Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
+9
அகிலன்
balakarthik
ஈகரையன்
Aathira
T.N.Balasubramanian
ராஜா
பாலாஜி
ஜாஹீதாபானு
soplangi
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
First topic message reminder :
சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.
இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.
-- மாலைமலர்
சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.
இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
ஈடு செய்ய முடியாத இழப்பு
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
தரமான ஒளிப்பதிவாளர். திறமையான இயக்குனர். மரணம் தமிழ் சினிமாவிற்கு இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
-
ஈடு செய்ய முடியாத இழப்பு
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றேன்
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றேன்
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
ஆழ்ந்த இரங்கல்கள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்
ஒரு உன்னத சினிமாக் கலைஞன்:பாலு மகேந்திரா!
தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்த அமரர்.பாலு மகேந்திரா ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும்,உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் பின் நாளில் சிங்களப்படங்களை இயக்கியவருமான ஜோதேவானந்த் அவர்கள் இயக்கிய பாசநிலாவிலும் பங்குபற்றியதாக தகவல் உண்டு.நாடகங்களிலும் விரும்பி நடித்தார்.எனினும் பிரபல ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.லண்டனில் தன் உயர்பட்டப்படிப்பை முடித்தவர் பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பற்றிக் கற்றுத் தேர்ந்தார்.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை,கவிதை,குறும்படம்,நடிப்பு(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்),திரைப்படம்,புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை அந் நாளிலேயே பதித்துக்கொண்டார்.
இலங்கையிலிருந்த காலத்தில் வெளிவந்த தேனருவி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்ததை அவரது ‘நெல்லு’ படம் உதாரணம்.அப் படத்தை ராமு காரியத் இயக்கியிருந்தார்.தொடர்ந்து சேதுமாதவன்,மகேந்திரன்,மணிரத்தினம் போன்ற பலரின் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.
சிறந்த ஓலிபதிவாளர்/இயக்குனர் விருதுகளைப் பலமுறை வென்றுள்ளார்.
மட்டக்களப்பின் வாழ்ந்த இளமை அனுபவங்களைக்கொண்டு உருவாக்கிய கதையே 'அழியாத கோலங்கள்'.இவர் பிறந்த பூமி பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும் உருவாக்கிய மண். பெஞ்சமின் பாலநாதன்.மகேந்திரன் பின் நாளில் இப்படி உலகம் வியக்கும் கலைஞனாக வருவான் என்று நினைத்திருந்ததா தெரியவில்லை.ஆனால் மண்ணின் ஆசீர்வாதமும்,அவரின் விடா முயற்சியுமே இப்படி வளர முடிந்தது.மொழி கடந்த ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருந்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புக்கிளம்பும் போதெல்லாம் சவாலாக சமாளித்து முன்னேறினார்.
கன்னடம்,மலையாளம்,தமிழ் என பன் மொழிப்படங்களின் ஒளிப்பதிவாளராகவும்,இயக்குனராகவும் கடமையாற்றியவரின் நடிப்பை தற்போது வெளி வந்த 'தலைமுறைகள்'உணர்த்தியது.ஈழப்பிரச்சினையை,அதன் வலிகளை,ரணங்களை தன்னால்தான் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.தன் வாழ்நிலை உத்தரவாதம் கருதி மௌனமாக இருந்திருக்கலாம்.
நேரம் தவறாதவர்.பயிற்சிக் கூடமும் வைத்திருந்ததாகச் சொல்வர்.இவ்வாண்டு'கதை நேரம்'எனும் நூலையும் வெளியிட்டிருந்தார்.அவரின் அனுபவங்களை எழுதியிருக்கலாமே..பலருக்குப் பிரயோசனமாக இருந்திருக்கும் என்கிற ஆவல் பலநாள் என்னிடமிருந்தது. தன் வாழ்வியல் அனுபவங்களை கதைநேரம் என்ற தொடராக குறும்படங்களாக வெளியிட்டார்.வீடு படத்தின் மூலம் அர்ச்சனாவையும்,அழியாத கோலங்கள் மூலம் ஷோபாவையும்,வண்ண வண்ணப்பூக்கள் மூலம் மௌனிகா,வினோதினி போன்றோரையும் அறிமுக்கப்படுதி அவர்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார்.மேலும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களான பாலா,சீமான்,வெற்றிமாறன்,ராம் போன்ற பலர் இன்று திரை உலகில் மிளிர்கிறார்கள்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம்,கோகிலா,மூன்றாம் பிறை,வீடு,சந்தியா ராகம்,பிரயாணம்,மூடுபனி,நீங்கள் கேட்டவை,மறுபடியும்,சத்மா போன்ற பல படங்களின்றும் பேசப்படுகின்றன.
தன் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர் இன்று(13.02.2014) நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.இன்னும் நாம் அவரிடம் கற்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது.அவருக்கென சாதகமான சூழல் வருகையில் ஈழத்து வலிகளின் கதையை எடுப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து காலம் நிற்கிறது.
முல்லைஅமுதன்
13/02/2014
முல்லை அமுதன் முகநூல் பக்கத்தில் இருந்து
தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்த அமரர்.பாலு மகேந்திரா ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும்,உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் பின் நாளில் சிங்களப்படங்களை இயக்கியவருமான ஜோதேவானந்த் அவர்கள் இயக்கிய பாசநிலாவிலும் பங்குபற்றியதாக தகவல் உண்டு.நாடகங்களிலும் விரும்பி நடித்தார்.எனினும் பிரபல ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.லண்டனில் தன் உயர்பட்டப்படிப்பை முடித்தவர் பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பற்றிக் கற்றுத் தேர்ந்தார்.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை,கவிதை,குறும்படம்,நடிப்பு(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்),திரைப்படம்,புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை அந் நாளிலேயே பதித்துக்கொண்டார்.
இலங்கையிலிருந்த காலத்தில் வெளிவந்த தேனருவி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்ததை அவரது ‘நெல்லு’ படம் உதாரணம்.அப் படத்தை ராமு காரியத் இயக்கியிருந்தார்.தொடர்ந்து சேதுமாதவன்,மகேந்திரன்,மணிரத்தினம் போன்ற பலரின் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.
சிறந்த ஓலிபதிவாளர்/இயக்குனர் விருதுகளைப் பலமுறை வென்றுள்ளார்.
மட்டக்களப்பின் வாழ்ந்த இளமை அனுபவங்களைக்கொண்டு உருவாக்கிய கதையே 'அழியாத கோலங்கள்'.இவர் பிறந்த பூமி பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும் உருவாக்கிய மண். பெஞ்சமின் பாலநாதன்.மகேந்திரன் பின் நாளில் இப்படி உலகம் வியக்கும் கலைஞனாக வருவான் என்று நினைத்திருந்ததா தெரியவில்லை.ஆனால் மண்ணின் ஆசீர்வாதமும்,அவரின் விடா முயற்சியுமே இப்படி வளர முடிந்தது.மொழி கடந்த ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருந்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புக்கிளம்பும் போதெல்லாம் சவாலாக சமாளித்து முன்னேறினார்.
கன்னடம்,மலையாளம்,தமிழ் என பன் மொழிப்படங்களின் ஒளிப்பதிவாளராகவும்,இயக்குனராகவும் கடமையாற்றியவரின் நடிப்பை தற்போது வெளி வந்த 'தலைமுறைகள்'உணர்த்தியது.ஈழப்பிரச்சினையை,அதன் வலிகளை,ரணங்களை தன்னால்தான் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.தன் வாழ்நிலை உத்தரவாதம் கருதி மௌனமாக இருந்திருக்கலாம்.
நேரம் தவறாதவர்.பயிற்சிக் கூடமும் வைத்திருந்ததாகச் சொல்வர்.இவ்வாண்டு'கதை நேரம்'எனும் நூலையும் வெளியிட்டிருந்தார்.அவரின் அனுபவங்களை எழுதியிருக்கலாமே..பலருக்குப் பிரயோசனமாக இருந்திருக்கும் என்கிற ஆவல் பலநாள் என்னிடமிருந்தது. தன் வாழ்வியல் அனுபவங்களை கதைநேரம் என்ற தொடராக குறும்படங்களாக வெளியிட்டார்.வீடு படத்தின் மூலம் அர்ச்சனாவையும்,அழியாத கோலங்கள் மூலம் ஷோபாவையும்,வண்ண வண்ணப்பூக்கள் மூலம் மௌனிகா,வினோதினி போன்றோரையும் அறிமுக்கப்படுதி அவர்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார்.மேலும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களான பாலா,சீமான்,வெற்றிமாறன்,ராம் போன்ற பலர் இன்று திரை உலகில் மிளிர்கிறார்கள்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம்,கோகிலா,மூன்றாம் பிறை,வீடு,சந்தியா ராகம்,பிரயாணம்,மூடுபனி,நீங்கள் கேட்டவை,மறுபடியும்,சத்மா போன்ற பல படங்களின்றும் பேசப்படுகின்றன.
தன் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர் இன்று(13.02.2014) நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.இன்னும் நாம் அவரிடம் கற்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது.அவருக்கென சாதகமான சூழல் வருகையில் ஈழத்து வலிகளின் கதையை எடுப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து காலம் நிற்கிறது.
முல்லைஅமுதன்
13/02/2014
முல்லை அமுதன் முகநூல் பக்கத்தில் இருந்து
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பட அதிபர்-டைரக்டர் ரகுநாதன் மரணம்
» ஆறு வயதில் 50 கிலோ எடை சிறுமி திடீர் மரணம்
» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
» இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
» கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்
» ஆறு வயதில் 50 கிலோ எடை சிறுமி திடீர் மரணம்
» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
» இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
» கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|