Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
5 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:23 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
வாய்ப்புக் கிடைக்குமென
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
முடிவெடு அழகின் அழகே என்னைச்
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!
**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!
**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
யாரோ
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
கவிதை வரிக்கா..
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
”தர்ம்ம் வென்றது!”
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை.
ஜெயித்தவர் கூறினார்..
“தர்ம்ம் தோற்றது”
தோற்றவர் கூறினார்
வழக்கம் போலவே
மக்கள் முழித்தனர்..
பின்னர் சிரித்தே
செய்யப் போயினர்
அவரவர் வேலையை.
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
தலைவலி
இட்து காதின் நேர்க்கோட்டில்
ஆரம்பித்து
உள்சென்று வியாபித்து
வலது காதுவரை வலிக்க
கைப்பையைத் திறந்து
எப்போதும் நண்பனான
மஞ்சள் மருந்தைத் தடவினால்...
கெக்கெக்கெக்கே என
வில்லத்தனமாய் சிரித்த வலி
கூடிக்கொண்டே செல்ல
‘இதைச்சாப்பிடு.. வாயுத்தொல்லைவராது’
எனத் தோழி கொடுத்த
எக்ஸ்ட்ரா மாத்திரையை
முழுங்க
ம்ஹீம்
கல்லுளிமங்கத்தனமாய்
போகாமல் படுத்தப் படுத்த
முகம் சற்றே வெளிற
காகி தத் துணி கொண்டு
அழுந் தத் துடைக்கும் போது
க்யூபில் எட்டிப் பார்த்தமேலாளர்
என்னம்மா முகம் வாடியிருக்கு..
நெத்திப் பொட்டு விலகியிருக்கு
எனக் கேட்ட கேள்விக்கு
சோகையாய் சிரித்துக்
கணிணியைப் பார்த்தால்
ம்ஹீம் மனம் ஒன்றாமல் போகையில்
கைப்பையிலிருந்து ஒலிவர
எடுத்து செல்லிடைப் பேசியைக் காதில் வைக்க...
”என்ன..ரொம்ப நேரமா அடிச்சேன்..
நிறைய வேலையா.. தொந்தரவு பண்ணிட்டேனா..
கொஞ்சம் சீக்கிரமா வ ந்துட்டேன்...
ஒண்ணுமில்லை..சின்னத் தலைவலி தான்..
காஃபி போட்டுக் குடிச்சுட்டேன்..
முடிஞ்சா சீக்கிரம் வா..
சேச்சே...கவலைப் படாதே..”
செல் அமைதியாக
‘அச்ச்ச்சோ.. இவருக்கு வலி தாங்காதே..
சுக்கு அரைச்சு தலையில்
மெலிசாத் தடவலாம்...
பக்கத்து பங்கஜம் மாமி
ஏதோ திப்பிலியோ மொளகோ
கஷாயம் சொன்னாளே..
அதப்போட்டுப்பார்க்கலாம்...
இப்போதைக்கு மேலாளருக்குச்
சொல்லிச் செல்ல்லாம்’
என நினைத்துக் கைப்பையை எடுக்கையில்
வாட்டிய வலி
போன இடம் தெரியவில்லை...
ஆச்சர்யமாய்...!
இட்து காதின் நேர்க்கோட்டில்
ஆரம்பித்து
உள்சென்று வியாபித்து
வலது காதுவரை வலிக்க
கைப்பையைத் திறந்து
எப்போதும் நண்பனான
மஞ்சள் மருந்தைத் தடவினால்...
கெக்கெக்கெக்கே என
வில்லத்தனமாய் சிரித்த வலி
கூடிக்கொண்டே செல்ல
‘இதைச்சாப்பிடு.. வாயுத்தொல்லைவராது’
எனத் தோழி கொடுத்த
எக்ஸ்ட்ரா மாத்திரையை
முழுங்க
ம்ஹீம்
கல்லுளிமங்கத்தனமாய்
போகாமல் படுத்தப் படுத்த
முகம் சற்றே வெளிற
காகி தத் துணி கொண்டு
அழுந் தத் துடைக்கும் போது
க்யூபில் எட்டிப் பார்த்தமேலாளர்
என்னம்மா முகம் வாடியிருக்கு..
நெத்திப் பொட்டு விலகியிருக்கு
எனக் கேட்ட கேள்விக்கு
சோகையாய் சிரித்துக்
கணிணியைப் பார்த்தால்
ம்ஹீம் மனம் ஒன்றாமல் போகையில்
கைப்பையிலிருந்து ஒலிவர
எடுத்து செல்லிடைப் பேசியைக் காதில் வைக்க...
”என்ன..ரொம்ப நேரமா அடிச்சேன்..
நிறைய வேலையா.. தொந்தரவு பண்ணிட்டேனா..
கொஞ்சம் சீக்கிரமா வ ந்துட்டேன்...
ஒண்ணுமில்லை..சின்னத் தலைவலி தான்..
காஃபி போட்டுக் குடிச்சுட்டேன்..
முடிஞ்சா சீக்கிரம் வா..
சேச்சே...கவலைப் படாதே..”
செல் அமைதியாக
‘அச்ச்ச்சோ.. இவருக்கு வலி தாங்காதே..
சுக்கு அரைச்சு தலையில்
மெலிசாத் தடவலாம்...
பக்கத்து பங்கஜம் மாமி
ஏதோ திப்பிலியோ மொளகோ
கஷாயம் சொன்னாளே..
அதப்போட்டுப்பார்க்கலாம்...
இப்போதைக்கு மேலாளருக்குச்
சொல்லிச் செல்ல்லாம்’
என நினைத்துக் கைப்பையை எடுக்கையில்
வாட்டிய வலி
போன இடம் தெரியவில்லை...
ஆச்சர்யமாய்...!
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
கதவுகள்
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!
**
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!
**
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
அன்பின் ஜாஹிர்தா பானு, ஐயாசாமி ராம் நன்றி
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சின்ன முயற்சிகள்...ஹைக்கூ குறித்து.
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
Page 4 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|