புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளும் ஒரு அழகின் அலை
Page 6 of 14 •
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
ஈகரை நண்பர்களுக்கு,
வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..
கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..
நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
ஈகரை நண்பர்களுக்கு,
வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..
கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..
நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 43
“அதுல பாருங்கோ…வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபபிலை ,பாசிப்பருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைச்சுக்கோங்கோ. இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசிப் பாருங்கோ..அப்படியே ஷைன் ஆகும் உங்க கூந்தல்”
“என்னடா.. எனக்குப் பதிலா நீயே ஆரம்பிச்சுட்டியா.. என்ன ஏதாவது தால் ஏஜன்சி எடுத்திருக்கியா.
“சும்மா இரு மனசாட்சி..கூந்தலைப் பத்திக் கொஞ்சம் பேசலாம்னு பார்த்தேன்..இரு பாட்டு சொல்றேன் கேளு..
தமிழ்ப்படங்கள்ல பார்த்தேன்னா.. கண்ண தாசன் பின்னிய கூந்தல் கரு நிற நாகம் நு சொல்லிட்டு இன்னொரு பாட்டில உன் மலர்க்கூந்தல் அலைபாய அவரென்ன சொன்னார்னு கேக்கறார்..
முத்துலிங்கமும் புலமைப் பித்தனும் தோகை போலே மின்னும் பூவை உன்கூந்தல் கார்மேகம் என்றே சொல்வேன் கண்ணே ன்னு சொல்றாங்க..இதழில் கதை எழுதும் நேரம்னு பாட்டுல…..குட்டிக் கதையா இருக்கும்..”
“அப்புறம்”
“பாத்தியா..தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன் மழை கொண்ட மேகம்னு சொல்றார் வாலி.. நம்ம பகவத் பாதர் என்ன சொல்றார் தெரியுமோ..”
“அதத் தானேடா நீ மொதல்ல சொல்லணும்..ம்ம் சொல்லு”
”கரியதாய் கண்ணிற் கிளமையாய்க் கொஞ்சம்
விரிந்திடக் காட்டின் அடர்த்தியாய் மற்றுமெழில்
பூந்தோட்ட வாசமது பொங்கிடும் வண்ணமாய்க்
கூந்தலைக் கொண்டவள் காண்..”
அப்படிங்கறார் அம்பாளோட கூந்தலைப் பத்தி..
”தள தட்டற மாதிரி தெரியலை.. வெண்பான்னும் சொல்ல முடியலை.. சரி வா.. ஸ்லோகத்தைப் பார்க்கலாம்.
.
**
துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்
Dhunotu dhvaantam nas tulita-dalit'endivara-vanam
Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive;
Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso
Vasanthyasmin manye vala-madhana-vaati-vitapinam.
”அம்பிகையே கருநெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்கும் வனத்தினைப் போல அடர்த்தியானதும்,வழவழப்பானதுமான உன் கூந்தல் எங்கள் மனதில் இருக்கும் கருத்த அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை அருளட்டும்.
.உன் கூந்தலின் இயற்கையான மணத்தைத் தாங்களும் பெற வேண்டி உன் கூந்தலில் பாரிஜாதமலர்களும், கற்பகத் தருவின் மலர்களும் வந்து வசிக்கின்றன..”
அம்பிகையை இவ்வண்ணம் மைவார் குழலி,மட்டுவார் குழலியாக தியானிப்பவர்களுக்கு இவ்வுலக பந்தத்தின் வாசனைகள் நலிந்து மோட்சத்திற்குக் காரணமான சுத்த வாசனை மேலிடும்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 43
“அதுல பாருங்கோ…வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபபிலை ,பாசிப்பருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைச்சுக்கோங்கோ. இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசிப் பாருங்கோ..அப்படியே ஷைன் ஆகும் உங்க கூந்தல்”
“என்னடா.. எனக்குப் பதிலா நீயே ஆரம்பிச்சுட்டியா.. என்ன ஏதாவது தால் ஏஜன்சி எடுத்திருக்கியா.
“சும்மா இரு மனசாட்சி..கூந்தலைப் பத்திக் கொஞ்சம் பேசலாம்னு பார்த்தேன்..இரு பாட்டு சொல்றேன் கேளு..
தமிழ்ப்படங்கள்ல பார்த்தேன்னா.. கண்ண தாசன் பின்னிய கூந்தல் கரு நிற நாகம் நு சொல்லிட்டு இன்னொரு பாட்டில உன் மலர்க்கூந்தல் அலைபாய அவரென்ன சொன்னார்னு கேக்கறார்..
முத்துலிங்கமும் புலமைப் பித்தனும் தோகை போலே மின்னும் பூவை உன்கூந்தல் கார்மேகம் என்றே சொல்வேன் கண்ணே ன்னு சொல்றாங்க..இதழில் கதை எழுதும் நேரம்னு பாட்டுல…..குட்டிக் கதையா இருக்கும்..”
“அப்புறம்”
“பாத்தியா..தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன் மழை கொண்ட மேகம்னு சொல்றார் வாலி.. நம்ம பகவத் பாதர் என்ன சொல்றார் தெரியுமோ..”
“அதத் தானேடா நீ மொதல்ல சொல்லணும்..ம்ம் சொல்லு”
”கரியதாய் கண்ணிற் கிளமையாய்க் கொஞ்சம்
விரிந்திடக் காட்டின் அடர்த்தியாய் மற்றுமெழில்
பூந்தோட்ட வாசமது பொங்கிடும் வண்ணமாய்க்
கூந்தலைக் கொண்டவள் காண்..”
அப்படிங்கறார் அம்பாளோட கூந்தலைப் பத்தி..
”தள தட்டற மாதிரி தெரியலை.. வெண்பான்னும் சொல்ல முடியலை.. சரி வா.. ஸ்லோகத்தைப் பார்க்கலாம்.
.
**
துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்
Dhunotu dhvaantam nas tulita-dalit'endivara-vanam
Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive;
Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso
Vasanthyasmin manye vala-madhana-vaati-vitapinam.
”அம்பிகையே கருநெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்கும் வனத்தினைப் போல அடர்த்தியானதும்,வழவழப்பானதுமான உன் கூந்தல் எங்கள் மனதில் இருக்கும் கருத்த அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை அருளட்டும்.
.உன் கூந்தலின் இயற்கையான மணத்தைத் தாங்களும் பெற வேண்டி உன் கூந்தலில் பாரிஜாதமலர்களும், கற்பகத் தருவின் மலர்களும் வந்து வசிக்கின்றன..”
அம்பிகையை இவ்வண்ணம் மைவார் குழலி,மட்டுவார் குழலியாக தியானிப்பவர்களுக்கு இவ்வுலக பந்தத்தின் வாசனைகள் நலிந்து மோட்சத்திற்குக் காரணமான சுத்த வாசனை மேலிடும்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 44
“கோலிக் குண்டு கண்ணு கோலக் கிளி உதடு
பாலப்போல பல்லு படிய வச்ச வகிடு..”
“அது சரி… பாட்டத் தப்பாப் பாடற போல இருக்கே..”
“ஹி.ஹி எம் எஸ்… கிளியோட உதடு செவப்பாத் தானே இருக்கும்…ஆனா இந்தப்பாட்டுல அம்பாளோட் வகிட வர்ணிக்கிறார் பகவத் பாதர்..”
“ம்ம் உன்கிட்ட எங்க வகிடு இருக்கு..எப்பப் பார்த்தாலும் வெட்டப்படாத க்ரோட்டன்ஸ் செடியாட்டாமா நின்னுக்கிட்டு தானே இருக்கு”
“கொஞ்ச்ம் ஆஃபீஸ்ல வேலை..குளிக்க மறந்துட்டேன்..ஸாரி டைபோ…. ஷாம்ப்பூ போட்டு குளிக்க் மறந்துட்டேன்..அதுக்காக நீயே என்னைக்கிண்டல் பண்ணலாகுமா..”
“ரா வேளைல ராஜ்டிவி, கலைஞர் டிவின்னு பழைய படம் பார்த்தா இப்படித் தான் அந்தக் காலத்தமிழ் வரும்..ஸ்லோகத்தப் பத்திச் சொல்லு”
“”அம்மாவோட முகத் தாமரையிலருந்து பொங்கிப் பெருகி வரும் அழகின் அலைகள் நெற்றி என்ற கரைவரையில் தளும்பி நிற்கின்றதாம்.. எம்.எஸ்..அதை நேர்வழியில் பிராவஹிக்கச் செய்ய வகிடானது வாய்க்கால் வெட்டியது போல இருக்கிறதாம்..”
“பக்தியா இருக்கறச்சே அரசியல்லாம் பேசாதடா..அம்பாள்னு சொல்லு..வா..ஸ்லோகத்துக்குள் போகலாம்
**
தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்
Tanothu kshemam nas tava vadhana-saundarya lahari
Parivaha-sthrotah-saraniriva seemantha-saranih
Vahanti sinduram prabala-kabari-bhara-thimira-
Dvisham brindair bandi-krtham iva navin'arka kiranam;
**
“”தேவி, உன் முகத்தின் அழகின் அலை பொங்கும் வெள்ளப் பெருக்கு கட்டுப்பட்டு ஓடப்ப்டும் வாய்க்கால் போல இருக்கும் உன் அடர்ந்த கருங்கூந்தலின் நடுவில் இருக்கும் வகிடானது- இருள் மயமான பகைவரது கூட்டத்தால் சிறைபிடிக்கப் பட்ட உதயகாலச் சூரியன் போல ஒளிரும்..
அப்படி மின்னும் குங்குமம் நிறைந்த வகிட்டின் கோடானது எங்களுக்கு எல்லாவித நலங்களையும் அருளட்டும்..”
செளந்த்ர்யலஹரி என பாடலிலே வந்திருப்பதால் இந்தப்பாடல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..
இவ்வண்ணம் எவனொருவன் தேவியை த்யானிக்கிறானோ அவனுக்குஅடைவதற்கான பொருள்களை எளிதில் அடையவும் அடைந்தவற்றை பாதுகாப்பதுமான அவனது ஷேமத்தை தேவியே பார்த்துக் கொள்வாள்..
ஸீமந்தம் என்றால் வகிடு என்று பொருள்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 44
“கோலிக் குண்டு கண்ணு கோலக் கிளி உதடு
பாலப்போல பல்லு படிய வச்ச வகிடு..”
“அது சரி… பாட்டத் தப்பாப் பாடற போல இருக்கே..”
“ஹி.ஹி எம் எஸ்… கிளியோட உதடு செவப்பாத் தானே இருக்கும்…ஆனா இந்தப்பாட்டுல அம்பாளோட் வகிட வர்ணிக்கிறார் பகவத் பாதர்..”
“ம்ம் உன்கிட்ட எங்க வகிடு இருக்கு..எப்பப் பார்த்தாலும் வெட்டப்படாத க்ரோட்டன்ஸ் செடியாட்டாமா நின்னுக்கிட்டு தானே இருக்கு”
“கொஞ்ச்ம் ஆஃபீஸ்ல வேலை..குளிக்க மறந்துட்டேன்..ஸாரி டைபோ…. ஷாம்ப்பூ போட்டு குளிக்க் மறந்துட்டேன்..அதுக்காக நீயே என்னைக்கிண்டல் பண்ணலாகுமா..”
“ரா வேளைல ராஜ்டிவி, கலைஞர் டிவின்னு பழைய படம் பார்த்தா இப்படித் தான் அந்தக் காலத்தமிழ் வரும்..ஸ்லோகத்தப் பத்திச் சொல்லு”
“”அம்மாவோட முகத் தாமரையிலருந்து பொங்கிப் பெருகி வரும் அழகின் அலைகள் நெற்றி என்ற கரைவரையில் தளும்பி நிற்கின்றதாம்.. எம்.எஸ்..அதை நேர்வழியில் பிராவஹிக்கச் செய்ய வகிடானது வாய்க்கால் வெட்டியது போல இருக்கிறதாம்..”
“பக்தியா இருக்கறச்சே அரசியல்லாம் பேசாதடா..அம்பாள்னு சொல்லு..வா..ஸ்லோகத்துக்குள் போகலாம்
**
தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்
Tanothu kshemam nas tava vadhana-saundarya lahari
Parivaha-sthrotah-saraniriva seemantha-saranih
Vahanti sinduram prabala-kabari-bhara-thimira-
Dvisham brindair bandi-krtham iva navin'arka kiranam;
**
“”தேவி, உன் முகத்தின் அழகின் அலை பொங்கும் வெள்ளப் பெருக்கு கட்டுப்பட்டு ஓடப்ப்டும் வாய்க்கால் போல இருக்கும் உன் அடர்ந்த கருங்கூந்தலின் நடுவில் இருக்கும் வகிடானது- இருள் மயமான பகைவரது கூட்டத்தால் சிறைபிடிக்கப் பட்ட உதயகாலச் சூரியன் போல ஒளிரும்..
அப்படி மின்னும் குங்குமம் நிறைந்த வகிட்டின் கோடானது எங்களுக்கு எல்லாவித நலங்களையும் அருளட்டும்..”
செளந்த்ர்யலஹரி என பாடலிலே வந்திருப்பதால் இந்தப்பாடல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..
இவ்வண்ணம் எவனொருவன் தேவியை த்யானிக்கிறானோ அவனுக்குஅடைவதற்கான பொருள்களை எளிதில் அடையவும் அடைந்தவற்றை பாதுகாப்பதுமான அவனது ஷேமத்தை தேவியே பார்த்துக் கொள்வாள்..
ஸீமந்தம் என்றால் வகிடு என்று பொருள்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 45
“உனக்கு நினைவிருக்கா எம்.எஸ்..சின்ன வயசுல மூணாவது வீட்டு அஞ்சு பொண்ணு மாமியோட கடைசிப் பொண்ணு கம்லிய..”
“மறக்குமா என்ன.. அப்பவே நன்னா சைட் அடிப்பியே.. இப்ப அவளைப் பார்த்தியா என்ன..
“அவளை இல்லை..அவளோட பொண்ணை.ரூவி ஹைஸ்ட்ரீட்ல பார்த்தேன்...இங்க தான் பேங்க் மஸ்கட்ல வேலை பார்க்கற பையனுக்குக் கொடுத்துருக்காங்க போல.. போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு அங்க்கிள்.. நீங்க எப்படி இருக்கேள்னு ஒரே சந்தோஷம்..அச்சு அசல் கம்லி மாதிரியே இருக்கா..அதுவும் அவளோட முன்னுச்சி முடி கூட அவளோட அமமா மாதிரியே சுருண்டு நெத்தில விழுந்து என்ன ஒரு அழகா இருக்குது தெரியுமா அவ தலையை ஆட்டி ஆட்டிப் பேசினாளா…அப்படியே மேகம் வந்து பூரண சந்திரன மறைக்க முடியாம தலை மேலயும் கொஞ்ச்ம் நுனியிலயும் இருக்குமே அந்த மாதிரி இருந்துச்சு..”
“சரி சரி.. நீ சின்னக் கம்லியப் பத்தி இப்படிச் சொல்ற்…பகவத்பாதர் என்ன சொல்றார் தெரியுமா..சின்னச் சின்ன வண்டுகள் நெற்றி நுனியில் பற்ப்பது மாதிரி அம்பாளின் முன்னுச்சி கேசம் ஆடித்தாம்..”
“இந்த ஸ்லோகத்த கண்ணதாசனும் தழுவியிருக்கார் தெரியுமோ..”
“தெரியுமே.. பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத..அதானே..ச்ந்தோஷமா….வா..ஸ்லோகத்துக்குள்ள போகலாம்..
**
Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih
Paritham the vakhtram parihasati pankheruha-ruchim;
Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire
Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.
தேவி..சற்றே அலர்ந்த பூவினைப் போல சிறு நகையும்..சிறிதளவே தெரிந்தாலும் மகரந்தங்களைப் போல ஒளிவிடும் பற்களையும் மலர்ந்த பூரண தாமரையைப் போன்ற நறுமணமும் கொண்ட எந்த கமல முகத்தில் பரமசிவனின் கண்கள் என்னும் தேன் வண்டுகள் மொய்த்து மகிழ்ந்து மயங்குகின்றனவோ, எந்த முகத்தின்முன்னுச்சி நெற்றியில் சிறுவண்டுகள் மொய்ப்பது போன்று சுருண்ட கேசம் ஆனந்தமாய்க் காற்றிலாடுகிறதோ அந்த உனது முகமானது அலர்ந்த தாமரை மலரை பரிகசிப்பது போன்று இருக்கின்றது..
மலரொத்த அன்னையின் வடிவினை இவ்வண்ணம் தியானிப்பவர்கள் செம்மலர் அணங்காம் அலைமகளின் பூரணத் திருவருளைப் பெறுவர்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 45
“உனக்கு நினைவிருக்கா எம்.எஸ்..சின்ன வயசுல மூணாவது வீட்டு அஞ்சு பொண்ணு மாமியோட கடைசிப் பொண்ணு கம்லிய..”
“மறக்குமா என்ன.. அப்பவே நன்னா சைட் அடிப்பியே.. இப்ப அவளைப் பார்த்தியா என்ன..
“அவளை இல்லை..அவளோட பொண்ணை.ரூவி ஹைஸ்ட்ரீட்ல பார்த்தேன்...இங்க தான் பேங்க் மஸ்கட்ல வேலை பார்க்கற பையனுக்குக் கொடுத்துருக்காங்க போல.. போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு அங்க்கிள்.. நீங்க எப்படி இருக்கேள்னு ஒரே சந்தோஷம்..அச்சு அசல் கம்லி மாதிரியே இருக்கா..அதுவும் அவளோட முன்னுச்சி முடி கூட அவளோட அமமா மாதிரியே சுருண்டு நெத்தில விழுந்து என்ன ஒரு அழகா இருக்குது தெரியுமா அவ தலையை ஆட்டி ஆட்டிப் பேசினாளா…அப்படியே மேகம் வந்து பூரண சந்திரன மறைக்க முடியாம தலை மேலயும் கொஞ்ச்ம் நுனியிலயும் இருக்குமே அந்த மாதிரி இருந்துச்சு..”
“சரி சரி.. நீ சின்னக் கம்லியப் பத்தி இப்படிச் சொல்ற்…பகவத்பாதர் என்ன சொல்றார் தெரியுமா..சின்னச் சின்ன வண்டுகள் நெற்றி நுனியில் பற்ப்பது மாதிரி அம்பாளின் முன்னுச்சி கேசம் ஆடித்தாம்..”
“இந்த ஸ்லோகத்த கண்ணதாசனும் தழுவியிருக்கார் தெரியுமோ..”
“தெரியுமே.. பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத..அதானே..ச்ந்தோஷமா….வா..ஸ்லோகத்துக்குள்ள போகலாம்..
**
Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih
Paritham the vakhtram parihasati pankheruha-ruchim;
Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire
Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.
தேவி..சற்றே அலர்ந்த பூவினைப் போல சிறு நகையும்..சிறிதளவே தெரிந்தாலும் மகரந்தங்களைப் போல ஒளிவிடும் பற்களையும் மலர்ந்த பூரண தாமரையைப் போன்ற நறுமணமும் கொண்ட எந்த கமல முகத்தில் பரமசிவனின் கண்கள் என்னும் தேன் வண்டுகள் மொய்த்து மகிழ்ந்து மயங்குகின்றனவோ, எந்த முகத்தின்முன்னுச்சி நெற்றியில் சிறுவண்டுகள் மொய்ப்பது போன்று சுருண்ட கேசம் ஆனந்தமாய்க் காற்றிலாடுகிறதோ அந்த உனது முகமானது அலர்ந்த தாமரை மலரை பரிகசிப்பது போன்று இருக்கின்றது..
மலரொத்த அன்னையின் வடிவினை இவ்வண்ணம் தியானிப்பவர்கள் செம்மலர் அணங்காம் அலைமகளின் பூரணத் திருவருளைப் பெறுவர்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 46
அமாவாசையிலிருந்து ப்தினைந்து தினங்கள் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது பாதி பிறைச் சந்திரனாக வளர்ந்திருக்கும்.. தேவியின் மகுடத்தில் ஏற்கெனவே பிறைச் சந்திர்ன் போல் தோற்ற்மளிப்பதாகச் சொல்லிய பகவத் பாதர் இந்த ஸ்லோகத்தில் தேவியின் நெற்றியையும் பிறை நிலவு என்கிறார்….
மகுடத்தில் இருக்கும் ஒரு பிறை நிலா மேல் நோக்கி இருக்கிறது.. நெற்றியில் இருக்கும் மறுபாதி நிலா கீழ் நோக்கி இருக்கிறது… இவை இரண்டையும் பொருத்தினால்.. முழு நிலவாகிவிடும் என்கிறார்..”
**
லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:
தேவி..உன் லலாடப் பிரதேசம் ( நெற்றிப் பிரதேசம்) அமுதைப் பொழியும் கிரணங்களுடன் கூடிய நில்வைப் போன்று ஒளிர்கின்றது..
அந்த நெற்றி உன்னுடைய மகுடந்த்தின் இன்னொரு பகுதியைப் போல எனக்குப் படுகிறது.. ஏற்கெனவே மேல் நோக்கி ஒரு பிறை நிலவு மகுடத்தில் இருக்க எதிர்த்திசையில் உன் நெற்றியாகிய இன்னொரு பிறை நிலவு.
.இரண்டையும் பொருத்திப் பார்த்தால் முழு நிலவாகி விடும்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 46
அமாவாசையிலிருந்து ப்தினைந்து தினங்கள் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது பாதி பிறைச் சந்திரனாக வளர்ந்திருக்கும்.. தேவியின் மகுடத்தில் ஏற்கெனவே பிறைச் சந்திர்ன் போல் தோற்ற்மளிப்பதாகச் சொல்லிய பகவத் பாதர் இந்த ஸ்லோகத்தில் தேவியின் நெற்றியையும் பிறை நிலவு என்கிறார்….
மகுடத்தில் இருக்கும் ஒரு பிறை நிலா மேல் நோக்கி இருக்கிறது.. நெற்றியில் இருக்கும் மறுபாதி நிலா கீழ் நோக்கி இருக்கிறது… இவை இரண்டையும் பொருத்தினால்.. முழு நிலவாகிவிடும் என்கிறார்..”
**
லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:
தேவி..உன் லலாடப் பிரதேசம் ( நெற்றிப் பிரதேசம்) அமுதைப் பொழியும் கிரணங்களுடன் கூடிய நில்வைப் போன்று ஒளிர்கின்றது..
அந்த நெற்றி உன்னுடைய மகுடந்த்தின் இன்னொரு பகுதியைப் போல எனக்குப் படுகிறது.. ஏற்கெனவே மேல் நோக்கி ஒரு பிறை நிலவு மகுடத்தில் இருக்க எதிர்த்திசையில் உன் நெற்றியாகிய இன்னொரு பிறை நிலவு.
.இரண்டையும் பொருத்திப் பார்த்தால் முழு நிலவாகி விடும்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 47
ப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்
தநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே
Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini
Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam;
Dhanur manye savye'tara-kara-grhitam rathipateh
Prakoshte mushtau ca sthagayati nigudha'ntharam ume
"சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடைய உமையே.
.உன்னுடைய புருவங்கள் கீழ் நோக்கியபடி கொஞ்சம் வளைந்த புருவங்கள் வில்லாகவும் உன் கண்களாகிய வண்டுகள் நாணாகவும் அந்த வில்லை மன்மதன் பிடித்திருப்பது உன் முகத்தின் நடுப்பாகமான மூக்காகவும் தோற்றமளிக்கிறது
மன்மதனது கை முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும் அவனது விரல்களும் உள்ளங்கையும் நடுப்பகுதியை மறைத்தாற்போலும் இருக்கிறது.."
இவ்வண்ணம் தேவியின் புருவங்களை காமனது வில்லாக தியானிப்பவர்களுக்கு காம ஜயம் உண்டாகுமாம்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 47
ப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்
தநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே
Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini
Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam;
Dhanur manye savye'tara-kara-grhitam rathipateh
Prakoshte mushtau ca sthagayati nigudha'ntharam ume
"சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடைய உமையே.
.உன்னுடைய புருவங்கள் கீழ் நோக்கியபடி கொஞ்சம் வளைந்த புருவங்கள் வில்லாகவும் உன் கண்களாகிய வண்டுகள் நாணாகவும் அந்த வில்லை மன்மதன் பிடித்திருப்பது உன் முகத்தின் நடுப்பாகமான மூக்காகவும் தோற்றமளிக்கிறது
மன்மதனது கை முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும் அவனது விரல்களும் உள்ளங்கையும் நடுப்பகுதியை மறைத்தாற்போலும் இருக்கிறது.."
இவ்வண்ணம் தேவியின் புருவங்களை காமனது வில்லாக தியானிப்பவர்களுக்கு காம ஜயம் உண்டாகுமாம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
மிக்க நன்றி ராஜா..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 48
என்னடா டல்லா இருக்கே”
“ஒண்ணும் இல்லை மனசாட்சி.. நம்ம ஃப்ரண்ட் பாஸ்கரன் தெரியுமோல்லியோ அவர் சென்னை போய்ட்டு வந்திருந்தார்.. அவங்க மாமியார் உப்புமா காரச்சட்னி பண்ணிக் கொடுத்தாங்களாம்..”
“ஏன் அதுக்கப்புறம் உடம்பு முடியாமப் போய்டுச்சாமா..”
“இல்லை..அவங்க மாமியாரோட இன்னொரு மாப்பிள்ளை அமெரிக்கால இருக்காராம்..அவர் வர்றப்பல்லாம் இவங்க உப்புமா கத்தரிக்கா கொத்சு பண்ணித்தருவாங்களாம்..என்ன தான் சொல்லு உ.க.கொ ஜோடிங்கறது சிவாஜி பத்மினி ஜோடியாட்டம்.. உ..கா.சட்னிங்கற்து சிவாஜி ஸ்ரீதேவியாட்டம் இருக்கும்ல.. ஏன் இப்படி ஒரு கண்ல வெண்ணெயும் ஒரு கண்ல் சுண்டைக்காய் வத்தலும் வைக்கறாங்க்ன்னு வருத்தப் பட்டார்..”
“அது ஒரு கண்ல வெண்ணெய் ஒரு கண்ல சுண்ணாம்புன்னுல்ல சொல்வாங்க..ஏன் இப்படி அந்தக் காலத்து உவமைல்லாம் சொல்ற..அப்புறம் என்னாச்சு..
:என்ன் பண்ற்து.. அப்படியே சாப்பிட்டாராம்.. விஸ்வரூபம் பார்க்க முடியலைன்னா திருமால் பெருமை டிவிடி போட்டு லாஸ்ட் சீனைப் பார்க்க்றமாதிரி… ! அதுவும் நல்லா இருந்ததாம்..”
“சரி சரி நீ எதுக்கு இந்த மேட்டர் சொல்றன்னு புரியுது..அம்பாளோட கண்கள் பத்தித் தானே..”
“கற்பூர புத்திடா ஒனக்கு..வா சுலோகத்துக்குள்ள போவோம்..”
**
அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்
Ahah sute savyam tava nayanam ark'athmakathaya
Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih
Samadhatte sandhyam divasa-nisayor antara-charim
தேவி.. உனது வலக்கண் ஆதித்யனான சூர்யனின் ரூபமானதால் பகலை உண்டாக்குகிறது..
உனது இடக்கண் சந்திர ரூபமானதால் இரவை உண்டாக்குகிறது.
. உனது நெற்றியில் இருக்கும் கண்ணோ இதற்கு இடைப்பட்ட காலை மற்றும் மாலை சந்தியை உருவாக்குகிறது
இந்த ஸ்லோகத்தை தியானிப்பவர்களின் கண்களுக்கு வாழும்காலத்தில் எந்தவித பாதிப்புமில்லாமலும் மற்றும் இவரது சந்ததியினரில் எவரும் கண்பார்வை அற்றவராக பிறக்க மாட்டார்கள் என்பதும் பலனாகும்....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 48
என்னடா டல்லா இருக்கே”
“ஒண்ணும் இல்லை மனசாட்சி.. நம்ம ஃப்ரண்ட் பாஸ்கரன் தெரியுமோல்லியோ அவர் சென்னை போய்ட்டு வந்திருந்தார்.. அவங்க மாமியார் உப்புமா காரச்சட்னி பண்ணிக் கொடுத்தாங்களாம்..”
“ஏன் அதுக்கப்புறம் உடம்பு முடியாமப் போய்டுச்சாமா..”
“இல்லை..அவங்க மாமியாரோட இன்னொரு மாப்பிள்ளை அமெரிக்கால இருக்காராம்..அவர் வர்றப்பல்லாம் இவங்க உப்புமா கத்தரிக்கா கொத்சு பண்ணித்தருவாங்களாம்..என்ன தான் சொல்லு உ.க.கொ ஜோடிங்கறது சிவாஜி பத்மினி ஜோடியாட்டம்.. உ..கா.சட்னிங்கற்து சிவாஜி ஸ்ரீதேவியாட்டம் இருக்கும்ல.. ஏன் இப்படி ஒரு கண்ல வெண்ணெயும் ஒரு கண்ல் சுண்டைக்காய் வத்தலும் வைக்கறாங்க்ன்னு வருத்தப் பட்டார்..”
“அது ஒரு கண்ல வெண்ணெய் ஒரு கண்ல சுண்ணாம்புன்னுல்ல சொல்வாங்க..ஏன் இப்படி அந்தக் காலத்து உவமைல்லாம் சொல்ற..அப்புறம் என்னாச்சு..
:என்ன் பண்ற்து.. அப்படியே சாப்பிட்டாராம்.. விஸ்வரூபம் பார்க்க முடியலைன்னா திருமால் பெருமை டிவிடி போட்டு லாஸ்ட் சீனைப் பார்க்க்றமாதிரி… ! அதுவும் நல்லா இருந்ததாம்..”
“சரி சரி நீ எதுக்கு இந்த மேட்டர் சொல்றன்னு புரியுது..அம்பாளோட கண்கள் பத்தித் தானே..”
“கற்பூர புத்திடா ஒனக்கு..வா சுலோகத்துக்குள்ள போவோம்..”
**
அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்
Ahah sute savyam tava nayanam ark'athmakathaya
Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih
Samadhatte sandhyam divasa-nisayor antara-charim
தேவி.. உனது வலக்கண் ஆதித்யனான சூர்யனின் ரூபமானதால் பகலை உண்டாக்குகிறது..
உனது இடக்கண் சந்திர ரூபமானதால் இரவை உண்டாக்குகிறது.
. உனது நெற்றியில் இருக்கும் கண்ணோ இதற்கு இடைப்பட்ட காலை மற்றும் மாலை சந்தியை உருவாக்குகிறது
இந்த ஸ்லோகத்தை தியானிப்பவர்களின் கண்களுக்கு வாழும்காலத்தில் எந்தவித பாதிப்புமில்லாமலும் மற்றும் இவரது சந்ததியினரில் எவரும் கண்பார்வை அற்றவராக பிறக்க மாட்டார்கள் என்பதும் பலனாகும்....
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 49
“சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய எல்லாப் பெண்களுக்குமே எட்டு வகையான பார்வைகள் உண்டாம்..அம்பாளின் கண்களுக்கும் எட்டு வகையான பார்வைகள் நகரங்களுடைய பெயர்களுடன் அமைந்திருக்கின்றன எனச் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்”
“ஏய்.. நீ வந்தே..இப்படிச் சொல்லிக் கிட்டே போனா எப்படி..கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லேண்டா..”
“ஆமா நான் ஏதாவது உதாரணம் சொன்னால் திட்டுவே இருந்தும் சொல்றேன்..
விசாலா – விசாலமான உள்ளார்ந்த – மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பத்மினியோட கண்கள்
கல்யாணி – வியப்பு – எத்தனை கேள்வி பதில் எப்படிச் சொல்வேன் – அதே பத்மினி வஞ்சிக்கோட்டை வாலிபன் பாட்டுல
அயோத்யா – காதல்வயப்படுதல் – பாலிருக்கும் பழமிருக்கும் தேவிகா
தாரா – ஆலாஸ்யம் – சோம்பல் மிகுந்த –களைப்போடுகூடிய – கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப்பாடச் சொன்னால் என்னபாடத்தோன்றும் சரோஜா தேவி
மதுரா – சஞ்சலம் – காதல் என்பது இது தானோ அறியேனே – வ.கோ.வா பத்மினியின் கண்கள்
போகவதி – அன்பு மிக்கது – சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா – பானுமதியின் கண்கள்
அவந்தீ – மயக்கம் – ஆலங்குயில் கூவும் ரயில்..சினேகாவின் கண்கள்
விஜயா – பாதி மூடிய கண்கள் –மயக்கமென்ன இந்த மெளனமென்ன வாணிஸ்ரீ யோடது..”
“போதும் போதும்..ஏண்டா லேட்டஸ்டா யாரும் தெரியாதா”
“அப்படி ஒண்ணும் மனசுல கண் நிக்கறாமாதிரி இல்லை..! இது கூட பார்வைக்குத் தான் கொஞ்சம் உதாரணமா கொடுத்துருக்கேன் தப்புன்னா என்னை மன்னிச்சுக்கோ..”
“உதாரணம் தானே சொல்ற..எனக்குத் தெரியாதா..உனக்கு மனசுல ஒண்ணும் கிடையாதுன்னு.. வா சுலோகத்துக்குள்ள போவோம்..”
**
விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே
Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih
Kripa-dhara-dhara kimapi madhur'a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya
Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate
”அம்மா உந்தன் கண்கள் அகன்று விசாலமாகவும் மங்கள கரமாகவும் ஒளிபடைத்ததாகவும் கரு நீலோத்பல மலர்களால் வெல்ல முடியாததாகவும் கருணைப்பெருக்கின் இருப்பிடமாகவும் சொல்லொணா அழகு மிக்கதாயும் ஆழ்ந்த்தாகவும் கருணையோடு காப்பதாகவும் எட்டு நகரங்களின் பெயர் கொண்டு விளங்குகின்றன.
.அந்த நகரங்கள் விசாலை கல்யாணி அயோத்தி தாரை மதுரா போகவதி அவந்தி விஜயா.
உன் திக்விஜய காலத்தில் எந்தெந்த நகரங்களுக்குச் சென்று எந்தவிதமான பார்வையால் செயல்கள் செய்தாயோ அதே பார்வையின் பெயராlல் அந்த நகரங்கள் விளங்குகின்றன.,."
இந்த சுலோக பாராயணம் எந்த இக்கட்டையும வென்று விடுமாம்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 49
“சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய எல்லாப் பெண்களுக்குமே எட்டு வகையான பார்வைகள் உண்டாம்..அம்பாளின் கண்களுக்கும் எட்டு வகையான பார்வைகள் நகரங்களுடைய பெயர்களுடன் அமைந்திருக்கின்றன எனச் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்”
“ஏய்.. நீ வந்தே..இப்படிச் சொல்லிக் கிட்டே போனா எப்படி..கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லேண்டா..”
“ஆமா நான் ஏதாவது உதாரணம் சொன்னால் திட்டுவே இருந்தும் சொல்றேன்..
விசாலா – விசாலமான உள்ளார்ந்த – மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பத்மினியோட கண்கள்
கல்யாணி – வியப்பு – எத்தனை கேள்வி பதில் எப்படிச் சொல்வேன் – அதே பத்மினி வஞ்சிக்கோட்டை வாலிபன் பாட்டுல
அயோத்யா – காதல்வயப்படுதல் – பாலிருக்கும் பழமிருக்கும் தேவிகா
தாரா – ஆலாஸ்யம் – சோம்பல் மிகுந்த –களைப்போடுகூடிய – கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப்பாடச் சொன்னால் என்னபாடத்தோன்றும் சரோஜா தேவி
மதுரா – சஞ்சலம் – காதல் என்பது இது தானோ அறியேனே – வ.கோ.வா பத்மினியின் கண்கள்
போகவதி – அன்பு மிக்கது – சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா – பானுமதியின் கண்கள்
அவந்தீ – மயக்கம் – ஆலங்குயில் கூவும் ரயில்..சினேகாவின் கண்கள்
விஜயா – பாதி மூடிய கண்கள் –மயக்கமென்ன இந்த மெளனமென்ன வாணிஸ்ரீ யோடது..”
“போதும் போதும்..ஏண்டா லேட்டஸ்டா யாரும் தெரியாதா”
“அப்படி ஒண்ணும் மனசுல கண் நிக்கறாமாதிரி இல்லை..! இது கூட பார்வைக்குத் தான் கொஞ்சம் உதாரணமா கொடுத்துருக்கேன் தப்புன்னா என்னை மன்னிச்சுக்கோ..”
“உதாரணம் தானே சொல்ற..எனக்குத் தெரியாதா..உனக்கு மனசுல ஒண்ணும் கிடையாதுன்னு.. வா சுலோகத்துக்குள்ள போவோம்..”
**
விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே
Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih
Kripa-dhara-dhara kimapi madhur'a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya
Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate
”அம்மா உந்தன் கண்கள் அகன்று விசாலமாகவும் மங்கள கரமாகவும் ஒளிபடைத்ததாகவும் கரு நீலோத்பல மலர்களால் வெல்ல முடியாததாகவும் கருணைப்பெருக்கின் இருப்பிடமாகவும் சொல்லொணா அழகு மிக்கதாயும் ஆழ்ந்த்தாகவும் கருணையோடு காப்பதாகவும் எட்டு நகரங்களின் பெயர் கொண்டு விளங்குகின்றன.
.அந்த நகரங்கள் விசாலை கல்யாணி அயோத்தி தாரை மதுரா போகவதி அவந்தி விஜயா.
உன் திக்விஜய காலத்தில் எந்தெந்த நகரங்களுக்குச் சென்று எந்தவிதமான பார்வையால் செயல்கள் செய்தாயோ அதே பார்வையின் பெயராlல் அந்த நகரங்கள் விளங்குகின்றன.,."
இந்த சுலோக பாராயணம் எந்த இக்கட்டையும வென்று விடுமாம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 50
”கொண்ட எழில்கள் குலையாமல் தானிங்கே
கண்களில் மின்னிடும் காட்சியாய் – வண்டாக
மொய்த்திடும் எண்ண மலர்களில் பொங்கிடும்
பொய்கையாய் இந்தப் பணி..
எழுதத் தெரிந்தது கொஞ்சம்தான் – எனக்கு
....எழுத்தில் தெரிந்ததும் கொஞ்சம்தான்
வழுக்கிச் சென்றிடும் ஆசையினால் – நான்
....விழைந்தேன் வரைந்திட இவ்வுரையை
தழுவிச் செல்கிறேன் பலநூல்கள்- தரம்
....நழுவா துரைத்திட எண்ணுகிறேன்
முழுதும் முடித்திட சக்தியினை – எனக்கு
....மொழிவாய் ஈசனின் உமையவளே..”
“என்ன ஆச்சுடா..பாட்டுல்லாம் பாடறே..”
“ஒண்ணுமில்ல மனசாட்சி..காலைல ஜூரம்னு டாக்டர்கிட்ட போனேனா.. அவர் பனடால் குடுத்தாரா..அதைச் சாப்பிட்டேனா.. பாட்டு வந்தது..”
“உன் பாட்டைக் கேட்டு மத்தவா பனடால் போட்டுக்காம இருந்தா சரி..என்ன..யூஸ்யுவலா இருக்கற மாதிரி இல்லையே நீ..”
“கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு.. உன்
கண்களும் கவி பாடுதே”
“ஆரம்பிச்சுட்டியாடா..”
“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய்..”
“சரி இப்ப என்னங்கற அம்பாளோட கண்கள் பத்திச் சொல்லப் போறியா..”
“உனக்குச் சொல்லவே இல்லையே..மத்யானம் பனடால். சாப்பிட்டேனா..இப்ப சாயந்தரம் பனடால் எக்ஸ்ட்ரா சாப்பிட்டேன்.. அதனால இன்னொன்னு நான் எழுதிட்டேன்..”
“ம்ம் சொல்லு..”
”காதுகளில் நற்கவிதை
....கசிந்துருகித் தேனூற
தூதுசெலும் விழிகளதும்
....தேடுதற்போல் ஓரம்செல
மோதுகின்ற கோபத்தால்
....மெய்மறந்த நெற்றிக்கண்
சூதுதனைக் கொண்டாற்போல்
....சிவந்ததுவே அம்பிகையே..!”
“ஏதோ புரியறா மாதிரி இருக்கு..ஆனாப் புரியலை..என்னாபா மீனிங்க்..”
“வா.வா..சுலோகத்துக்குள்ள போகலாம்..
***
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்
Kavinam sandharbha-sthabaka-makarandh'aika-rasikam
Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras'asvada tharalau-
Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.
“அம்பிகையே....கவிஞர்களின் கவிதை என்னும் பூங்கொத்தில் உள்ள தேனைப் பருகுவதில் மிகவும் விருப்பமுள்ளவை உன் இரு காதுகள்..
அவ்விரு காதுகளையும் நோக்கி கருவண்டுகள் போல் உன் விழிகள் கடைவிழிப்பார்வையின் போது சஞ்சரித்து அந்த தேன் பருகத் தவிப்பதைப் போன்று இருப்பதைப் பார்த்து அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லையே,, தான் சற்றே தள்ளி நெற்றியில் இருக்கிறோமே என எண்ணியதன் காரணமாக சற்றே பொறாமையினால் உனது நெற்றிக்கண் சிவந்திருக்கிறது…
தேவியின் (விசாலாஷி) விசாலமான இந்தக் கண்பார்வையினை த்யானிப்பவர்களுக்கு தொலை நோக்குப்பார்வை அமையுமாம்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 50
”கொண்ட எழில்கள் குலையாமல் தானிங்கே
கண்களில் மின்னிடும் காட்சியாய் – வண்டாக
மொய்த்திடும் எண்ண மலர்களில் பொங்கிடும்
பொய்கையாய் இந்தப் பணி..
எழுதத் தெரிந்தது கொஞ்சம்தான் – எனக்கு
....எழுத்தில் தெரிந்ததும் கொஞ்சம்தான்
வழுக்கிச் சென்றிடும் ஆசையினால் – நான்
....விழைந்தேன் வரைந்திட இவ்வுரையை
தழுவிச் செல்கிறேன் பலநூல்கள்- தரம்
....நழுவா துரைத்திட எண்ணுகிறேன்
முழுதும் முடித்திட சக்தியினை – எனக்கு
....மொழிவாய் ஈசனின் உமையவளே..”
“என்ன ஆச்சுடா..பாட்டுல்லாம் பாடறே..”
“ஒண்ணுமில்ல மனசாட்சி..காலைல ஜூரம்னு டாக்டர்கிட்ட போனேனா.. அவர் பனடால் குடுத்தாரா..அதைச் சாப்பிட்டேனா.. பாட்டு வந்தது..”
“உன் பாட்டைக் கேட்டு மத்தவா பனடால் போட்டுக்காம இருந்தா சரி..என்ன..யூஸ்யுவலா இருக்கற மாதிரி இல்லையே நீ..”
“கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு.. உன்
கண்களும் கவி பாடுதே”
“ஆரம்பிச்சுட்டியாடா..”
“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய்..”
“சரி இப்ப என்னங்கற அம்பாளோட கண்கள் பத்திச் சொல்லப் போறியா..”
“உனக்குச் சொல்லவே இல்லையே..மத்யானம் பனடால். சாப்பிட்டேனா..இப்ப சாயந்தரம் பனடால் எக்ஸ்ட்ரா சாப்பிட்டேன்.. அதனால இன்னொன்னு நான் எழுதிட்டேன்..”
“ம்ம் சொல்லு..”
”காதுகளில் நற்கவிதை
....கசிந்துருகித் தேனூற
தூதுசெலும் விழிகளதும்
....தேடுதற்போல் ஓரம்செல
மோதுகின்ற கோபத்தால்
....மெய்மறந்த நெற்றிக்கண்
சூதுதனைக் கொண்டாற்போல்
....சிவந்ததுவே அம்பிகையே..!”
“ஏதோ புரியறா மாதிரி இருக்கு..ஆனாப் புரியலை..என்னாபா மீனிங்க்..”
“வா.வா..சுலோகத்துக்குள்ள போகலாம்..
***
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்
Kavinam sandharbha-sthabaka-makarandh'aika-rasikam
Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras'asvada tharalau-
Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.
“அம்பிகையே....கவிஞர்களின் கவிதை என்னும் பூங்கொத்தில் உள்ள தேனைப் பருகுவதில் மிகவும் விருப்பமுள்ளவை உன் இரு காதுகள்..
அவ்விரு காதுகளையும் நோக்கி கருவண்டுகள் போல் உன் விழிகள் கடைவிழிப்பார்வையின் போது சஞ்சரித்து அந்த தேன் பருகத் தவிப்பதைப் போன்று இருப்பதைப் பார்த்து அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லையே,, தான் சற்றே தள்ளி நெற்றியில் இருக்கிறோமே என எண்ணியதன் காரணமாக சற்றே பொறாமையினால் உனது நெற்றிக்கண் சிவந்திருக்கிறது…
தேவியின் (விசாலாஷி) விசாலமான இந்தக் கண்பார்வையினை த்யானிப்பவர்களுக்கு தொலை நோக்குப்பார்வை அமையுமாம்..
- Sponsored content
Page 6 of 14 • 1 ... 5, 6, 7 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 14
|
|