Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
+3
subasu
சின்னக் கண்ணன்
vasudevan31355
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத் என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.
அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.
முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.
இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.
முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.
இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..ம்ம் தொடர்க உம் தொண்டு..நன்றி வாசு சார்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
நன்றி அண்ணா
subasu- பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
subasu wrote:நன்றி அண்ணா
நன்றி சகோதரரே!
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
அந்தக் கால இந்திப் பாடல்கள் என்று பார்த்தால் வரிசையில் நிறைய வருகின்றன..கிஷோர் குமார் - ஜிந்தகி ..யஹ கல் க்யாஹோ.. பாடல்..அப்புறம் நா கோயி உமங்க் ஹை நாகோயி தரங்க் ஹை..பின்... அச்சா து ஹம் சல் தே ஹோ..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
அடுத்து 'ஆராதனா' என்ற இமாலயப் புகழ் பெற்ற இந்திப்படப் பாடல் ஒன்றைப் பார்த்து மகிழலாம். 24 அக்டோபர் 1969-இல் வெளிவந்த இந்தப் படம் இசையாலும், அற்புதமான நடிப்பாலும், அருமையான திரைக்கதையாலும், இந்தியாவையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 'ஆராதனா' படத்தின் பாடல்கள் கற்பனைக்கும் எட்டா புகழ் பெற்றவை. ராஜேஷ்கன்னா, ஷர்மிளா தாகூர் ஜோடியைப் பற்றி எப்படி சொல்வது? அத்துணைப் பொருத்தம். இந்த ஷர்மிளா தாகூர் யார் தெரியுமா? முன்னாள் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் அவர்களின் மனைவி. இப்போது இந்தித் திரைப்பட உலகில் டாப் ஸ்டாராக இருக்கும் சைப் அலிகான் இவர்களின் புதல்வர் ஆவார்.
சரி! 'ஆராதனா' பாடலுக்கு வருவோம்.
அழகான பச்சைப் பசேலென்ற மலைப் பிரதேசத்தில் நண்பனுடன் ஜீப்பில் பயணித்தபடி ராஜேஷ்கண்ணா பவனி வர, அருகில் அழகு தேவதையாய் ஷர்மிளா தாகூர் ரயிலில் பயணித்து வர, ரயிலுக்கு அருகிலேயே ஜீப்பில் அமர்ந்தபடி ராஜேஷ்கண்ணா ஷர்மிளா தாகூரை வர்ணித்தபடி தன் காதலைப் பாடல் வடிவில் பாடி வர, ஜீப் ஒட்டும் நண்பன் நண்பனின் காதல் பாடலுக்குக்கு ஏற்றவாறு மவுத் ஆர்கன் மூலம் நயமாக இசை தொடுக்க, ராஜேஷ்கண்ணா பாடும் பாடலையும், அவரின் குறும்புகளையும் ஷர்மிளா தாகூர் வெகு அழகான குறும்பும், காதலும் கொப்பளிக்கும் முக பாவங்களுடன் எதிர் கொள்ளும் அழகு ஒன்றிற்காகவே இந்தப் பாடலை ஆயிரம் முறை பார்க்கலாம்.
புகழ் பெற்ற இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசை அமைப்பில், கிஷோர் குமார் அவர்களின் கிறங்க வைக்கும் குரலில் நம் நாடி நரம்புகளையெல்லாம் குளிர்விக்கும் பாடல். இந்தப் பாடலைக் காணும் போது ஏதோ நாமே ஒரு மலைப் பிரதேசத்திற்கு சென்று வந்தது போல ஒரு உணர்வு. உடல், உள்ளம் அனைத்தும் குளிர்ந்து நம் மனம் லேசாகி சந்தோஷக் கடலில் மிதப்பது போன்ற உணர்வை இந்தப் பாடல் தருவதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததோ! இன்று வரை அல்ல. உலகம் உள்ள மட்டும் இந்தப் பாடலின் புகழ் அழியாது.
நீங்களும் பார்த்து இன்புறுங்களேன்.
சரி! 'ஆராதனா' பாடலுக்கு வருவோம்.
அழகான பச்சைப் பசேலென்ற மலைப் பிரதேசத்தில் நண்பனுடன் ஜீப்பில் பயணித்தபடி ராஜேஷ்கண்ணா பவனி வர, அருகில் அழகு தேவதையாய் ஷர்மிளா தாகூர் ரயிலில் பயணித்து வர, ரயிலுக்கு அருகிலேயே ஜீப்பில் அமர்ந்தபடி ராஜேஷ்கண்ணா ஷர்மிளா தாகூரை வர்ணித்தபடி தன் காதலைப் பாடல் வடிவில் பாடி வர, ஜீப் ஒட்டும் நண்பன் நண்பனின் காதல் பாடலுக்குக்கு ஏற்றவாறு மவுத் ஆர்கன் மூலம் நயமாக இசை தொடுக்க, ராஜேஷ்கண்ணா பாடும் பாடலையும், அவரின் குறும்புகளையும் ஷர்மிளா தாகூர் வெகு அழகான குறும்பும், காதலும் கொப்பளிக்கும் முக பாவங்களுடன் எதிர் கொள்ளும் அழகு ஒன்றிற்காகவே இந்தப் பாடலை ஆயிரம் முறை பார்க்கலாம்.
புகழ் பெற்ற இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசை அமைப்பில், கிஷோர் குமார் அவர்களின் கிறங்க வைக்கும் குரலில் நம் நாடி நரம்புகளையெல்லாம் குளிர்விக்கும் பாடல். இந்தப் பாடலைக் காணும் போது ஏதோ நாமே ஒரு மலைப் பிரதேசத்திற்கு சென்று வந்தது போல ஒரு உணர்வு. உடல், உள்ளம் அனைத்தும் குளிர்ந்து நம் மனம் லேசாகி சந்தோஷக் கடலில் மிதப்பது போன்ற உணர்வை இந்தப் பாடல் தருவதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததோ! இன்று வரை அல்ல. உலகம் உள்ள மட்டும் இந்தப் பாடலின் புகழ் அழியாது.
நீங்களும் பார்த்து இன்புறுங்களேன்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
நன்றி சின்னக் கண்ணன் சார்! அனைத்து சிறப்பான பாடல்களையும் நாம் கண்டிப்பாக கண்டு மகிழலாம்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்
ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும், ஒரு பாடகி எப்படிப் பாட வேண்டும், ஒரு இசையமைப்பாளர் எப்படி தன் திறமையால் உலகையே கட்டிப் போட வேண்டும் என்பதற்கு உலகிலேயே தலை சிறந்த பாடலாக இந்தப் பாடலைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். உலகில் நான் கேட்ட பலமொழிப் பாடல்களில் இந்தப் பாடல் ஒன்றைத்தான் நான் எனக்குப் பிடித்த முதல் பாடலாகக் கருதுகிறேன். என் நாடி நரம்பு, ஊன், உயிரெல்லாம் கலந்து என் இரத்த அணுக்களோடு கலந்து போன பாடல். இரவும், பகலும் இந்த பாடல் என்னை பாடுபடுத்தி வருவதைப் போல வேறு ஒரு பாடல் என்னை தொந்தரவு செய்ததில்லை.
இசைக்குயில் லதாவின் குரல் வளத்தை சொல்வதா...
பாடலில் அவர் கொடுக்கும் ஏற்ற இறக்கங்களை சொல்வதா...
நம் உணர்வுகளை நம் எண்ணங்கள் யாவையும் மறக்கடித்து நம் கவனம் முழுதும் இப்பாடலில் செல்ல காரணமாய் இருந்த இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசை அமைப்பை சொல்வதா...
அமைதியான சூழ்நிலையில் அழகு தேவதையாக சாதனா அமைதியாக புன்னகைத்தபடியே இப்பாடலுக்கு நடிப்பதை சொல்வதா...
இந்தப் பாடலைத் தவிர உலகில் வேறு இன்பம் எதுவும் இல்லை (நடிகர் திலகத்தை தவிர) என்பது போல அவ்வளவு அழகாக இயக்கிய புகழ் பெற்ற இயக்குனர் பிமல் ராய் அவர்களின் திறமையைப் புகழ்வதா... (சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் அவார்ட்)
இந்தப் பாடல் நம்மை படுத்தும் பாட்டை நாம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியுமா?!
1960-இல் வெளி வந்த 'பராக்' (parakh) என்ற இந்திப் படத்தில் வரும் பாடல்தான் இது. இப்பாடலைப் பற்றி லதா ஒரு முறை பேட்டியில் சொன்னது.
"பிமல் ராய் இப்படத்தை முதலில் பாடல்கள் இல்லாமல்தான் படமாக்க விரும்பினார். சலீல் சௌத்ரியின் திரைக்கதைக்கு ஷைலேந்திரா வசனங்கள் எழுதினார். ஷைலேந்திரா வசனம் எழுதிய ஒரே படம்) திரைக்கதையும், வசனங்களும் மிக நன்றாக அமைந்தது. அதே சமயம் இந்த திரைக்கதைக்கு பாடல்கள் அவசியம் என்பதும் புரிந்தது. சலீலும், ஷைலேந்திராவும் பிமல் ராயிடம் பேசி இப்படத்திற்கு பாடல்கள் அவசியம் என்று அவர் மனத்தைக் கரைத்தார்கள். பிமல் ராயும் அவர்கள் விருப்பத்திற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நேரம் மிகக் குறைவு. ஒரே நாளில் ஷைலேந்திரா முன்னமேயே எழுதி வைத்திருந்த பாடல்கள் இப்படத்திற்காக உபயோகப் படுத்தப் பட்டன. முதலில் வங்காளத்தில் இப்பாடலும், பின் இந்தியிலும் பாடி பதிவு செய்யப் பட்டது. ஒரிஜினல் வங்காளத்தை விடவும் இந்தி வார்த்தைகளை மிக அழகாகக் கோர்த்து காலத்தால் அழிக்க முடியாத பாடலை எழுதித் தந்தார் ஷைலேந்திரா"
சிறந்த இசையமைப்பிற்காக பிலிம் பேர் அவார்ட் (சலீல் சௌத்ரி) போட்டி, சிறந்த படத்திற்கான பிலிம் பேர் அவார்ட் போட்டி என்று பல சிறப்புகளைக் கொண்ட படம் 'பராக்'.
இப்போது உலகையே மறந்து நம்மையும் மெய் மறக்கச் செய்யும் இப்பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இப்பாடலை ஒரு முறை பார்த்து கேட்டு விட்டீர்களானால் நிச்சயம் மறுமுறை உங்களால் கேட்காமல் இருக்க இயலாது. இசைக்கு இருக்கும் சக்தியை நீங்கள் முழுதுமாக இப்பாடலில் உணர முடியும்.
என் வாழ்நாளிலேயே என் மனங்கவர்ந்த முத்தான முதல் பாடல். முதலில் என் விருப்பமாக. பிறகு உங்கள் விருப்பமாக.
இசைக்குயில் லதாவின் குரல் வளத்தை சொல்வதா...
பாடலில் அவர் கொடுக்கும் ஏற்ற இறக்கங்களை சொல்வதா...
நம் உணர்வுகளை நம் எண்ணங்கள் யாவையும் மறக்கடித்து நம் கவனம் முழுதும் இப்பாடலில் செல்ல காரணமாய் இருந்த இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசை அமைப்பை சொல்வதா...
அமைதியான சூழ்நிலையில் அழகு தேவதையாக சாதனா அமைதியாக புன்னகைத்தபடியே இப்பாடலுக்கு நடிப்பதை சொல்வதா...
இந்தப் பாடலைத் தவிர உலகில் வேறு இன்பம் எதுவும் இல்லை (நடிகர் திலகத்தை தவிர) என்பது போல அவ்வளவு அழகாக இயக்கிய புகழ் பெற்ற இயக்குனர் பிமல் ராய் அவர்களின் திறமையைப் புகழ்வதா... (சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் அவார்ட்)
இந்தப் பாடல் நம்மை படுத்தும் பாட்டை நாம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியுமா?!
1960-இல் வெளி வந்த 'பராக்' (parakh) என்ற இந்திப் படத்தில் வரும் பாடல்தான் இது. இப்பாடலைப் பற்றி லதா ஒரு முறை பேட்டியில் சொன்னது.
"பிமல் ராய் இப்படத்தை முதலில் பாடல்கள் இல்லாமல்தான் படமாக்க விரும்பினார். சலீல் சௌத்ரியின் திரைக்கதைக்கு ஷைலேந்திரா வசனங்கள் எழுதினார். ஷைலேந்திரா வசனம் எழுதிய ஒரே படம்) திரைக்கதையும், வசனங்களும் மிக நன்றாக அமைந்தது. அதே சமயம் இந்த திரைக்கதைக்கு பாடல்கள் அவசியம் என்பதும் புரிந்தது. சலீலும், ஷைலேந்திராவும் பிமல் ராயிடம் பேசி இப்படத்திற்கு பாடல்கள் அவசியம் என்று அவர் மனத்தைக் கரைத்தார்கள். பிமல் ராயும் அவர்கள் விருப்பத்திற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நேரம் மிகக் குறைவு. ஒரே நாளில் ஷைலேந்திரா முன்னமேயே எழுதி வைத்திருந்த பாடல்கள் இப்படத்திற்காக உபயோகப் படுத்தப் பட்டன. முதலில் வங்காளத்தில் இப்பாடலும், பின் இந்தியிலும் பாடி பதிவு செய்யப் பட்டது. ஒரிஜினல் வங்காளத்தை விடவும் இந்தி வார்த்தைகளை மிக அழகாகக் கோர்த்து காலத்தால் அழிக்க முடியாத பாடலை எழுதித் தந்தார் ஷைலேந்திரா"
சிறந்த இசையமைப்பிற்காக பிலிம் பேர் அவார்ட் (சலீல் சௌத்ரி) போட்டி, சிறந்த படத்திற்கான பிலிம் பேர் அவார்ட் போட்டி என்று பல சிறப்புகளைக் கொண்ட படம் 'பராக்'.
இப்போது உலகையே மறந்து நம்மையும் மெய் மறக்கச் செய்யும் இப்பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இப்பாடலை ஒரு முறை பார்த்து கேட்டு விட்டீர்களானால் நிச்சயம் மறுமுறை உங்களால் கேட்காமல் இருக்க இயலாது. இசைக்கு இருக்கும் சக்தியை நீங்கள் முழுதுமாக இப்பாடலில் உணர முடியும்.
என் வாழ்நாளிலேயே என் மனங்கவர்ந்த முத்தான முதல் பாடல். முதலில் என் விருப்பமாக. பிறகு உங்கள் விருப்பமாக.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» பழைய திரைப்பட பாடல்கள் - காணொளி- தொடர் பதிவு)
» ஆனந்த ராகம் - திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
» நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» இவை உலகப் புகழ் பெற்ற
» பழைய திரைப்பட பாடல்கள் - காணொளி- தொடர் பதிவு)
» ஆனந்த ராகம் - திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
» நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» இவை உலகப் புகழ் பெற்ற
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|