Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
5 posters
Page 3 of 10
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:23 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
அதிசயமாகவே தான் இருந்த்து..
வீட்டில் இருந்து சைக்கிளை
இரண்டு மிதி மிதித்து
ஆறுமுச்சந்தி சென்று கடலைக் கடையில்
சூடாக வறுகடலை வாங்கி,
பின் கடவுள் இல்லை என்ற போஸ்டருடன் இருக்கும்
ஆறுமுகவிலாஸில் பக்கோடா வாங்கி
மறுபடி மிதித்து
அக்காவீடு வந்து கொடுத்த போது
ரொம்ப தாங்க்ஸ்டா எனச் சொல்லி
ஆர்வமாய் அக்கா சாப்பிட்ட்தைப் பார்த்த போது..
**
அக்காவுக்கு எதிலும் அலட்சியம் ஜாஸ்தி..
ஏதாவது மேட்சில் யாராவது நன்றாக விளையாடினால்
பாராட்ட மாட்டாள்..
உருகி உருகி சிவாஜியின் நடிப்பிற்குக் கண்கலங்கினால்
ச்ச் ப்ப்.. இது ஜான்வேய்ன் ஏற்கெனவே பண்ணிட்டாரே என்பாள்..
உடைகள் உடுத்துவதிலும்
ஒரு அலட்சியம்
கொஞ்சமே கொஞ்சம் மேட்சிங் இருக்கும்
பவுடர் பூச மாட்டாள்..
உதட்டுச் சாயம் ம்ஹீம்..
ஆனாலும் அழகாய் இருப்பாள்..
அம்மா ஏதாவது வேலை சொன்னால்
அப்படியே ஒதுக்கிவிடுவாள்..
சும்மா படிப்பு ரேடியோ என்றால் எப்படி
போற எடம் எப்படி இருக்கோ என்றால்
எல்லாம் அப்ப்ப் பார்த்துக்கலாம் என்பாள்..
இப்படிப் பட்ட அக்கா ஒரு நாள்
பக்கத்துத் தெரு பாஸ்கருடன் ஓடிப் போய்
திருமணம் செய்து அங்கேயே குடித்தனம் வந்தபோது
அம்மாவுக்குக் கோபம்;கண்ணீர்..
அப்படி என்ன அதிசயத்தை அந்தப் பையனிடம் கண்டாள் என..
அப்பா வழக்கம் போல் மெளனம்..
பள்ளி செல்லும்போது கொஞ்சம் நான்பார்த்து வருவேன்..
ஒருநாள் நீ மாமா ஆகப் போறேடா என்ற போது
அம்மாவிடம் சொல்ல..
அது ஒண்ணு தான் பாக்கி
பெத்தவங்கள அழவச்சுட்டு எப்படி இருப்பாளாம்..
நீ அடிக்கடி போகாதே..
**
சில நாட்கள் போகாமல்
பின் எல்லாம் வாங்கிக் கொடுத்தால்
அன்புடன் உண்டு.
கடைசியில் கேட்டாள்.. அம்மா சொன்னாளாடா
இதையெல்லாம் வாங்கிக் கொடுன்னு..
இல்லைக்கா ஏதோ தோணித்து..
பாக்கெட் மணில்ல வாங்கினேன்..
கேட்ட அவளின் கண்கள் கலங்க
முகத்தில் விரிந்த்து ஏமாற்றம்..
வீட்டில் இருந்து சைக்கிளை
இரண்டு மிதி மிதித்து
ஆறுமுச்சந்தி சென்று கடலைக் கடையில்
சூடாக வறுகடலை வாங்கி,
பின் கடவுள் இல்லை என்ற போஸ்டருடன் இருக்கும்
ஆறுமுகவிலாஸில் பக்கோடா வாங்கி
மறுபடி மிதித்து
அக்காவீடு வந்து கொடுத்த போது
ரொம்ப தாங்க்ஸ்டா எனச் சொல்லி
ஆர்வமாய் அக்கா சாப்பிட்ட்தைப் பார்த்த போது..
**
அக்காவுக்கு எதிலும் அலட்சியம் ஜாஸ்தி..
ஏதாவது மேட்சில் யாராவது நன்றாக விளையாடினால்
பாராட்ட மாட்டாள்..
உருகி உருகி சிவாஜியின் நடிப்பிற்குக் கண்கலங்கினால்
ச்ச் ப்ப்.. இது ஜான்வேய்ன் ஏற்கெனவே பண்ணிட்டாரே என்பாள்..
உடைகள் உடுத்துவதிலும்
ஒரு அலட்சியம்
கொஞ்சமே கொஞ்சம் மேட்சிங் இருக்கும்
பவுடர் பூச மாட்டாள்..
உதட்டுச் சாயம் ம்ஹீம்..
ஆனாலும் அழகாய் இருப்பாள்..
அம்மா ஏதாவது வேலை சொன்னால்
அப்படியே ஒதுக்கிவிடுவாள்..
சும்மா படிப்பு ரேடியோ என்றால் எப்படி
போற எடம் எப்படி இருக்கோ என்றால்
எல்லாம் அப்ப்ப் பார்த்துக்கலாம் என்பாள்..
இப்படிப் பட்ட அக்கா ஒரு நாள்
பக்கத்துத் தெரு பாஸ்கருடன் ஓடிப் போய்
திருமணம் செய்து அங்கேயே குடித்தனம் வந்தபோது
அம்மாவுக்குக் கோபம்;கண்ணீர்..
அப்படி என்ன அதிசயத்தை அந்தப் பையனிடம் கண்டாள் என..
அப்பா வழக்கம் போல் மெளனம்..
பள்ளி செல்லும்போது கொஞ்சம் நான்பார்த்து வருவேன்..
ஒருநாள் நீ மாமா ஆகப் போறேடா என்ற போது
அம்மாவிடம் சொல்ல..
அது ஒண்ணு தான் பாக்கி
பெத்தவங்கள அழவச்சுட்டு எப்படி இருப்பாளாம்..
நீ அடிக்கடி போகாதே..
**
சில நாட்கள் போகாமல்
பின் எல்லாம் வாங்கிக் கொடுத்தால்
அன்புடன் உண்டு.
கடைசியில் கேட்டாள்.. அம்மா சொன்னாளாடா
இதையெல்லாம் வாங்கிக் கொடுன்னு..
இல்லைக்கா ஏதோ தோணித்து..
பாக்கெட் மணில்ல வாங்கினேன்..
கேட்ட அவளின் கண்கள் கலங்க
முகத்தில் விரிந்த்து ஏமாற்றம்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
வியாதி வர்றதுக்குக் காரணமே
இந்த திருஷ்டி தான்’
மடியில் தம்பியை வைத்து
சூட்த்தை மூன்றுமுறை சுற்றுவதற்கு முன்
அம்மா சொன்னதும்;
வளர்ந்த பின்
‘எட்டு மிளகாய் போட்டு
சுத்திப் போட்டு அடுப்பில போட்டேங்க..
கமறவே இல்லை..
பாருங்க பசங்களுக்கு..ரொம்ப திருஷ்டி’
என்று பதறிச் சொன்னதும்;
காதலித்துக் கடிமணம் புரிந்த
வடக்கத்திய மனைவி என்னிடம்
‘நஸர் உத்தார்னேகேலியே
இந்த கட் பண்ணின நிம்புவை
மூணு டைம் சுத்தி பாஹர் போடு’
என்று மழலைத் தமிழில் சொன்னதும்;
எனக்கு திருஷ்டிக்கு
முற்றுப் புள்ளி வைப்பதை விட.
அவர்களது அன்பின்
’கமா’ வாகத்தான் தோன்றியது...
இந்த திருஷ்டி தான்’
மடியில் தம்பியை வைத்து
சூட்த்தை மூன்றுமுறை சுற்றுவதற்கு முன்
அம்மா சொன்னதும்;
வளர்ந்த பின்
‘எட்டு மிளகாய் போட்டு
சுத்திப் போட்டு அடுப்பில போட்டேங்க..
கமறவே இல்லை..
பாருங்க பசங்களுக்கு..ரொம்ப திருஷ்டி’
என்று பதறிச் சொன்னதும்;
காதலித்துக் கடிமணம் புரிந்த
வடக்கத்திய மனைவி என்னிடம்
‘நஸர் உத்தார்னேகேலியே
இந்த கட் பண்ணின நிம்புவை
மூணு டைம் சுத்தி பாஹர் போடு’
என்று மழலைத் தமிழில் சொன்னதும்;
எனக்கு திருஷ்டிக்கு
முற்றுப் புள்ளி வைப்பதை விட.
அவர்களது அன்பின்
’கமா’ வாகத்தான் தோன்றியது...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
"வாய்க்கலையே..
ஒனக்கு வாச்ச மாதிரி புருஷன்,
புள்ளைங்க, மாட்டுப் பொண் எனக்கு...’
அம்மாவிடம் அவ்வப்போது புலம்புவாள்
பக்கத்துவீட்டு ’பபுள்கம்’ ரங்கம் மாமி..
என்னம்மா இது எனக் கேட்டால்
அம்மா புன்னகைப்பாள்..
சும்மா இருடீ.. ஏதோ சொல்லிட்டுப் போறாள்..
வாழ்க்கைல ரொம்ப கஷ்டப் ப்ட்டுட்டாள்.. என்பாள்..
காலப் போக்கில்
கம் மாமியின் கணவர் மறைய
தொடர்ந்த சில வருடங்களில்
அம்மா மரித்த சமயத்தில்
கேட்டது குரல்..
‘வாய்க்கலையே..
ஒன்னமாதிரி எனக்கு
சுமங்கலியாப் போறதுக்கு..”
**
திருத்தவே முடியாது
சில ஜென்மங்களை..
ஒனக்கு வாச்ச மாதிரி புருஷன்,
புள்ளைங்க, மாட்டுப் பொண் எனக்கு...’
அம்மாவிடம் அவ்வப்போது புலம்புவாள்
பக்கத்துவீட்டு ’பபுள்கம்’ ரங்கம் மாமி..
என்னம்மா இது எனக் கேட்டால்
அம்மா புன்னகைப்பாள்..
சும்மா இருடீ.. ஏதோ சொல்லிட்டுப் போறாள்..
வாழ்க்கைல ரொம்ப கஷ்டப் ப்ட்டுட்டாள்.. என்பாள்..
காலப் போக்கில்
கம் மாமியின் கணவர் மறைய
தொடர்ந்த சில வருடங்களில்
அம்மா மரித்த சமயத்தில்
கேட்டது குரல்..
‘வாய்க்கலையே..
ஒன்னமாதிரி எனக்கு
சுமங்கலியாப் போறதுக்கு..”
**
திருத்தவே முடியாது
சில ஜென்மங்களை..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
பணிவில்; அவளது பார்வை வீச்சில்..
..பிணிகள் எல்லாம் பறந்து போகும்..
துணிவாய் வாயைத் திறக்கச் சொல்லித்
..திணிப்பாள் கசப்பு ம்ருந்தை நன்றாய்..
இனிதாய் அழகாய்க் கேட்பாள் தினமும்....
..இப்போ வலிதான் எப்படி இருக்கு..
மனித னாகப் பிறந்தே விட்டோம்..
..மறக்குமா வலிகள் என்றால் சிரிப்பாள்..
காலப் போக்கில் குணமாய் ஆகி
.மருத்துவ மனையை விட்டே சென்று
மறுபடி வேலை மறுபடி குடும்பம்
என்றே நாட்கள் சென்ற போதில்
ஒருநாள் சென்றே பார்த்தேன் அவளை..
சிரித்தால் ஒன்றும் பதிலும் வரலை..
அழகிய பெண்ணே.மறந்து விட்டாயா..
இங்கே இருக்கும் நாட்களில் எல்லாம்
ஈன்ற தாயாய்; இனிய தோழியாய்
இருந்தவள் தானே நீயும் என்றால்..
ஐயா நோய்கள் தாக்கும் பொழுதில்
தீர்க்க நடக்கும் மருந்தாய் நாங்கள்..
அதுவே எம்தொழில் அதற்கு மேலும்
பெரிதாய் எதுவும் செய்யவு மில்லை..
பிணியுடன் வந்தால் மருந்தாய் இருப்போம்.
நோய்கள் மறைந்து நீவிர் சென்றால்..
நீங்கள் வேறு நாங்களும் வேறு...
மன்னிக்க வேண்டும் வேலை நிறைய..
பிறிதொரு பொழுதில் முடிந்தால் பார்ப்போம்..
வெள்ளை மன்ந்தான் உடையில் தெரிய
சிரித்தே மறைந்த்து அழகிய தேவதை..
..பிணிகள் எல்லாம் பறந்து போகும்..
துணிவாய் வாயைத் திறக்கச் சொல்லித்
..திணிப்பாள் கசப்பு ம்ருந்தை நன்றாய்..
இனிதாய் அழகாய்க் கேட்பாள் தினமும்....
..இப்போ வலிதான் எப்படி இருக்கு..
மனித னாகப் பிறந்தே விட்டோம்..
..மறக்குமா வலிகள் என்றால் சிரிப்பாள்..
காலப் போக்கில் குணமாய் ஆகி
.மருத்துவ மனையை விட்டே சென்று
மறுபடி வேலை மறுபடி குடும்பம்
என்றே நாட்கள் சென்ற போதில்
ஒருநாள் சென்றே பார்த்தேன் அவளை..
சிரித்தால் ஒன்றும் பதிலும் வரலை..
அழகிய பெண்ணே.மறந்து விட்டாயா..
இங்கே இருக்கும் நாட்களில் எல்லாம்
ஈன்ற தாயாய்; இனிய தோழியாய்
இருந்தவள் தானே நீயும் என்றால்..
ஐயா நோய்கள் தாக்கும் பொழுதில்
தீர்க்க நடக்கும் மருந்தாய் நாங்கள்..
அதுவே எம்தொழில் அதற்கு மேலும்
பெரிதாய் எதுவும் செய்யவு மில்லை..
பிணியுடன் வந்தால் மருந்தாய் இருப்போம்.
நோய்கள் மறைந்து நீவிர் சென்றால்..
நீங்கள் வேறு நாங்களும் வேறு...
மன்னிக்க வேண்டும் வேலை நிறைய..
பிறிதொரு பொழுதில் முடிந்தால் பார்ப்போம்..
வெள்ளை மன்ந்தான் உடையில் தெரிய
சிரித்தே மறைந்த்து அழகிய தேவதை..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
குதூகலம்தான் கொண்டாட்டந்தேன்..
எல்லாமே இங்கே எலவசந்தேன்..
பையனுக்குக் கேர்ள்பெரண்ட் இலவசம்..
பொண்ணுக்கு புருஷன் இலவசம்..
புருஷனுக்குத் தொப்பை இலவசம்..
மாமியாருக்கு மாட்டுப் பொண் எலவசம்..
மாட்டுப்பொண்ணுக்கு சீரியல் எலவசம்..
சீரியலுக்கு நாயகி இலவசம்..
நாயகிக்கு வில்லி இலவசம்..!
வில்லிக்கு விளம்பரம் இலவசம்..
விளம்பரத்துக்கு விற்பனை இலவசம்..
விற்பனைக்கு ஹீரோஇலவசம்
ஹீரோவிற்குக் கோடிகள் இலவசம்
கோடிகளுக்கு வேட்பாளர் இலவசம்
வேட்பாளருக்குத் தொகுதி இலவசம்
தொகுதிக்குக் கட்சி இலவசம்
கட்சிக்கு ஆட்சி இலவசம்
ஆட்சிக்கு இலவசமே இலவசம்
ஆகக் கூடி
வாழ்க்கையே எலவசமாப் போச்சு...!
**
எல்லாமே இங்கே எலவசந்தேன்..
பையனுக்குக் கேர்ள்பெரண்ட் இலவசம்..
பொண்ணுக்கு புருஷன் இலவசம்..
புருஷனுக்குத் தொப்பை இலவசம்..
மாமியாருக்கு மாட்டுப் பொண் எலவசம்..
மாட்டுப்பொண்ணுக்கு சீரியல் எலவசம்..
சீரியலுக்கு நாயகி இலவசம்..
நாயகிக்கு வில்லி இலவசம்..!
வில்லிக்கு விளம்பரம் இலவசம்..
விளம்பரத்துக்கு விற்பனை இலவசம்..
விற்பனைக்கு ஹீரோஇலவசம்
ஹீரோவிற்குக் கோடிகள் இலவசம்
கோடிகளுக்கு வேட்பாளர் இலவசம்
வேட்பாளருக்குத் தொகுதி இலவசம்
தொகுதிக்குக் கட்சி இலவசம்
கட்சிக்கு ஆட்சி இலவசம்
ஆட்சிக்கு இலவசமே இலவசம்
ஆகக் கூடி
வாழ்க்கையே எலவசமாப் போச்சு...!
**
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
பூரணத்தை முழுதாய்க் கொண்டே
இருந்த தா இளையவன் சிரித்த சிரிப்பும்..?
*
அரியணை மேலே அண்ணலுமே
அருகில் சீதை அமர்ந்திருக்க
அனுமனும் பணிவாய்த் தரையினிலே
அழகாய்த் தொழுதே அமர்ந்திருக்க
பின்னால் கொற்றக் குடையைத்தான்
பிடித்தே நின்ற இளயவனின்
அருகில் வந்தாள் நித்ராவும்
வ்ரவா நண்பா எனக்கேட்டாள்..
லஷ்மணன் நினைவோ முன்னால்போய்
லட்சியம் அடைய அவளிடமே
ஈரேழ் ஆண்டுகள் முன்னாலே
கேட்ட்தை நினைத்தே பார்த்ததுவே..
*
’நித்ரா தேவி உந்தனைத் தான்
நெஞ்சினில் பதித்து வணங்கிடுவேன்
இன்றுத் தொடங்கி ஈரெழு
ஆண்டுகள் எந்தன் அருகினிலே
வராமல் இருந்தால் நான் மகிழ்வேன்
அண்ணல் அண்ணி இவர்களுக்கு
பணிவிடை செய்தே மகிழ்ந்திடுவேன்..”
இளையவன் பணிவாய்க் கேட்டிடவும்
மெல்ல்ச் சிரித்தே தான் சொன்னாள்
’ ஈரே ழாண்டுகள் நானுந்தன்
அருகிலே என்றும் வரமாட்டேன்..
ஆண்டுப் பொழுது கழிந்தவுடன்
உடனே வருவேன் விடமாட்டேன்..
இளைய லஷ்மணப் பெருமாளே..
இனிதாய்ப் போய்வா’ என்றவள் தான்
இன்று பட்டா பிஷேகம் என்றே
நன்றாய் உணர்ந்தும் தான் கூட
நல்ல சமயம் பார்த்தே தான்
வருகிறேன் என்கிறாள் என்செய்ய
என்றே மனதுள் நினைத்தபடி
இளையவன் மெல்லச் சிரித்தனன்தான்..
*
பலரும் அங்கே பலவிதமாய்
இளையவன் சிரிப்பைத் தான் நினைத்தார்..
**
நாட்கள் கோள்கள் எல்லாம் தான்
முன்பே பார்த்தே தான் குறித்தீர்..
அண்ணல் அரியணை ஏறத்தான்
இவ்வளவு ஆண்டுகள் ஆனதையா..
என்றே சிரிக்கிறான் என நினைத்தார்
பிரம்ம ரிஷியான வஷிஷ்டரும் தான்..
*
எவ்வளவு கஷ்டம் தான்பட்டாய்
இனிய சித்தி நீயும்தான்
பரதன் அம்ர முடிந்த்துவோ..
பாதுகை தானே ஆண்ட்து..
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் கைகேயி..
*
கோட்டைக் கிழித்தே தான்சொன்னேன்
அண்ணி தாண்டாதே என்று..
என்னைச் சொற்களி னால்கிழித்தே
அனுப்பித் தாண்டினீர் என்னாச்சு..
கஷ்டம் இல்லாதிருந்திருக்கும்..
கனிவாய் என்சொல் கேட்டிருந்தால்’
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் சீதையும் தான்..
*
தம்பி உடம்பைப் பார்த்துக்கொள்
ஒழுங்காய் உணவை உண்டாயா
உறக்கம் நன்றாய்க் கொண்டாயா...
ஈரேழாண்டுகள் உடன் இருந்தும்
ஒருவார்த்தை இவனைக் கேட்ட்தில்லை..
அதைத்தான் நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தார் அண்ணலும்தான்..
*
லஷ்மணப் பெருமாள் யாரென்றால்
அண்ணலின் அம்சம் தானன்றோ..
பூரணம் என்ற பரம்பொருளைக்
கிள்ளியே அங்கே நின்றதன்றோ..
பூரண்ந்தன்னைக் கிள்ளினாலும்
பூரணத்தைத் தான் அடையும்..
அதுவே இறையின் விதியன்றோ..
**
பூத்த்து என்னவோ ஒருசிரிப்பு
பலரது நினைவில் பல பூக்கள்..
மலரச்செய்த லஷ்மணனை
மயங்க வைத்தாள் நித்ராவும்
சற்றே லஷ்மணன் கண்மூடக்
குடையும் சற்றே சாய்ந்த துவே..
இருந்த தா இளையவன் சிரித்த சிரிப்பும்..?
*
அரியணை மேலே அண்ணலுமே
அருகில் சீதை அமர்ந்திருக்க
அனுமனும் பணிவாய்த் தரையினிலே
அழகாய்த் தொழுதே அமர்ந்திருக்க
பின்னால் கொற்றக் குடையைத்தான்
பிடித்தே நின்ற இளயவனின்
அருகில் வந்தாள் நித்ராவும்
வ்ரவா நண்பா எனக்கேட்டாள்..
லஷ்மணன் நினைவோ முன்னால்போய்
லட்சியம் அடைய அவளிடமே
ஈரேழ் ஆண்டுகள் முன்னாலே
கேட்ட்தை நினைத்தே பார்த்ததுவே..
*
’நித்ரா தேவி உந்தனைத் தான்
நெஞ்சினில் பதித்து வணங்கிடுவேன்
இன்றுத் தொடங்கி ஈரெழு
ஆண்டுகள் எந்தன் அருகினிலே
வராமல் இருந்தால் நான் மகிழ்வேன்
அண்ணல் அண்ணி இவர்களுக்கு
பணிவிடை செய்தே மகிழ்ந்திடுவேன்..”
இளையவன் பணிவாய்க் கேட்டிடவும்
மெல்ல்ச் சிரித்தே தான் சொன்னாள்
’ ஈரே ழாண்டுகள் நானுந்தன்
அருகிலே என்றும் வரமாட்டேன்..
ஆண்டுப் பொழுது கழிந்தவுடன்
உடனே வருவேன் விடமாட்டேன்..
இளைய லஷ்மணப் பெருமாளே..
இனிதாய்ப் போய்வா’ என்றவள் தான்
இன்று பட்டா பிஷேகம் என்றே
நன்றாய் உணர்ந்தும் தான் கூட
நல்ல சமயம் பார்த்தே தான்
வருகிறேன் என்கிறாள் என்செய்ய
என்றே மனதுள் நினைத்தபடி
இளையவன் மெல்லச் சிரித்தனன்தான்..
*
பலரும் அங்கே பலவிதமாய்
இளையவன் சிரிப்பைத் தான் நினைத்தார்..
**
நாட்கள் கோள்கள் எல்லாம் தான்
முன்பே பார்த்தே தான் குறித்தீர்..
அண்ணல் அரியணை ஏறத்தான்
இவ்வளவு ஆண்டுகள் ஆனதையா..
என்றே சிரிக்கிறான் என நினைத்தார்
பிரம்ம ரிஷியான வஷிஷ்டரும் தான்..
*
எவ்வளவு கஷ்டம் தான்பட்டாய்
இனிய சித்தி நீயும்தான்
பரதன் அம்ர முடிந்த்துவோ..
பாதுகை தானே ஆண்ட்து..
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் கைகேயி..
*
கோட்டைக் கிழித்தே தான்சொன்னேன்
அண்ணி தாண்டாதே என்று..
என்னைச் சொற்களி னால்கிழித்தே
அனுப்பித் தாண்டினீர் என்னாச்சு..
கஷ்டம் இல்லாதிருந்திருக்கும்..
கனிவாய் என்சொல் கேட்டிருந்தால்’
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் சீதையும் தான்..
*
தம்பி உடம்பைப் பார்த்துக்கொள்
ஒழுங்காய் உணவை உண்டாயா
உறக்கம் நன்றாய்க் கொண்டாயா...
ஈரேழாண்டுகள் உடன் இருந்தும்
ஒருவார்த்தை இவனைக் கேட்ட்தில்லை..
அதைத்தான் நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தார் அண்ணலும்தான்..
*
லஷ்மணப் பெருமாள் யாரென்றால்
அண்ணலின் அம்சம் தானன்றோ..
பூரணம் என்ற பரம்பொருளைக்
கிள்ளியே அங்கே நின்றதன்றோ..
பூரண்ந்தன்னைக் கிள்ளினாலும்
பூரணத்தைத் தான் அடையும்..
அதுவே இறையின் விதியன்றோ..
**
பூத்த்து என்னவோ ஒருசிரிப்பு
பலரது நினைவில் பல பூக்கள்..
மலரச்செய்த லஷ்மணனை
மயங்க வைத்தாள் நித்ராவும்
சற்றே லஷ்மணன் கண்மூடக்
குடையும் சற்றே சாய்ந்த துவே..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சாரம் எல்லாம் அவிழ்த்து,
எல்லா வேலைகளும் முடிந்து,
வண்ணமயமாய்...
புதியதாய் நடிக்கும் வெகு இளைய கதானாயகி போலப்
பளிச்சென இருந்த்து..
ம்ம்.இரண்டு வருடப் பழக்கம்..
இனி அவ்வளவு தான்..
கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு...
எல்லா வேலைகளும் முடிந்து,
வண்ணமயமாய்...
புதியதாய் நடிக்கும் வெகு இளைய கதானாயகி போலப்
பளிச்சென இருந்த்து..
ம்ம்.இரண்டு வருடப் பழக்கம்..
இனி அவ்வளவு தான்..
கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
எண்ணிப் பார்ப்பதும் சுகம் தான்**
**
அன்றும் இதே நிலவு
ஆனால் அது மரத்தடி
இடமோ ஆத்தங்கரை ஓரம்..
மரக்கிளைகளில் தென்றல்கொஞ்ச
கீழே நீ
கிள்ளை மொழியில்
ஏதேதோ பேசினாய்..
பேச்செல்லாம் எங்கே புரிந்த்து..
இருளில்
இலைமறைகாயாய்த் தெரிந்த அழகு..
ப்ட்டும் படாமலும் தொட்ட வெளிச்சம்..
சுற்றிலும் பார்த்தபடி கன்னத்தில் கொடுத்த
மெல்லிய மின்சாரம்..
பின்னும் பேச்சு..
சற்றே கொஞ்சம் ஊடி
.அதனால் உனக்கு வந்த கோபம்
சிரித்தபடி நான் எழ
பின் நீ சென்றது..
**
இன்றும் அதே நிலவு..
அதே இரவு..
இருப்பது என்னவோ
நம்வீட்டு மொட்டை மாடி
தென்ற்ல் மெல்ல வீச
வா என ஜாடை காட்டினால்
முறைக்கிறாய்..
உனக்கும் எனக்கும்
ஏன் இந்தப் பிரிவு..
நடுவில் மூன்று குழந்தைகள்..
சுகமாய்த் தூங்கிக்கொண்டிருக்க..
ம்ம்
நான் இந்த மூலையில்
மறுபடி
எண்ணப் பார்க்கிறேன்..!
**
அன்றும் இதே நிலவு
ஆனால் அது மரத்தடி
இடமோ ஆத்தங்கரை ஓரம்..
மரக்கிளைகளில் தென்றல்கொஞ்ச
கீழே நீ
கிள்ளை மொழியில்
ஏதேதோ பேசினாய்..
பேச்செல்லாம் எங்கே புரிந்த்து..
இருளில்
இலைமறைகாயாய்த் தெரிந்த அழகு..
ப்ட்டும் படாமலும் தொட்ட வெளிச்சம்..
சுற்றிலும் பார்த்தபடி கன்னத்தில் கொடுத்த
மெல்லிய மின்சாரம்..
பின்னும் பேச்சு..
சற்றே கொஞ்சம் ஊடி
.அதனால் உனக்கு வந்த கோபம்
சிரித்தபடி நான் எழ
பின் நீ சென்றது..
**
இன்றும் அதே நிலவு..
அதே இரவு..
இருப்பது என்னவோ
நம்வீட்டு மொட்டை மாடி
தென்ற்ல் மெல்ல வீச
வா என ஜாடை காட்டினால்
முறைக்கிறாய்..
உனக்கும் எனக்கும்
ஏன் இந்தப் பிரிவு..
நடுவில் மூன்று குழந்தைகள்..
சுகமாய்த் தூங்கிக்கொண்டிருக்க..
ம்ம்
நான் இந்த மூலையில்
மறுபடி
எண்ணப் பார்க்கிறேன்..!
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
புன்சிரிப்புகள், கைகுலுக்கல்கள் எல்லாம் முடிந்து
அவரவர் அமர,
ஒரு நிமிட் மேலாளர்;
மீன் மூலம் மேலாண்மை
போன்ற புத்தகங்களைப் பற்றி
நகைச்சுவையுடன் செவ்வனே பேசி
பின்னர்
விற்பனை இலக்கு ஏன் குறைவு..
யாரிடம் என்ன குறை
என விலாவாரியாக விவரித்து,
ஏன் சீக்கிரம் வசூலிக்க முடியவில்லை
ஏன் இவ்வளவு செலவுகள்
என
கணக்கப் பிள்ளையைச் சாடி;
அடுத்த மாத இலக்கை நிர்ணயித்து முடித்து
மணி பார்த்தால் ஒன்றரை..
அதான் பசிக்கிறது..
கை குலுக்கிக் கலைந்து
அறையில் மடிக்கணினியில்
வேறென்ன வேலை.....
மதியம் மூன்று மணிக்கு
விளம்பரக் கம்பெனிப் பெண் வருவாள்..
அழகாவும் இருப்பாள்..
ரசித்துக் கொண்டே பேசினால்
இன்றையப் பொழுது முடிந்த்து..
நாளைக்கு என்ன..
அட..
இன்றைப் போல் ஒன்றுமில்லையே.
போரடிக்குமே..
சரி, தொழிற்சாலை சென்று பேசுவோம்..
நம்மைப் பற்றி.. நமக்குத்தெரிந்த்தைப் பற்றி..
நிறையக் கொஞ்சுவோம்..
கொஞ்சம் திட்டுவோம்..
இப்பொழுது சற்று ஒப்பனை செய்யலாம்..
அழகி வேறு வருவாள்
முகம் கழுவும் அறைக்குச் சென்று
கண்ணாடி பார்த்த்தில்
தெரிந்த து.. சிறந்த மேலதிகாரியின்
பிம்பம்....!
அவரவர் அமர,
ஒரு நிமிட் மேலாளர்;
மீன் மூலம் மேலாண்மை
போன்ற புத்தகங்களைப் பற்றி
நகைச்சுவையுடன் செவ்வனே பேசி
பின்னர்
விற்பனை இலக்கு ஏன் குறைவு..
யாரிடம் என்ன குறை
என விலாவாரியாக விவரித்து,
ஏன் சீக்கிரம் வசூலிக்க முடியவில்லை
ஏன் இவ்வளவு செலவுகள்
என
கணக்கப் பிள்ளையைச் சாடி;
அடுத்த மாத இலக்கை நிர்ணயித்து முடித்து
மணி பார்த்தால் ஒன்றரை..
அதான் பசிக்கிறது..
கை குலுக்கிக் கலைந்து
அறையில் மடிக்கணினியில்
வேறென்ன வேலை.....
மதியம் மூன்று மணிக்கு
விளம்பரக் கம்பெனிப் பெண் வருவாள்..
அழகாவும் இருப்பாள்..
ரசித்துக் கொண்டே பேசினால்
இன்றையப் பொழுது முடிந்த்து..
நாளைக்கு என்ன..
அட..
இன்றைப் போல் ஒன்றுமில்லையே.
போரடிக்குமே..
சரி, தொழிற்சாலை சென்று பேசுவோம்..
நம்மைப் பற்றி.. நமக்குத்தெரிந்த்தைப் பற்றி..
நிறையக் கொஞ்சுவோம்..
கொஞ்சம் திட்டுவோம்..
இப்பொழுது சற்று ஒப்பனை செய்யலாம்..
அழகி வேறு வருவாள்
முகம் கழுவும் அறைக்குச் சென்று
கண்ணாடி பார்த்த்தில்
தெரிந்த து.. சிறந்த மேலதிகாரியின்
பிம்பம்....!
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சாதிக்கும் எண்ணமெதுவுமின்றி
சிறுவனைச் சந்தோஷப் படுத்துவ்தற்காக
கிடுகிடுவென ஓடிப்
பந்தை எடுத்து வருகிற்து
அந்த்த் தெருநாய்,,
வாலை ஆட்டிய படியே..
மறுபடி எறிய..
மறுபடி எடுத்து வர...
திடீரென பந்தை நாய் போட
சிறுவன் எடுத்து வர..
சிலிர்த்துக் கொண்ட சிறுவன்
நினைத்துக் கொண்டான்..
‘சே அப்படி எல்லாம் செய்யாது..
இது மட நாய்..”
சிறுவனைச் சந்தோஷப் படுத்துவ்தற்காக
கிடுகிடுவென ஓடிப்
பந்தை எடுத்து வருகிற்து
அந்த்த் தெருநாய்,,
வாலை ஆட்டிய படியே..
மறுபடி எறிய..
மறுபடி எடுத்து வர...
திடீரென பந்தை நாய் போட
சிறுவன் எடுத்து வர..
சிலிர்த்துக் கொண்ட சிறுவன்
நினைத்துக் கொண்டான்..
‘சே அப்படி எல்லாம் செய்யாது..
இது மட நாய்..”
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சின்ன முயற்சிகள்...ஹைக்கூ குறித்து.
» மரபுப் பா பயிலரங்கம்
» புதிய முயற்சிகள்..படங்கள் :)))
» சில சின்னக் கவிதைகள்....
» சின்னக் கவிதைகள்...
» மரபுப் பா பயிலரங்கம்
» புதிய முயற்சிகள்..படங்கள் :)))
» சில சின்னக் கவிதைகள்....
» சின்னக் கவிதைகள்...
Page 3 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|