ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

+7
தமிழ்நேசன்1981
ராஜா
positivekarthick
soplangi
Muthumohamed
ayyasamy ram
சிவா
11 posters

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Wed Feb 19, 2014 11:21 pm

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Wed Feb 19, 2014 11:22 pm

 பாராளுமன்ற தேர்தலையொட்டி, கமிஷனர் அலுவலகத்தில் விசேஷ கட்டுப்பாட்டு அறை

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருவது போல சென்னை நகர போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்து வருகிறார்கள். தமிழக தலைமை தேர்தல் கமிஷன் பிரவீன்குமாருடன் உயர் போலீஸ் அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்தநிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலுக்காக விசேஷ போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், உதவி கமிஷனர் புகழேந்தி மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15 போலீசார் விசேஷ கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Wed Feb 19, 2014 11:23 pm

 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு ரூ.70 லட்சம் ஆகிறது; தேர்தல் கமிஷன் தீவிர பரிசீலனை

வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பினை ரூ.70 லட்சமாக உயர்த்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அரசியல் கட்சிகள் கோரிக்கை

பாராளுமன்ற தேர்தலில், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பு கடந்த 2009–ம் ஆண்டு ரூ.25 லட்சமாக இருந்தது. 2011–ம் ஆண்டு இது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இருப்பினும் இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக விலைவாசி உயர்ந்து, பெரும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பினை உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே தேர்தலுக்கு உரிய வரம்பினை விட பல மடங்கு தொகையை வேட்பாளர்கள் செலவு செய்து, கணக்கில் குறைத்துக்காட்டுவதாகவும் புகார்கள் உள்ளன.

1¾ மடங்கு உயர்த்த...

இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பினை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய செலவு வரம்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பினை உயர்த்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பில் தற்போதைய அளவை விட 1¾ மடங்கு வரை உயர்த்தலாமா என பரிசீலிக்கப்படுகிறது.

ரூ.70 லட்சம் ஆகிறது

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில், பெரிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பினை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பை தற்போதைய அளவான ரூ.16 லட்சத்தை ரூ.28 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்த பரிசீலனை நடக்கிறது.

இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் இந்த வாரம் முடிவு எடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதும். எனவே வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு உயர்த்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Wed Feb 19, 2014 11:24 pm

 பாராளுமன்றத் தேர்தல்: ப.சிதம்பரம் மீது ஷூ வீசியவருக்கு சீட் கொடுத்தது ஆம் ஆத்மி

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் 48 நாட்கள் பரபரப்பான ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி கட்சி அரசு, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கிடைக்காததால் பதவி விலகியது. அதன் தாக்கம் மறைவதற்குள், வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பதில் அந்த கட்சி தீவிரம் காட்டியது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக்கொண்ட முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சி மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் மீது கடந்த 2009ம் ஆண்டு ஷூ வீசியவருக்கு சீட் கொடுத்துள்ளது. ஜார்னயில் சிங் மேற்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று சிதம்பரம் கூறியதற்காக 2009ம் ஆண்டு சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டது. வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் சஜ்ஜன் குமார் மற்றும் ஜெகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டதற்கு சிதம்பரம் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்திய போது அதில் கோபம் அடைந்த ஜார்னயில் சிங் இவ்வாறு செய்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Wed Feb 19, 2014 11:25 pm

 2014 பாராளுமன்றத் தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

புதுடெல்லியில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார். இந்நிலையில் அக்கட்சி பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி 20 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடுவார் என்றும் அசுதோஷ், மத்திய சட்டத்துறை மந்திரி கபில் சிபலை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிம் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நிதின் கட்காரியை எதிர்த்து நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் வங்கி அதிகாரி மீரா சென்யால் தெற்கு மும்பையில் மிலிந் தியோராவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மேதா பத்கார், கோகேந்திர யாதவ் மற்றும் முகுல் திரிபாதி ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அக்கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டம் நடைபெற்றது. அதில் விவாதிக்கபப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Mon Feb 24, 2014 12:45 pm

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு ‘‘நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது’’

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்

தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு

இந்தநிலையில் இது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை விதித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் கே.அஜய் குமார் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இலவசங்கள் அறிவிப்பு

தமிழக அரசு இலவசங்கள் வழங்குவது குறித்து சுப்பிரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை 5–ந் தேதி வழங்கிய தீர்ப்பில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வழங்குவதாக அறிவிப்பது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.

தேர்தல் அறிக்கைகளில் கூறப்படும் வாக்குறுதிகள் ஊழல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாக கருத முடியாது என்ற போதிலும், இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது, வாக்காளர்களை கவர உதவும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இது தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் ஆணிவேரையே அசைப்பது போல் அமைந்து விடும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த இந்த கருத்துகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன.

வாக்குறுதிகள்

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளிக்கக்கூடாது. நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி மாநில அரசு, மக்களுக்கு தெரிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் அரசியல் சட்டத்தின் கொள்கைகளுக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு விரோதமாகவும் இருக்கக்கூடாது.

தேர்தலை நியாயமாக நடத்தும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு முரணாகவும், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தும் வகையிலான வாக்குறுதிகளையும் அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

மாறுபட்ட கருத்து

சமீபத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது, இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சில கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அறிக்கைகளில் இதுபோன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளிப்பது தங்களுக்கு உள்ள உரிமை என்றும், அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உதவும் என்றும் கூறினார்கள்.

அது ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துதான் என்ற போதிலும், அளிக்கப்படும் வாக்குறுதிகள் வேட்பாளர்களிடம் பாரபட்சமில்லாத நிலையை ஏற்படுத்துவதற்கும், தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தும் தேர்தல் கமிஷனின் நோக்கத்துக்கும் விரோதமாக அமைந்துவிடக்கூடாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Fri Mar 07, 2014 11:40 pm

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் EhajMMEnRPKMEiccQH7H+cpi-0603

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல்: கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்டு கூட்டாக அறிவிப்பு


பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.

இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன.

அவசர ஆலோசனை

அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.

அ.தி.மு.க. சார்பில் அவர்களுக்கு தலா ஒரு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு கம்யூனிஸ்டு கட்சியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் பேட்டி அளித்த கட்சி நிர்வாகிகள் கூட்டணி பற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிப்பதாக தெரிவித்தனர்.

கூட்டணியில் இருந்து விலகல்

நேற்று மாலை 5 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லகண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் கள், சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு அவர்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்று அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து, இரு கட்சிகளின் நிர்வாகிகளும், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட் டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டுமா?, அல்லது மாற்று அணி அமைக் கலாமா? என்பது குறித்து விவாதித்தனர். இந்த கூட்டம் மாலை 7 மணி வரை நடந்தது. பின்னர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக இருகட்சியினரும் கூட்டாக அறிவித்தனர்.

இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனித்து போட்டி

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளை முறியடிப்பதற்கு, தமிழகத்தில் அ.தி.மு.க.வோடு இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிடுவதென முடிவு செய்தோம். இதற்காக நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் அ.தி.மு.க. வின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை.

மேலும் 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தையும் தனித்தே தொடங்கி விட்ட சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு ஏற்படாதது ஏன்?

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தோம். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அ.தி.மு.க.வின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை. அதற்குள் அ.தி.மு.க. தலைமை 40 தொகுதிகளுக்கும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தையும் மேற்கொண்டார்கள்.

இதனால் நாங்கள் கட்சியின் அவசர கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். இந்த கூட்டத்தில் நாங்கள் மக்களவை தேர்தலை இணைந்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு உங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா? என்று தா.பாண்டியனிடம் கேட்கப்பட்டதற்கு, ‘நெருக்கடி என்பது எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, சமூகத்திற்கா னது’ என்று பதில் அளித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு வேறு ஏதாவது காரணம் இருக் கிறதா? என்று கேட்கப்பட்டதற்கு, காரணத்தை குறித்து ஆய்வு செய்கின்ற நேரம் இப்போது இல்லை. எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உங்களை அழைத்து கண்டிப்பாக சொல்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Mon Mar 24, 2014 3:41 am

ஜெ., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்டாலின் வேண்டுகோள்

அரியலூர்: ""ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என, மீன்சுருட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., கூட்டணி சார்பாக, சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வி.சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தல் மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்கள் செயல்பட வேண்டும்.கடந்த முறை சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன், மீண்டும் போட்டியிடுகிறார். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பாகுபாடு இல்லாமல் செயல்பட்டவர் திருமாவளவன். அவரது வெற்றிக்கு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Mon Mar 24, 2014 3:42 am

ஜெ., வை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம் : சிதம்பரம் கிண்டல்

காரைக்குடி:“முதல்வர் ஜெயலலிதாவை, அவர் கடைசியாக நடித்த 'நதியை தேடி வந்த கடல்' என்ற படத்தில் மட்டுமே பார்க்கலாம்,” என, காரைக்குடியில் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார்.சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், காங்., வேட்பாளருமான கார்த்தியை ஆதரித்து, அவர் பேசியதாவது;'கடந்த ஐந்து ஆண்டில், தொகுதிக்கு என்ன செய்தோம்' என கேட்கின்றனர். அதை தொகுதி மக்களுக்கு பட்டியலாக வழங்கியுள்ளோம். இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ போன்ற நாடுகளில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஆட்சி செய்கின்றனர்.

நம்நாட்டில், 35 வயதிற்கு கீழ், 83 கோடி பேர் உள்ளனர். 'நம் நாட்டை மட்டும், 'குடுகுடு கிழவர்கள்' ஏன் நிர்வகிக்க வேண்டும். எனவே தான், இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும்' என்றேன். அதன்படியே, 'ராகுல் தலைமையில் இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்' என காங்., முடிவு செய்துள்ளது.ஜெ., கால் மண்ணில் படாது. வானம் வழியே வந்து சென்றுவிடுவார். அவர் கடைசியாக, 1980ல் நடித்த 'நதியை தேடி வந்த கடல்' என்ற படத்தில் மட்டுமே அவரை பார்க்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா Mon Mar 24, 2014 3:42 am

கரசேவையை பற்றி பேச கருணாநிதிக்கு அருகதையில்லை : கடலூரில் முதல்வர் ஜெ., ஆவேசம்

கடலூர்:கருணாநிதி, கரசேவைக்கு எதிரான கொள்கையுடையவர் என்றால், ஏன் பா.ஜ., கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். இதை பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது,'' என, முதல்வர் ஜெ., கேள்வி எழுப்பினார்.

கடலூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து பிரசாரம் செய்த, தமிழக முதல்வர் ஜெ., பேசியதாவது:கடலூரில், 1982ல் என் அரசியல் பிரவேசம் துவங்கியது. எம்.ஜி.ஆர்., தலைமையில் நடந்த மாநாட்டில், பெண்ணின் பெருமை பற்றி பேச, அவர், என்னை அழைத்தார். அதே கடலூரில், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.கடந்த, 10 ஆண்டுகளாக பல கொடுமைகள், இன்னல்கள், துன்பங்களை எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு, மத்திய காங்., கூட்டணி அரசின் தவறான கொள்கை, சர்வாதிகார போக்கு, தலைவிரித்தாடும் ஊழலும் தான் காரணம்.இந்திய நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அதிலிருந்து மீட்க நமக்குள்ள ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் தான். இந்த ஜனநாயகப் போரில் மக்கள் விரோத காங்., அரசை நீங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.மத்திய காங்., கட்டணி அரசு, எல்லா விதத்திலும் சாமான்ய மக்களுக்கு எதிரான போக்கை-யே கடைபிடித்து வந்தது. சில மாதங்கள் வரை ஒட்டி உறவாடிய, தி.மு.க., செய்த, '2ஜி' இமாலய ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியதை மறந்து விடாதீர்கள்.

தமிழகத்திற்கு மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்துள்ளது இந்த அரசு. கடந்த, 33 மாத காலத்தில் என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் தர முடியுமோ அவ்வளவையும் அளித்து வருகிறேன்.'கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது, அ.தி.மு.க.,' என, கருணாநிதி, மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுகிறார். இதை நான் பலமுறை மறுத்திருக்கிறேன். ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் அது உண்மையாகி விடும் என, கூறி வருகிறார்.கரசேவையை ஆதரித்த, ஆட்களை அனுப்பிய, பா.ஜ.,வின், 1999 முதல் 2003 வரையிலான, பா.ஜ., ஆட்சியில் அங்கம் வகித்து, வளமான இலாகாவை தி.மு.க., தானே பெற்றுக் கொண்டது.கருணாநிதி, கரசேவைக்கு எதிரான கொள்கையுடையவர் என்றால், ஏன் பா.ஜ., கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். இதை பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது. இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் Empty Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum