ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !

2 posters

Go down

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! Empty செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !

Post by சாமி Sun Feb 02, 2014 5:02 pm

குறுந்தொகையில் பெரும்பொருள்! - புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

இலக்கியம் என்பது இனிமை சேர்ப்பது. இல்லாத ஒன்றிற்காக ஏங்குகின்ற இவ்வுலகில் இனிய நல்வாழ்வை எவ்வாறு வாழவேண்டும் என நமக்குக் கற்பிப்பதுதான் இலக்கியம். இனிக்கும் வகை வாழ, கலைகளை உணரும் உணர்வுகள் தேவை. அவ்வுணர்வுகளின் பெட்டகமாய் உணர்வுபூர்வமான ஆதாரமாகத் திகழ்வது இலக்கியம். அவ்விலக்கியமே அறநெறி வாழ்வுக்கு மிக அடிப்படை.

அக இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழி இவர்களது மனப் போராட்டங்களினூடே நிலையாமையை மறைபொருளாக தெளிவாக்கியுள்ளனர் புலவர் பெருமக்கள். ""வைகலும் வைகல் வரக்கண்டும் உணரார்'' என நாலடியார் நவில்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை "நல்ல குறுந்தொகை' என நூலோர் போற்றினர். அளவில் சிறியதாயினும் பொருளில் ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் பெரியது - உயர்ந்தது. ஒருவனும் ஒருத்தியும் கலந்து வாழும் வாழ்க்கையில் அவர்களது மனத்திடை எழும் உணர்வுகளை உயிரோட்டத்துடன் உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உணர்த்தி நிற்கிறது.

மிக உயர்ந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்ட அகப்பொருள் இலக்கியமாயினும் மனித வாழ்க்கையில் நிலையாமையை இலக்கியச் சுவையோடு உணர்த்தியுள்ளார் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். அவர் இயற்றிய பாடல் வருமாறு:

"அழியல் ஆயிழை அழிவு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல்லிசை வேட்டநயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளன் உடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியதன்று நின்
அம் கலுழ் மேனிப் பாயப்பசப்பே''


சொற்சுவை, பொருட்சுவை இரண்டும் கலந்து பயில்வோரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இப்பாடல் பயிலும் தோறும், பயிலும் தோறும் இன்பம் பயப்பதாகும்.

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வராமையின் தலைவியின் மேனியில் பசலை படர்கிறது. இந்நிலையில் தோழி தலைவியிடம், ""வருந்தாதே! நாம் வாழும் மலை நாட்டுத் தலைவன் நம்மைப் போன்றே மிக்க இரக்க குணம் கொண்டவன். பழிக்கு அஞ்சும் பண்பாளன். நிலையாமையே நிலையென்று உணர்ந்த நல்லிசை வேட்ட நாயகன். புகழை மட்டும் விரும்பும் பெற்றியன். இத்தகைய நற்பண்புகளையும், நீதி வழுவா நெறியினையும் கொண்ட நம் மலை நாட்டுத் தலைவனான ஒப்புரவாளன் பெற்ற பெருஞ்செல்வம் எவ்வாறு அவனது வள்ளற்றன்மையினானே விரைவில் அவனைவிட்டு நீங்குமாப் போல, நின் மேனியில் படர்ந்துள்ள பசலை விரைவில் நீங்கிவிடும்'' எனத் தேற்றுகிறாள்.

இப்பாடலின்கண், செல்வம் நிலையாமையையும், இளமை நிலையாமையையும் உலகியர்க்கு உணர்த்தி, செல்வம் வந்தபோது வறியோர்க்கு ஈந்து புகழ் ஈட்டுங்கள் என்கிறார் புலவர். உலகில் உள்ள பொருள்கள் நிலையற்றவை. புகழ் ஒன்றே நிலைத்தது என்பது இப்பாடலின்கண் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. -தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! Empty Re: செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !

Post by myimamdeen Sun Feb 02, 2014 5:15 pm

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! 103459460 செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! 103459460 செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் ! 103459460 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum