ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

+2
ராஜா
சாமி
6 posters

Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by சாமி Tue 11 Feb 2014 - 22:47

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கவுதமன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:

இந்தியாவின் மூத்த தொழிற் சங்கத் தலைவரான சிங்காரவேலர், 1860-ம் ஆண்டு பிறந்தவர். நாட்டிலேயே முதன்முறையாக 1923-ம் ஆண்டு மே தினத்தைக் கொண்டாடியவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதில் பெரும் பங்காற்றியவர். பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளை அறிந்த சிங்காரவேலர் மிகச் சிறந்த வழக்கறிஞர். அந்தக் காலத்திலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகத்தை அவர் தனது வீட்டில் வைத்திருந்தார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு கடற்கரை சாலையில் வசித்து வந்த சிங்காரவேலரின் குடும்பம், அந்தக் காலத்தில் செல்வச் செழிப்போடு திகழ்ந்தது. அப்போது சென்னைக்கு வந்த ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலர் அவரது வீட்டில் தங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.

சிங்காரவேலர், ரஷ்ய நாட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை லார்டு வெலிங்டன் என்ற ஆங்கிலேய ஆட்சியாளர் பறிமுதல் செய்து, அங்கு தனது மனைவி பெயரில் லேடி வெலிங்டன் என்ற பள்ளியைத் தொடங்கினார். சென்னை நடுகுப்பம், ராயபுரம், தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் இருந்த வீடுகள், தோட்டம் உள்பட தங்கள் மூதாதையர்களின் 16 விதமான சொத்துகளைக் கொண்டு ‘கந்தப்ப செட்டி - அருணாசல செட்டி குடும்ப அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளையை சிங்காரவேலர் நிறுவினார். அதன் நிர்வாகிகளாக சிங்காரவேலரும், அவரது சகோதரர் முனுசாமியும் இருந்து பல தொண்டுகளை செய்தனர். அந்தக் காலத்திலேயே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் இப்போதும் பொதுமக்களுக்கு பல சேவைகள் செய்யப்படுகின்றன.

எனினும் சிங்காரவேலரின் நினைவுகளைப் போற்றும் வகையில் நினைவகம் அமைக்கப்படவில்லை. அவரது மூதாதையர்களான கந்தப்ப செட்டி மற்றும் அருணாசல செட்டி ஆகியோரின் சமாதிகள் லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. ஆகவே, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருக்கு அவரது சொந்த இடமான விவேகானந்தர் இல்லம் அருகேயுள்ள வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள காலியிடத்தில் நினைவகம் அமைக்க வேண்டும். அங்கு அவருக்கு ஒரு சிலை நிறுவ வேண்டும். நினைவகத்தில் சிறந்த நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்துக்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வியியல் மேம்பாட்டு வளாகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கவுதமன் கோரியிருந்தார்.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, சிங்கார வேலருக்கு நினைவகம் மற்றும் நூலகம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நூலகம் அமைப்பது பற்றி அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காரவேலர் குடும்பத்தினரின் நினைவிடங்களை பராமரித்து, பாதுகாக்க வேண்டும். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்துக்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty Re: சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by ராஜா Wed 12 Feb 2014 - 12:48

எவ்வளவு அரிய வரலாற்று செய்திகள் இளைய தலைமுறைக்கு தெரியாமல் மறைக்கபட்டுள்ளது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty Re: சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by Dr.S.Soundarapandian Sun 4 May 2014 - 22:01

சாமி அவர்கள்,  தோண்டியெடுக்கப்பட்ட செய்தியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி !

சிங்காரவேலரை விடுதலை இயக்க வீரராக யாரும் காட்டியதில்லை !

 அநியாயம் அநியாயம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty Re: சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by சிவா Mon 5 May 2014 - 9:23

மக்கள் பணத்தை வீணாக்கி தனக்குப் புகழ் தேடிக் கொள்ளும் கேவலமான அரசியல்வாதிகளின் மத்தியில் இவர் என் மனதில்மாமனிதனாகத் தெரிகிறார்.


சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty Re: சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by மாணிக்கம் நடேசன் Mon 5 May 2014 - 10:24

நல்ல தொண்டர்களும், தலைவர்களும் பல காலமாக மறைக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதை இதன் வழி உணரமுடிகிறது. ஐயா சிங்காரவேலரின் பண்பான பங்களிப்பிற்கு இப்பொழுதாவது அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty Re: சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by கோ. செந்தில்குமார் Mon 5 May 2014 - 11:14

தமிழன் இன்னமும் தூக்கத்திலேயே இருக்கிறான் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி...
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Empty Re: சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum