Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
5 posters
Page 5 of 10
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:23 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
நல்யோகம் உமக்கு காத்திருக்கிறது
ஆனால் கொஞ்சம்
தன்னம்பிக்கையுடன் முயற்சியும் வேண்டுமென
எஜமான் சொல்வதைக் கேட்டபடி
நெல்மணி எடுத்து உள்செல்கையில்
எழுந்த சிரிப்பு மறித்த்து..
சும்மா பொழுது போகவில்லை என வந்தேன்..
நீ சொல்வது எனக்கே தெரியும்...
எஜமான் மேலும் ஏதோ சொல்ல
எனக்குள் எழுந்த கோபத்தால் சற்றே பறந்து
சிரித்தவன் கையைக் கொத்தப் பார்த்து... பின்
த த் தித் த த் திக் கூண்டில் மேலேறினால்
மறுபடி சிரிப்பு..
பார் நல் யோகம் உன் கிளிக்குத் தான்..
இறகு முளைத்து விட்ட்து..
பறக்கப் போகிறது...
எஜமான் ஆதரவாகக்
கழுத்தைப் பிடித்துத் தடவ
அதில் நான் மெய்மறக்க
சற்றே தூக்கி கீழே வைத்து அழுத்தி
கூண்டினுள் தள்ளி விட்டு
அருகிலிருந்த பையைத் துழாவ
ஆஹா மறுபடி நெல்மணி என
அலகைத் திறக்க, பார்த்தால்
வெளிவந்த்தென்னவோ ஒரு
கத்தரிக் கோல்...
ஆனால் கொஞ்சம்
தன்னம்பிக்கையுடன் முயற்சியும் வேண்டுமென
எஜமான் சொல்வதைக் கேட்டபடி
நெல்மணி எடுத்து உள்செல்கையில்
எழுந்த சிரிப்பு மறித்த்து..
சும்மா பொழுது போகவில்லை என வந்தேன்..
நீ சொல்வது எனக்கே தெரியும்...
எஜமான் மேலும் ஏதோ சொல்ல
எனக்குள் எழுந்த கோபத்தால் சற்றே பறந்து
சிரித்தவன் கையைக் கொத்தப் பார்த்து... பின்
த த் தித் த த் திக் கூண்டில் மேலேறினால்
மறுபடி சிரிப்பு..
பார் நல் யோகம் உன் கிளிக்குத் தான்..
இறகு முளைத்து விட்ட்து..
பறக்கப் போகிறது...
எஜமான் ஆதரவாகக்
கழுத்தைப் பிடித்துத் தடவ
அதில் நான் மெய்மறக்க
சற்றே தூக்கி கீழே வைத்து அழுத்தி
கூண்டினுள் தள்ளி விட்டு
அருகிலிருந்த பையைத் துழாவ
ஆஹா மறுபடி நெல்மணி என
அலகைத் திறக்க, பார்த்தால்
வெளிவந்த்தென்னவோ ஒரு
கத்தரிக் கோல்...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
கிழவியின் தலை
முழுதும் நரைத்திருக்க
நெற்றியில் அகலப் பொட்டு;
சாதாரண சேலை..
கோவிலை விட்டுவநதால்
எதிரிலிருந்த அனுமன் சன்னிதியில்
கண்மூடி நின்றிருந்த்து..
கேட்டேன்..
‘நாகப் பட்டினம் போற வழி’
‘அத இந்த
திருக்கண்ணபுரத்திலிருந்தே கேக்கீகளா..
இப்படியே போய் கொளத்த தாண்டி...”
என ஆரம்பித்து விவரமாகச் சொல்ல
காரிலமர்ந்து கிளப்பியபடி
மனைவியிடம் சொன்னேன்..
இந்தக் கிராமத்து ஜன்ங்கள்ளாம்
வெள்ளந்தி தான்.. நம்ம சென்னை மாதிரி கிடையாது’
சொல்லி முடிக்குமுன்
கார்க்கண்ணாடியில் நிழலாட..
கண்ணாடியை இறக்கினால் அவள்..
அந்தப் பேரிளம் பெண்...
‘சாரே.. ரூட் சொன்னதுக்கு
துட்டு தராம போறீகளே..
ஒரு பத்து ரூபா கொடும்..”
என் மனைவி சிரிப்பை அடக்கிக் கொள்ள
நான் கொடுத்த பத்து ரூபாயை
கிடுகிடுவென்று ஓடிப்போய்
அங்கிருந்த உண்டியலில் போட்டாள் அவள்..
திகைத்துப் போய்
‘ஏய் என்ன பண்ற’
‘என் பேரனுக்கு ஜீரம் போகணும்
அதுக்கு ஒரு ரூபா..
நாஞ்சொன்ன வழில்ல நீங்க
பத்திரமாப் போகணும்..
அதுக்கு மிச்சம் ஒன்பது...”
**
முழுதும் நரைத்திருக்க
நெற்றியில் அகலப் பொட்டு;
சாதாரண சேலை..
கோவிலை விட்டுவநதால்
எதிரிலிருந்த அனுமன் சன்னிதியில்
கண்மூடி நின்றிருந்த்து..
கேட்டேன்..
‘நாகப் பட்டினம் போற வழி’
‘அத இந்த
திருக்கண்ணபுரத்திலிருந்தே கேக்கீகளா..
இப்படியே போய் கொளத்த தாண்டி...”
என ஆரம்பித்து விவரமாகச் சொல்ல
காரிலமர்ந்து கிளப்பியபடி
மனைவியிடம் சொன்னேன்..
இந்தக் கிராமத்து ஜன்ங்கள்ளாம்
வெள்ளந்தி தான்.. நம்ம சென்னை மாதிரி கிடையாது’
சொல்லி முடிக்குமுன்
கார்க்கண்ணாடியில் நிழலாட..
கண்ணாடியை இறக்கினால் அவள்..
அந்தப் பேரிளம் பெண்...
‘சாரே.. ரூட் சொன்னதுக்கு
துட்டு தராம போறீகளே..
ஒரு பத்து ரூபா கொடும்..”
என் மனைவி சிரிப்பை அடக்கிக் கொள்ள
நான் கொடுத்த பத்து ரூபாயை
கிடுகிடுவென்று ஓடிப்போய்
அங்கிருந்த உண்டியலில் போட்டாள் அவள்..
திகைத்துப் போய்
‘ஏய் என்ன பண்ற’
‘என் பேரனுக்கு ஜீரம் போகணும்
அதுக்கு ஒரு ரூபா..
நாஞ்சொன்ன வழில்ல நீங்க
பத்திரமாப் போகணும்..
அதுக்கு மிச்சம் ஒன்பது...”
**
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
”அறிவீரா மன்னா..
ஜாதி, மதம் ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பார்ப்பதில்லை காதல்..
எனவே இளவரசி விருப்பத்தை
அங்கீகரியுங்கள்...”
‘பாட்டி ஒரு சந்தேகம்”
“என்ன அந்தக்கால பட்த்தோட
வசனம் புரியலையா..’
’எனக்கு வீர்பாண்டி கட்பொம்மனே புரியும்..’
‘பின்ன’
‘காதல்னா என்ன?”
‘அதாவது..
இப்போ
ஒங்க அம்மா அப்பாவோட
அன்பா இருக்காளோல்லியோ...
அதான் காதல்..”
“அப்ப
தாத்தாக்கு ஒன்கிட்ட அது இல்லையா..
ஏன் ஒன்ன பாதில்ல விட்டுப் போனார்..”
மளுக்கென மனதில் ஏதோ உடைய
பாட்டியின் கண்களில்
கட்டியது குளம்..
ஜாதி, மதம் ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பார்ப்பதில்லை காதல்..
எனவே இளவரசி விருப்பத்தை
அங்கீகரியுங்கள்...”
‘பாட்டி ஒரு சந்தேகம்”
“என்ன அந்தக்கால பட்த்தோட
வசனம் புரியலையா..’
’எனக்கு வீர்பாண்டி கட்பொம்மனே புரியும்..’
‘பின்ன’
‘காதல்னா என்ன?”
‘அதாவது..
இப்போ
ஒங்க அம்மா அப்பாவோட
அன்பா இருக்காளோல்லியோ...
அதான் காதல்..”
“அப்ப
தாத்தாக்கு ஒன்கிட்ட அது இல்லையா..
ஏன் ஒன்ன பாதில்ல விட்டுப் போனார்..”
மளுக்கென மனதில் ஏதோ உடைய
பாட்டியின் கண்களில்
கட்டியது குளம்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்.
.
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தடவித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
மறக்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்.
.
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தடவித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
மறக்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
அன்பின் நண்பர்களுக்கு..
இங்கு நான் இடுபவை பரவாயில்லாமல் தானே இருக்கின்றன..இல்லை போரடிக்கின்றதா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
இங்கு நான் இடுபவை பரவாயில்லாமல் தானே இருக்கின்றன..இல்லை போரடிக்கின்றதா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன் wrote:அன்பின் நண்பர்களுக்கு..
இங்கு நான் இடுபவை பரவாயில்லாமல் தானே இருக்கின்றன..இல்லை போரடிக்கின்றதா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
போரடிக்கல எல்லாமே நல்லா இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
நன்றி ஜாகீர்தா பானு அவர்களே,,
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?;
கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’
‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’
இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’
கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது சரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள
கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’
நாலாம் படிக்கட்டில் இருந்த
கன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கடலை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’
கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”
“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ..
அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’
ஷ்.. சத்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..
‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?;
கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’
‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’
இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’
கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது சரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள
கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’
நாலாம் படிக்கட்டில் இருந்த
கன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கடலை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’
கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”
“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ..
அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’
ஷ்.. சத்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..
‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன் wrote:நன்றி ஜாகீர்தா பானு அவர்களே,,
என் பெயரை கொஞ்சம் நல்லா பாருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சின்ன முயற்சிகள்...ஹைக்கூ குறித்து.
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
Page 5 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|