புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
59 Posts - 58%
heezulia
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
58 Posts - 60%
heezulia
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_m10அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:25 pm

அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் FB1D9372-602D-453C-9E39-A89B3987E6FD_L_styvpfஒரு யோகியால் இயற்கையின் பல விதிகளைத் தன்வசப்படுத்தி ஜெயிக்க முடியும். அதற்கான எத்தனையோ உதாரணங்களை இது வரை பார்த்து விட்டோம். இனி புவி ஈர்ப்பு விசையை வென்று, அந்தரத்தில் மிதக்க முடிந்த யோக சக்தியைப் பார்ப்போம்.

அந்தரத்தில் மிதப்பது இந்திய யோகிகளுக்கு மட்டும் முடிந்த சக்தி அல்ல. அந்த சக்தி கொண்டவர்களைப் பற்றிய உதாரணங்களை ஐரோப்பா, ஆசியா கண்ட நாடுகளின் வரலாற்றுப் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியும்.

பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் அவிலாவைச் சேர்ந்த புனித தெரசா, ஆழ்ந்த இறை நிலை அனுபவங்களின் போது தரையில் இருந்து சுமார் ஒன்றரை அடி மேலே அந்தரத்தில் மிதப்பார் என்றும், அப்படியே சுமார் அரை மணி நேரம் அந்தரத்தில் இருப்பார் என்றும் கண்டவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்திய குரு மிலாரெப்பாவும், அந்தரத்தில் மிதக்கவும் நடக்கவும் முடிந்தவர் என்று சொல்கிறார்கள். சீன ஷாவொலின் பிக்குகளில் சிலரும் குறுகிய காலத்திற்கு புவி ஈர்ப்பு சக்தியை வெல்ல வல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த குறிப்பிட்ட சக்தி பரவலாக உலகின் பல பகுதிகளில் குறிப்பிட்ட சிலரிடம் இருந்திருக்கிறது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் நாட்டின் ஒரு யோகி, அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு யோகி இந்த மகாசக்தியைப் பெற்றிருந்தார். அவர் பலர் முன்னிலையில் அந்தரத்தில் படுத்த காட்சியை ஒரு ஆங்கிலேயர் புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒரு பிரபல இங்கிலாந்துப் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அந்த சுவாரசியமான நிகழ்ச்சியை இனி பார்ப்போம்.

அந்த யோகியின் பெயர் சுப்பையா புலவர். (அவரைப் புகைப்படம் எடுத்த ஆங்கிலேயர் அவரை சுப்பையா புல்லவர் (Subbayah Pullavar) என்று குறிப்பிட்டதால், அந்தப் பெயரையே ஆங்கிலப் பத்திரிகையும் பயன்படுத்தி இருக்கிறது. தமிழ் யோகி என்பதால் சுப்பையா புலவர் என்பதே அவரது சரியான பெயராக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது).

யோகி சுப்பையா புலவர் அந்தரத்தில் சிறிது நேரம் இருக்க முடிந்தவர். அவர் அப்படி 1936–ம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி ஒரு பொது இடத்தில் இருந்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட பி.டி.ப்ளங்கெட்(P.T. Plunkett) என்ற பிரிட்டிஷ் தேயிலைத் தோட்டக்காரருக்கு ஆச்சரியமும் சந்தேகமும் ஒருசேர ஏற்பட்டன. மிகுந்த ஆர்வத்துடன் கேமரா சகிதம் குறிப்பிட்ட நாளில், அந்த இடத்தை அடைந்தார்.

அந்த இடத்தில் சுமார் 150 பேர் நிகழ்ச்சியைக் காண நண்பகல் வேளையில் குழுமி இருந்தனர். மேகங்கள் இல்லாமல் ஆகாயம் தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், ஏமாற்றுவேலை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பி.டி.ப்ளங்கெட் கண்டார். சுப்பையா புலவரின் சீடர்கள் முதலில் அந்த இடத்தில் ஒரு கூடாரம் எழுப்பினார்கள். பின் கூடாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்தார்கள். தண்ணீர் தெளித்த இடத்தைத் தாண்டி செருப்புக் காலோடு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்தார்கள்.

சற்று நேரத்தில் சுப்பையா புலவர் வந்தார். அவர் கருத்த நிறத்தோடு உயரமாகவும், மெலிந்த உடல்வாகோடும் இருந்தார். எல்லோரும் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், சுப்பையா புலவர் கூடாரத்திற்குள் நுழைந்து சில நிமிடங்கள் மறைவாக இருந்தார். அதன் பிறகு அவரது சீடர்கள் கூடாரத்தை அவிழ்த்து விட்டார்கள். சுப்பையா புலவர் பூமியிலிருந்து சில அடிகள் உயரத்தில் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். ஒரு கையில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த அவர், மறு கையை ஒரு கம்பின் நுனியில் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பில் அவர் எந்த பலமும் பிரயோகிக்காமல் இருந்தது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கம்பை துணி சுற்றி மூடி இருந்தார்கள்.

பி.டி.ப்ளங்கெட்டும் மற்ற பார்வையாளர்களும் பிரமித்துப் போனார்கள். பி.டி.ப்ளங்கெட் உட்பட அனைவரும் சுப்பையா புலவர் அந்தரத்தில் படுத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூர்ந்து கவனித்தார்கள். அனைவரும் படுத்துக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பல கோணங்களில் பார்த்தார்கள். எந்த தில்லுமுல்லும் அவர்களுக்குப் புலப்படவில்லை. சுப்பையா புலவரைத் தாங்கிப் பிடிக்க கண்ணுக்குத் தெரியாத மறை பொருட்கள் எதுவும் கூட இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய அங்கிருந்தவர்களுக்கு அனுமதி தரப்பட்டது. பரபரப்புடன் பி.டி.ப்ளங்கெட்டும் மற்றவர்களும் அருகில் சென்று மேலேயும் கீழேயும் கூர்ந்து பார்த்தார்கள். கம்பின் மீது அவர் வைத்திருந்த கையையும் ஆராய்ந்தார்கள். அந்தக் கம்பில் சுப்பையா புலவர் சிறிதாவது பலத்தைப் பிரயோகித்திருந்தால் அருகிலிருந்து பார்க்கும் அவர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி பலம் பிரயோகித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பலத்தில் குறுக்கே நீண்ட நேரம் படுப்பதும் சாத்தியமில்லை. பி.டி.ப்ளங்கெட் அவரைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.

நான்கு நிமிடங்கள் அப்படியே இருந்து அனைவரையும் சுப்பையா புலவர் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார். பின்னர் அனைவரையும் அந்த வட்டத்திற்கு வெளியே போகச் சொன்னார்கள். அனைவரும் தங்கள் பழைய இடங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்ள, சுப்பையா புலவரின் சீடர்கள் பழையபடி சுப்பையா புலவரைச் சுற்றி கூடாரத்தை எழுப்பினார்கள். கூடாரத்தின் உள்ளே சுப்பையா புலவர் அந்தரத்திலேயே ஊசலாட ஆரம்பித்தது, சூரிய வெளிச்சத்தின் உதவியால் கூடாரத்துணி வழியாக பி.டி.ப்ளங்கெட்டுக்கு மங்கலாகத் தெரிந்தது. கடைசியில் அப்படியே சுப்பையா புலவர் தரையில் சரிந்தார். பழையபடி கூடாரம் கலைக்கப்பட்டது. சுப்பையா புலவர் கட்டையைப் போல ஒருவித ஆழ்தியான நிலையில் படுத்திருந்தார்.

அவரது கை, கால்களை மடக்க முயன்ற சீடர்களுக்கு அது எளிதில் முடியாமல் போக, அவர்கள் பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தார்கள். பார்வையாளர்கள் முயன்றும் கட்டை போல் விறைத்திருந்த அவரது கை, கால்களை மடக்க முடியவில்லை. கடைசியில் சுப்பையா புலவரின் முகத்தில் சீடர்கள் நீரைத் தெளித்தார்கள். பின் அவர் கை கால்களைத் தேய்த்து சூடாக்கிய பின், பழைய நிலைக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை The Illustrated London News என்ற இங்கிலாந்துப் பத்திரிகை பி.டி.ப்ளங்கெட்டின் புகைப்படங்களுடன் பிரசுரித்தது. அமானுஷ்ய நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள பலரையும் அந்தச் செய்தி ஈர்த்தது. அந்தத் தெளிவான புகைப்படங்கள் அந்த நிகழ்ச்சியில் தில்லு முல்லு எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. காரணம் 1936–ம் ஆண்டு காலத்தில் எல்லாம் புகைப்படம் எடுப்பதே அரிதானதாக இருந்ததால் புகைப்படங்களில் போலியான மாற்றங்கள் செய்யும் நவீன நுட்ப வித்தைகள் ஆரம்பித்திருக்கவில்லை.

சொல்லப்போனால் புகைப்படங்கள் மூலமாகத் தான் சில போலி தந்திரங்களை அடையாளம் கண்டார்கள். உதாரணத்திற்கு கயிறு வித்தை (Rope Trick ) என்று அக்காலத்தில் பிரபலமான வித்தையைச் சொல்லலாம்.

இந்த வித்தையில் கயிறு ஒன்றை வித்தை காட்டுபவர் எல்லோரிடமும் காட்டி, அது கயிறுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்வார். பிறகு கயிறை உதறி கம்பு போல் நிற்க வைத்து வித்தை காட்டுபவர் கம்பில் மேலேறி நுனிக்குச் செல்வார்.

இது பார்ப்பவர்களை நம்ப வைக்கும் ஒரு வகை ஹிப்னாடிச வித்தை. இந்தக் காட்சியைப் படமெடுத்துப் பார்த்தால் கயிறு தரையிலேயே விழுந்து கிடக்கும். வித்தை காட்டுபவர் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பார். இதைப் பலர் படமெடுத்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்த பின்னும் காட்சிகள் பார்த்தபடியே பதிவாகி இருந்தது அனைவரையும் நம்ப வைத்தது. துரதிர்ஷ்டவசமாக பி.டி.ப்ளங்கெட் மூலம் அந்தப் பத்திரிகையில் வந்த செய்தி தவிர, சுப்பையா புலவர் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.

என்.கணேசன் @ தினத்தந்தி



அந்தரத்தில் படுத்த யோகி! - மகா சக்தி மனிதர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 22, 2015 11:13 am

ஆச்சரியமாக உள்ளது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 22, 2015 3:42 pm

பாவம் சாமியாரு, யாராச்சம் நல்ல மெத்தை வாங்க தாருங்களேன், நிம்மதியா படுத்து தூங்கட்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக