புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_m10பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 3:13 am


ஒரு 'பண்ணையாரும் பத்மினி’ காரும்... அவ்வளவுதான் கதை!

தொலைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி என தன் கிராமத்துக்கு எதையும் அறிமுகப் படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விடும் பாசக்காரப் பண்ணையார் ஜெயப்பிரகாஷ். அவரிடம் ஒரு ஃபியட் பத்மினி கார் வந்து சேர்கிறது. ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி துளசி, கார் டிரைவர் விஜய் சேதுபதி என அனைவரின் பிரியத்¬யும் சம்பாதிக்கிறது பத்மினி. இந்த நிலையில் பண்ணையார் குடும்பம் அந்தக் காரைப் பிரிய வேண்டிய சந்தர்ப்பம். பண்ணையார் - பத்மினி இடையிலான அன்பு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!

யூ-டியூப் ஹிட், டி.வி. ஷோ விருது... எனக் கவனம் குவித்த குறும்படத்தை, திரைப்படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்குமார். சிகரெட், புகையிலை, மது... என போதைச் சமாசாரங்கள் படத்தில் இல்லை. அட, படத்தில் வில்லன்கூட இல்லை. இப்படி நல்லன மட்டுமே காட்டி ஒரு படம் தந்த இயக்குநருக்கு... அன்லிமிட்டெட் அன்பு!

படத்தின் ஹீரோ... ஜெயப்பிரகாஷ். வெள்ளந்திப் பாசக்காரராக, 'எனக்கு டபுள்ஸ் ஓட்டத் தெரியாதே’, 'கியர் கம்பி இல்லைன்னா என்னடா.. வந்து தேடிக்கலாம். முதல்ல வண்டியை எடு’ என்று நிலவரம் புரியாமல் கலவரம் பண்ணும்போதும், காரைப் பார்க்கும்போதெல்லாம் துள்ளல் நடையோடு ஓடிவருவதும், தானே துடைத்து மகிழ்வதுமாக... அசத்தல். பண்ணையாரின் மனைவியாக துளசி... பக்கா. ஜெயப்பிரகாஷ§டன் இணைந்து முறைத்துக்கொள்வது, இடித்துக் கொள்வது, காதலில் நெகிழ்வது என கிளாசிக் ரொமான்ஸ் கொடுத்திருக்கிறார். (அதுவே சமயங்களில் 'ஓவர் டோஸ்’ ஆவதைத் தவிர்த்திருக்கலாம்!)

'செகண்ட் ஹீரோ’ விஜய் சேதுபதிக்கு, பண்ணையாரின் காதல் அத்தியாயத்துக்கு இடம்விட்டு, கிடைத்த இடத்தில் 'டாப் கியர்’ தட்ட வேண்டிய நெருக்கடி. ஐஸ்வர்யா மீதும், பச்சைக் கலர் பத்மினி மீதும் காதல்கொண்டு அலையும் இடங்களில் சடசடவென கியர் மாற்றி ரசிக்கவைப்பவர், ஆங்காங்கே கலகலக்கவும் வைக்கிறார்.

'பீடை’யாக வரும் பாலசரவணன்தான் படத்தின் காமெடி ஏரியாவுக்கான மொத்தக் குத்தகை. 'பட்டப்பேருதான் பீடை.. பெத்தவங்க வெச்ச பேரு பெருச்சாளி’ என்று கெத்துக் காட்டும்போது, 'அண்ணே ரொம்பப் பேசுறாய்ங்க... நான் வேணா 'நல்லா இருங்க’னு சொல்லட்டா’ என்று கொதிக்கும்போதும் அதிருது அரங்கம்!

கதை நிகழும் காலகட்டத்தில் ஏன் இத்தனை குழப்பம்? 'அண்ணாமலை’ படம், சக்திமான் சீரியல், மாட்டுவண்டி, மினி பஸ்... எனத் தாறுமாறாக எகிறுது டைம்லைன். பண்ணையார் பத்மினியை ஓட்டுவதைத் தவிர, எந்தச் சவால் சுவாரஸ்யமும் திரைக்கதையில் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் திரும்பத் திரும்ப காரை ஓட்டிக்கொண்டே இருப்பது... சரியா சார்?

வருடல் பாடல்களில் வசீகரிக்கும் ஜஸ்டின் பிரபாகரனின் அறிமுக இசை, எண்பதுகளின் காலகட்ட பின்னணி இசையிலும் செம ஸ்கோர். பத்மினியின் உள்ளிருந்து, மேல் இருந்து, வெளியில் இருந்து... அந்தக் காரையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறது கோகுல் பினோய்-யின் ஒளிப்பதிவு.

சின்னக் கதை. ரொம்ப நீ...ளமான திரைக்கதை. பத்மினியில் பயணம் அழகுதான். ஆனால், அலுப்பு அதிகம்!

- விகடன் விமர்சனக் குழு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 3:15 am

தினமலர் விமர்சனம்


ஒரு பழைய காருக்கும், அதனால் ஈர்க்கப்படும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் உணர்வுகளின் சங்கமமே பண்ணையாரும் பத்மினியும். ஊருக்கு நல்லது செய்யும் பண்ணையாரும், (ஜெயபிரகாஷ்) அவரது மனைவி செல்லம்மாளும் (துளசி), இரவலாக வந்த பிரிமியர் பத்மினி காரின் மேல், அலாதி பாசம் கொள்கின்றனர். கார் ஓட்ட தெரியாத பண்ணையார், வேலைக்கு வைக்கும் ஓட்டுனர் முருகேசன் (விஜய் சேதுபதி) காரின் பால் ஈர்க்கப்படுகிறான்.

ஒரு கட்டத்தில், காரே பண்ணையாருக்கு சொந்தமாகி விட, அந்த சந்தோஷம் நிலைக்க விடாமல், பிறந்த வீட்டிலிருந்து ஏதையாவது சுருட்டிக் கொண்டு போவதிலேயே குறியாக இருக்கும் பண்ணையாரின் மகள் உஷா (நீலிமாராணி), காரை கொண்டு போய் விடுகிறாள். காருக்காக ஏங்குகின்றனர் பண்ணையார் தம்பதியும், முருகேசனும், பத்மினி திரும்ப அவர்களுக்கு கிடைத்தாளா? என்பதை இனிமையாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் அருண்குமார்.

சம்பவங்கள் ஏதும் இன்றி, காரைச் சுற்றியே கதை வலம் வருவது, ஒரு கட்டத்தில், தீராத அலுப்பைத் தருகிறது. சுவாரஸ்யம் சேர்க்க பண்ணையார் தம்பதிகளின் ஊடல் கலந்த காதலையும், முருகேசனின் காதலி, மலர்விழி (ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ்) கதையையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர். துளசிக்கு, இது குறிப்பிடத்தக்க படம். சரிதாவுக்கு அடுத்து, பெரிய கண்களுடன், அவர் காட்டும் உணர்வு பாவங்கள், முதன்மையிடம் பெறுகின்றன. ஜெயபிரகாஷ் கார் பித்து கொண்ட, பெரியவர் பாத்திரத்தில், வெளுத்து வாங்குகிறார். விஜய சேதுபதி, ஒரு ஓட்டுனராக வாழ்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிகம் வேலை இல்லை. வந்த வரையில் சோடையில்லை. விஜய சேதுபதியின் உடல் மொழி, பல இடங்களில் அவருக்குள் இருக்கும் தேர்ந்த நடிகரை அடையாளம் காட்டுகிறது. பழைய கார் பற்றிய கதை என்பதால், காட்சிகளை மெகா சிரியல் அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம். வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள், இன்னமும் வெறுப்பேற்றுகின்றன. ஆனாலும், அறிமுக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் சரக்கு உள்ளவர் என்பதை, சில பாடல்கள் உணர்த்துகின்றன. எனக்காக பொறந்தாயே என்ற பாடல் இன்னும் சில நாட்களுக்கு நினைவில் நிற்கும். கோகுல் பினாய், கண்களை உறுத்தாத கோணங்களில் படம் பிடித்திருக்கிறார். இயல்பு தன்மை மாறாமல் இயக்கி இருக்கிறார் அருண்குமார். திரைக்கதை என்னும் வித்தையை, அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், பண்ணையாரும் பத்மினியும் - இனிய பயணம்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 3:17 am

குமுதம் சினி விமர்சனம்

இவ்வளவு தெளிவான, நீரோட்டமான, உற்சாகமான, யதார்த்தமான, நெகிழ்ச்சியான ஒரு படத்தைத் தமிழில் பார்த்து எத்தனை வருடங்களாயிற்று?

இரவலாக வந்த பச்சை நிற பத்மினி காரின் மீது பண்ணையார் குடும்பத்துக்கும், டிரைவருக்கும் ஒரு காதல் வந்துவிட, அப்புறம் என்ன ஆச்சு? - ஒரு கவனிக்கப்பட்ட குறும்படத்தை கண்களில் ஒற்றிக்கொள்வது போல் தந்திருக்கும் இயக்குநர் அருண்குமாருக்கு ஒரு புத்தம் புதிய காரைப் பரிசாக அளிக்கலாம்!

மூன்று ஃபைட், நான்கு பாடல், எட்டுபஞ்ச் டயலாக் வேண்டும் என்று அட்ராஸிட்டி பண்ணும் ஹீரோக்கள் காலத்தில், தனக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்திருந்தும் துணிந்து நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு ஜே!

தனக்கு வேலை போய்விடும் என்பதால் பண்ணையாருக்கு டிரைவிங் கற்றுத் தராமல் அவர் ஆடும் போங்காட்டம், கணவன், மனைவி அன்னியோன்யத்தின் உருக்கம் தெரிந்து கற்றுத் தரும் பாங்காட்டம், கார் இல்லை என்பது தெரிந்ததும், "அம்மா கார்ல டுர்னு பான சீக்கிரம் வந்துடுவீங்க. மாட்டு வண்டியில் போனா, நீங்களும் ஐயாவும் ஜாலியா பேசிக்கிட்டு வரலாம் என்று சொல்லும் நெகிழாட்டம், என்று உயரே உயரே பறந்திருக்கிறார். மேக் அப் இல்லாத முகம், சிவந்த கண்கள் என்று விஜய் ரொம்பவே இயல்பு.

பேரிளம்பருவப் புனிதக் காதலை ஜெய்பிரகாஷ்-துளசி போல் யாராலும் செய்ய முடியாது என்று சத்தியம் செய்துவிடலாம். அந்த நேசம், ஊடல், விட்டுக் கொடுக்கும் பாங்கு என்று நெகிழ்ந்து போகிறது மனசு.

பீடை ஸாரி பெருச்சாளி (பாலா) கலகல. அவர் வாய் திறந்து பாராட்டினாலே எதிராளி காலி என்ற ராசி இருக்க, க்ளைமாக்ஸில் அவரால்தான் கார் கிளம்புவதாக ராசியை மூட்டை கட்டியிருப்பது நைஸ்!

சின்ன மூக்கும் பெரிய கண்ணுமாய் ஐஸ்வர்யா மண் வாசனை.

அட்டக்கத்தி தினேஷின் ஃப்ளாஷ்பேக்கான அந்த ஐந்து ரூபாய் சிறுவன் பாத்திரம் கவிதை.

ஒரு காட்சியில் கைக்குழந்தையுடன் ஸ்னேகா. கார் சமாசாரத்தை பண்ணையார் மறைக்க முயல, மனைவியின் கோபத்தால் உண்மையைச் சொல்ல, "தெரியும்பா. அது உங்களுக்குத்தான் என்று ஸ்னேகா சொல்வது நெகிழ்ச்சியான காட்சி. ஆனால் காரின் சொந்தக்காரர் செத்துப் போவதை ஏதோ, "நாளைக்கு சனிக்கிழமை என்பது போல சாதாரணமாக நகர்த்தியிருக்க வேண்டாம்! நீலிமா கேரக்டரிலும் இயற்கைத்தனம் மிஸ்ஸிங்.

"உனக்காகப் பிறந்தேனே, "நம்ம ஊரு வண்டி பாடல்கள் பளிச் என்றால் ஜஸ்டின் பிரபாகரனின் உயிரோட்டமான ரீரெகார்டிங் இதயத்தை வருடுகிறது.

கடைசியில் கதையின் ஓட்டத்தை, நெகிழ்ச்சியை, அன்பை என்னமோ புரிந்து கொண்டது போல "நடித்திருக்கும் அந்த பத்மினி காருக்கு அதன் ஓனர் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!

பண்ணையாரும் பத்மினியும் - டாப் கியர்!




ஆஹா: திரைக்கதை, விஜய்சேதுபதி, ஜெயப்பிரகாஷ், துளசி




ஹிஹி: காரை மட்டுமே கதை சுற்றிவருவது.




குமுதம் ரேட்டிங் - நன்று


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 19, 2014 4:57 pm

படம் மிக நன்று .... ஆனால் நீண்ட நேரம் ஓடுவது போல பிரம்மை ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக