ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
heezulia
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
i6appar
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே

Go down

பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Empty பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே

Post by Ramprasath Wed Jan 15, 2014 3:54 pm

பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே


2000 வது ஆண்டுவரைஅடிமைத்தளையிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற முடியாமல் உழன்ற பெண்கள் சமூகத்தை கருத்தில் கொண்டால் , தொழில் நுட்ப உலகமாகிவிட்ட கடந்த பத்து வருடங்களில் பெண் சமூகம் பெற்ற சுதந்திரம் கிட்ட அபரிமிதம் என்றே சொல்லத்தோன்றுகிறது. அப்படி அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான பிறழ்வுகளுக்கான மூல காரணங்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் இந்த நாவலில் அலசி ஆராய்ந்துள்ளேன்.

கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் , ஆண் பெண் என இரு பாலரும் கூடும் அத்தனை இடங்களிலும் பெண்களின் தேர்வுகள் குறித்தும், பெண்களின்  மன நிலை குறித்தும் பல குழப்பங்கள் நீடிக்கின்றன. பெண்களைச் சுற்றி உலக இயக்கங்கள் பெரும்பான்மை அமைந்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ரகசியங்கள் நிறைந்ததென ஊகிக்கப்படும் பெண்களின் பிரத்தியேக அந்தரங்க குணாதிசயங்கள் குறித்தும், பெண்களின் இயங்குமுறை குறித்தும், அதன் பின்னணியில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும், சமூக அமைப்பில் அத்தகைய இயங்குமுறைகளின் பின் விளைவுகள் குறித்தும், அதற்கு ஆண்களின் எதிர்வாதம் குறித்தும், அதன் பின்புலம் குறித்தும் விஸ்தீரணமாக  இது காறும் ஏதும் நாவல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பில், மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கி பெண்களுக்கான நாவல் எழுதியிருக்கிறேன். ஆண் பெண் இருபாலாருக்கும் தேவைப்படும் நாவல்தான் எனினும், பிரத்தியேகமாக பெண்களின் அந்தரங்கம் குறித்த உளப்பூர்வமான பதிவுகள் நாவலெங்கும் இருப்பதால் இதனை பெண்களுக்கான நாவல் எனச் சொல்வது பொருத்தமாக இருக்குமென்று தோன்றுகிறது.

இரண்டு நாவல்கள் கொண்ட தொகுப்பே 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பிலான இந்த நாவல் தொகுதி. ‘ஒப்ப‌னைக‌ள் க‌லைவ‌த‌ற்கே’ ஒரு ச‌மூக‌ நாவ‌ல். பொதுவாக‌ காத‌ல் என்ப‌து உண‌ர்ச்சிக‌ள் சார்ந்த‌து என்கிற‌ பொதுவான‌ க‌ருத்து நில‌வுகிற‌து. காத‌ல் என்ப‌து உண‌ர்ச்சிக‌ள் சார்ந்த‌து என்றால் உண‌ர்ச்சிக‌ள் என்ப‌து புரித‌ல்க‌ளால் தூண்ட‌ப்ப‌டுவ‌து. ஆகையால், காத‌ல் என்ப‌து புரித‌ல்க‌ளின் ப‌க்க‌விளைவு என்கிற‌ க‌ருத்தாக்க‌த்தினை பதிவு செய்யும் நாவ‌ல். ஆண் பெண் ஈர்ப்பின் வேர் காமமே என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்வார். அதோடு முடிந்துவிட மனிதன், விலங்கினம் மட்டும் அல்லவே. மேலும், காம உணர்வே தோன்றாத இடத்தும் கூட ஆணும் பெண்ணும் ஈர்ப்பு கொள்ளக் காண்கிறோமே? காமத்தைத் தூண்டும் வாளிப்பான பெண்களுக்கும் கூட காதல் தோல்விகளும், மணவாழ்க்கைத் தோல்விகளும் நிகழக் காண்கிறோமே? ஆண் பெண் ஈர்ப்பிற்கு காமத்தை மட்டுமே முதன்மைப் படுத்துவது மடமை. ஈர்ப்பின் முதல் கட்டம் காமமாகவே இருந்தாலும், அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு காமம் தாண்டிய‌ பிறிதொன்று தேவைப்படுகிறது என்பதே திண்ணம்.  அந்தப் பிறிதொன்றில் புரிதல்களின் பங்கு குறித்து இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

இந்த நாவலில் வரும் மஞ்சு, ரவி, ஜானகி, மகேஷ், சடகோபன், ரேவதி முதலானவர்களை நீங்கள் உங்களைச் சுற்றிலும் எங்கெங்கும் காணலாம். இந்த நாவலின் கதை மாந்தர்கள், பொருளாதார படி நிலைகளில், மிகவும் தாழ இருப்பவர்கள் அல்ல.
எல்லையில்லா அர்ப்பணிப்பிலும், அறியாமையிலும், குறுகிய சமூகத்தாலும் அவ்வாறானவர்களின் இயங்குமுறைகளில் புரிதல்களின் படி நிலைகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. வித்தியாசங்கள் இருப்பினும் அவைகள்
மையப்படுத்தப்படுவதில்லை. ஆயினும், இன்றைய‌ ச‌மூக‌ அமைப்பின் சிக்க‌ல்க‌ளில், அவ‌ர்க‌ளுள்ளும் சில‌ விதிவில‌க்குக‌ள் இருக்க‌லாம்.

‘முடிச்சு’ ஒரு சமூக நாவலே. இன்றைய கணிணி யுகத்தில், பெண்கள் எத்தகைய பிறழ்வை சந்திக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நாவலில் வரும் வினீத், மது, இளவஞ்சி, மதன், திலீப், கார்த்திக் முதலானவர்களை
நீங்கள் உங்களை சுற்றிலும் காண மிக மிகப்பல சாத்தியக்கூறுகள் உள்ளன. கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் , ஆண் பெண் என இரு பாலரும் கூடும் அத்தனை இடங்களிலும் பெண்களின் தேர்வுகள் குறித்து பல குழப்பங்கள் நீடிக்கின்றன. அந்த
தேர்வுகளின் வேர் குறித்து இந்த நாவலில் பதிந்திருக்கிறேன்.

இயற்கை தன்னை சமன்படுத்திக்கொள்ளும் இடத்தில், சமூகக் கடமைகளால் மட்டுமே மனிதன் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவோ மீட்டெடுக்கவோ இயலும். அப்படியான இடத்தில், பெண்மையின் பிறழ்வுகளால் நிகழும் விபரீதங்களை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

எனது இவ்விரண்டு நாவல்களும் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற  நாவல் தொகுதியென சென்னை YMCA மைதானத்தில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிட‌ம்  

காவ்யா பதிப்பகம் - ஸ்டால் 491 & 492
டிஸ்கவரி புக் பேலஸ் - ஸ்டால் 334
நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ்  (ஸ்டால் எண் நினைவில் இல்லை)


இந்த இரண்டு நாவல்களையும் வாசியுங்கள். வாசித்துவிட்டு எனக்கு எழுதுங்கள்.
எனது மின்னஞ்சல் ramprasath.ram@googlemail.com

நட்புடன்,
ராம்ப்ரசாத்




ஸ்டால்களில் புத்தகம் கிடைக்கவில்லையெனில் எனக்கு ஒரு மின்னஞ்சல் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னிடமுள்ள பிரதிகள் அனுப்பிவைக்கிறேன்.

கடந்து பத்து பதினைந்து ஆண்டுகளில் முதன் முறையாக, 'அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான பிறழ்வுகளுக்கான மூல காரணங்கள் என்னென்ன?' என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள எனது நாவலை, ஈகரை நண்பர்கள் வாங்கி வாசித்துவிட்டு உங்கள் வாசிப்பனுபவம் குறித்து எனக்கு மின்னஞ்சல் இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஈகரை நண்பர்களின் வாசிப்பனுபவம் எனது எழுத்தை மேன்மேலும் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

எனது மின்னஞ்சல்: ramprasath.ram@googlemail.com


நட்புடன்,
ராம்ப்ரசாத்
Ramprasath
Ramprasath
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Empty Re: பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே

Post by Ramprasath Tue Jan 21, 2014 5:04 pm


ஒப்பனைகள் கலைவதற்கே - நாவல் - டீசர்


நாவல் விலை ரூ.180.

நூலை பெற விரும்பினால் பின்வரும் சுட்டியை வாசித்து அறியவும்.
http://ramprasathkavithaigal.blogspot.fi/2014/01/blog-post_18.html

பின்வருவதை நீங்கள் ஒரு டீசர் எனக் கொள்ளலாம்.

இந்த பாரா நாவலின் 112 வது பக்கத்தில் வருகிறது.. நாவலின் மையத்தை குறிக்கும் குறியீடாக இதைப் பயன்படுத்தியுள்ளேன்...

"ஜானகிக்களை சந்திக்க வாய்ப்பு கிட்டாத ரவிக்கள், மஞ்சுவிலேயே முடிந்து போக நிகழலாம். ரவிக்களை பிரிய நேராத மஞ்சுக்கள், வினய்களை சந்திக்காமலே கடந்து போகலாம். வினய்கள், ஜானகிக்களை அண்ட நேரலாம். ஜானகிகள், வேறு வழியின்றியோ, அல்லது ஒரு குழப்பத்திலோ வினய்களை மணமுடிக்கலாம். இவை அனைத்தும் அரங்கேறுகையில், ரவிக்களையும், ஜானகிக்களையும், மஞ்சுக்களையும், வினய்களையும் நாட்டின் முன்னணி பொறியியல் கல்லூரிகளும், மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களும் கல்வி கற்பித்து, பன்னாட்டு நிறுவனங்களில் ஐந்திலக்க ஊதியங்களில் பணிக்கமர்த்தி, கண்டபடி நிலத்திலும், வாகனங்களிலும் கவனங்களை சிதறடிக்கலாம். அதையெல்லாம், அவர்களின் உறவினர்களென அனைவரும், ஊக்குவித்து, 'சுக துக்கங்களில்' பங்கு பெற்று வாழ்த்தி, வழியனுப்பலாம்"

இதுவே நாவலின் மையம்...


காதல் குறித்தும் திருமணங்கள் குறித்தும் பொதுக்கருத்தாக உலவும் பல்வேறு கருத்தாக்கங்களை முட்டாக உடைத்துப்போடக்கூடிய, கண்களை திறப்பதான, சமூகத்தில் கடை நிலை மனிதனுக்கும் அத்தியாவசியமாக தெரிய வேண்டிய சித்தாந்தங்கள் கொண்ட‌ அதி முக்கியமான நாவல் 'ஒப்பனைகள் கலைவதற்கே'.

கட்டாயம் வாசிக்கவும்.

நட்புடன்,
ராம்ப்ரசாத்
Ramprasath
Ramprasath
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum