Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
5 posters
Page 7 of 10
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:23 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
”காணாதது கண்ட மாதிரி
நடந்து கொள்ளாதே..
நாசூக்காக..நளினமாக நட..
கொஞசம் அடக்கி வாசி”
வேறு எப்படிச் சொல்ல..
அறையினுள் மகனை அனுப்பினால்
மறு நாள் காலையில்
அவ்ன் முகத்தில் சில கீறல்கள்..
அந்தப் பக்கம்
கொஞ்சம் வாசிப்பு அதிகமாம்!!’
நடந்து கொள்ளாதே..
நாசூக்காக..நளினமாக நட..
கொஞசம் அடக்கி வாசி”
வேறு எப்படிச் சொல்ல..
அறையினுள் மகனை அனுப்பினால்
மறு நாள் காலையில்
அவ்ன் முகத்தில் சில கீறல்கள்..
அந்தப் பக்கம்
கொஞ்சம் வாசிப்பு அதிகமாம்!!’
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சேவை என்றால் மோர்க்குழம்பு;
தோசை என்றால் காரச்சட்னி,சாம்பார்;
இட்லிக்கு கடலை மாவு வெங்காயம்போட்ட சட்னி;
எள் மிளகாய்ப் பொடி
காய்கறி பிரியாணியா.. வெங்காய சாலட்
சரி
ஞாயிற்றுக் கிழமை மதியமா
பருப்பு உருண்டைக் குழம்பு
பூண்டு ரசம்
பூசணிக்காய் கூட்டு
உருளை காலிஃப்ளவர் கறி
பொரித்த அரிசி அப்பள்ம், ஜவ்வரிசி வடாம்
அப்போது தான் அரைத்த் பருப்புப் பொடி..
ம்ம்
உணவுக்கான மெனுவ்ம் கூட
மனதில் வைத்துச் செய்வதில்
அம்மா கில்லாடி..
*
காலேல ப்ரெட் டோஸ்ட் பண்ணட்டா..
மத்யானம் சமர்த்தோல்லியோ
த்யிர்சாதம் ஊறுகா..
ஒனக்குப் பிடிச்ச மாவடு..
அப்புறம்
நைட் வீ வில் கோ அவுட் யார்....
நாளக்கி காலல்ல
அப்றம் பாக்கலாம் டியர்..
கண்ணோல்லியோ..
*
காதலித்தவளை
கடிமணம் புரிந்தபின்
வாழ்க்கை
மற்ற விஷயங்களில்
வண்ணம்யமாய்த் தோற்றம் கொண்டாலும்
சமையலில் கொஞ்சம்
க்றுப்பு வெள்ளை தான்...
தோசை என்றால் காரச்சட்னி,சாம்பார்;
இட்லிக்கு கடலை மாவு வெங்காயம்போட்ட சட்னி;
எள் மிளகாய்ப் பொடி
காய்கறி பிரியாணியா.. வெங்காய சாலட்
சரி
ஞாயிற்றுக் கிழமை மதியமா
பருப்பு உருண்டைக் குழம்பு
பூண்டு ரசம்
பூசணிக்காய் கூட்டு
உருளை காலிஃப்ளவர் கறி
பொரித்த அரிசி அப்பள்ம், ஜவ்வரிசி வடாம்
அப்போது தான் அரைத்த் பருப்புப் பொடி..
ம்ம்
உணவுக்கான மெனுவ்ம் கூட
மனதில் வைத்துச் செய்வதில்
அம்மா கில்லாடி..
*
காலேல ப்ரெட் டோஸ்ட் பண்ணட்டா..
மத்யானம் சமர்த்தோல்லியோ
த்யிர்சாதம் ஊறுகா..
ஒனக்குப் பிடிச்ச மாவடு..
அப்புறம்
நைட் வீ வில் கோ அவுட் யார்....
நாளக்கி காலல்ல
அப்றம் பாக்கலாம் டியர்..
கண்ணோல்லியோ..
*
காதலித்தவளை
கடிமணம் புரிந்தபின்
வாழ்க்கை
மற்ற விஷயங்களில்
வண்ணம்யமாய்த் தோற்றம் கொண்டாலும்
சமையலில் கொஞ்சம்
க்றுப்பு வெள்ளை தான்...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
ஒன்று இரண்டு எனச்
சொல்லிக் கொடுத்த
ஆசிரியரின்
குரலும் முகமும்
மறந்து போய் வெகு நாளாகிவிட்டது
க்ளட்ச் பிடி இது ப்ரேக்
என ஓட்டச் சொல்லிக் கொடுத்த
அண்ணனை
வருடம் ஒரு முறைதான் பார்த்தாகிறது..
இப்படி தோள்ல போட்டுக்கோ
அப்புறம் இப்படி மடி..
அப்புறம் என..
முதன்முறை வேலையில் சேர்ந்த போது
டை கட்டிக் கொள்வதற்கு
அழகாய்ச் சொல்லிக் கொடுத்த
அக்காவின் கணவரிடம்
ஏதோ ஒன்றை முன்னிட்டு
மனஸ்தாபம் கொண்டு
பேச்சை நிறுத்தியாகி விட்ட்து..
அலுவலில் சேர்ந்த முதல் நாள்
மேலாளர் சொன்ன வேலையை
எப்படி ஆரம்பிப்பது எனத்
தெரியாமல்
முழித்த போதில்
‘இப்படி வா’ என அழைத்து
சொல்லிக்கொடுத்து
அந்த நிறுவனத்தை விட்டு
வெளியில் செல்லும் வரை
துணை நின்ற அந்த வயதானவர்
உயிருடன் இருக்கிறாரா
என்பது கூட்த் தெரியாது..
**
அஸ்திவாரங்களைக்
கட்டடம் வேண்டுமானால் மறக்காது...
கண்டிப்பாய்
மறந்து கொண்டு தான் இருப்பான்
மனிதன்
சொல்லிக் கொடுத்த
ஆசிரியரின்
குரலும் முகமும்
மறந்து போய் வெகு நாளாகிவிட்டது
க்ளட்ச் பிடி இது ப்ரேக்
என ஓட்டச் சொல்லிக் கொடுத்த
அண்ணனை
வருடம் ஒரு முறைதான் பார்த்தாகிறது..
இப்படி தோள்ல போட்டுக்கோ
அப்புறம் இப்படி மடி..
அப்புறம் என..
முதன்முறை வேலையில் சேர்ந்த போது
டை கட்டிக் கொள்வதற்கு
அழகாய்ச் சொல்லிக் கொடுத்த
அக்காவின் கணவரிடம்
ஏதோ ஒன்றை முன்னிட்டு
மனஸ்தாபம் கொண்டு
பேச்சை நிறுத்தியாகி விட்ட்து..
அலுவலில் சேர்ந்த முதல் நாள்
மேலாளர் சொன்ன வேலையை
எப்படி ஆரம்பிப்பது எனத்
தெரியாமல்
முழித்த போதில்
‘இப்படி வா’ என அழைத்து
சொல்லிக்கொடுத்து
அந்த நிறுவனத்தை விட்டு
வெளியில் செல்லும் வரை
துணை நின்ற அந்த வயதானவர்
உயிருடன் இருக்கிறாரா
என்பது கூட்த் தெரியாது..
**
அஸ்திவாரங்களைக்
கட்டடம் வேண்டுமானால் மறக்காது...
கண்டிப்பாய்
மறந்து கொண்டு தான் இருப்பான்
மனிதன்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
விளம்பரம் என்பது..
இவன் மூணாவது வயசிலேயே
அப்பா பின்னாடி தான் இருப்பான்
கணினியின் விசைப்பலகை அத்துப்படி..
ஏ பி சிடி அப்புற்ம் அதன் விரிவாக்கம்
நகைச்சுவைத் தன்மை ஜாஸ்தி...
ஹேய் குட்மார்னிங்க் சொல்லு
குட்மார்னிங்க் மிஸ்..
அப்ப அட்மிஷன் ஓக்கேயா மேடம்
*
இவனை என்னன்னு நினைக்கறீங்க..
பத்தாம்கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்
ப்ளஸ் டூவில விழுந்து விழுந்து படிச்சான்
அதுக்காக டிவியும் பார்க்காம் இருக்க மாட்டான்
ம்ம் அந்த ப் பாட்டுப் போட்டில்ல
தானாவே அப்ளை ப்ண்ணிக் கலந்துக்கிட்டான்
ரன்னர் வரைக்கும் வந்தான்
டிரஸ் லாம் பாத்திருப்பீங்கள்ள..
ப்ள்ஸ் டூவில் ஸ்டேட் ஃபர்ஸ்ட்..
காலேஜ் சீட் ஓக்கே ஆயிடுமாங்க..
*
ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கணும்னு ஆசை தான்
சி.ஏ தாங்க ஃபார்வார்ட் க்ளாஸீக்கு வழி..
பிகாம் முத்ல வருஷத்தில இண்டர் முடிச்சேன்
பிகாம் முடிச்சு ஒன்றரை வ்ருஷத்தில
சி ஏ, சி எஸ், ஐசி டபிள்யூ ஏ முடிச்சேன்
எப்படி இந்த அக்செண்ட்ல ஆங்கிலம் பேசறேனா..
அதுக்கு ஒரு கோர்ஸ் படிச்சேன்..
கொஞ்சம் கவிதை எழுதுவேன்
யா போத் டாமில்,இங்க்லீஷ், ஹிந்தி, ஜெர்மன்..
கடைசி ரெண்டு லாங்வேஜ் பொழுது போக்கா படிச்சேன்..
விளையாட்டு
கிரிக்கெட் பார்க்கப் பிடிக்கும்
செஸ் டோர்னமெண்ட்ல இரண்டாவது இடம்..
கேரம் ஓக்கேயா ஆடுவேன்
அஃப்கோர்ஸ் ப்ரிட்ஜ் எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்டேன்
யா நிறைய கம்பெனிக்கு
ஆர்டிகிள்ஷிப்ல போயிருக்கேன்..
கண்டிப்பா..நல்ல பேர் எடுப்பேன் உங்க கம்பெனில்ல..
தாங்க்ஸ்ய லாட் சார்..
*
பையன் கல்ஃப்ல இருக்கான்
நல்ல சம்பளம் தான்
ஃபோட்டோல்லபாருங்க
ஹேண்ட்ஸம்மா இருக்கானில்ல..
உங்கபொண்ணு ஃபேஸ்புக்ல பார்த்தானாம்
லீவுல்ல வந்தப்ப கூட
எப்படியோ அட்ரஸ் தெரிஞ்சு
அவளுக்குத் தெரியாம பாத்துருக்கான்..
ஜாதகம் நீங்க மின்னஞ்சல்ல அனுப்பிச்சீங்கள்ள
அதுவும் ந்ன்னாவே பொருந்துது..
என் பையன்கற்துக்காக சொல்லலை..
ரியலி
ஹி இஸ் எ மேன் ஆஃப் ப்ரின்சிபிள்ஸ்..
ந்ன்னாவே பாத்துக்குவான் உங்க பொண்ணை..
எனக்கென்னெ ஓய்
நான் ஒரு ரிட்டயர்ட் பேங்க் மேனேஜர்
இவனுக்கும் இவன் தங்கைக்கும் ரெண்டு ஃப்ளாட்டும்
எனக்குன்னு ஒருவீடும்...
மேல் போர்ஷன்ல வர்ற வருமானமும்
என் பென்ஷனும் சேர்ந்தாலேரொம்ப் ஜாஸ்தி..
இவன் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம்
நானும் இவளும்
காசி ராமேஸ்வரமெல்லாம் போமாட்டோம்
இப்படியே குலு மணாலி, நைனிடால்
மடிக்கேரி, தலைககாவேரின்னு
போலாம்னு இருக்கோம்..
பாருங்க எப்படி வெக்கப் படறான்னு
சொல்லுங்க
எப்ப முகூர்த்தத்த வெச்சுக்கலாம்..
பையனும் பொண்ணும் பேசிக்கணுமா
சரி..
*
ஹாய்
ஹாய்..
உங்களோட டாப்ஸ் ந்ல்லா இருக்கு
எங்க எடுத்தீங்க போத்தீஸா..
தாங்க்ஸ்..லைஃப் ஸ்டைல்..
அப்ற்ம் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்
எதைச் சொல்றீங்க..
தமிழ் லிட்ரேச்சர்னு எடுத்தீங்கன்னா
எனக்கு தி.ஜான்கிராமன், சாண்டில்யன் பிடிக்கும்..
ஓ..எனக்கும் தான்
அதில உய்ர்த்தேன் ரொம்பப் பிடிக்கும்
ஓ குட் சாய்ஸ் திரைப்படம்
முன்னால கே.பி இப்போ மிஷ்கின்
எனக்கும் தான்
ஆங்கில நாவல்ல..
ஜான் கிரஷாம், ராபர்ட் லுட்லும், டேனியல் ஸ்டீல்
சிட்னி ஷெல்டன் சொல்ற்துன்னா நிறையச் சொல்லலாம்..
ஓ எனக்கும் அப்படித்தான்
ஒண்ணு கேக்கட்டா
ஒங்க எடை என்ன
அம்பத்தொண்ணு
நீங்க
அறுபத்தஞ்சு
ஜிம் போவீங்க போல இருக்கே
ஆமாம் தினசரி போலன்னா
வாழ்க்கைல ஏதோ இழந்த மாதிரி..
நீங்களும் ஜிம்மா.
இல்லை யோகா.
அம்மா சொல்லிக் கொடுத்துச்சு
அப்றம் டி நகர்ல ஒரு யோகா டீச்சர்..
அழகா சிக்னு இருக்கீங்க..
...
அழகாவும் வெக்கப் படறீங்க..
ஒண்ணு சொல்லட்டா..
ம்..
இன்னும் என்ன நீங்க சொல்லிக்
கூப்பிடணுமா..
என்னம்மா பேசி முடிச்சாச்சா
இதோ வர்றேம்ப்பா..
*
விளம்பரங்கள்
விற்பனைக்கு மட்டுமல்ல..
வாழ்க்கை நீரோட்டத்திற்கும்
ரொம்ப அவசியம்..
இவன் மூணாவது வயசிலேயே
அப்பா பின்னாடி தான் இருப்பான்
கணினியின் விசைப்பலகை அத்துப்படி..
ஏ பி சிடி அப்புற்ம் அதன் விரிவாக்கம்
நகைச்சுவைத் தன்மை ஜாஸ்தி...
ஹேய் குட்மார்னிங்க் சொல்லு
குட்மார்னிங்க் மிஸ்..
அப்ப அட்மிஷன் ஓக்கேயா மேடம்
*
இவனை என்னன்னு நினைக்கறீங்க..
பத்தாம்கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்
ப்ளஸ் டூவில விழுந்து விழுந்து படிச்சான்
அதுக்காக டிவியும் பார்க்காம் இருக்க மாட்டான்
ம்ம் அந்த ப் பாட்டுப் போட்டில்ல
தானாவே அப்ளை ப்ண்ணிக் கலந்துக்கிட்டான்
ரன்னர் வரைக்கும் வந்தான்
டிரஸ் லாம் பாத்திருப்பீங்கள்ள..
ப்ள்ஸ் டூவில் ஸ்டேட் ஃபர்ஸ்ட்..
காலேஜ் சீட் ஓக்கே ஆயிடுமாங்க..
*
ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கணும்னு ஆசை தான்
சி.ஏ தாங்க ஃபார்வார்ட் க்ளாஸீக்கு வழி..
பிகாம் முத்ல வருஷத்தில இண்டர் முடிச்சேன்
பிகாம் முடிச்சு ஒன்றரை வ்ருஷத்தில
சி ஏ, சி எஸ், ஐசி டபிள்யூ ஏ முடிச்சேன்
எப்படி இந்த அக்செண்ட்ல ஆங்கிலம் பேசறேனா..
அதுக்கு ஒரு கோர்ஸ் படிச்சேன்..
கொஞ்சம் கவிதை எழுதுவேன்
யா போத் டாமில்,இங்க்லீஷ், ஹிந்தி, ஜெர்மன்..
கடைசி ரெண்டு லாங்வேஜ் பொழுது போக்கா படிச்சேன்..
விளையாட்டு
கிரிக்கெட் பார்க்கப் பிடிக்கும்
செஸ் டோர்னமெண்ட்ல இரண்டாவது இடம்..
கேரம் ஓக்கேயா ஆடுவேன்
அஃப்கோர்ஸ் ப்ரிட்ஜ் எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்டேன்
யா நிறைய கம்பெனிக்கு
ஆர்டிகிள்ஷிப்ல போயிருக்கேன்..
கண்டிப்பா..நல்ல பேர் எடுப்பேன் உங்க கம்பெனில்ல..
தாங்க்ஸ்ய லாட் சார்..
*
பையன் கல்ஃப்ல இருக்கான்
நல்ல சம்பளம் தான்
ஃபோட்டோல்லபாருங்க
ஹேண்ட்ஸம்மா இருக்கானில்ல..
உங்கபொண்ணு ஃபேஸ்புக்ல பார்த்தானாம்
லீவுல்ல வந்தப்ப கூட
எப்படியோ அட்ரஸ் தெரிஞ்சு
அவளுக்குத் தெரியாம பாத்துருக்கான்..
ஜாதகம் நீங்க மின்னஞ்சல்ல அனுப்பிச்சீங்கள்ள
அதுவும் ந்ன்னாவே பொருந்துது..
என் பையன்கற்துக்காக சொல்லலை..
ரியலி
ஹி இஸ் எ மேன் ஆஃப் ப்ரின்சிபிள்ஸ்..
ந்ன்னாவே பாத்துக்குவான் உங்க பொண்ணை..
எனக்கென்னெ ஓய்
நான் ஒரு ரிட்டயர்ட் பேங்க் மேனேஜர்
இவனுக்கும் இவன் தங்கைக்கும் ரெண்டு ஃப்ளாட்டும்
எனக்குன்னு ஒருவீடும்...
மேல் போர்ஷன்ல வர்ற வருமானமும்
என் பென்ஷனும் சேர்ந்தாலேரொம்ப் ஜாஸ்தி..
இவன் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம்
நானும் இவளும்
காசி ராமேஸ்வரமெல்லாம் போமாட்டோம்
இப்படியே குலு மணாலி, நைனிடால்
மடிக்கேரி, தலைககாவேரின்னு
போலாம்னு இருக்கோம்..
பாருங்க எப்படி வெக்கப் படறான்னு
சொல்லுங்க
எப்ப முகூர்த்தத்த வெச்சுக்கலாம்..
பையனும் பொண்ணும் பேசிக்கணுமா
சரி..
*
ஹாய்
ஹாய்..
உங்களோட டாப்ஸ் ந்ல்லா இருக்கு
எங்க எடுத்தீங்க போத்தீஸா..
தாங்க்ஸ்..லைஃப் ஸ்டைல்..
அப்ற்ம் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்
எதைச் சொல்றீங்க..
தமிழ் லிட்ரேச்சர்னு எடுத்தீங்கன்னா
எனக்கு தி.ஜான்கிராமன், சாண்டில்யன் பிடிக்கும்..
ஓ..எனக்கும் தான்
அதில உய்ர்த்தேன் ரொம்பப் பிடிக்கும்
ஓ குட் சாய்ஸ் திரைப்படம்
முன்னால கே.பி இப்போ மிஷ்கின்
எனக்கும் தான்
ஆங்கில நாவல்ல..
ஜான் கிரஷாம், ராபர்ட் லுட்லும், டேனியல் ஸ்டீல்
சிட்னி ஷெல்டன் சொல்ற்துன்னா நிறையச் சொல்லலாம்..
ஓ எனக்கும் அப்படித்தான்
ஒண்ணு கேக்கட்டா
ஒங்க எடை என்ன
அம்பத்தொண்ணு
நீங்க
அறுபத்தஞ்சு
ஜிம் போவீங்க போல இருக்கே
ஆமாம் தினசரி போலன்னா
வாழ்க்கைல ஏதோ இழந்த மாதிரி..
நீங்களும் ஜிம்மா.
இல்லை யோகா.
அம்மா சொல்லிக் கொடுத்துச்சு
அப்றம் டி நகர்ல ஒரு யோகா டீச்சர்..
அழகா சிக்னு இருக்கீங்க..
...
அழகாவும் வெக்கப் படறீங்க..
ஒண்ணு சொல்லட்டா..
ம்..
இன்னும் என்ன நீங்க சொல்லிக்
கூப்பிடணுமா..
என்னம்மா பேசி முடிச்சாச்சா
இதோ வர்றேம்ப்பா..
*
விளம்பரங்கள்
விற்பனைக்கு மட்டுமல்ல..
வாழ்க்கை நீரோட்டத்திற்கும்
ரொம்ப அவசியம்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
ஒப்பாரின்னாலே ஒச்சாயிக் கெழவிதான்..
*
கடைகண்ணி போகையிலெ
கருணை வாங்க்றேன்னு
பொடிநடையாப் போனவரு
போனபாத ப்ரியலையே
மூக்குத்தி வாங்குதற்கு
முக்குக்கட போன மச்சான்
மேல போன மாயமென்ன
மோசம் நானும் போனதென்ன..
செட்டுசெட்டா வண்டி பூட்டி
செவப்பான நெறத்தோட
எனப் பாக்க வந்தவரே
எங்கேய்யா போனீக
*
எப்படி எப்படியோ இட்டுக்கட்டி பாட்டுச்சொல்லும்
ஒச்சாயிக் கெழ்வியுந்தான் ஒரு நாள் மேல போக
ஊர்மூச்சும் வந்த்தென்றால் அதுதானே இல்லீங்க
பாடிஅழுகையதை பக்குவமாச் சொன்னவளுக்கு
கூடிய கொஞ்சஜனம் த்ந்த்துவோ மெளனம் தான்...
*
*
கடைகண்ணி போகையிலெ
கருணை வாங்க்றேன்னு
பொடிநடையாப் போனவரு
போனபாத ப்ரியலையே
மூக்குத்தி வாங்குதற்கு
முக்குக்கட போன மச்சான்
மேல போன மாயமென்ன
மோசம் நானும் போனதென்ன..
செட்டுசெட்டா வண்டி பூட்டி
செவப்பான நெறத்தோட
எனப் பாக்க வந்தவரே
எங்கேய்யா போனீக
*
எப்படி எப்படியோ இட்டுக்கட்டி பாட்டுச்சொல்லும்
ஒச்சாயிக் கெழ்வியுந்தான் ஒரு நாள் மேல போக
ஊர்மூச்சும் வந்த்தென்றால் அதுதானே இல்லீங்க
பாடிஅழுகையதை பக்குவமாச் சொன்னவளுக்கு
கூடிய கொஞ்சஜனம் த்ந்த்துவோ மெளனம் தான்...
*
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
கூட்டை அடையலாம்..
இன்றைக்கு உணவு போதும்
வாய்முழுக்க இரைகள்..
எங்கே நம் குழந்தைகள் இருக்கும் வீடு
ஏன் இந்தக் காற்று இப்படி அடிக்கிறது..
மழையும் சடசட்வென்று இசையுடன்..
இன்னும் எவ்வள்வு தூரம் செல்லவேண்டும்
இடைப்பட்ட் இட்த்தில்
ஒதுங்கி
கொஞ்சம் சிறகுகளைப் படபட்த்து
ஆசுவாசப் படுத்தி
இரையை காலுக்கு மாற்றி
கீ க்க்கீ என கத்தியபின்
மெல்லப் பறந்து
மரமிருக்கும் இடம் அடைந்தால்
காணோம்..
இல்லை..மரம் நிற்கவில்லை
படுத்திருக்கிறது..
இரையை கீழே போட்டுவிட்டு
அங்குமிங்கும் மற்ற் நண்பர்களுடன்
அலைபாயத் தேடினால்
அதோ
ஒரு இடுக்கில் என் குழந்தைகள்..
குளிரில் நடுங்கி
வாய் பேச முடியாமல்
கண்களினால்
பார்த்த சந்தோஷத்தில் தாவ..
மெல்ல எடுத்து
அருகிலிருந்த ஒரு வீட்டின் ஓட்டில் விட்டு
பின் திரும்ப
தரையில் விழுந்த இரையைக் காணோம்
புழு தானே ஊர்ந்திருக்கும்..
மறுபடி தேடுவதா..
குட்டிக்கண்ணை உறுத்துப்பார்த்த்தில்
ஒரு வீட்டு மாடியில் சில அரிசிமணிகள் தெரிய
கொத்தி எடுத்து மீண்டும் பறந்து
குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு
பசிமறந்து அயர்ந்த்து குருவி..
இன்றைக்கு உணவு போதும்
வாய்முழுக்க இரைகள்..
எங்கே நம் குழந்தைகள் இருக்கும் வீடு
ஏன் இந்தக் காற்று இப்படி அடிக்கிறது..
மழையும் சடசட்வென்று இசையுடன்..
இன்னும் எவ்வள்வு தூரம் செல்லவேண்டும்
இடைப்பட்ட் இட்த்தில்
ஒதுங்கி
கொஞ்சம் சிறகுகளைப் படபட்த்து
ஆசுவாசப் படுத்தி
இரையை காலுக்கு மாற்றி
கீ க்க்கீ என கத்தியபின்
மெல்லப் பறந்து
மரமிருக்கும் இடம் அடைந்தால்
காணோம்..
இல்லை..மரம் நிற்கவில்லை
படுத்திருக்கிறது..
இரையை கீழே போட்டுவிட்டு
அங்குமிங்கும் மற்ற் நண்பர்களுடன்
அலைபாயத் தேடினால்
அதோ
ஒரு இடுக்கில் என் குழந்தைகள்..
குளிரில் நடுங்கி
வாய் பேச முடியாமல்
கண்களினால்
பார்த்த சந்தோஷத்தில் தாவ..
மெல்ல எடுத்து
அருகிலிருந்த ஒரு வீட்டின் ஓட்டில் விட்டு
பின் திரும்ப
தரையில் விழுந்த இரையைக் காணோம்
புழு தானே ஊர்ந்திருக்கும்..
மறுபடி தேடுவதா..
குட்டிக்கண்ணை உறுத்துப்பார்த்த்தில்
ஒரு வீட்டு மாடியில் சில அரிசிமணிகள் தெரிய
கொத்தி எடுத்து மீண்டும் பறந்து
குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு
பசிமறந்து அயர்ந்த்து குருவி..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
எண்கள் பலவிதமாய்
வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன..
உங்க அப்பாக்கு எத்தனாவதுகுழந்தை நீ
ஆறு..
உன்னோட ரோல் நம்பர்
நாற்பத்தேழு டீச்சர்..
இளமைப்பருவம் பதினாறிலிருந்து இருபது வரை
இசைபாடும்..
பின்
மதிமயங்கி தேர்தலில் ஓட்டுப் போடும் வயது வர
பணந்தேடி மனமலைய ஆரம்பிக்கும்..
எவ்வளவு வாங்கறே நீ
பத்து..
பத்தாயிரம் போதாதேப்பா
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்..
அப்பத்தான் துணையும்
உன்னிடம் வரும்..
இருபத்தைந்து வயதில்
இணை தேடும் எண்ணம்
நாற்பது வயதில் சோர்வுறும்
நாற்பது என்றாலே
ஒரு கால் சவப்பெட்டியின் மீது தானே..
பின்
வாழ்வின் வயதின் எண்கள் கூடக் கூட
மனதும் முதிரும்..
வாழ்க்கையில் எந்த எண்ணில்
முற்றுப்புள்ளி வருமெனத்தெரியாது..
இருந்தும்
தெரிந்தோ தெரியாமலோ
முக்கியக் காரணியாய்
எண்கள் நடத்துகின்றன வாழ்க்கையை..
வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன..
உங்க அப்பாக்கு எத்தனாவதுகுழந்தை நீ
ஆறு..
உன்னோட ரோல் நம்பர்
நாற்பத்தேழு டீச்சர்..
இளமைப்பருவம் பதினாறிலிருந்து இருபது வரை
இசைபாடும்..
பின்
மதிமயங்கி தேர்தலில் ஓட்டுப் போடும் வயது வர
பணந்தேடி மனமலைய ஆரம்பிக்கும்..
எவ்வளவு வாங்கறே நீ
பத்து..
பத்தாயிரம் போதாதேப்பா
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்..
அப்பத்தான் துணையும்
உன்னிடம் வரும்..
இருபத்தைந்து வயதில்
இணை தேடும் எண்ணம்
நாற்பது வயதில் சோர்வுறும்
நாற்பது என்றாலே
ஒரு கால் சவப்பெட்டியின் மீது தானே..
பின்
வாழ்வின் வயதின் எண்கள் கூடக் கூட
மனதும் முதிரும்..
வாழ்க்கையில் எந்த எண்ணில்
முற்றுப்புள்ளி வருமெனத்தெரியாது..
இருந்தும்
தெரிந்தோ தெரியாமலோ
முக்கியக் காரணியாய்
எண்கள் நடத்துகின்றன வாழ்க்கையை..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
பாவி..இப்படியா விளையாடுவது
எனச் சொல்லிக்
கன்னம் சிவக்க
கோபத்தில் அழகாய் அகலும்
உன் விழிகளைப் பார்க்கவே
மேலும்
உன்னிடம் விளையாட்த் தோன்றுகிறது..
கொஞ்சம் உற்றுப் பார்க்கையில்
கண்ணோரம் கொஞ்சமாய் ஈரம்..
கைப்பிடித்து கொஞ்சம் இழுத்து அணைத்து
சமாதானம் செய்கையில் இன்னும்
நெகிழ்கிறாய்..
அப்படியே கொஞ்சம்
கிள்ளவும் செய்கிறாய்..
ச்சீப் போப்பா நீ மோசம்
என்கிறாய்..
இன்னும் பிதற்றலாய்
வார்த்தைகள் வர..
அடக்குதற்குத்தெரிந்த வழி ஒன்று தான்..
நான் சொன்னது நிஜம்..
விளையாட்டில்லை..
என் வீட்டில் எனக்குப் பார்த்த பெண்
இன்னும் அழகாயிருக்கிறாள்
உன்னை விட...
எனச் சிரித்தபடி சொல்ல
ஒருகணப் பொழுதில்
சோகம், ஏமாற்றம், வியப்பு உன் கண்ணில்
எந்த நல்ல நடிகையும்
செய்திருக்க மாட்டாள்..
புகைப்படம் வைத்திருக்கிறேன்
பாரேன்
என்றபடி காட்டினால்
அதிலிருந்த அவள் பட்த்தைப் பார்த்த்தில்
கண்ணீர்துளி இருந்த கண்ணில் சிரிப்பு மறுபடி..
படவா எனச் சொல்லி
அவள் அடித்த்து
நெஜமாகவே வலித்தாலும்
கொஞ்சம் சந்தோஷமாக்வும் இருக்கிறது..
எனச் சொல்லிக்
கன்னம் சிவக்க
கோபத்தில் அழகாய் அகலும்
உன் விழிகளைப் பார்க்கவே
மேலும்
உன்னிடம் விளையாட்த் தோன்றுகிறது..
கொஞ்சம் உற்றுப் பார்க்கையில்
கண்ணோரம் கொஞ்சமாய் ஈரம்..
கைப்பிடித்து கொஞ்சம் இழுத்து அணைத்து
சமாதானம் செய்கையில் இன்னும்
நெகிழ்கிறாய்..
அப்படியே கொஞ்சம்
கிள்ளவும் செய்கிறாய்..
ச்சீப் போப்பா நீ மோசம்
என்கிறாய்..
இன்னும் பிதற்றலாய்
வார்த்தைகள் வர..
அடக்குதற்குத்தெரிந்த வழி ஒன்று தான்..
நான் சொன்னது நிஜம்..
விளையாட்டில்லை..
என் வீட்டில் எனக்குப் பார்த்த பெண்
இன்னும் அழகாயிருக்கிறாள்
உன்னை விட...
எனச் சிரித்தபடி சொல்ல
ஒருகணப் பொழுதில்
சோகம், ஏமாற்றம், வியப்பு உன் கண்ணில்
எந்த நல்ல நடிகையும்
செய்திருக்க மாட்டாள்..
புகைப்படம் வைத்திருக்கிறேன்
பாரேன்
என்றபடி காட்டினால்
அதிலிருந்த அவள் பட்த்தைப் பார்த்த்தில்
கண்ணீர்துளி இருந்த கண்ணில் சிரிப்பு மறுபடி..
படவா எனச் சொல்லி
அவள் அடித்த்து
நெஜமாகவே வலித்தாலும்
கொஞ்சம் சந்தோஷமாக்வும் இருக்கிறது..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
வாடிக்கையாய்
மல்லி,வெண்டைக்காய், எலுமிச்சைப்பழம்
விற்கும் கிழவியைக் காணோம் சந்தையில்..
பொல்லென வெண்மேகமாய் முடி..
நெற்றியில் அக்லக் குங்கும்ம்..
வெற்றிலைச்சாற்றில் சிவந்த உதடு..
பருத்திப் புடவையுடன்
பளிச்சென
மல்லீய், வெண்டிக்காய் என
அவள் கூவும் குரலும் கணீர்..
விலை விசாரித்தால்
எல்லாம் மலிவு தான்சாமி
நம்ம தோட்ட்த்தில வெளஞ்சது..
பிஞ்சு வெண்டிக்கா பாரு
ஒன்ன மாரி இருக்கு.. என்பாள்..
அப்படியும் பேரம் பேசுவேன்..
ஏன் சாமி..
கல்யாணத்துக்கா சேக்கற
நல்ல வில கொடுத்துட்டுப் போயேன்..
பொண்ணு எங்க கெடைக்குது..
ஏஞ்சாமி..
எல்லாம் ஒன்ன மாதிரிப் பொண்ணா
பாக்கறோம்ல..
அதுக்கு என் வீட்டுக்கார்ரில்லா கேக்கணும்
குறும்ப்ப் பாரு..
எனச் சிரிப்பாள் வெள்ளந்தியாய்
காதுகளில் கிழங்காய்
தண்ட்ட்டியும் ஆடும்..
இன்று பார்த்தால் அவளில்லை..
அவளிட்த்தில் ஒரு சிறுவன்..
எங்கப்பா பாட்டி?
பாட்டியா..
போனவாரம் செத்துப் போச்..
ஒரு நொடி மெளனித்தவன்
தொடர்ந்தான்..
‘சாமீ.. மல்லி.. வெண்டிக்கா.ய்..வாங்குங்க..
பிஞ்சா இருக்கு
ஒங்கள மாதிரி இளமையா..’
மல்லி,வெண்டைக்காய், எலுமிச்சைப்பழம்
விற்கும் கிழவியைக் காணோம் சந்தையில்..
பொல்லென வெண்மேகமாய் முடி..
நெற்றியில் அக்லக் குங்கும்ம்..
வெற்றிலைச்சாற்றில் சிவந்த உதடு..
பருத்திப் புடவையுடன்
பளிச்சென
மல்லீய், வெண்டிக்காய் என
அவள் கூவும் குரலும் கணீர்..
விலை விசாரித்தால்
எல்லாம் மலிவு தான்சாமி
நம்ம தோட்ட்த்தில வெளஞ்சது..
பிஞ்சு வெண்டிக்கா பாரு
ஒன்ன மாரி இருக்கு.. என்பாள்..
அப்படியும் பேரம் பேசுவேன்..
ஏன் சாமி..
கல்யாணத்துக்கா சேக்கற
நல்ல வில கொடுத்துட்டுப் போயேன்..
பொண்ணு எங்க கெடைக்குது..
ஏஞ்சாமி..
எல்லாம் ஒன்ன மாதிரிப் பொண்ணா
பாக்கறோம்ல..
அதுக்கு என் வீட்டுக்கார்ரில்லா கேக்கணும்
குறும்ப்ப் பாரு..
எனச் சிரிப்பாள் வெள்ளந்தியாய்
காதுகளில் கிழங்காய்
தண்ட்ட்டியும் ஆடும்..
இன்று பார்த்தால் அவளில்லை..
அவளிட்த்தில் ஒரு சிறுவன்..
எங்கப்பா பாட்டி?
பாட்டியா..
போனவாரம் செத்துப் போச்..
ஒரு நொடி மெளனித்தவன்
தொடர்ந்தான்..
‘சாமீ.. மல்லி.. வெண்டிக்கா.ய்..வாங்குங்க..
பிஞ்சா இருக்கு
ஒங்கள மாதிரி இளமையா..’
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
தானே மெல்லத் தவழ்ந்து
சுவர் பற்றி மெல்ல நடந்து
பின்
எதையும் பற்றாமல்
த்த்தித் தந்தி நடந்து
வேகமெடுத்து
ஓடி
பின் பறக்கும்
கற்பனையால்
சந்தோஷம் கொள்ளும் மனம்
அது தூங்கும் போது
வலிக்கிறது மிகவும்.
சுவர் பற்றி மெல்ல நடந்து
பின்
எதையும் பற்றாமல்
த்த்தித் தந்தி நடந்து
வேகமெடுத்து
ஓடி
பின் பறக்கும்
கற்பனையால்
சந்தோஷம் கொள்ளும் மனம்
அது தூங்கும் போது
வலிக்கிறது மிகவும்.
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சின்ன முயற்சிகள்...ஹைக்கூ குறித்து.
» மரபுப் பா பயிலரங்கம்
» புதிய முயற்சிகள்..படங்கள் :)))
» சில சின்னக் கவிதைகள்....
» சின்னக் கவிதைகள்...
» மரபுப் பா பயிலரங்கம்
» புதிய முயற்சிகள்..படங்கள் :)))
» சில சின்னக் கவிதைகள்....
» சின்னக் கவிதைகள்...
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|