Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை
4 posters
Page 1 of 1
என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை
என் விமர்சனம்
மாலினி 22
பாளையங்கோட்டை
மாலினி வயது 22 கொண்ட பாளையங்கோட்டையை சேர்ந்த இளம் பெண். சென்னையில் நர்ஸாக ஒரு ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள். தன் சக தோழிகளுடன் ஒரு தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். வேலை நிமித்தம் மாலினி கனடா செல்ல ஆசைப்பட்டு விசாவுக்காக ஏற்பாடு செய்யும் போது விசா ஆபிசில் பணிபுரியும் வருண் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. தோழி வெளிநாடு செல்வதால் வருண் வீட்டிலேயே மாலினி தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நல்லவன் போல நடிக்கும் நயவஞ்சகன் வருண் மாலினியை தான் அனுபவிப்பது மட்டுமின்றி பணத்துக்காக பெண் பித்தனான தன்னுடைய பாஸ் பிரகாஷையும் அனுபவிக்க வைக்கிறான் மாலினி அறியாமலேயே. மாலினியின் வாழ்வு சின்னாபின்னமாகிறது. மாலினிக்கு மறு வாழ்வு தருவது போல வருண் நடித்து அவள் உடல்நிலை தேறியவுடன் மீண்டும் நரேஷ் மூலம் அவள் வாழ்வை சீர் குலைக்கிறான். உடலாலும், மனதாலும் பாழ்பட்டுப் போன மாலினியை தந்திரமாக போதை மருந்து கடத்தல் கேஸில் போலீசில் சிக்க வைத்தும் விடுகிறான் வருண். அப்போதுதான் மாலினிக்கு வருணின் மோசடி லீலைகள் புரிகிறது. ஜெயில் தண்டனை பெறும் மாலினி தன்னுடன் இருக்கும் தீவிரவாதி பெண் கைதி ஜானகி என்பவளுக்கு பிரசவம் பார்த்து அவள் அன்புக்கு பாத்திரமாகிறாள். ஜானகி மூலம் பெயிலில் சிறையிலிருந்து வெளிவருகிறாள். ஜானகியின் தீவிரவாத கும்பலின் உதவியோடு தன்னை சீரழித்த பிரகாஷையும், தன்னை நம்பி ஏமாற்றி வாழ்வை நாசமாக்கிய மோசடிக் காதலன் வருணையும் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறாள்.
'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தின் கதை இதுதான். '22 female kottayam' என்று மலையாளத்தில் ஹிட்டடித்த படத்தை தமிழில் தந்திருக்கிறார் முன்னாள் தமிழ் 'கிளாமர் குயின்' ஸ்ரீப்ரியா. தயாரிப்பு முன்னாள் நடிகர் ராஜ்குமார் சேதுபதி.
டைட்டில் ரோலில் நடிகை நித்யா மேனன் பரிதாபப்பட வைக்கிறார். நர்ஸாக வரும் போது வெகு இயல்பான நடிப்பு. பின் வருணால் ஏமாற்றப்பட்டு நரேஷால் கற்பழிக்கப் படும்போது 'உச்' கொட்ட வைக்கிறார். ஜெயிலில் இருக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாகப் பண்ணியிருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பி வில்லன்களைப் பழி வாங்கும் போதும் அமைதியாகவே தன் பங்கைச் செய்திருக்கிறார். ஆனால் எப்போதுமே 'உம்'மென்று இருப்பதால் என்னவோ போல் இருக்கிறது. (கேரக்டர் அப்படியோ!) முன்னாள் இந்தி நடிகை டினா முனிம், மறைந்த நடிகை சௌந்தர்யா போன்ற முக அமைப்பைக் கொண்டுள்ள மாலினி தமிழில் ஒரு ரவுண்டு வர சந்தர்ப்பம் இருக்கிறது.
கிரிஷ் J.சத்தார் 'வருண்' என்ற நயவஞ்சகக் காதலனாக பார்வையாளர்கள் ஆத்திரப்படும்படி தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் சத்தார் மற்றும் நடிகை ஜெயபாரதி நட்சத்திர ஜோடியின் மகன் ஆவார்.
வருணின் பாஸ் பிரகாஷாக பெண்களை வித்தியாசமான கோணத்தில் கற்பழிக்க முயலும் காமக் கொடுரனாக நடித்திருக்கிறார் பிரபல தெலுங்கு நட்சத்திர ஜோடி கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலா ஆகியோரின் மகனான நடிகர் நரேஷ். பெண் பித்து பிடித்த பெரிய மனிதர்களின் குணத்தை அப்படியே அசலாகப் பிரதிபலிக்கிறார். கால் ஊனமுற்ற பெண் ஒருத்தியை அவர் அனுபவிக்க ஆசைப்படுவதும், அதற்குண்டான காரணத்தை அவர் விளக்குவதைக் கேட்டும் நமக்கு 'பகீர்' என்கிறது.
மற்றும் கோவை சரளா, கோட்டா ஸ்ரீனிவாசராவ் போன்ற பிரபலங்களும் உண்டு.
இசை அரவிந்த் சங்கர். ஒளிப்பதிவு மனோஜ் பிள்ளை.
நடிகை நித்யா மேனனுக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் ஸ்ரீப்ரியா
நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கம் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. இயக்குனர் தான் பெண் என்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளைக் கையில் எடுத்திருக்கிறார். சிறைக் காட்சிகள் ஏற்கனவே பல படங்களிலும், சீரியல்களிலும் வந்து விட்டதால் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகித்தும் விட முடிகிறது. ஆனால் மாலினி வெளியே வந்து பிரகாஷை வித்தியாசமாக நல்ல பாம்பை விட்டு கடிக்க வைத்து சாகடிக்கும் காட்சி அமர்க்களம். ஆனால் கதாநாயக வில்லனுக்கு மாலினி இறுதியில் தரும் தண்டனை கொஞ்சம் ஏமாற்றமே.
கே.பாலாஜி எடுத்த 'நிரபராதி' என்ற தமிழ்ப் படத்தில் (இந்தியில் 'இன்சாப் கா தராசு') நடிகை மாதவி ஏற்கனவே இம்மாதிரி மாலினி ரோலில் நடித்து விட்டார். அதில் தன்னை நாசப்படுத்திய கயவர்களின் பிறப்புறுப்பை அறுத்து அவர்களுக்கு தண்டனை வழங்குவார் மாதவி. அதே முறையை மாலினி இப்படத்தில் இறுதியில் கையாள்வதால் கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லை. வேறு வகையில் யோசித்திருக்கலாம்.
எப்படியோ! தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக ஸ்ரீப்ரியா சொல்லியிருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சமுதாயத்தில் கமுக்கமாக இருக்கும் பெரிய இடத்து காமுகப் பேய்களின் முகமூடிகளைக் கிழித்திருக்கிறார் இயக்குனர்.
நம் ஹீரோக்களின் அலட்டல்களும், 'ஏய்' கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அடியாட்களின் அரிவாள்களும், வில்லனின் உருட்டல்களும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு நிச்சயம் இப்படத்தைப் பார்த்ததும் ஏற்படுவது உண்மை.
அந்த வகையில் இயக்குனருக்கு வெற்றியே!
தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
மாலினி 22
பாளையங்கோட்டை
மாலினி வயது 22 கொண்ட பாளையங்கோட்டையை சேர்ந்த இளம் பெண். சென்னையில் நர்ஸாக ஒரு ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள். தன் சக தோழிகளுடன் ஒரு தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். வேலை நிமித்தம் மாலினி கனடா செல்ல ஆசைப்பட்டு விசாவுக்காக ஏற்பாடு செய்யும் போது விசா ஆபிசில் பணிபுரியும் வருண் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. தோழி வெளிநாடு செல்வதால் வருண் வீட்டிலேயே மாலினி தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நல்லவன் போல நடிக்கும் நயவஞ்சகன் வருண் மாலினியை தான் அனுபவிப்பது மட்டுமின்றி பணத்துக்காக பெண் பித்தனான தன்னுடைய பாஸ் பிரகாஷையும் அனுபவிக்க வைக்கிறான் மாலினி அறியாமலேயே. மாலினியின் வாழ்வு சின்னாபின்னமாகிறது. மாலினிக்கு மறு வாழ்வு தருவது போல வருண் நடித்து அவள் உடல்நிலை தேறியவுடன் மீண்டும் நரேஷ் மூலம் அவள் வாழ்வை சீர் குலைக்கிறான். உடலாலும், மனதாலும் பாழ்பட்டுப் போன மாலினியை தந்திரமாக போதை மருந்து கடத்தல் கேஸில் போலீசில் சிக்க வைத்தும் விடுகிறான் வருண். அப்போதுதான் மாலினிக்கு வருணின் மோசடி லீலைகள் புரிகிறது. ஜெயில் தண்டனை பெறும் மாலினி தன்னுடன் இருக்கும் தீவிரவாதி பெண் கைதி ஜானகி என்பவளுக்கு பிரசவம் பார்த்து அவள் அன்புக்கு பாத்திரமாகிறாள். ஜானகி மூலம் பெயிலில் சிறையிலிருந்து வெளிவருகிறாள். ஜானகியின் தீவிரவாத கும்பலின் உதவியோடு தன்னை சீரழித்த பிரகாஷையும், தன்னை நம்பி ஏமாற்றி வாழ்வை நாசமாக்கிய மோசடிக் காதலன் வருணையும் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறாள்.
'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தின் கதை இதுதான். '22 female kottayam' என்று மலையாளத்தில் ஹிட்டடித்த படத்தை தமிழில் தந்திருக்கிறார் முன்னாள் தமிழ் 'கிளாமர் குயின்' ஸ்ரீப்ரியா. தயாரிப்பு முன்னாள் நடிகர் ராஜ்குமார் சேதுபதி.
டைட்டில் ரோலில் நடிகை நித்யா மேனன் பரிதாபப்பட வைக்கிறார். நர்ஸாக வரும் போது வெகு இயல்பான நடிப்பு. பின் வருணால் ஏமாற்றப்பட்டு நரேஷால் கற்பழிக்கப் படும்போது 'உச்' கொட்ட வைக்கிறார். ஜெயிலில் இருக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாகப் பண்ணியிருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பி வில்லன்களைப் பழி வாங்கும் போதும் அமைதியாகவே தன் பங்கைச் செய்திருக்கிறார். ஆனால் எப்போதுமே 'உம்'மென்று இருப்பதால் என்னவோ போல் இருக்கிறது. (கேரக்டர் அப்படியோ!) முன்னாள் இந்தி நடிகை டினா முனிம், மறைந்த நடிகை சௌந்தர்யா போன்ற முக அமைப்பைக் கொண்டுள்ள மாலினி தமிழில் ஒரு ரவுண்டு வர சந்தர்ப்பம் இருக்கிறது.
கிரிஷ் J.சத்தார் 'வருண்' என்ற நயவஞ்சகக் காதலனாக பார்வையாளர்கள் ஆத்திரப்படும்படி தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் சத்தார் மற்றும் நடிகை ஜெயபாரதி நட்சத்திர ஜோடியின் மகன் ஆவார்.
வருணின் பாஸ் பிரகாஷாக பெண்களை வித்தியாசமான கோணத்தில் கற்பழிக்க முயலும் காமக் கொடுரனாக நடித்திருக்கிறார் பிரபல தெலுங்கு நட்சத்திர ஜோடி கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலா ஆகியோரின் மகனான நடிகர் நரேஷ். பெண் பித்து பிடித்த பெரிய மனிதர்களின் குணத்தை அப்படியே அசலாகப் பிரதிபலிக்கிறார். கால் ஊனமுற்ற பெண் ஒருத்தியை அவர் அனுபவிக்க ஆசைப்படுவதும், அதற்குண்டான காரணத்தை அவர் விளக்குவதைக் கேட்டும் நமக்கு 'பகீர்' என்கிறது.
மற்றும் கோவை சரளா, கோட்டா ஸ்ரீனிவாசராவ் போன்ற பிரபலங்களும் உண்டு.
இசை அரவிந்த் சங்கர். ஒளிப்பதிவு மனோஜ் பிள்ளை.
நடிகை நித்யா மேனனுக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் ஸ்ரீப்ரியா
நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கம் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. இயக்குனர் தான் பெண் என்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளைக் கையில் எடுத்திருக்கிறார். சிறைக் காட்சிகள் ஏற்கனவே பல படங்களிலும், சீரியல்களிலும் வந்து விட்டதால் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகித்தும் விட முடிகிறது. ஆனால் மாலினி வெளியே வந்து பிரகாஷை வித்தியாசமாக நல்ல பாம்பை விட்டு கடிக்க வைத்து சாகடிக்கும் காட்சி அமர்க்களம். ஆனால் கதாநாயக வில்லனுக்கு மாலினி இறுதியில் தரும் தண்டனை கொஞ்சம் ஏமாற்றமே.
கே.பாலாஜி எடுத்த 'நிரபராதி' என்ற தமிழ்ப் படத்தில் (இந்தியில் 'இன்சாப் கா தராசு') நடிகை மாதவி ஏற்கனவே இம்மாதிரி மாலினி ரோலில் நடித்து விட்டார். அதில் தன்னை நாசப்படுத்திய கயவர்களின் பிறப்புறுப்பை அறுத்து அவர்களுக்கு தண்டனை வழங்குவார் மாதவி. அதே முறையை மாலினி இப்படத்தில் இறுதியில் கையாள்வதால் கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லை. வேறு வகையில் யோசித்திருக்கலாம்.
எப்படியோ! தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக ஸ்ரீப்ரியா சொல்லியிருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சமுதாயத்தில் கமுக்கமாக இருக்கும் பெரிய இடத்து காமுகப் பேய்களின் முகமூடிகளைக் கிழித்திருக்கிறார் இயக்குனர்.
நம் ஹீரோக்களின் அலட்டல்களும், 'ஏய்' கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அடியாட்களின் அரிவாள்களும், வில்லனின் உருட்டல்களும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு நிச்சயம் இப்படத்தைப் பார்த்ததும் ஏற்படுவது உண்மை.
அந்த வகையில் இயக்குனருக்கு வெற்றியே!
தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை
படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லையே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை
பாலாஜி wrote:படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லையே
உண்மைதான் பாலாஜி சார். பாளையங்கோட்டை கோட்டை விட்டு விட்டது.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை
vasudevan31355 wrote:பாலாஜி wrote:படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லையே
உண்மைதான் பாலாஜி சார். பாளையங்கோட்டை கோட்டை விட்டு விட்டது.
சார் என்று அழைக்க வேண்டாம். நீங்க வயதில் மட்டும் அல்ல அனுபவத்திலும் பெரியவர் . ஆகவே வெறும் பாலாஜி என்றே சொல்லுங்கள்.
என்ன செய்வது இங்கு சிறந்த படங்கள் வெற்றி பெறாது ..
டாஸ்மார்க் நாத்தம் அடிக்கும் காட்சிகள் உள்ள படம் பிச்சிகிட்டு ஓடும் ... என்ன தமிழ் நாட்டின் நிலை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: என் விமர்சனம் மாலினி 22 பாளையங்கோட்டை
பாலாஜி wrote:
டாஸ்மார்க் நாத்தம் அடிக்கும் காட்சிகள் உள்ள படம் பிச்சிகிட்டு ஓடும் ... என்ன தமிழ் நாட்டின் நிலை ..
தல, நம்ம சந்தானம் கோவிச்சிக்க போறார்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» மாலினி முதல் புன்னகை வரை
» ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» மாலினி முதல் புன்னகை வரை
» ஜாக்பாட் - விமர்சனம் - விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|