Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்
Page 1 of 1
சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் காயம்; பொலிஸ் ஸடேஷனுக்கு தீ வைப்பு
சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசிய வழக்கு இன்று நடைபெற இருந்தது. இவ்வழக்கில் நேரில் ஆஜராக இருந்தார் சுப்பிரமணியசாமி. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
முட்டைவீச்சு சம்பவம் போல் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸாரும், அதிரடிப்படையும் குவிக்கப்பட்டிருந்தனர்.
சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசிய சம்பவத்தன்று(17.2.09) கோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக பொலிஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை பொலிஸ் நேற்று கைது செய்துள்ளது.
முதல் குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள வக்கீல் ரஜினிகாந்த் உள்ளிட்ட மற்றவர்களை பொலிஸ் தேடி வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள், தாங்களாகவே முன்வந்து சரண் அடைவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று சுப்பிரமணியசாமி வழக்கு நடைபெறும் சமயத்தில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய போலிசார் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் கொடுத்த புகாரின் படி முதலில் சுப்பிரமணியசாமியை கைது செய்யச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொலிஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் இது கைகலப்பானது. இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
வழக்கறிஞர்கள் கல்வீச்சில் இறங்கினர். செருப்புகளை வீசினர். போலிசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் அதிரப்படையினரும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.
இரு தரப்பு மோதலில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நொறுங்கிப்போயின. அங்கிருந்த முக்கிய ஆவணங்களை கிழித்து எறிந்தனர். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.
பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
பத்திரிகையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.
வழக்கறிஞர்கள் மீது போலிசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 மணி நேரத்திற்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம்.
இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்,
‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவித்தனர்.
சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசிய வழக்கு இன்று நடைபெற இருந்தது. இவ்வழக்கில் நேரில் ஆஜராக இருந்தார் சுப்பிரமணியசாமி. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
முட்டைவீச்சு சம்பவம் போல் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸாரும், அதிரடிப்படையும் குவிக்கப்பட்டிருந்தனர்.
சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசிய சம்பவத்தன்று(17.2.09) கோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக பொலிஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை பொலிஸ் நேற்று கைது செய்துள்ளது.
முதல் குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள வக்கீல் ரஜினிகாந்த் உள்ளிட்ட மற்றவர்களை பொலிஸ் தேடி வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள், தாங்களாகவே முன்வந்து சரண் அடைவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று சுப்பிரமணியசாமி வழக்கு நடைபெறும் சமயத்தில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய போலிசார் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் கொடுத்த புகாரின் படி முதலில் சுப்பிரமணியசாமியை கைது செய்யச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொலிஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் இது கைகலப்பானது. இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
வழக்கறிஞர்கள் கல்வீச்சில் இறங்கினர். செருப்புகளை வீசினர். போலிசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் அதிரப்படையினரும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.
இரு தரப்பு மோதலில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நொறுங்கிப்போயின. அங்கிருந்த முக்கிய ஆவணங்களை கிழித்து எறிந்தனர். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.
பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
பத்திரிகையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.
வழக்கறிஞர்கள் மீது போலிசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 மணி நேரத்திற்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம்.
இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்,
‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவித்தனர்.
Guest- Guest
Re: சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்
அவர்களை கைது செய்ய போலிசார் உயர்நீதிமன்றத்திற்குள் வந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் சுப்பிரமணிய சாமி மீது சுமத்தப்பட்ட வழக்கில் முதலில் அவரை கைது செய்யுங்கள். அப்புறம் எங்களை கைது செய்யுங்கள் என்று வாக்குவாதம் செய்தார்.
போலிசார் அதை காதில் வாங்காமல் வழக்கறிஞர்களை கைது செய்வதில் மும்முரமாக இருந்தனர். மேலும் ஐந்து பெண் வழக்கறிஞர்களையும் கைது செய்யப்போவதாக முற்பட்டனர். இதனால் பொலிஸாருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.
அந்த நேரத்தில் தூரத்தில் கலர் சட்டை போட்ட ஒருவர் அருகில் இருந்து கல்லை எடுத்து போலிசார் மீது வீசினார். உடனே தயாராகவே இருந்த போலிசார் கண்மூடித்தனமாக வழக்கறிஞர்களை தாக்கினர்.
வழக்கறிஞர்களின் வாகனங்களை எல்லாம் தேடித்தேடி காவல்துறையினர் அடித்து நொருக்கினர். உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை திட்டமிட்டே ஒருவரை நிற்கச்சொல்லி, கற்களை தயாராக வைத்திருக்கச் சொல்லியிருக்கிறது.
இது காவல்துறை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றிய வன்முறை நாடகம். இந்த நாடகத்தால் வழக்கறிஞர்கள் சமுதாயம் திட்டமிட்டு தாக்கப்பட்டது.
100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
டிஜிபி, கமிஷனர் விரைந்தனர்:
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறை குறித்து தகவல் அறிந்ததும் டிஜிபி ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அதிரடிப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
துணை ஆணையர் உள்பட 20 போலீஸார் காயம்:
இந்த வன்முறையில் துணை ஆணையர் சாரங்கன் உள்பட 20 போலீஸார் காயமடைந்திருப்பதாக காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில வக்கீல்கள் போலீஸாரின் தடியடியில் சிக்கி மண்டை உடைந்ததாக வக்கீல்கள் தரப்பில் கூறப்பட்டது.
நீதிமன்ற கேட்டை மூடிய மதுரை வக்கீல்கள்:
சென்னையில் நடந்த தடியடி, மோதல் சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும் மதுரை உயர்நீதி்மன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர்.
உயர்நீதிமன்றக் கிளை வாசல் கேட்டை இழுத்து மூடி அங்கு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குதித்தனர். இதனால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே இன்று மாலை மூண்ட இந்த பெரும் ரகளையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சுவாமி மீது தாக்குதல்-பாராட்டி போஸ்டர்கள்:
இதற்கிடையே சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டதை பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சுப்பிரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல 'சிறப்பு செய்யுங்கள்' என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன
போலிசார் அதை காதில் வாங்காமல் வழக்கறிஞர்களை கைது செய்வதில் மும்முரமாக இருந்தனர். மேலும் ஐந்து பெண் வழக்கறிஞர்களையும் கைது செய்யப்போவதாக முற்பட்டனர். இதனால் பொலிஸாருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.
அந்த நேரத்தில் தூரத்தில் கலர் சட்டை போட்ட ஒருவர் அருகில் இருந்து கல்லை எடுத்து போலிசார் மீது வீசினார். உடனே தயாராகவே இருந்த போலிசார் கண்மூடித்தனமாக வழக்கறிஞர்களை தாக்கினர்.
வழக்கறிஞர்களின் வாகனங்களை எல்லாம் தேடித்தேடி காவல்துறையினர் அடித்து நொருக்கினர். உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை திட்டமிட்டே ஒருவரை நிற்கச்சொல்லி, கற்களை தயாராக வைத்திருக்கச் சொல்லியிருக்கிறது.
இது காவல்துறை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றிய வன்முறை நாடகம். இந்த நாடகத்தால் வழக்கறிஞர்கள் சமுதாயம் திட்டமிட்டு தாக்கப்பட்டது.
100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
டிஜிபி, கமிஷனர் விரைந்தனர்:
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறை குறித்து தகவல் அறிந்ததும் டிஜிபி ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அதிரடிப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
துணை ஆணையர் உள்பட 20 போலீஸார் காயம்:
இந்த வன்முறையில் துணை ஆணையர் சாரங்கன் உள்பட 20 போலீஸார் காயமடைந்திருப்பதாக காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில வக்கீல்கள் போலீஸாரின் தடியடியில் சிக்கி மண்டை உடைந்ததாக வக்கீல்கள் தரப்பில் கூறப்பட்டது.
நீதிமன்ற கேட்டை மூடிய மதுரை வக்கீல்கள்:
சென்னையில் நடந்த தடியடி, மோதல் சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும் மதுரை உயர்நீதி்மன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர்.
உயர்நீதிமன்றக் கிளை வாசல் கேட்டை இழுத்து மூடி அங்கு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குதித்தனர். இதனால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே இன்று மாலை மூண்ட இந்த பெரும் ரகளையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சுவாமி மீது தாக்குதல்-பாராட்டி போஸ்டர்கள்:
இதற்கிடையே சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டதை பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சுப்பிரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல 'சிறப்பு செய்யுங்கள்' என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம்
» டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம்
» இரு பஸ்கள் மோதல் 20 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» சீனாவில் 2 சுரங்க ரெயில்கள் மோதல்; 260 பேர் படுகாயம்
» டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம்
» இரு பஸ்கள் மோதல் 20 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» சீனாவில் 2 சுரங்க ரெயில்கள் மோதல்; 260 பேர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|