புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
81 Posts - 62%
heezulia
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
6 Posts - 5%
eraeravi
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
227 Posts - 37%
mohamed nizamudeen
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_lcapஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_voting_barஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 16, 2014 2:07 am

இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  1960125_663022160406655_201918902_n

இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  1661558_663022217073316_86667429_n

பாலு என்ற பெயரில் திரைப்படத் துறையில் பளிச்சென ஒளிவீசியவர்கள் பலர். அவர்களுள் ஒளிகளாலேயே ஒளியூட்டப் பட்ட பெளர்ணமி நிலவு பாலு மகேந்திரா என்னும் உண்ணத ஒளிப்பதிவுப் படக் கலைஞர். கோகிலா, மூன்றாம்பிறை, நெல்லு, பிரயாணம், மணவூரிபாண்டவலு, நீர்க்காசனா முதலிய திரைப்படங்களைத் தம் கேமராவால் வெற்றி பெறச் செய்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருதுகளைப் பெற்றவர் பாலு மகேந்திரா.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்தவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர், இலக்கியவாதி, இப்போது நடிகருமான பாலு மகேந்திரா என்று எல்லோராலும் அழைக்கப் பெறும்  பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா. ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும், உயர்கல்வியை இலண்டனிலும் பயின்றார். புனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலையைப் பயின்றார். தங்கப் பதக்கம் பெற்ற ஒளிப்பதிவுக் கலைஞராக திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளிவந்தார். ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.

20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை, கவிதை ,குறும்படம், நடிப்பு திரைப்படம், புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை இளம்பருவத்திலேயே பதித்துக்கொண்டவர்.

இலக்கியவாதியும் எழுத்தாளருமான பாலு மகேந்திரா இலங்கையிலிருந்த காலத்தில் தேனருவி என்னும் நூலின் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். பிற்காலத்தில் கதை நேரம் என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலி நாடங்களில் நடித்துள்ளார்.
விளக்குகளைப் பயன்படுத்தாமல் இயற்கை ஒளியில் காட்சிகளை ஒளிப்பதிவாக்கிய பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு காலம் திரையுலக வரலாற்றில் பளிச்சிடும் வண்ண எழுத்துகளால் பொறிக்கப் பட்ட காலம். ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்தார். மலையாளப் படமான ‘நெல்லு’ அவரது ஒளிப்பதிவுக்குத் தேசிய விருது, கேரள அரசின் விருது இரண்டையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சேதுமாதவன், மகேந்திரன், மணிரத்தினம் போன்ற பலரிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திரா கன்னடப் படமான ‘கோகிலா’ வை முதன் முதலில் இயக்கினார். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்று தென்னிந்தய மொழிகளில் பல படங்களை இயக்கினார்.

மொழி கடந்த ஒரு கலைஞனாக வாழ்ந்த பாலு மகேந்திரா ‘அழியாத கோலங்கள்’ படத்தில் தொடங்கி 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி  கணபதி', 'அது ஒரு கனா காலம்' 'தலைமுறைகள்' முதலிய 26 திரைப்படங்களை இயக்கினார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளர், நடிகர், எடிட்டர் என்று பல வண்ண மயமான கோலங்களைத் தம் முத்திரையோடு அழியாத கோலங்களாகப் போட்டுச் சென்றுள்ளார்.

அவர் பணியாற்றிய சங்கராபரணம், கோகிலா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், பிரயாணம், மூடுபனி, நீங்கள்கேட்டவை, மறுபடியும், சத்மா  போன்ற பல படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

ஷோபா, அர்ச்சனா, மெளனிகா, வினோதினி, பானுசந்தர் என்று நடிகர், நடிகையர் பலரை உருவாக்கிய பாலுமகேந்திராவின் சீடர்கள் வெற்றிப் பட இயக்குநர்களான பாலா, வெற்றி மாறன், சீமான், ராம், சுகா முதலியோர்..

5 தேசிய விருதுகள், 2 கேரள அரசின் விருதுகள், 1 கர்நாடக அரசின் விருது, 3 பிலிம்ஃபேர் விருதுகள் 2 நந்தி விருதுகளைக் குவித்த இவர் தம் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தார். இத்தகு மாக்கலைஞர் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.
எப்போதும் பொய் முகம் காட்டி நடிக்கும் ஏமாற்று நிறைந்த திரைப்படத் துறையில் ஒளிவு மறைவில்லாமல் தம் மேல் எழும் விமர்சனங்கள் விவாதங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உண்மையைப் பேசித் தம் நிஜ முகத்தைக் காட்டியவர் பாலுமகேந்திரா. திருமதி அகிலா அவரது முதல் மனைவி. தம் திரைப்படங்களில் நடித்த நடிகை ஷோபாவை இரண்டாவதாகவும் மெளனிகாவை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார்.

“தமிழை மறந்துடாதீங்கப்பா.. இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...” இது அவர் நடிகராக அறிமுகமான முதல் திரைப்படத்தில் பேசிய இறுதி வசனம். முதல் படம் மட்டுமல்ல இறுதிப் படமும் அவர் நடித்த ஒரே படமுமான ‘தலைமுறைகள்’ திரைப்படத்தில் பாலுமகேந்திரா பேசிய இறுதி வசனம் இது.

இதுவே தமிழ் ரசிகர்களிடம் அவர் வைத்த இறுதி கோரிக்கை. அந்தக் கோரிக்கைத் திரைப்படங்கள் வாழும் வரை, ஒளிப்படக் கருவிகள் வாழும் வரை தமிழ் ரசிகர்கள் மனத்தில் தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

கேமராவின் ஒளிக்கற்றைகளாகி திரைப்பட வரலாற்றில் தலைமுறைகள் தோறும் மெளனமாக இசைத்துக் கொண்டே இருக்கும் பாலு மகேந்திரா என்ற அந்த சந்த்யா ராகம்!



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 16, 2014 2:18 am

பாலு மகேந்திரா மனம் விட்டு பேசிய பேச்சுக்களிலிருந்து:
-
நான் என் முதல் படத்திலேயே இளையராஜாவைதான்
இசையமைக்க வைக்கணும் என்று நினைத்தேன்.
ஆனால் அவரை நெருங்கவே முடியல.
அவ்வளவு பரபரப்பா இருந்தார் அவர்.
-
என்னுடைய மூன்றாவது படமான மூடுபனி படத்தில்தான்
அவரை சந்திக்க முடிந்தது. மூடுபனி எனக்கு மூன்றாவது படம்.
இளையராஜாவுக்கு 100 வது படம்.
-
நான் அப்போ அவரிடம் சொன்னது இப்பவும் நல்லா
ஞாபகம் இருக்கு. என் மவுனங்களை உங்களால்
புரிஞ்சுக்க முடிஞ்சுதுன்னாதான் என் சப்தங்களையும்
உங்களால் புரிஞ்சுக்க முடியும்னு சொன்னேன்.

அவர் புரிஞ்சுகிட்டார். எந்த இடத்தில் ரீரெக்கார்டிங்
வேணாம்னு நான் நினைச்சேனோ, அந்த இடத்தில்
மவுனமாக விட்டுவிடுவார்....
-


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Feb 16, 2014 10:13 am

பாலு மகேந்திரா ஒரு ஆலமரம். நிறைய சிட்டுகுருவி இளைஞர்களுக்கு(வெற்றி மாறன், பாலா சீனு ராமஸ்வாமி சுகா அமீர் ராம் இன்னும் நிறைய) நிழல் மட்டும் கொடுக்கவில்லை நிஜ வாழ்க்கையும் கற்று கொடுத்தது. ஒரு இயக்குனரை அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து மற்ற இயக்குனர்கள் பார்த்தார்கள் என்றால் அது பாலு ஒருவராக தான் இருக்கும். அவர் படைப்பாளி திரை படத்திற்கு மட்டுமல்ல பல இளைஞர்களுக்கும் தான். பாலு இல்லாத வீட்டை பார்க்கும் அவரது இயக்குனர் குழந்தைகள் நிச்சயம் கதறி அழத்தான் செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இழந்தது நிஜத்தையும் நேசத்தையும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 16, 2014 1:22 pm

இவர் இலங்கையை சேர்ந்தவர் என்று எனக்கு இன்று தான் தெரியும் ,
அன்னாரின் ஆத்மா சாந்தியைடைய பிரார்த்திக்கிறேன்

தர்மா wrote:பாலு மகேந்திரா ஒரு ஆலமரம். நிறைய சிட்டுகுருவி இளைஞர்களுக்கு(வெற்றி மாறன், பாலா சீனு ராமஸ்வாமி சுகா அமீர் ராம் இன்னும் நிறைய) நிழல் மட்டும் கொடுக்கவில்லை நிஜ வாழ்க்கையும் கற்று கொடுத்தது. ஒரு இயக்குனரை அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து மற்ற இயக்குனர்கள் பார்த்தார்கள் என்றால் அது பாலு ஒருவராக தான் இருக்கும். அவர் படைப்பாளி திரை படத்திற்கு மட்டுமல்ல பல இளைஞர்களுக்கும் தான். பாலு இல்லாத வீட்டை பார்க்கும் அவரது இயக்குனர் குழந்தைகள் நிச்சயம் கதறி அழத்தான் செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இழந்தது நிஜத்தையும் நேசத்தையும்

உண்மை அண்ணா



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Feb 17, 2014 7:41 am

இவரைப் பற்றி நிறைய கேள்விபட்டதில்லை ஆனால் எந்த புத்தகம்
இவரைப் பற்றி கட்டுரை, அருமையான மனிதர், உண்மையான மனிதர்
என்று. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 18, 2014 9:11 pm

vishwajee wrote:இவரைப் பற்றி நிறைய கேள்விபட்டதில்லை ஆனால் எந்த புத்தகம்
இவரைப் பற்றி கட்டுரை, அருமையான மனிதர், உண்மையான மனிதர்
என்று. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
அது அலை ஓசை என்னும் மாதமிருமுறை இதழில் நான் எழுதிய இரங்கல்.



இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Aஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Aஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Tஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Hஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Iஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Rஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Aஇசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக