புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
3 Posts - 7%
heezulia
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்..


   
   
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 16, 2014 10:15 am

சிவகாமியின் சபதம் – நாடகம் போகிறேன் என்று முகநூலில் சொன்னவுடன் தொலைபேசித்து வீடு வரை வந்து பாஸ் கொடுத்த நண்பருக்கு மிக நன்றி.. அவருக்குப் பழனி வேலரின் அருள் என்றும் கிடைக்கும்..!

ம்ம் ஆகக் கூடி இன்று பதினைந்தாம் திகதி சுபயோக சுப தினத்தில்மாலை வேளை ஆறு மணிக்கு அல்புஸ்தான் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் சி.ச பார்த்து விட்டேன்./டோம்..
ஐநூறு பேர் அமரக் கூடிய ஆடிட்ட்டோரியத்தில் குறைந்தபட்சம் நூற்றைம்பது பேர் இருந்திருப்போம்..உள்ளே நுழைந்தவுடனே மனக் கன்று எண்ணங்களைப்பின்னோக்கி ஓட வைத்தது..

நாக நந்தி, பரஞ்ஜோதி சிவகாமி,மாமல்லர் வஜ்ரபாகு என்ற மகேந்திரச் சக்ரவர்த்தி, குண்டோதரன், ஆயனச் சிற்பி ஆகியவர்கள் சொல்லோவியத்தில் கல்கியினாலும், உயிரோவியத்தால் வினு, மணீயம் போன்றவர்களாலும் மனதாழத்தில் புதைந்து கிடந்தவர்கள் மீண்டு வந்து வலம் வர ஆரம்பிக்க எதிரே இருந்த வெள்ளைக் குட்டித்திரையில் படம் வந்தது..

கலை- தோட்டாதரணி..அவர் செய்த அனைத்துப் படங்களும் அவரது கைவண்ணமும் இருபது நிமிடம் மேலாகத் தோன்றி பின் அரங்கத்தில் இருள் படர பெளர்ணமி போல வட்ட ஒளி வர..

காவி உடை உடுத்தி சிறுத்தொண்டர் கூறுவது போல் ஆரம்பித்தது கதை.
.எடுத்த எடுப்பிலேயே யானை மேல் பரஞ்சோதி வேலெறிய பின்சில மக்கள்..யானையின் பிளிற்ல் கேட்க, பின் பரஞ்ஜோதியை கைது செய்து காவலன் அழைத்துச் செல்ல என வேகம் பிடித்தது..

நான்கு பாகங்களை இரண்டே கால் மணி நேரத்தில் அடக்கியது சாதனை தான்..இண்டர்வெல் எதுவும் விடவில்லை..யாரும் எழுந்தும் செல்லவில்லை..

தோட்டா தரணியின் செட்டிங்க்ஸ்…- ஆறு அல்லது ஏழு காட்சிகளில் இருக்கும்- வெகு அற்புதமாக இருந்தது..காஞ்சிக் கோட்டை, சிற்பங்களுடன் கூடிய ஆயனச் சிற்பியின் வீடு, புலிகேசியின் கோட்டை, என..

பரஞ்சோதியாக நடித்தவர் நன்கு ஒல்லியாக இருந்தாலும் வசனம் மறக்காமல் பேசினார்.. முதல் காட்சியிலோ அதற்கடுத்தோ – எதற்கோ எனிவே என்று அவரது வசனத்தில் வந்துவிட அதையும் சமாளித்துவிட்டுத் தொடர்ந்தார்..மகேந்திரராக நடித்தவரும் நாக நந்தி கம் புலிகேசியாக நடித்தவரும் குறையில்லாமல் நடித்திருந்தனர்..என்ன கொஞ்சம் புஷ்டியாக இருந்தார்!!

மாமல்லராக நடித்தவரும் சிவகாமி யாக நடித்தவரும் கொஞ்சம் ரொமான்ஸ் சமயங்களில் இயல்பாக இருந்தனர்..உணர்ச்சி வசப்பட்டுப்பேசும் தருணங்களில் கொஞ்சம் காலை வாரி விட்டாலும் சமாளித்துத் தொடர்ந்திருந்தனர்..

சிவகாமிக்குத் தான் – இரண்டே இரண்டு காஸ்ட்யூம்.. முதல் நான்கு காட்சிகளில் பாவாடை சட்டை தாவணி – ப்ளூ அண்ட் பிங்க் கலர் அப்புறம் பஃப் கை என வந்தார்.. பின் வந்த காட்சிகளில் டார்க் ப்ளூ அல்லது ப்ளாக் ஸாரியில் இருந்தார்.. கொஞ்சம் நீள வசனம் பேசி நடித்திருந்த்வருக்கு ஓரிரண்டு டான்ஸ் முத்திரைகள் வைத்திருக்கலாம்..

சபதம் செய்யும் போது கண்ணில் கனல் அவ்வளவாக வரவில்லை..கண்மை தான் தெரிந்தது.. இறுதிக் காட்சியில் கூட சரி நான் இறைவனையே தஞ்சமாகப் போகிறேன் என்று முடிக்கையிலும் (தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே) கொஞ்சம் ஒரு நாட்டிய முத்திரை பதித்திருக்கலாம்..

ஜெயக்குமார் என்பவர் இயக்கம்.. நாடக இறுதியில் நடித்த அனைவரும் மேடையில் நிற்க நன்றி நவின்றார்.. அவர் தான் பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவனாக நடித்தவராம்.. தோட்டா தரணியும் வந்திருந்தது இனிய ஆச்சர்யம்.. அவர் வந்த போது அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது..

நாக நந்தியாக நடித்தவர் முயற்சி செய்து இயல்பாக நன்றாக நடித்திருந்தார்.. மற்றும் மஸ்கட் கலைஞர்கள் சிலரும் மக்களாக நடித்திருந்தனர்..

மகேந்திர பல்லவரை மண்டபப் படிக்கட்டிலேயே உயிர்விடுவதாகக் காண்பித்தது கொஞ்சம் உறுத்தியது..

திரும்பி வந்தால் உடன் வந்த மாமி என்னுடன் பேசவில்லை..ஏங்க எப்படி இருக்குங்க எனக் கேட்டேன்..

உங்களுக்கு

எனக்குப் பிடிச்சுருக்குங்க..கடல் கடந்த தேசத்தில-மஸ்கட்ல இருக்கோம்..தமிழ் கேக்க நன்னா இருக்கு”

ம்க்,கும் எனக்குஸோ ஸோ தாங்க என்றார் மாமி..குரலில் சற்றே ஆற்றாமை..

“ஏங்க”

“ம் மகேந்திர பல்லவர் நா என்ன ஆஜானுபாகுவான கேரக்டர்..வஜ்ரபாகுன்னுல்லாம் எப்படி வேஷம் போடுவார்..இங்க தலைப்பாகை கட்டி வஜ்ரபாகுன்னு சொல்றாங்க..எனக்குப் பிடிக்கலை” என்று சொல்லி நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லை..

“ உங்களையாச்சும் மகேந்திர பல்லவராகப் போட்டிருக்கலாம்.. ஆஜானுபாகுவாக நீங்க இருக்கேள்”” என்றார்..

ம்ம் எனக்குத் தூக்கம் போயிற்று!!.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக