புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
284 Posts - 45%
heezulia
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
19 Posts - 3%
prajai
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_m10கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 28, 2014 12:02 pm

இந்தியா சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் முதல் 30 லட்சம் கோடி ரூபாய்வரை மதிப்புள்ள கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, இரும்புத்தாது, செம்பு, நிலக்கரி, கால்சியம், பாஸ்பேட் மற்றும் பல கனிமங்களைப் பெறக்கூடிய இயற்கையான வளங்கள் நிரம்பியது. இந்தக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதன் மூலம் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருமானம் கிடைப்பதுடன் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த முடியும்.

அத்துடன் 10 கோடி முதல் 15 கோடிப் பேர் வரை கூடுதலாக வேலைவாய்ப்பு பெறுவர். இந்த இயற்கை வளங்களைப் பதப்படுத்தும் தொழிலில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுடன் ஆயிரக் கணக்கான சிறு, நடுத்தரத் தொழில்பிரிவுகளும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.)

கணிசமாக உயரும், வெளிவர்த்தகப் பற்றுவரவில் காணப்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வெகுவாகக் குறையும், இதன் பயனாக அனைவருக்கும் வருமானமும் லாபமும் முன்னேற்றமும் ஏற்படும்.

கனிம வளங்களை ஆய்வு செய்வதற்கும் அகழ்ந்தெடுப்பதற்கும் தொடர்ந்து கோடிக் கணக்கில் முதலீடு செய்துவந்தால்தான் எதிர்காலச் சந்ததியினர் வசதியான வாழ்வுபெற உதவிகரமாக இருக்கும். கனிம அகழ்வால் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்துகொண்டோ, உரிமைத் தொகையை (ராயல்டி) அளித்தோ இதை மேற்கொள்ளலாம். உரிமைத் தொகை என்பது, சுரங்கத்தில் உள்ள மொத்த கனிமத்தின் அளவைப் பொறுத்தும் அப்போதைய சந்தை மதிப்பையும் கணக்கில் கொண்டும் கணக்கிடப்படுவதாகும்.

இழக்கப்படும் வாய்ப்புகள்:

இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக இந்தியா பொருளாதார ரீதியாகக் கடினமான ஒரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கனிம அகழ்வுக்கு ஒட்டுமொத்தமாக விதிக்கப்படும் தடைகளாலும், வெட்டி எடுப்பதில் ஏற்படும் தாமதங்களாலும் கனிம அகழ்வு என்பது லாபகரமான தொழில் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுவருகிறது. கணக்கு வழக்கற்ற கனிம வளங்கள் நம்மிடம் இருந்தும் அவற்றை நம்மால் முறையாக, பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

எல்லா நாடுகளுமே கனிமவளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி கனிமவளங்கள் வாய்த்துள்ள நாடுகளில் பெரும்பாலானவை அவற்றை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்திவருகின்றன. அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்துள்ளது, வறுமை ஒழிந்துள்ளது, பொருளாதாரம் நிலைபெற்றுள்ளது.

ஒரு காலத்தில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்தியாவுக்கு இணையாக இருந்தன. இப்போதோ அவை முன்னேறிவிட்டன. நாம் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறோம். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) குறைந்ததற்கு முக்கியக் காரணம் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் நாம் கடைப்பிடிக்கும் மெத்தனம்தான்.

இருக்கும் இயற்கை வளங்களே சரியாகப் பயன்படுத்தாத நிலையில், அதையும் சட்டபூர்வமாக வெட்டி எடுப்போருக்கும், சட்ட விரோதமாக வெட்டி எடுப்போருக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் மேலும் மோசமாக்கிவிடுகின்றன. இதன் விளைவாகவே கனிம அகழ்வுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படுகிறது. இதன் விளைவாக தொழில்துறை ஸ்தம்பிக்கிறது. மாநிலங்களின் பொருளாதாரமும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள், மக்களின் வாழ்க்கைத் தரமும் முடங்கிவிடுகிறது.

உலக அளவில் மிகவும் விரும்பப்படும் கனிமம் பாக்ஸைட்.

அது அலுமினியத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தகைய பாக்ஸைட் கனிமம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் இருந்தும் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படாமலேயே இருக்கிறது. உலகிலேயே பாக்ஸைட் அதிகம் கிடைக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. சுமார் 30,000 லட்சம் டன்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் கடந்த 35 ஆண்டுகளில் மிகப் பெரிய பாக்ஸைட் சுரங்கம் ஏதும் இந்தியாவில் திறக்கப்படவேயில்லை!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட தங்கம், செம்பு ஆகிய கனிமங்களை அகழ்ந்தெடுக்க இன்னமும் முதலீடு செய்யப்படாமலேயே இருக்கிறது.

நம் நாட்டிலேயே முக்கியமான பல கனிமங்கள் ஏராளமாகப் புதைந்துகிடக்க, அவற்றை இறக்குமதி செய்ய கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிய அன்னியச் செலாவணிகளை நாம் வீணடிப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. எந்த கனிமத்தையும் பயன்படுத்தாமல் அப்படியே அடுத்த நூறாண்டுகளுக்குக்கூட நாம் கட்டிக்காக்கலாம். அதன் பிறகு, அவற்றின் தேவையும் பயன்பாடும் இதே அளவுக்கு இருக்க வேண்டும், அதை அகழ்ந்து சுத்தப்படுத்தவும் பயன்படுத்தவும் செலவு கட்டுப்படியாவதாக இருக்க வேண்டும்.

இப்படி கனிமங்களை வெட்டி எடுக்க விதிக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடை உத்தரவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாநிலம் குறித்துப் பார்ப்போம்.

கோவா மாநிலத்தின் பரிதாப நிலை:

இரும்புத் தாதை வெட்டி எடுக்கக் கூடாது என்று விதிக்கப்பட்ட பொதுவான தடையால் கோவா மாநிலத்துக்கு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கோவா மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் சுரங்கத் தொழிலை நம்பித்தான் இருக்கின்றனர். இரும்புத் தாதை வெட்டி எடுக்காததால் சுமார் 20,000 லாரிகள் வேலை எதுவுமின்றி அப்படியே நிற்கின்றன. அந்த மாநிலத்தின் பொருளாதாரம் பெருத்த இழப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மதிப்பு சுமார் 25,000 கோடி ரூபாய்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. சுரங்கத் தொழிலில் நேரடியாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல இழப்பு, இந்தத் துறையைச் சார்ந்த துணைத் தொழில்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்தத் துறைகளைச் சார்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலையையும் வருவாயையும் இழந்துள்ளனர்.

இரும்புத் தாதை வெட்டி எடுக்க விதிக்கப்பட்ட தடையால், கோவா மாநிலப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதி இடையிலான சம நிலையே பாதிக்கப்பட்டிருப்பதை கோவா மாநில முதலமைச்சரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக அன்றாடம் 2,000 லட்சம் டன்கள் இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதில் 50% ஏற்றுமதியானது. உலகிலேயே இரும்புத் தாதை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 3-வது இடம் இந்தியாவுக்குக் கிடைத்தது. 2008-09-ம் ஆண்டு 1,170 லட்சம் டன்களாக இருந்த ஏற்றுமதி 2012-13-ல் வெறும் 180 லட்சம் டன்களாகக் குறைந்துவிட்டது. நடப்பு நிதியாண்டில் இது 140 முதல் 150 லட்சம் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடையால் ஏராளமான இழப்பைச் சந்தித்திருப்பதால் தடை நீங்கினால் மிகப் பெரும் அளவில் தாதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இத்துறைக்கு இருக்கிறது. கோவா மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக மட்டும் 600 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததில் இதன் பங்கும் கணிசமானது.

நிலைமை வெகு மோசமாக இருப்பதால், நிவாரணம் தர வேண்டும் என்று கோவா மாநில அரசு, மத்திய அரசை அணுகியிருக்கிறது. சுரங்கத் துறை அமைச்சர் தீன்ஷா படேல் 2013 டிசம்பர் 6-ம் தேதி மக்களவைக்கு அளித்த பதிலில் கோவாவின் கோரிக்கைகளை விவரித்திருந்தார்.

1. மத்திய அரசு நிதியுதவியை அதிகப்படுத்தி அளிக்க வேண்டும்.

2. கூட்டுறவு வங்கிகள் நொடித்துவிடாமலிருக்க சிறப்பு நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டும்.

3. வங்கிகளிடம் வாங்கிய கடன்களைத் திரும்ப வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும், கடன்கள் மீதான வட்டியை ரத்து செய்ய வேண்டும், கடன் செலுத்து காலத்தையும் தவணைகளையும் திருத்தியமைக்க வேண்டும் என்பவை முக்கிய கோரிக்கைகள்.

சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பதை யாரும் ஆதரிப்பதில்லை, அதே சமயம் சட்டத்துக்குட்பட்டு வெட்டியெடுக்க அனுமதிக்க வேண்டும். இயற்கை வளங்களை அடையாளம் காணவும், அகழ்ந்தெடுக்கவும் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் வறுமை ஒழியும், வேலையில்லா திண்டாட்டம் மறையும்.

சுரங்கத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்த கோவாவிலிருந்து ஒரு குழு சென்று பிரதமரைச் சந்தித்தது. “சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆழ்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் ஆனால், வறுமைதான் மிகப் பெரிய மாசு உற்பத்தியாளர்” என்று பிரதமர் அவர்களிடம் கூறியிருக்கிறார்.

இரும்புத் தாது ஏற்றுமதி செய்ய வழிகாணப்பட வேண்டும், சுரங்கத் தொழிலை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது பலருடைய வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.

எல்லா சுரங்கத் தொழிலும் சட்டவிரோதமானதல்ல. இந்தத் தடை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் கூறியிருக்கிறார்.

இடைவெளியை இட்டுநிரப்பல்:

இந்த நடவடிக்கைகளுக்கு நடுவே கோவாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. மாநிலத்தின் முழுப் பொருளாதார நடவடிக்கையும் நிலைகுத்தி நிற்கிறது. இரும்புத் தாதுத் தொழிலுக்கு ஏற்பட்ட தடை, மாநிலத்தின் தொழில்களுக்கும் மக்களுடைய உற்சாகத்துக்கும் பெரிய தடையாக மாறிவிட்டது.

ஆஸ்திரேலியா, பிரேசில் போல இந்தியாவும் இரும்புத் தாதுவளம் மிக்கது. ஆனால், கண்ணோட்டத்திலும் உற்பத்தி முறையிலும் காணப்படும் வேறுபாடானது அளவிட முடியாதது. ஆஸ்திரேலியாவும் பிரேசிலும் தங்களுடைய இரும்புத் தாது உற்பத்தியை அதிகப்படுத்தியிருக்கும் வேளையில், இந்தியாவில் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவும் பிரேசிலும் தலா 4,000 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யும் இந்த நேரத்தில், இந்தியாவின் உற்பத்தி வெறும் 1,000 லட்சம் டன்களாகவே இருக்கிறது. இதை

மேலும் பல மடங்குக்கு நாம் உயர்த்த முடியும்.

இந்தியா போன்ற வளரும் நாடு, கிடைக்கும் இயற்கை வளங்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கொள்கைகளையும் வழிமுறைகளையும் எளிமைப்படுத்தி ஏராளமான முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கக்கூடிய ஒரே துறை கனிம அகழ்வுதான்.

அனில் அகர்வால், வேதாந்தா குழுமத் தலைவர்.

the hindu

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக