனத்திற்கு நீர் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வருமானம் இல்லாமலும், இழப்பீடு கிடைக்காமலும் விவசாயிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
கருணாநிதி பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். அத்திட்டத்தை ஜெயலலிதா அரசு காப்பாற்ற தவறிவிட்டது. வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்பதால் விவசாயிகள் பெற்ற 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தவர் கருணாநிதி. புதிய கடளை வட்டியில்லா கடனாக மாற்றினார்.
தமிழகத்தில் திமுகவிற்கும், அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளுடன் போட்டியில்லை. திமுகவினரி டையேதான், எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவது என்ற போட்டி நிலவுகிறது. இந்தியாவில் மோடி அலை வீசவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்’’ என்று பேசினார்.
காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரச்சாரம்
அரக்கோணம் தொகுதியில் ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது, ‘’நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர். தமிழக மக்களுக்கு உழைக்க வந்திருக்காரு. இளைய எம்.பி. ஒருவரை உருவாக்க இளம் தலைவர் ராகுல் அவரை நிறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் எந்தவித மதக்கலவரமும் நடந்தது இல்லை. இனி மேலும் நடக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து
ள்ளவர்கள் குடும்பத்தில் பிறந்த ராகுலை பிரதமராக்க எல்லோரும் பாடுபட வேண்டும்’’என்று பேசினார்.
கலவை திமிரி, ஆற்காடு பகுதியில் பேசும் போது தமிழை தத்தி தத்தி மழலை மொழி போல பேசினார். தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து கொஞ்சும் தமிழில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தால் தமிழ் கொஞ்சம் சரளமாக வந்தது.
நடிகை மும்தாஜ் அரக்கோணம் பழைய பஸ் நிலையம், இந்திரா காந்தி சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் 2 இடங்களிலும் காத்திருந்தனர்.
ஆனால் மும்தாஜ் ஓடியன்மணி தியேட்டர் அருகில் பிரசாரம் செய்துவிட்டு திறந்த ஜீப்பில் சுவால்பேட்டை வரை வந்தார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் இந்திரா காந்தி சிலை அருகே ஓடினர். ஆனால் மும்தாஜ் திடீரென காரில் ஏறி திருத்தணி சென்றார்.
அரக்கோணம் தொகுதியில் ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது, ‘’நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர். தமிழக மக்களுக்கு உழைக்க வந்திருக்காரு. இளைய எம்.பி. ஒருவரை உருவாக்க இளம் தலைவர் ராகுல் அவரை நிறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் எந்தவித மதக்கலவரமும் நடந்தது இல்லை. இனி மேலும் நடக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து
ள்ளவர்கள் குடும்பத்தில் பிறந்த ராகுலை பிரதமராக்க எல்லோரும் பாடுபட வேண்டும்’’என்று பேசினார்.
கலவை திமிரி, ஆற்காடு பகுதியில் பேசும் போது தமிழை தத்தி தத்தி மழலை மொழி போல பேசினார். தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து கொஞ்சும் தமிழில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தால் தமிழ் கொஞ்சம் சரளமாக வந்தது.
நடிகை மும்தாஜ் அரக்கோணம் பழைய பஸ் நிலையம், இந்திரா காந்தி சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் 2 இடங்களிலும் காத்திருந்தனர்.
ஆனால் மும்தாஜ் ஓடியன்மணி தியேட்டர் அருகில் பிரசாரம் செய்துவிட்டு திறந்த ஜீப்பில் சுவால்பேட்டை வரை வந்தார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் இந்திரா காந்தி சிலை அருகே ஓடினர். ஆனால் மும்தாஜ் திடீரென காரில் ஏறி திருத்தணி சென்றார்.
3 வருடமாகியும் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்ல.: சுப. உதயகுமார்
அதிமுக, திமுக கட்சிகள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சுப. உதயகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மை.பா. ஜேசுராஜை ஆதரித்து, கன்னியாகுமரியில் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் சக்தி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமார், ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
பேட்டை, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, கொக்கிரகுளம், மேலப்பாளையம், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு அவர் பிரசாரம் செய்தார். அப்போது உதய குமார் பேசியபோது, ‘’நாட்டில் மக்கள் வரிப்பணம் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் சுரண்டப் படுகிறது. இயற்கை
வளங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வளம் பெறுகின்றன.
தமிழகத்தில் அதிமுக, திமுக மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. அவர்களை வளப்படுத்தி கொள்கிறார்கள். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வரவில்லை. மின்தடையை 3 மாதங்களில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்கள். 3 வருடமாகியும் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.
காங்கிரஸ் ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட இனம், மொழி சார்ந்த மக்கள் வாழும் மதசார்பற்ற நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்’’ என்றார் அவர்.
அதிமுக, திமுக கட்சிகள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சுப. உதயகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மை.பா. ஜேசுராஜை ஆதரித்து, கன்னியாகுமரியில் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் சக்தி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமார், ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
பேட்டை, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, கொக்கிரகுளம், மேலப்பாளையம், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு அவர் பிரசாரம் செய்தார். அப்போது உதய குமார் பேசியபோது, ‘’நாட்டில் மக்கள் வரிப்பணம் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் சுரண்டப் படுகிறது. இயற்கை
வளங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வளம் பெறுகின்றன.
தமிழகத்தில் அதிமுக, திமுக மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. அவர்களை வளப்படுத்தி கொள்கிறார்கள். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வரவில்லை. மின்தடையை 3 மாதங்களில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்கள். 3 வருடமாகியும் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.
காங்கிரஸ் ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட இனம், மொழி சார்ந்த மக்கள் வாழும் மதசார்பற்ற நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்’’ என்றார் அவர்.
- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15
|
|